search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "landslides"

    • வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை கனமழை காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும்.

    ருவாண்டா நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இடைவிடாமல் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏராளமான குடியிருப்புகள், விளை நிலங்கள், சாலைகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

    மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இரவு நேரத்தில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது கனமழை பெய்ததால் பல வீடுகள் இடிந்துள்ளன. இதுவே உயிரிழப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர். வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    ருவாண்டாவில் வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை கனமழை காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தது.

    இதேபோல் அண்டை நாடான உகாண்டாவிலும் கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர்.

    • குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
    • பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.

    குன்னூர்,

    நீலகிரி மாவடத்தில் கடந்த சில வாரங்களாக கடும் உறைபனி மற்றும் பனிப்பொழிவு காணப்ப டுகிறது. அவ்வப்போது சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை கடும் வெயில் நிலவியது. அதனை தொடர்ந்து கடும் பனி கொட்டி தீர்த்தது.

    மாலையில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு ஆரம்பித்த மழை அதிகாலை வரை நீடித்தது. இந்த மழையால் சாலையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரம் என்பதால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர் மழைக்கு ஒட்டுப்பட்டறை, உழவர்சந்தை, ரேலி காம்பவுண்ட், வண்ணா ரபேட்டை உள்பட 5 இடங்களில் மண்சரிவு ஏற்ப ட்டது. தகவல் அறிந்ததும், அதிகாரிகள் விரைந்து வந்து மண்சரிவை அகற்றினர். தொடர்ந்து இதேபோன்று மழை பெய்தால் மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிந்தது.

    • கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது.
    • பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை அமைந்து உள்ளது. இந்த மலைப் பாதையில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்ல க்கூடிய தெசிய நெடுஞ் சாலை உள்ளது.

    இந்த மலைப்பாதை வழியாக தினமும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் வந்து செல்கிறது.

    இந்த நிலையில் சத்திய மங்கலம், திம்பம் வனப்பகுதி மலைப்பாதை 23 கொண்டை ஊசி வளைவு கள் கொண்டது. இந்த வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.

    திம்பம் வனப்பகுதி ரோட்டில் அடிக்கடி வாகன ங்கள் பழுதாகி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனால் மாற்று பாதையாக அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக பல கனரக வாகனங்கள் மைசூருக்கு சென்று வருகிறது.

    மேலும் நேரம் விரையம் ஏற்படு வதும் தவிர்க்கபபடுவதால் பர்கூர் மலை பாதையை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வரு கின்றனர்.

    இதையடுத்து பர்கூர் மலை்பாதை சாலைகள் அந்தியூரில் இருந்து தமிழக எல்லைப் பகுதி வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்தியூர் நகரமே தண்ணீரில் மூழ்கியது.

    மேலும் மைசூர் செல்லும் பர்கூர் மலை ப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது. இதை யடுத்து ஒரு சில இடங்களில் சரி செய்யப்பட்டது. பெருபாலான இடங்களில் ரோட்டோரங்களில் பாறை கள் அப்படியே கிடக்கிறது.

    இதே போல் வரட்டு பள்ளம் அணைப்பகுதியில் இருந்து செட்டிநொடு, தாமரைக்கரை, பர்கூர் தட்டகரை, கர்கேகண்டி வரை சாலைகளில் சுமார் 24-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு, பாறைகள் உருண்டும், சாலையில் மரங்கள் முறிந்தும் கிடக்கிறது.

    இதனால் இந்த வழியாக கனரக வாகனங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாக னங்கள் செல்ல முடியாமல் உள்ளது. மேலும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சில 4 சக்கர வாகனங்கள் மட்டுமே தட்டுதடுமாறி சென்று வருகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    எனவே பர்கூர் மலை ப்பாதையில் ரோட்டோரம் கிடக்கும் பாறைகள் மற்றும் மரக்கிளைகளை வனத்துறை யினர் மற்றும் ேதசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    • ஊட்டி, நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது
    • குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகளுக்காக மண் அகற்றப்பட்டது

    ஊட்டி

    . தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்தன. பருவமழை தீவிரம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மார்க்கெட் பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் படகு இல்லம் செல்லும் சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் மற்றும் ரெயில்வே போலீஸ் நிலையம் பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ரெயில் நிலையம் எதிரே உள்ள வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் ஜவுளிக்கடையில் இருந்த ஆடைகள் நீரில் மூழ்கி சேதமானது.

    . பணிகள் முடிந்தும், தொங்கும் நிலையில் இருந்த பாறைகள் அகற்றப்படவில்லை. கனமழையால் கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் இடையே ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் பாறைகள் தள்ளி வைக்கப்பட்டது. இதேபோல் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டியில் உள்ள தமிழகம் சாலையில் மரங்கள் விருந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். இதேபோல் கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழையால் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டது. மேலும் கடும் குளிர் நிலவுதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    • மகாராஷ்டிராவில் 20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
    • 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5 மி.மீட்டர் மழை பதிவானது. வெள்ளப்பெருக்கால் அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.

