என் மலர்
நீங்கள் தேடியது "jewel theft"
- விருத்தாசலம் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர்
- வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பெரிய.செந்தில்குமார் வாதாடினார்.
கடலூர்:
கடந்த 2011-ஆம் ஆண்டு விருத்தாசலம் வி.என்.ஆர். நகரை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மனைவி அமுதா வீட்டில் தனியாக இருந்தபோது, சிலிண்டர் வேண்டுமா என கேட்பதுபோல் 4 பேர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். அமுதா சிலிண்டர் வேண்டாம் என்றார். ஆனாலும் அங்கிருந்து செல்லாத 4 நபரும் "தண்ணீர் கொடுங்கள்" எனக் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்று அமுதா வைக் கொடூரமாகத் தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து விருத்தா சலம் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி நேற்று வழங்கினார்.
இதில் குற்றம் சாட்ட ப்பட்ட கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் மணலூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால் இந்தியத் தண்டனைச் சட்டம் 454 பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், இந்தியத் தண்டனைச் சட்ட பிரிவு 394, 397-ன் படி ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 2 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்புளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுப விக்க வேண்டும் என உத்தரவிட்டார். தீர்ப்புக்குப் பின் ராஜதுரை மற்றும் சந்திரசேகர் ஆகி யோரை போலீசார் சிறைச்சாலை க்கு அழைத்துச் சென்றனர். மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன், குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தன் ஆகிய 2 பேரையும் நீதிபதி விடுதலை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பெரிய.செந்தில்குமார் வாதாடினார்.
- மதுரையில் கூட்டுறவு வங்கி அதிகாரி மனைவியிடம் 20 பவுன் நகை பறித்த பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பிரவீன் மீது செல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மதுரை
மதுரை ஆத்திகுளம், ஏஞ்சல் நகர், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ஊர்க்காவலன். இவர் மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவரது மனைவி பானுமதி (வயது 58). இவர் கடந்த 31-ந் தேதி மதியம் நரிமேடு பகுதியில் நடந்து சென்றார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், பானுமதி அணிந்திருந்த 20 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியது.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மூதாட்டி பானுமதியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர், செல்லூர் ரவுடி என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் நள்ளிரவில் செல்லூருக்கு சென்று, வீட்டில் இருந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரித்தனர்.
அவர்கள் செல்லூர் நந்தவனம், நேதாஜி தெருவை சேர்ந்த குபேந்திரன் மகன் திக்குவாய் என்ற பிரவீன்குமார் (24), செல்லூர் குமரன் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் ( 24) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
திக்குவாய் என்ற பிரவீன் மீது செல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணி கண்டன் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார். 3 பேரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் அதிகாரி தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி 2 பேருக்கு வழி விட்டார்.
- பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் சாவடியை சேர்ந்த மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வந்த பெண் அதிகாரி நேற்று இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பெண் அதிகாரியை 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் அதிகாரி தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி 2 பேருக்கு வழி விட்டார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த 2 பேர் சிறிது தூரம் சென்று திடீரென்று நின்றனர். பின்னர் பெண் அதிகாரியிடம் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வழி மாறி வந்து விட்டோம் என பேச்சை தொடர்ந்து திடீரென்று கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சரடை அறுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து சென்றனர். அதிர்ச்சி அடைந்த பெண் அதிகாரி "திருடன் திருடன்" என கூச்ச லிட்டார். இருந்தபோதிலும் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேக த்தின் பேரில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு நபரை போலீசார் பிடித்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் நெல்லிக்கு ப்பம் மேல்பட்டாம்பாக்கம் சேர்ந்த ரஞ்சினி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இதே போல் 2 மர்ம வாலிபர்கள் பொருள் வாங்குவது போல் கடைக்குள் நுழைந்து ரஞ்சனி வாயை கையால் அழுத்தி, கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சரடு பறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து சென்றனர். இது குறித்து நெல்லி க்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வங்கி பெண் அதிகாரி மற்றும் மளிகை கடை நடத்தி வந்த பெண்களிடம் 10 பவுன் தாலி சரடு திருடி சென்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஏராளமான நபர்களை வழிமறித்து செல்போன் திருட்டு நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு பிறகு சுமார் 5 நபர்களை செல்போன் திருடி சென்றதாக கண்டறிந்து கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது செயின் பறிப்பு கும்பல் தங்களின் கைவரிசை காட்டி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜபாளையத்தில் மில் தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டது.
