search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi Memorial"

    கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்தார். #KadamburRaju #KarunanidhiMemorial
    தூத்துக்குடி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்  ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது,  முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார். கருணாநிதிக்கு அரசு மரியாதை கிடைத்தது அதிமுக போட்ட பிச்சை என்றும் கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுபற்றி அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:-



    ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டப்பட உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நினைவிடத்தை இடிப்போம் என்று திமுக பொதுக்கூட்டத்தில் பேசினர். அது மிகவும் கடுமையான வார்த்தை. அதனால் கருணாநிதி நினைவிடம் பற்றி அந்த கருத்தை சொன்னோம்.

    எங்கள் அம்மாவை பற்றி சொன்னால் நிச்சயம் பதிலடி தருவோம். நினைவிடத்தை இடிப்போம் என்று கூறியது கடுமையான வார்த்தை இல்லையா? மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அம்மாவின் நினைவிடத்தை இடிப்போம் என்று சொன்னால் இதைவிட கடுமையான வார்த்தையை சொல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழிசையிடம் கேள்வி கேட்டதால் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு, எல்லோருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை உண்டு, ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.  #KadamburRaju #KarunanidhiMemorial
    சென்னையில் நடந்த அமைதிப் பேரணியின் முடிவில், கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
    சென்னை:

    தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். கட்சி மேலிடம் அவரைக் கண்டுகொள்ளாத நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார்.



    திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து காலை 11.25 மணியளவில் மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டர். இவர்களில் பெரும்பாலானோர் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர்.

    அமைதியாக நடைபெற்ற இந்த பேரணி 12.40 மணியளவில் கடற்கரை சாலையில் நிறைவடைந்தது. இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மு.க.அழகிரியின் அமைதி பேரணி நடைபெற்ற சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
    மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அவரது மகன் மு.க.அழகிரி இன்று (புதன்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி நடத்த இருக்கிறார். #Karunanidhi #Alagiri #DMK
    சென்னை:

    மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அவரது மகன் மு.க.அழகிரி இன்று (புதன்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி நடத்த இருக்கிறார். இந்த பேரணிக்கு சென்னை மாநகர போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தி.மு.க.வில் சேர அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன.



    கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி, கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, “எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்” என்று அதிரடியாக கூறினார்.

    இந்தநிலையில், மதுரையில் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி, சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ந்தேதி (இன்று) அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார்.

    பேரணி இன்று நடைபெறும் நிலையில், முன்னேற்பாடுகளை செய்வதற்காக நேற்று முன்தினமே மு.க.அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்தார். அவரது சார்பில், அமைதி பேரணிக்கு போலீசாரிடம் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது. போலீசாரும் அதற்கு அனுமதி அளித்துவிட்டனர்.

    திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்குகிறது. இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக அவரது ஆதரவாளர்களும் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர்.

    இந்தப் பேரணி வாலாஜா சாலை வழியாக, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைகிறது. அங்கு, மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். மேலும், தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

    மு.க.அழகிரியின் அமைதி பேரணியை தொடர்ந்து, வழிநெடுக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்களின் வாகனங்களும் எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்ற தகவலும் முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Karunanidhi #Alagiri #DMK 
    கலைஞர் நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    வருகிற 28-ந்தேதி நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் பற்றி எனக்குத் தெரியாது. கலைஞர் நினைவிடத்தில் எனது ஆதங்கத்தை தெரிவித்து விட்டேன்.

    கொஞ்ச நாட்களில் உங்களிடமும் ஆதங்கத்தை தெரிவிப்பேன். கலைஞர் நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள்.

    கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை அமைதி பேரணியில் நிரூபித்து காட்டுவேன். அதற்கு பிறகும் எதிர்காலத்திலும் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன்.

    என்னை பின்னால் இருந்து பா.ஜனதா இயக்குகிறது என்ற குற்றச்சாட்டை நான் கேள்விபடவில்லை. கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் உள்ளார்கள்.



    ரஜினியுடன் இணைந்து செயல்படுவீர்களா? என்று கேட்கிறார்கள். ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அப்படி இருக்கும்போது அவரோடு இணைந்து செயல்படுவதை எப்படி சொல்ல முடியும்? அரசியலில் பின்னால் நடப்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது.

    தனிக்கட்சி பற்றி கேட்டு வருகிறார்கள். கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன. அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKAlagiri
    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சமாதிக்கு வந்து மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #DMKLeader #Karunanidhi #KarunanidhiMemorial
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    சமாதியின் அருகில் கருணாநிதியின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் கருணாநிதி சமாதிக்கு வந்தார். சமாதியில் மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


    அவருடன் ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    கவிஞர் வைரமுத்து இன்று காலை கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். பேராயர் எஸ்றா சற்குணமும் இன்று கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