    20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பாக விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில பேரீடர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 14ந் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு மரம் மற்றும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




    • மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப் பாதையில் இரைச்சல் பாலம் அருகே கொண்டைஊசி வளைவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ேலாயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே கொண்டைஊசி வளைவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கூடலூர் நகராட்சி 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ பாதை குறுகலான மலைச்சாலையாகும்.

    இந்த சாலையில் அதிக ளவு வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த சாலை அதிகவாகன ங்கள் பயன்பாடு காரணமாக வும், தொடர்மழை காரணமாக வும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,

    மலைச்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மலை ச்சாலையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்ப ட்டுள்ளது.

    தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் அதனை சீரமைத்து வாகனங்கள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகன ங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    தொடர் மழை கார ணமாக தேக்கடி படகு த்துறை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு படகு போக்குவரத்து மட்டுமின்றி ஜீப், யானை சவாரி, பசுமைநடை போன்ற பல்வேறு சுற்றுலா பயணிகளை கவரும் பொழுதுபோக்கு அம்ச ங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரண மாக பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருைக தருவார்கள்.

    இவர்களுக்காக தற்காப்பு கலையான களரி, கதக்களி நடனம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஆனால் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துள்ளது. எனவே ஓட்டல்கள், ரிசாட்டுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    கேரளாவில் பெய்துவரும் தொடர்மழை இப்பகுதி யிலும் தொடர்ந்து நிலவுவ தால் தினசரி ரூ.10லட்சம் வரை வருவாய்இழப்பு ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி வியாபாரிகள் தெரிவித்து ள்ளனர்.

    இந்தோனேசியாவின் கலிமந்தன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaLandslide
    ஜெகார்த்தா:

    இந்தோனேசியாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில், இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கலிமந்தன் மாகாணத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது.

    அந்த மாகாணத்தில் அமைந்துள்ள சுரங்கத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த  ஊழியர்கள் சிக்கினர்.

    இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர் என்றும், மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என பேரிடர் மேலாண்மை குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.  #IndonesiaLandslide
    பிலிப்பைன்சில் கொட்டித் தீர்த்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. #PhilippinesFloods #PhilippinesFlood
    மணிலா:

    தென்கிழக்காசியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் சுமார் 7 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கியதாக  பிலிப்பைன்ஸ் நாடு அமைந்துள்ளது.

    இந்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 புயல்கள் உருவாகின்றன. இந்த புயல்கள் உருவாகும் போதெல்லாம் பெய்யும் கனமழையால் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.

    இந்நிலையில், 29-12-2018 அன்று உருவான உஸ்மான் என்னும் புதிய புயலின் எதிரொலியாக அந்த நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய அளவிலான மழை இரண்டே நாட்களில் பெய்ததால் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பெரிய அளவிலான பாதிப்புக்கு உள்ளாகின.
     
    கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரை புரண்டோடியது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

    மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பும் முடங்கியது.

    நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 75 பேர் உயிரிழந்ததாக கடந்த முதல் தேதி தகவல் வெளியானது. இந்நிலையில், வெள்ளம் வடிந்த பின்னர் கிடைத்த பிரேதங்கள் மற்றும் மண்ணுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் நேற்றுவரை பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    மேலும், காணாமல் போனதாக கருதப்படும் 26 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #PhilippinesFloods #PhilippinesFlood
    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். #Indonesialandslide
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டன. அந்த பகுதிகளில் மீட்புக்குழுவினர் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.



    நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். 20 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சுகபூமி மாவட்டம் சினாரேஸ்மி கிராமத்தில் மட்டும் 30 வீடுகள் நிலச்சரிவின்போது மண் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  #Indonesialandslide

    பிலிப்பைன்சில் கொட்டித் தீர்த்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. #PhilippinesFloods
    மணிலா:

    பிலிப்பைன்சில் ஆண்டுதோறும் 20 புயல்கள் உருவாகின்றன. இதனால் பெய்துவரும் கனமழையில் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.

    இந்நிலையில், அந்த நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்து உள்ளன.

    கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.



    மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து அனேக இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அனேக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பு முடங்கியது.

    நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாயமான 16 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெள்ளம், நிலச்சரிவால் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேரழிவு மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. #PhilippinesFloods
    பிலிப்பைன்சில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பிலிப்பைன்சில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #PhilippinesEarthquake
    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியாகினர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
     
    ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில், பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.



    நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அதன்பின்னர் சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

    இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பைகால் பகுதியில் 16 பேரும், கிழக்கு விசாயாஸ் பகுதியில் 6 பேரும் என மொத்தம் 22 பேர் பலியாகி உள்ளனர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
    ×