என் மலர்
நீங்கள் தேடியது "International Yoga Day"
- யோகா தினத்துக்கு 100 நாட்கள் உள்ள நிலையில் அதை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
- நீங்கள் யோகாவை ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால் அதை சீக்கிரம் செய்யுங்கள் என்று பிரதமர் மோடி உள்ளார்.
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. யோகா நிகழ்ச்சிக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் வருகிற 13 முதல் 15-ந்தேதி வரை டெல்லியில் 3 நாட்கள் யோகா நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறும்போது, 'யோகா தினத்துக்கு 100 நாட்கள் உள்ள நிலையில் அதை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் யோகாவை ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால் அதை சீக்கிரம் செய்யுங்கள்' என்று கூறி உள்ளார்.
- பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
- ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் யோகா தினம் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். வரும் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில், வரும் 21-ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மறுநாளான 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு அதிபர் ஜோ பைடன் இரவு நேர விருந்து அளிக்கிறார். அதற்கடுத்த நாள் வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகின்றனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
அமெரிக்கா, இந்தியா ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
- நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.
- பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர்.
நெல்லை:
உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
யோகா கலையின் மகத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக பிரம்மாண்டமான முறையில் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான யோகா தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படு கிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.
பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டரங்கில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் உள்ளிட்டவர்கள் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தின ராக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்ட னர். சங்க செயலா ளர் அழகேசராஜா யோகாசன பயிற்சிகளை வழங்கினார். இதில் யோகாசன சங்க ஆலோசகர் மரியசூசை, விவேகா அமல்தாஸ், யோகாசன சங்க துணைத் தலைவர் சிவசங்கர், வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர். வயது வித்தியாசமின்றி சுமார் ஆயிரம் பேர் இந்த யோகாசனத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த யோகாதின நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்ட னர். பாளை சாரதா கல்லூரி யில் என்.சி.சி. மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா தின நிகழ்வும் நடைபெற்றது. இதில் மாணவிகள்-ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதே போல பாளை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான அஞ்சல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார்.
- உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மத்திய, மாநில மந்திரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான படத்தை அவர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சர்வதேச யோகா தினமான இன்று விண்வெளி நிலையத்தில் யோகா பயிற்சி செய்து வருகிறேன். யோகா உடலை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனதையும் கூர்மைபடுத்துகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது. உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
- வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது.
சர்வதேச யோகா தினம் வருகிற 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதியவர் ஒருவர் யோகா செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கியது. சுவாமி சிவானந்தா என்று அழைக்கப்படும் யோகா ஆசிரியரான அவருக்கு தற்போது 127 வயதாகிறது. யோகா கலையில் அவரது செயல்பாடுகளை பாராட்டி பத்மஸ்ரீ கவுரவம் பெற்றுள்ளார்.
தீவிர யோகா பயிற்சியால் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் அவர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் சில யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது பற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது. யோகா மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
- 10-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி முதல் முறை காஷ்மீர் செல்கிறார்.
ஸ்ரீநகர்:
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.
இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, 10-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளனர் என கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
3-வது முறை பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
- காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.
இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் பங்கேற்று யோகா செய்தனர்.
மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
இந்தோ-திபெத் எல்லை போலீசார் 15,000 அடி உயரத்தில் உள்ள வடக்கு சிக்கிமில் உள்ள முகுதாங் சப் செக்டார் என்ற இடத்தில் யோகா செய்தனர்.
அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஹிசாரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.
#WATCH | Haryana CM Nayab Singh Saini performs Yoga at a Yoga event in Hisar, on the occasion of International Day of Yoga. pic.twitter.com/FSYI1jjIZz
— ANI (@ANI) June 21, 2024
காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளனர்.
- இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம்.
- இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
நியூயார்க்:
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.
இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச யோகா தினமான இன்று, இந்திய தூதர் பினயா பிரதான் கூறுகையில், "இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். எங்களுடன் பல நாடுகளைச் சேர்ந்த யோகா பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த யோகா நிகழ்ச்சி நாள் முழுவதும் நடைபெறும். இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் 'யோகா நமக்காகவும் சமூகத்திற்காகவும்' என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இங்கு நடைபெறும் யோகா நிகழ்ச்சி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என்று கூறினார்.
