என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injured"

    • வேன் இன்று அதிகாலை 5.15 மணியளவில் திண்டிவனம் டி.வி. நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் தலைகுப்புற பள்ளத்தில் கவிழ்ந்தது.

    திண்டிவனம்:

    சென்னை தாம்பரம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று நள்ளிரவில் ஒரு வேனில் 22 பேர் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த வேனை டிரைவர் சந்திரசேகர் ஓட்டினார்.

    அந்த வேன் இன்று அதிகாலை 5.15 மணியளவில் திண்டிவனம் டி.வி. நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் தலைகுப்புற பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 8 வயது சிறுமி உள்பட 18 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வலியால் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர்கள் 18 பேரும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த திவான் மைதீன், செய்யது ஜலால், முகம்மது ஹாஜி, காஜாமுகைதீன், முகம்மது அர்சத் ஆகிய 5 வாலிபர்கள் ஒரு காரில் குற்றாலம் சென்றனர்.
    • இலஞ்சி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த திவான் மைதீன், செய்யது ஜலால், முகம்மது ஹாஜி, காஜாமுகைதீன், முகம்மது அர்சத் ஆகிய 5 வாலிபர்கள் ஒரு காரில் குற்றாலம் சென்றனர்.

    மரத்தில் கார் மோதியது

    அவர்கள் அனைவரும் அங்கு குளித்துவிட்டு மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த னர். இலஞ்சி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரில் வந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதில் செய்யது ஜலால், முகம்மது ஹாஜி ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். இதனால் அவர்கள் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்
    • டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

    மணப்பாறை:

    திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அருகே உள்ள சோழமாதேவி பகுதியை சேர்ந்த அரபாத்(வயது36), அசார்(26), முத்துக்குமார்(26), இப்ராஹிம்(25) உள்ளிட்ட 6 பேர் பந்தல் பொருட்களை சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டு சோழமாதேவியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். முத்தபுடையான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அரபாத், அசார், முத்துக்குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • அரசு பேருந்து மோதி பள்ளி சிறுவன் காயம் அடைந்தான்
    • முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்
    முசிறி:


    முசிறி அருகே உள்ள அட்டலாப்பட்டி சேர்ந்த முத்துசாமி மகன் ரித்தீஷ் (வயது 8). இவர் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார், தனது சகோதரி சுதர்சனா என்பவருடன் முசிறி துறையூர் சாலையில் காளியம்மன் கோவில் அருகே நடந்து வந்தபோது திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து இவர் மீது மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்தார்.

    காயமடைந்த சிறுவன் ரித்தீஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக ரித்தீஷ்ன் தந்தை முத்துசாமி முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • பத்தரே கிராமம் அருகே சின்னார் சீரடி நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது லாரி மீது மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    நாசிக்:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் அம்பர்நாத்தில் இருந்து 50 பேருடன் சொகுசு பஸ் ஒன்று சீரடி நோக்கி சென்றது.

    நாசிக்கில் உள்ள பத்தரே கிராமம் அருகே சின்னார் சீரடி நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது லாரி மீது மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது.

    இந்த விபத்தில் 7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    • காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது.
    • இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் ரவுண்டானா பகுதியில் சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மரக்கட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

    அப்போது காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ் கட்டு பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் உரசியது.

    இதில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டைகள் பஸ்சின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்தது. மேலும் பஸ்சின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    பஸ்சில் இருந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வந்தவாசி,பிப்.2-

    திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த கீழ்நெடுங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தனியார் பஸ் மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர்.

    பஸ்சை டிரைவர் தினேஷ் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

    அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வந்தவாசி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக 4 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் நடந்து குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் ஆரணி, வேலூர், புறவழி சாலையில், சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து நடப்பதால் பொதுமக்கள் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.* * *பஸ் கவிழ்ந்து கிடந்த காட்சி.

    • இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சம்பவம்
    • வாகன விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்

    கரூர்:

    குளித்தலையை அடுத்த, சேப்ளாபட்டியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 60). இவர், இரு சக்கர வாகனத்தில் மாகாளிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். கழுகூர் -மகாளிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே, இனுங்கூரை சேர்ந்த பால முருகன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது மோதியது.இதில், தங்கராசு படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மணப் பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தங்கராசு மனைவி சின்னபொண்ணு கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காடம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த தருமபுரியை சேர்ந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
    • இதில் பரத்ராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், எழிலரசன் கோவை தனியார் மருத்துவ மனை யிலும், விஜயன் பெங்களூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள சிக்கம்பட்டி கிராமம், பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பரத்ராஜ் (வயது 19). இவரது நண்பர் எழிலரசன் (19). இருவரும் சம்பவத்தன்று எழிலரசனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் காடம்பட்டியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்தனர்.

    பரத்ராஜ் வண்டியை ஓட்ட எழிலரசன் பின்னால்

    அமர்ந்திருந்தார். காடம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த தருமபுரியை சேர்ந்த விஜயன் (31) என்பவர் மோதியதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதில் பரத்ராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், எழிலரசன் கோவை தனியார் மருத்துவ மனை

    யிலும், விஜயன் பெங்களூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர், இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலங்குடி அருகே உருட்டு கட்டையால் தாக்கி வாலிபர் படுகாயம் அடைந்தார்
    • ராஜமாணிக்கம் தலைமறைவானதால் போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள கலிபுல்லா நகரைச்சேர்ந்தவர் செபஸ்தியான் மகன் அந்தோணிசாமி (வயது 44). கலிபுல்லா நகர் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் கணேசன் மகன்களான புஷ்பராஜ் (48), ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் அந்தோணிசாமி வீட்டின் அருகில் உள்ள ஆர்எஸ்பதி மரத்தை இருவரும் சேர்ந்து வெட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தோணிசாமி ஏன் மரத்தை வெட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு புஷ்பராஜ் மற்றும் ராஜமாணிக்கம் உருட்டு கட்டையால் அந்தோணிசாமியை தாக்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்தோணிசாமியை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதுகுறித்து அந்தோணிசாமி ஆலங்குடி போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர். பின்னர் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதில் ராஜமாணிக்கம் தலைமறைவானதால் போலீசார் தேடி வருகின்றனர்.


    • எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் பேட்டரி வெடித்ததில் கணவன், மனைவி காயம் அடைந்தனர்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி உறையூர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பாஸ்கர் (வயது29). இவர் அண்மையில் எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிள் வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் தனது வீட்டின் உள்ளே எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றி உள்ளார். பிறகு சார்ஜை ஆப் செய்துவிட்டு வண்டியை நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் திடீரென்று எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிளின் பேட்டரி வெடித்தது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பாஸ்கர் மற்றும் அவரது மனைவி நந்தினி இருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பாஸ்கர், நந்தினி இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாஸ்கர் உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிள் திடீரென்று தீப்பற்றி எரிவது தொடர் கதையாகி வருகிறது.

    • புஷ்பராஜ் தேயிலை எஸ்டேட்டில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
    • புஷ்பராஜூக்கு டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேட்டை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 54). இவர் தேயிலை எஸ்டேட்டில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பன்னிமேடு 22-வது பீல்டில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது தேயிலை செடிக்குள் இருந்து திடீரென கரடி வெளியே வந்தது. கரடியை பார்த்து அதிர்ச்சியடைந்த புஷ்பராஜ் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓட்டம் பிடித்தார். அப்போது கரடி அவரது இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியில் கடித்தது.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட தேயிலை தோட்டத்தில் வேலை செய்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டினர். பின்னர் காயங்களுடன் உயிருக்கு போராடிய புஷ்பராஜை மீட்டு உருளிக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    ×