என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "landslides"
- வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை கனமழை காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும்.
ருவாண்டா நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இடைவிடாமல் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏராளமான குடியிருப்புகள், விளை நிலங்கள், சாலைகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இரவு நேரத்தில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது கனமழை பெய்ததால் பல வீடுகள் இடிந்துள்ளன. இதுவே உயிரிழப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர். வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ருவாண்டாவில் வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை கனமழை காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தது.
இதேபோல் அண்டை நாடான உகாண்டாவிலும் கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர்.
- குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
- பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவடத்தில் கடந்த சில வாரங்களாக கடும் உறைபனி மற்றும் பனிப்பொழிவு காணப்ப டுகிறது. அவ்வப்போது சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை கடும் வெயில் நிலவியது. அதனை தொடர்ந்து கடும் பனி கொட்டி தீர்த்தது.
மாலையில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு ஆரம்பித்த மழை அதிகாலை வரை நீடித்தது. இந்த மழையால் சாலையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரம் என்பதால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர் மழைக்கு ஒட்டுப்பட்டறை, உழவர்சந்தை, ரேலி காம்பவுண்ட், வண்ணா ரபேட்டை உள்பட 5 இடங்களில் மண்சரிவு ஏற்ப ட்டது. தகவல் அறிந்ததும், அதிகாரிகள் விரைந்து வந்து மண்சரிவை அகற்றினர். தொடர்ந்து இதேபோன்று மழை பெய்தால் மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிந்தது.
- கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது.
- பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை அமைந்து உள்ளது. இந்த மலைப் பாதையில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்ல க்கூடிய தெசிய நெடுஞ் சாலை உள்ளது.
இந்த மலைப்பாதை வழியாக தினமும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் வந்து செல்கிறது.
இந்த நிலையில் சத்திய மங்கலம், திம்பம் வனப்பகுதி மலைப்பாதை 23 கொண்டை ஊசி வளைவு கள் கொண்டது. இந்த வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.
திம்பம் வனப்பகுதி ரோட்டில் அடிக்கடி வாகன ங்கள் பழுதாகி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் மாற்று பாதையாக அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக பல கனரக வாகனங்கள் மைசூருக்கு சென்று வருகிறது.
மேலும் நேரம் விரையம் ஏற்படு வதும் தவிர்க்கபபடுவதால் பர்கூர் மலை பாதையை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வரு கின்றனர்.
இதையடுத்து பர்கூர் மலை்பாதை சாலைகள் அந்தியூரில் இருந்து தமிழக எல்லைப் பகுதி வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்தியூர் நகரமே தண்ணீரில் மூழ்கியது.
மேலும் மைசூர் செல்லும் பர்கூர் மலை ப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது. இதை யடுத்து ஒரு சில இடங்களில் சரி செய்யப்பட்டது. பெருபாலான இடங்களில் ரோட்டோரங்களில் பாறை கள் அப்படியே கிடக்கிறது.
இதே போல் வரட்டு பள்ளம் அணைப்பகுதியில் இருந்து செட்டிநொடு, தாமரைக்கரை, பர்கூர் தட்டகரை, கர்கேகண்டி வரை சாலைகளில் சுமார் 24-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு, பாறைகள் உருண்டும், சாலையில் மரங்கள் முறிந்தும் கிடக்கிறது.
இதனால் இந்த வழியாக கனரக வாகனங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாக னங்கள் செல்ல முடியாமல் உள்ளது. மேலும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சில 4 சக்கர வாகனங்கள் மட்டுமே தட்டுதடுமாறி சென்று வருகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
எனவே பர்கூர் மலை ப்பாதையில் ரோட்டோரம் கிடக்கும் பாறைகள் மற்றும் மரக்கிளைகளை வனத்துறை யினர் மற்றும் ேதசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.
- ஊட்டி, நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது
- குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகளுக்காக மண் அகற்றப்பட்டது
ஊட்டி
. தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்தன. பருவமழை தீவிரம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மார்க்கெட் பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் படகு இல்லம் செல்லும் சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் மற்றும் ரெயில்வே போலீஸ் நிலையம் பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ரெயில் நிலையம் எதிரே உள்ள வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் ஜவுளிக்கடையில் இருந்த ஆடைகள் நீரில் மூழ்கி சேதமானது.
. பணிகள் முடிந்தும், தொங்கும் நிலையில் இருந்த பாறைகள் அகற்றப்படவில்லை. கனமழையால் கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் இடையே ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் பாறைகள் தள்ளி வைக்கப்பட்டது. இதேபோல் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டியில் உள்ள தமிழகம் சாலையில் மரங்கள் விருந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். இதேபோல் கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழையால் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டது. மேலும் கடும் குளிர் நிலவுதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
- மகாராஷ்டிராவில் 20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
- 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5 மி.மீட்டர் மழை பதிவானது. வெள்ளப்பெருக்கால் அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.
20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பாக விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில பேரீடர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 14ந் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு மரம் மற்றும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப் பாதையில் இரைச்சல் பாலம் அருகே கொண்டைஊசி வளைவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ேலாயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே கொண்டைஊசி வளைவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கூடலூர் நகராட்சி 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ பாதை குறுகலான மலைச்சாலையாகும்.
இந்த சாலையில் அதிக ளவு வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த சாலை அதிகவாகன ங்கள் பயன்பாடு காரணமாக வும், தொடர்மழை காரணமாக வும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,
மலைச்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மலை ச்சாலையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்ப ட்டுள்ளது.
தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் அதனை சீரமைத்து வாகனங்கள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகன ங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.
தொடர் மழை கார ணமாக தேக்கடி படகு த்துறை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு படகு போக்குவரத்து மட்டுமின்றி ஜீப், யானை சவாரி, பசுமைநடை போன்ற பல்வேறு சுற்றுலா பயணிகளை கவரும் பொழுதுபோக்கு அம்ச ங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரண மாக பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருைக தருவார்கள்.
இவர்களுக்காக தற்காப்பு கலையான களரி, கதக்களி நடனம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஆனால் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துள்ளது. எனவே ஓட்டல்கள், ரிசாட்டுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்துவரும் தொடர்மழை இப்பகுதி யிலும் தொடர்ந்து நிலவுவ தால் தினசரி ரூ.10லட்சம் வரை வருவாய்இழப்பு ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி வியாபாரிகள் தெரிவித்து ள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். 20 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுகபூமி மாவட்டம் சினாரேஸ்மி கிராமத்தில் மட்டும் 30 வீடுகள் நிலச்சரிவின்போது மண் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. #Indonesialandslide
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்