    இன்று கருணாநிதி நினைவிடத்துக்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கருணாநிதியின் சமாதியை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் அருகில் நின்ற படி பொதுமக்கள் சமாதியை பார்த்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். மாலை, மலர் வளையம் வைக்க விரும்புபவர்கள் உள்ளே சென்று சமாதியில் வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பொதுமக்கள் ஏராளமானோர் சமாதிக்கு வந்த வண்ணம் உள்ளதால் அங்கு தற்காலிகமாக மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சமாதியை சுற்றி நடந்து வந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வட்ட வடிவில் பிளாட்பாரமும் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கூரை அமைக்கும் பணியை முன்னின்று கவனித்து வருகிறார்கள். சாரை சாரையாக மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் போலீசார் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி சமாதிக்கு செல்லும் நுழைவு வாயிலான அண்ணா சமாதி முன்பு ஏராளமான மோட்டார்சைக்கிள்களிலும், கார்களிலும் வந்து மக்கள் இறங்கி செல்வதால் அங்கு நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. கூட்டம் அதிகம் இருப்பதால் அங்கு தற்காலிக கடைகளும் முளைத்துள்ளன.

    கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய பொது மக்கள் கூறியதாவது:-

    சரஸ்வதி (அரசு ஊழியர்):- 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார். அண்ணாவின் மனதில் இடம் பிடித்தவர். இப்போது அவரது சமாதியின் அருகே கருணாநிதியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த சமாதியை அழகிய வடிவில் அமைக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணமாகும்.


    கலையரசி:- நான் வியாசர்பாடியில் இருந்து வருகிறேன். நேற்று கூட்டமாக இருந்ததால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இன்று அவர் நினைவிடத்தை நேரில் வந்து பார்த்தேன்.

    அரசியலில் அவர் முதுபெரும் தலைவர். மக்களுக்கு எத்தனையோ திட்டங்களை தந்தவர். பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியவர். அண்ணாவின் சமாதி அருகே கருணாநிதியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவரது ஆன்மா சாந்தி அடையும்.

    ராஜேந்திர பிரசாத்:- நான் கோவையில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தேன். கலைஞரின் அஞ்சலி நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டேன். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை இன்று பார்த்தேன். என் உள்ளம் படபடப்பாக உள்ளது. அண்ணாவின் பெயரை அடிக்கடி உச்சரித்து அவரது கொள்கை, கோட்பாடுகளை கட்டிக் காத்து வந்த கலைஞருக்கு அவரது அருகிலேயே சமாதி அமைக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காக வாழ்ந்தவர். அவருக்கு சமாதி எழுப்பப்படும்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.

    ராஜூ நாராயணன் (திருவாரூர்):- நான் என்ஜினீயரிங் படித்துள்ளேன். திருவாரூரில் கலைஞர் படித்த வாசோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான் நானும் படித்தேன். திருவாரூரில் உள்ள அனைத்து பகுதிகளும் அவரது நினைவை தாங்கி உள்ளது.

    எங்களுக்கு அவரது நினைப்பு அப்படியே உள்ளது. நேற்று முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவரது நினைவிடத்தையும் பார்த்து விட்டுத்தான் ஊருக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து இன்று இங்கு வந்துள்ளேன். அவரது நினைவிடத்தை மிகவும் அழகாக வடிவமைப்பில் அரசு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #DMKLeader #Karunanidhi #KarunanidhiMemorial
    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #DMKLeader #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    சமாதியின் அருகில் கருணாநிதி படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடியும் கட்டப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    இன்று கருணாநிதி நினைவிடத்துக்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து இன்று காலை கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

    கட்சித் தொண்டர்கள் கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். கருணாநிதியின் சமாதி அருகே பொதுமக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் பெண் ஊழியர்கள் 2 பேர் உள்ளனர். தொண்டர்கள் கொடுக்கும் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை அவர்கள் வாங்கிச் சென்று சமாதியில் வைக்கிறார்கள்.


    சமாதியில் அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் அதன் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். பெண் தொண்டர்கள் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    ஆஸ்பத்திரியிலும் அவரை பார்க்க முடியவில்லை. ராஜாஜி ஹாலிலும் பார்க்க முடியவில்லை. அஞ்சலியாவது செலுத்தலாம் என இங்கு வந்துள்ளோம் என்று அவர்கள் கூறி விட்டு சென்றனர்.

    கருணாநிதி சமாதியில் தி.மு.க. தொண்டர் ஒருவர் மொட்டை போட்டுக்கொண்டார். அவரது பெயர் வினோத் கண்ணா. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மொட்டை போட்ட பிறகு கருப்பு சட்டை அணிந்தபடி அவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-


    நான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர். எனக்கு கருணாநிதி மீது பற்று அதிகம். அவர் மறைவால் மனதுக்கு கஷ்டமாக உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தேன். காவேரி ஆஸ்பத்திரியில் காத்திருந்த நான் நேற்று காலையில் ராஜாஜி ஹாலுக்கு வந்தேன். ஒரு தொண்டனாக நான் அவருக்கு எதுவும் செய்யவில்லை. எனவே மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தி மனதை தேற்றிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கருணாநிதி சமாதிக்காக நேற்று பள்ளம் தோண்டப்பட்டதால் ஆங்காங்கே மண் குவிக்கப்பட்டிருந்தது. இன்று அவை பொக்லைன் மூலம் சமதளமாக்கி சீரமைக்கப்பட்டன. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    ×