- கடந்த 10 ஆண்டுகளில், யோகாவின் விரிவாக்கம் யோகா தொடர்பான கருத்தை மாற்றியுள்ளது.
- மக்கள் தங்கள் உடற்தகுதிக்காக தனிப்பட்ட யோகா பயிற்சியாளர்களை கூட வைத்திருக்கிறார்கள்.
2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்தனர்.

இதையடுத்து பிரதமர் மோடி கூறுகையில், யோகா மூலம் நாம் பெறும் ஆற்றலை ஸ்ரீநகரில் உணர முடியும். யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா செய்து வரும் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச யோகா தினம் 10 வருட வரலாற்று பயணத்தை நிறைவு செய்துள்ளது. 2014-ல் நான் ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன, இதுவே சாதனையாக இருந்தது. அதன்பிறகு, யோகா தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
நான் வெளிநாட்டில் இருக்கும்போது, உலகத் தலைவர்கள் என்னிடம் யோகா பற்றி விவாதிக்கிறார்கள். 10வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வேளையில், யோகாவை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில், யோகாவின் விரிவாக்கம் யோகா தொடர்பான கருத்தை மாற்றியுள்ளது. இன்று உலகம் ஒரு புதிய யோகா பொருளாதாரத்தை முன்னோக்கிப் பார்க்கிறது. இந்தியாவில் இருந்து ரிஷிகேஷ் மற்றும் காசியில் இருந்து கேரளா வரை யோகா சுற்றுலாவின் புதிய இணைப்பு காணப்படுகிறது.
உலகெங்கிலும் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் இந்தியாவில் உண்மையான யோகாவை கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடற்தகுதிக்காக தனிப்பட்ட யோகா பயிற்சியாளர்களை கூட வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன என்று அவர் கூறினார்.
முன்னதாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பியூஷ் கோயல், ஆகியோர் பங்கேற்று யோகா செய்தனர்.
அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், சண்டிகர் முதல் மந்திரி விஷ்ணு தியோ சாய், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, எச்.டி.குமாரசாமி, ஹேமா மாலினி, பி.எல்.வர்மா, சிவ்ராஜ் சவுகான், நிதின் கட்காரி, பிரகலாத் ஜோஷி, கிஷன் ரெட்டி, பூபேந்தர் யாதவ், மன்சுக் மாண்டவியா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் மற்றும் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தனர்.
மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
இந்தோ-திபெத் எல்லை போலீசார் 15,000 அடி உயரத்தில் வடக்கு சிக்கிமில் உள்ள முகுதாங் சப் செக்டார் என்ற இடத்தில் யோகா செய்தனர்.
- இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- கடந்த ஆண்டு இதே நாளில் 24 கோடி பேர் யோகாவை செய்துள்ளனர்.
வடவள்ளி:
உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 10-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் நடந்தது.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பின்னர் அவர் பல்வேறு ஆசனங்களையும் செய்தார். அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து ஆசனங்களை செய்தனர்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகா தினமான இன்று அனைவருக்கும் எனது யோகா தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். யோகா என்பது ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு யோகாவை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி கிடைக்க செய்தார். உலக நாடுகள் அனைத்தும் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே அனைவரும் யோகாவை கற்றுக்கொள்ளுங்கள்.
கடந்த ஆண்டு இதே நாளில் 24 கோடி பேர் யோகாவை செய்துள்ளனர்.
மனதிற்கும், உடலுக்கும் நன்மை அளிக்கும் யோகாவை அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
- கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா செய்தனர்.
சர்வதேச யோகா தினம்:2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், கவர்னர்கள், முதல் மந்திரிகள் பங்கேற்று யோகா செய்தனர்.
கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள், லடாக்கில் பாங்காங் ஏரி பகுதியில் பள்ளி மாணவர்கள் யோகா செய்தனர்.














- யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.
- யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
கோவை:
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கல்லூரியில் இன்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அவர் யோகா சனங்களை செய்தார்.
நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசியதாவது:-
யோகா என்பது நமது முன்னோர்கள் நமக்கு அளித்த கொடையாகும். யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.
இந்த யோகா பயிற்சியை நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். குறிப்பாக வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் சிறப்பான கலையாக யோகா உள்ளது.
இளைஞர்கள் இந்த யோக கலையை வாழ்வின் அங்கமாக கடைபிடித்து, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் யோக பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.