search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jos Buttler"

    • பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் இலக்கை 19-வது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது.
    • முதல் ஐசிசி தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனாக ஜோஸ் பட்லர் மாறியுள்ளார்.

    கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த டி 20 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது. பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் இலக்கை 19-வது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது.

    இந்த வெற்றியின் மூலம் தன் தலைமையேற்ற முதல் ஐசிசி தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனாக ஜோஸ் பட்லர் மாறியுள்ளார். இதற்கு முன்னர் இதே சாதனையை 2007 ஆம் ஆண்டு இந்திய அண்யின் முன்னாள் கேப்டன் டோனி படைத்திருந்தார். அதே போல ஐசிசி டி 20 கோப்பையை வென்ற விக்கெட் கீப்பர் கேப்டன்களாக பட்லர் மற்றும் டோனி ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.

    • இங்கிலாந்து அணியில் மார்க் வுட், மலான் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது
    • உலகத்தரம் வாய்ந்து ஆடுகளத்தில் சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம்

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டி நடைபெறும் அடிலெய்டில் நாளை மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனால், மழை வராமல் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என சொல்ல இயலாது. அடிலெய்டு மைதானம் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு ராசியானது. மேலும், சூர்யகுமார் யாதவ் அபாரமான ஃபார்மில் உள்ளார்.

    இவர்கள் இருவரையும் விரைவாக வெளியேற்றினால்தான் இறுதி போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என இங்கிலாந்து நினைத்தால் அதில் தவறு ஏதும் இல்லை.

    இந்த நிலையில் நாளைய போட்டி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியதாவது:-

    மார்க் வுட், தாவித் மலான் ஆகியோர் காயத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்று பார்க்க இருக்கிறோம். முடிந்த அளவு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அணியில் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

    தாவித் மலான் மீண்டும் ஒருநாள் லேசாக காயத்துடன் காணப்படுகிறார். மார்க் வுட்டிற்கும் இன்னும் லேசாக வலி உள்ளது. நாங்கள் மெடிக்கல் டீம் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அதேபோல் இரண்டு வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். என்னுடைய பார்வையில், உலகின் தலைசிறந்த மைதானத்தில், சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம். சிறந்த ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    அது சிறந்த தருணமாக இருக்க போகிறது. ஒரு வீரராக நீங்கள் அதில் ஈடுபட விரும்பும் நேரம். இந்திய ரசிகர்கள் இந்தியா- பாகிஸ்தான் இறுதிப் போட்டியை மிகவும் ஆவலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நிச்சயமாக இந்தியா- பாகிஸ்தான் இறுதிப் போட்டியை விரும்பவில்லை. இந்தியாவின் நாளைய திட்டத்தை முறியடிப்போம்.

    ஆகவே, அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்ததை செய்ய முயற்சிப்போம்.

    இவ்வாறு பட்லர் தெரிவித்தார்.

    • இங்கிலாந்து அணியின் வெற்றிப் பயணம் தொடரும்.
    • இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 நாளை நடக்கிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. முதலில் டி20 போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நாளை (7-ந் தேதி) நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய டி20 அணிக்கு இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனான பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து அணியின் வெற்றி நம்பமுடியாத வகையில் இருந்தது. இந்த டெஸ்ட் அணியில் இருந்து சிறப்பான ஆட்ட நுணுக்கங்களை பெறுவதுடன் இங்கிலாந்து அணியின் வெற்றிப் பயணம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிராக பட்லர் தலைமையில் ஆடிய இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

    கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்தது இங்கிலாந்து அணி. எச்சரிக்கை விடுத்தது போல டெஸ்ட் போட்டியை வென்றது. நாளை டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில் இந்திய டி20 அணிக்கு பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எச்சரிக்கையை மீறி ரோகித் சர்மா தலைமையிலான அணி இங்கிலாந்தின் கோட்டையை தகர்க்குமா என இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

    • நெதர்லாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பட்லர் 86 ரன்கள் குவித்தார்.
    • நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 19 சிக்சர்களை பட்லர் அடித்துள்ளார்.

    நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.

    3-வது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 244 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 30.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ஜாஸ் பட்லர் 86 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர் அடங்கும்.

    கடைசி போட்டியில் 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியின் சாதனையை ஜாஸ் பட்லர் முறியடித்துள்ளார். ஒருநாள் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பட்லர் படைத்துள்ளார்.

    நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 19 சிக்சர்களை அடித்ததன் மூலம் பட்லர் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். டோனி 2005-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 17 சிக்சர் அடித்தார். டோனியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் 16 சிக்சர்களை ஏபி டி வில்லியர்ஸ் அடித்துள்ளார்.

    • கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் காயம் காரணமாக விலகி உள்ளார்.
    • நெதர்லாந்து தொடரில் இயான் மார்கன் ரன் ஏதும் எடுக்கவில்லை.

    இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நெதர்லாந்து சென்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஆம்ஸ்டெல்வீனில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஜாஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் இயான் மார்கன் 8 பந்துகள் மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் இந்த தொடரை முடித்துள்ளார்.

    உலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கணித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து  ஆடுகளங்கள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சுமார் 55 போட்டிகளில் 45-க்கும் மேற்பட்டதில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடும் என்பதால் முன்னணி பேட்ஸ்மேன்கள் சர்வ சாதாரணமாக 500 ரன்களை தாண்டுவார்கள்.



    இந்நிலையில் ரன் குவிப்பில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஆகியோர் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட்டை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக பட்லரை நியமிக்க வேண்டும் என்று வார்னே தெரிவித்துள்ளார். #joeRoot
    ஜோ ரூட் 21 போட்டிகளில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் அவரின் சராசரி 51.04-ல் இருந்து 46.80 ஆக குறைந்துள்ளது. 14 டெஸ்ட் சதங்களில் மூன்று மட்டுமே கேப்டனாக இருந்தபோது வந்துள்ளது. ஆனால் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேப்டன் பதவியை பெற்ற பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் ஜோ ரூட் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக அவரை பார்க்கலாம் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வார்னே கூறுகையில் ‘‘இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அரைசதத்தை சதமாக மாற்றுவதில் அவர் தோல்வியடைந்துள்ளார். அதேவேளையில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அசத்துகிறார்கள்.



    ஜோ பட்லர் சிறந்த கேப்டனாக முடியும். அவருடன் நான் பணியாற்றியதை வைத்து கூறுகிறேன். அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன். அவரால் இங்கிலாந்து அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியும்.

    இங்கிலாந்து அணி ஜோ ரூட் அசைக்க முடியாத தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற நிலையை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கக் கூடாது. ஜோஸ் பட்லர் போன்ற ஒருவரிடம் கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும்’’ என்றார்.
    இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட்டும், துணைக் கேப்டன் ஜோஸ் பட்லரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடுகிறார்கள். #BigBash2018
    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாடும் முன்னணி வீரர்கள் பொதுவாக வெளிநாட்டில் நடைபெறும் டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடுவது கிடையாது. ஆனால் தற்போது ஏராளமான வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக்கில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    2018 ஐபிஎல் தொடரில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடினார்கள். டெஸ்ட் அணி கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன ஜோ ரூட் ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போகவில்லை. அவரை எந்த அணியில் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.



    இந்நிலையில் தற்போது ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோரை பிக் பாஷ்  டி20 லீக்கில் விளையாடும் சிட்னி தண்டர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 2018-19 சீசனில் இருவரும் ஏழு போட்டிகளில் விளையாடுவார்கள்.

    ஜோஸ் பட்லர் முதல்முறையாக விளையாட இருக்கிறார். அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜோஸ் பட்லர் கடந்த பிக்பாஷ் சீசனில் 202 ரன்கள் சேர்த்தார்.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய பும்ரா, 7 கேட்ச் பிடித்த லோகேஷ் ராகுல் ஆகியோர் சாதனைகள் படைத்துள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ்-யில் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் இந்தியா அபாரமாக செயல்பட்டது.

    விராட் கோலி முதல் இன்னிங்சில் 97 ரன்களும், 2-வது இன்னிங்சில் 103 ரன்களும் குவித்தார். ஹர்திக் பாண்டியா முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் அரைசதமும் அடித்தார்.

    பும்ரா நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் 2014-ல் லார்ட்ஸ் டெஸ்டில் இஷாந்த் ஷர்மா 74 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

    லோகேஷ் ராகுல் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 கேட்ச்கள் பிடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் விக்கெட் கீப்பரை தவிர்த்து அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக அதிக கேட்ச் பிடித்ததில் 2-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இரண்டு வீரர்கள் தலா ஏழு கேட்ச்கள் பிடித்தது இதுதான் முதல் முறையாகும்.



    லார்ட்ஸ் டெஸ்டில் புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். அதன்பின் தற்போதுதான் ஹர்திக் பாண்டியா, பும்ரா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.

    நான்காவது இன்னிங்சில் பட்லர் - பென் ஸ்டோக்ஸ் ஜோடி 169 ரன்கள் குவித்தது. 100 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்ந்த பின்னர் இவ்வளவு ரன்கள் அடித்தது இதுதான் முதன்முறை. ஒட்டுமொத்தமாக டிரென்ட் பிரிட்ஜியில் 2-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.

    முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் பட்லர் தற்போது அடித்ததுதான் இந்த வருடத்தின் முதல் சதமாகும். இதற்கு முன் மெல்போர்னில் அலஸ்டைர் க் 2017 டிசம்பரில்சதம் அடித்திருந்தார்.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விராட் கோலி அடித்த பந்தை கல்லி திசையில் நின்று பிடிக்க முயன்ற ஜோஸ் பட்லருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அஸ்வின் (4), முகமது ஷமி (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் 13 ஓவர் வரை இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் முரளி விஜய், லோகேஷ் ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    முதல் இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால் அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். 2014-ம் ஆண்டு ஆண்டர்சனை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பந்து வீசி விராட் கோலியை அவுட்டாக்கியது போல் தற்போதும் அதே யுக்தியை கடைபிடித்தார்.



    ஆண்டர்சன் பந்தை விராட் கோலி தொட்டுவிட அது ஸ்லிப் அருகில் கல்லியில் நின்ற ஜோஸ் பட்லரின் அருகே பாய்ந்து சென்றது. பட்லர் இடது கையால் பந்தை பிடிக்க முயன்றார். அப்போது பட்லர் கைவிரலில் பந்தை பலமாக தாக்கிச் சென்றது.

    இதில் பட்லரின் இடது கையின் நடுவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில்தான் அவரது காயத்தின் வீரியம் தெரியவரும். ஒருவேளை எலும்பு முறிவு இருந்தால் தொடர்ந்து விளையாடுவது சந்தேகமே.
    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்போது ஐபிஎல் டி20 லீக்கின் போது ஏற்பட்ட நட்பிற்கு சிறுதுகூட இடமில்லை என் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பராக திகழ்பவர் ஜோஸ் பட்லர். இவர் அதிக அளவில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதித்து.

    கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடதில் அசத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் விளையாடியதன் மூலம் இவரது ஆட்டம் மெருகேறியது. இதனால் ஒருநாள் போட்டியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் 2018 ஐபிஎல் சீசனில் இடம்பிடித்தனர்.

    ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். கடைசியாக விளையாடி பெரும்பாலான ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரகானே இடம்பிடித்திருந்தார். அதேபோல் மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்தனர். இவர்களுக்கு இந்திய அணி வீரர்களுடன் நல்ல நட்புணர்வு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பெரும்பாலானான பழகிய முகங்கள் இருப்பதால் அவர்களை இங்கிலாந்து வீரர்கள் எப்படி எதிர்ப்பாகர்கள் என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் ஐபில் தொடரின் நட்பிற்கு டெஸ்ட் போட்டியில் இடமில்லை. நாங்கள் வெற்றி பெறுவது மட்டுமே முக்கியமானது என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘இந்திய அணியில் உள்ள சில வீரர்களுடன் நான் விளையாடிள்ளேன். பொதுவாக அவர்களுடன் நட்பு இருக்கலாம். ஆனால், விளையாடுவதற்காக களம் இறங்கிவிட்டால், அவர்கள் மறந்துவிடுவார்கள். ஒவ்வொருவரும் போட்டியின் மீதுதான் கவனம் செலுத்துவார்கள்.

    ஐபிஎல் தொடரின்போது ஆடுகளத்தில் மட்டுமல்ல, பயிற்சி நாட்களிலும், சாப்பாடு நேரத்திலும் ஒன்றாக நேரத்தை செலவிடுவோம். மொயின் அலி, சாஹல் மற்றும் விராட் கோலியுடன் ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளார். அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்ததை நான் பார்த்துள்ளளேன். நான் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவுடன் விளையாடியுள்ளேன். ஆகவே, அவருடன் நான் பேசி வருகிறேன்’’ என்றார்.
    குல்தீப் யாதவ் 6 விக்கெட் வீழ்த்திய போதிலும் பென் ஸ்டோக்ஸ், பட்லர் அரைசதங்களால் இந்தியாவிற்கு 269 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி  பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் 32 மாதங்களுக்குப் பிறகு சுரேஷ் ரெய்னாவும், 10 மாதங்களுக்குப் பிறகு கேஎல் ராகுலும் இடம்பிடித்தனர். வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் அறிமுகமானார்.

    ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இங்கிலாந்து பவர் பிளேயான முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவித்தது.

    இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்ந நிலையில்தான் 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்த நிலையில் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    13-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட்டையும், 5-வது பந்தில் பேர்ஸ்டோவ்-ஐயும் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார். இதன் மூலம் 10 பந்தில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து ரன் குவிப்பிற்கு தடைபோட்டார். தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதனால் இங்கிலாந்து அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினார். 5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த பட்லர் மிரட்டலாக விளையாடினார். ஜோஸ் பட்டர் 45 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய பட்லர் 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.



    மறுமுனையில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 102 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த கையோடு குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் விக்கெட் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்தார். அதோடு மட்டுமல்லாமல் டேவிட் வில்லியே விக்கெட்டையும் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 10 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    அதன்பின் வந்த மொயீன் அலி 23 பந்தில் 24 ரன்களும், அடில் ரஷித் 16 பந்தில் 22 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியாவிற்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. உமேஷ் யாதவ் 9.5 ஓவர்கள் வீசி 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சாஹல் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
    ×