search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Fan"

    • ராஜஸ்தான் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் அணி அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியை நாளை எதிர் கொள்கிறது.

    ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் கொல்கத்தா அணி மட்டும் அதிகாரபூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. மற்ற 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போட்டு வருகின்றனர்.

    2-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நடப்பு தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தி உள்ளார்.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் உருவத்தை கேரள ரசிகர் ஒருவர் அவரது வீட்டின் மொட்டை மாடியில் தத்துருவமாக வரைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ராஜஸ்தான் நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

    ×