search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kumbabishakam"

    • ருமாந்துறை ஈஸ்வரி நகரில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ ஈஸ்வரி நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை, வருண பூஜை, அஷ்டபந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை, திராவிய குதி மற்றும் தீபாரதனையுடன் நான்கு கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. பிறகு பூர்ணாகுதியும் நடைபெற்றது.மேலும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் ஆடுதுறை, திருமாந்துறை நோவா நகர்மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மங்களமேடு போலீசார் செய்திருந்தனர்.

    • நூற்றாண்டு பழமை வாய்ந்தது
    • பஞ்சநதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோவில் பாழடைந்து சீரமைக்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இந்த கோவிலை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலையூர் கிராம மக்கள் வேறு ஒரு இடத்தில் புதிய சிவன் கோவில் கட்ட முடிவு செய்து அதன்படி வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வந்த சிவனடியார்கள் பழமை வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோவிலையும் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கூறினார்கள்.

    • பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி கிராமத்தில் வீரனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழாைவை முன்னிட்டு கோவிலின் முன்புறம் யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்று புனித நீர் கொண்ட கடம் புறப்பாடு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்து. கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் சுந்தம் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கைளைச் சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கிரிக்கல் மேடு கிராமத்தில் உள்ள தங்க முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • குதிரையில் இருக்கும் சங்கிலி ஆண்டவருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம்

    திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கிரிக்கல் மேடு கிராமத்தில் இருக்கும் சித்தி விநாயகர், தங்க முத்து மாரியம்மன், சங்கிலி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. குதிரையில் இருக்கும் சங்கிலி ஆண்டவருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது . விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் தங்கராஜ், போசன், ஜெயராஜ் மற்றும் போசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்

    • பல லட்சம் ரூபாய் செலவில் சுடு களிமண்ணால் அந்த சாமி சிலைகள் செய்யப்பட்டு, மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
    • செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி மலைக்கோவில், அருகே உள்ள மலையில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெரியசாமி மலைக்கோவிலில் உள்ள சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகளை நாதன் என்பவர் உடைத்து சேதப்படுத்தினார்.அந்த சிலைகளை புதிதாக பிரதிஷ்டை செய்ய பாலாயம் நடத்தப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் சுடு களிமண்ணால் அந்த சாமி சிலைகள் செய்யப்பட்டு, மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.இதைத்தொடர்ந்து பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந் தேதி நடத்தப்பட்டது. அப்போது செல்லியம்மன் சிலை மட்டும் முறையாக முழுமையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரியசாமி உள்ளிட்ட சாமி சிலைகள் முழுமையாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இதனால் செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    ×