- பீரோவில் இருந்த 4 பவுன் 4 கிராம் நகையை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு தப்பினர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் காஸ்ட்ரோ (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஒரு வீட்டின் கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று தூங்கினார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 4 பவுன் 4 கிராம் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
காலையில் எழுந்த மோகன் காஸ்ட்ரோ மற்றொரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராஜ பாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் நகை பறிப்பு- வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- பால்சுணை கண்ட சிவன் கோவில், அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது.
மதுரை
மதுரையில் உள்ள முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வது உண்டு.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் பால்சுணை கண்ட சிவன் கோவில் மற்றும் அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது. இங்கு தினமும் திரளானோர் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவிற்கு மதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.
விசேஷ நாட்கள் தவிர மற்ற நேரங்களில் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் ஆட்கள் நடமாட்டம் மிக மிக குறைவாக இருக்கும். போலீசாரும் கண்டு கொள்ளாததால் அந்தப்பகுதி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
மது, கஞ்சா அடித்து சுற்றித்திரியும் இவர்கள் அந்த வழியாக செல்லும் நபர்களை குறிவைத்து பணம், நகை, செல்போன் பறிப்பு போன்ற செயல்களில் துணிகரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் செல்லவே அச்சமடைந்துள்ளனர். போலீசார் தீவிர ரோந்து சென்று சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இருசக்கர வாகனத்த்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஷம்சுதீனிடம் செல்போனை தருமாறு கேட்டனர்.
- ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரோடுபரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஷம்சுதீன்(வயது30). இவர் வடசேமபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செல்போனில் அழைப்பு வந்ததால், மேலேரி தனியார் கல்லூரி அருகில் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு ஷம்சுதீன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது சங்கரா புரத்தில் இருந்து கள்ளக்கு றிச்சி நோக்கி இருசக்கர வாகனத்த்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஷம்சுதீனிடம் செல்போனை தருமாறு கேட்டனர். ஆனால் அவரோ தர மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஷம்சுதீனின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் கிழித்து விட்டு அவரிடம் இருந்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
படுகாயம் அடைந்த சம்சுதீனை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து செல்போன்களை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சங்கராபுரம் சீர்பாத நல்லூர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்(62). இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் முனியம்மாளிடம் பேச்சு கொடுத்து அவரது கழுத்தில் கிடந்த ரூ.60 ஆயிரம் மதிப்புடைய 3 பவுன் சங்கிலியை பறித்து க்கொண்டு, தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மூங்கில்து றைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவுசெய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- சசிவிகுமார் கருவம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
- நாய் உதவியுடன கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சாய் லட்சுமி நகரை சேர்ந்தவர் சிவி குமார். இவர் கருவம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா மயிலம் அடுத்த விழுக்கம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் இவர்களும் தங்களது பணிகளுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய பொழுது வீட்டின் உள்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த 36 சவரன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்த போலீஸ்சூப்பிரணடு ஸ்ரீநாதா மற்றும் திண்டிவனம் ஏ.எஸ். பி அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்க்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை மேற்புறமாக திருப்பி வைத்துவிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் அந்த மர்ம நபர்கள் திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இரண்டு தனிப்படைகளை அமைத்து கைரேகை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் மாவட்டக் போலீஸ் சூப்பிரண்டு சூபபிரண்ஸ்ரீ நாதா உத்தரவின் பேரிலும் ,திண்டிவனம் ஏ எஸ் பி அபிஷேக்குப்தா மேற்ப்பார்வையிலும் இயங்கிவந்த தனிப்படையினர் திண்டிவனம் முத்துகிருஷ்ணன் முதலி தெருவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வசித்து வந்து தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருகின்ற கனகராஜ் (33), சென்னை தனிஷ் லான் மோகன் (44), சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மணி என்கிற பாட்டில் மணிகண்டன்(31) ஆகியோரைகைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திண்டிவனம் சாய் லட்சுமி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகை திருடியதும் , திண்டிவனத்தில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.இவர்களிடம் இருந்து நகை பணம் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- திருமங்கலம் அருகே தோட்டத்தில் வேலை பார்த்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
- முகவரி கேட்பது போல் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வம். இவர் பால்பண்ணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் உசிலம்பட்டி பிரதான சாலையில் இருக்கிறது.
