search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudalazhagar"

    • கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மதுரை

    மதுரை மத்தியில் அமைந்துள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான கூடலழகர்பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து சுவாமி-அம்பாள் காலையில் பல்லக்கிலும், இரவில் யானை, கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 8-ம் நாள் திருவிழாவான நேற்று பெருமாள் குதிரை வாக னத்தில் வீதிஉலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.இதையொட்டி தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் இன்று காலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூைஜகள் நடைபெற்றன.

    கோவிந்தா கோஷங்கள் முழங்க 6.30 மணி அளவில் ேதரோட்டம் தொடங்கியது. பெண்கள், இளைஞர்கள் உள்பட நூற்றுக்கணக்கா னோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திரு ப்பரங்குன்றம்சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியசையந்து வந்து கண்கொள்ளா காட்சி யாக இருந்து. வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காலை 9 மணிக்குள் தேர் நிலையை வந்தடைந்தது. தேேராட்டத்தை முன்னிட்டு பெரியார் பஸ் நிலையம், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று இரவு தங்க சிவிகையில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கி றார். நாளை மாலை திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சிநடக்கிறது. 5-ந்தேதி கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்படும் பெருமாள் அன்று இரவு வைகை ஆற்றாங்கரையில் உள்ள ராமராயர் மண்ட பத்தில் எழுந்தருளுகிறார். அதனை தொடர்ந்து விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

    மறுநாள் 6-ந்தேதி கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள் வெங்கலக்கடை தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்தி ரத்தில் எழுந்தருளுகிறார். அன்று மாலை திருமஞ்சன மாகி குதிரை வாகனத்தில் பெருமாள் கோவிலை வந்தடைகிறார். 8-ந்தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவுபெறுகிறது.

    • கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நகர் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வைகாசி பெருந்திரு விழா விமரிசை யாக கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நாளை(26-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றம் நடக்கிறது.

    14 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் பெருமாள் சிம்மம், கருடன், அனுமார், சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. 5-ந்தேதி சுவாமி குதிரை வாக னத்தில் வைகையாற்றில் இறங்கி ராமராயர் மண்ட பத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசா வதார நிகழ்ச்சி நடக்கிறது.

    6-ந்தேதி குதிரை வாகனத்தில் கோவிலுக்கு திரும்புகிறார். 8-ந்தேதி உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×