search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jipmar"

    • கவர்னருக்கு வையாபுரி மணிகண்டன் கடிதம்
    • மத்திய பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

     புதுச்சேரி:

    புதுவைமாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன கவர்னருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் பெய்துவரும் தொடர் கனமழையால் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள விடுமுறை அறிவித்தும் மத்திய பல்கலைக்கழகம் வழக்கம்போல இயங்கியது.

    கனமழை போன்ற பேரிடர் காலத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்படுவதன் நோக்கம் மாணவர்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.

    புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு புதுவை மட்டுமின்றி, அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர்.

    கனமழையால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், அதைத்தொடர்ந்து புதுவையிலும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    ஆனால் புதுவை மாநில எல்லை வரம்புக்குள் உள்ள மத்திய பல்கலைக்கழகமும், மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவ கல்லூரியும், அரசு உத்தரவை பின்பற்ற வில்லை. இது மாணவர்களின் உயிருக்குத்தான் ஆபத்தாக விளையும்.

    இனிவரும் காலத்தி லாவது புதுவை அரசின் உத்தரவுகளை மாணவர்களின் நலன் கருதி மத்திய பல்கலைக்கழகம், ஜிப்மர் மருத்துவக்கல்லூரி ஆகியவை பின்பற்ற கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • புதுவை ஜிப்மர் மருந்தக துறையின் சார்பில் உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது.
    • மருந்தகத்துறை அதிகாரி ஜெயந்தி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருந்தக துறையின் சார்பில் உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டின் கருப்பொருளான சுகதார அமைப்பை வலுப்படுத்தும் மருந்தாளுநர்கள் என்ற பதாகைகள் ஏந்தி பேரணி, மரக்கன்று நடுதல், மருந்துகள் பயன்பாடு குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் தலைமை வகித்தார். மருந்தகத்துறை அதிகாரி ஜெயந்தி வரவேற்றார்.

    ஜிப்மர் பொறுப்பு இயக்குனர் அப்துல்ஹமீது, மருந்தியல்துறை முதுநிலை பேராசிரியர் ரவீந்திரன், உதவி பொறுப்பு அதிகாரி கேசவன், இணை பேராசிரியர் மிருணாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் வெங்கடேசுவரன் அறிவியல் உரையாற்றினார்.

    தொடர்ந்து கருத்தரங்கம், 30 ஆண்டுக்கும் மேல் பணிபுரியும் மருந்தாளு நர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஜிப்மர் மருந்தாளுநர்கள் சங்க செயலாளர் சம்பத், தலைவர் ராஜகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வீட்டிற்கு சென்றவுடன் அனைவரும் மயக்க மடைந்து விழுந்துள்ளனர்.
    • பெண்கள் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியார் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தர் அமரன் (24). இவர் கடற்கரையோர பகுதியான வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை செய்துள்ளார்.

    பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட கள்ளசாராயத்தை எக்கியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சங்கர்(50), தரணிவேல்(50), மண்ணாங்கட்டி(47), சந்திரன்(65), சுரேஷ்(65), மண்ணாங்கட்டி(55), ஊத்துக்காட்டான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர். இவர்கள் வீட்டிற்கு சென்றவுடன் அனைவரும் மயக்க மடைந்து விழுந்துள்ளனர்.

    உடனடியாக உறவினர்கள் ஜிப்மர் மருத்துவ மனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் பிம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில் சுரேஷ், சங்கர், தரணி வேந்தன் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த னர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் வந்து பார்த்தார்.

    அப்போது ஜிப்மர் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மண்ணாங்கட்டி ராஜீ (60), மண்ணாங்கட்டி (41) ஆகியோர் உடல்நிலை குறித்து கலெக்டர் பழனி கேட்டார். அவர்கள் இருவரும் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் குடும்பத்தாரிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது பெண்கள் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    ×