நேற்று மாலை அந்த தோட்டத்தில் தங்களது மாடுகளை தெய்வத்தின் மனைவி செல்வராணி (வயது 52) கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஒரு முகவரியை கூறி, அதற்கு எப்படி செல்ல வேண்டும் என கேட்டனர்.
அவர்களுக்கு செல்வராணி பதில் கூறிக்கொண்டிருந்த போது, அந்த நபர்கள் திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து சித்தப்பட்டி போலீஸ் நிலையத்தில் செல்வராணி புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்துச்சென்ற 3 வாலிபர்களை தேடி வருகின்றனர். நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டுபிடிக்க அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- திருமங்கலம் அருகே பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அமர்நாத். இவரது மனைவி காயத்ரி (வயது 30) சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் உறவினர் திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு காயத்ரி திருமங்கலத்திற்கு வந்தார். அவர் கள்ளிக்குடியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்று விட்டு, மீண்டும் திருமங்க லத்திற்கு அரசு டவுன் பஸ்சில் திரும்பி வந்தார்.
தான் அணிந்திருந்த நகை களை பாதுகாப்புக்காக கழற்றி பைக்குள் வைத்தி ருந்தார். இந்தநிலையில் திருமங்கலம் பஸ் நிலை யத்தில் இறங்கியபோது அவரது பை திறந்திருந்தது. உள்ளே பார்த்தபோது, பையில் வைத்திருந்த 7½ பவுன் தங்கச்செயினை காணவில்லை.
யாரோ மர்ம நபர்கள் ஓடும் பஸ்சிலேயே காயத் ரியின் பையில் இருந்த தங்கச்செயினை நைசாக திருடிச்சென்று
- பெண், சிறுமியுடன் வெளியேறிய பின் ஊழியர் கடையில் இருந்த தங்க செயின்களை சரிபார்த்தனர். அப்போது ஒரு சங்கிலி குறைவாக இருந்தது தெரிய வந்தது.
- கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதனை செய்தபோது அதில் தங்க சங்கிலியை அந்த பெண் ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது.
பழனி:
பழனியில் திண்டுக்கல் சாலையில் நகைக்கடை உள்ளது. இங்கு ஒரு சிறுமியுடன் வந்தபெண் ஊழியர்களிடம் தங்க சங்கிலி வாங்க வேண்டும் என கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாடல்களை கடை ஊழியர்கள் காண்பித்தனர்.
அதனை பார்த்த பெண் மற்றொரு நாள் வந்து வாங்கிக் கொள்வதாக கூறி விட்டு சிறுமியுடன் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஊழியர் கடையில் இருந்த தங்க செயின்களை சரிபார்த்தனர். அப்போது ஒரு சங்கிலி குறைவாக இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதனை செய்தபோது அதில் தங்க சங்கிலியை அந்த பெண் ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் விரட்டிச் சென்று அந்த பெண்ணை பிடித்து பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜாமைதீன் மனைவி ஆமினா (40) என்பது தெரிய வந்தது. மகளுடன் நகைக்கடையில் தங்க சங்கிலி திருடியதை ஒப்புக் கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்
- பத்மாராணி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.
- 5 பவுன் தங்க செயினை கழற்றி வீட்டில் வைத்தார்.
கோவை
கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பத்மாராணி (வயது 37). இவர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் தனது 5 பவுன் தங்க செயினை கழற்றி வீட்டில் வைத்தார். பின்னர் தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து தான் நகை வைத்திருந்த இடத்தில் பார்த்தார்.
அப்போது நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீடு முழுவதும் அவர் நகையை தேடி பார்த்தார். ஆனால் நகை கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து பத்மாராணி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்றது யார்? மர்ம நபர்கள் யாராது வீடு புகுந்து நகையை திருடி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 நாட்கள் முன்பு அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 2 வாலிபர்கள் நகையை பறித்து சென்றனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாலிபரிடம் நகை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்
- பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார்
திருச்சி:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 27) சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திருப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது இவர் அருகில் வந்த ஒரு மர்ம ஆசாமி பெரியசாமி கழுத்தில் அணிந்திருந்த 1 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்.இதுகுறித்து பெரியசாமி திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.