என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leopard"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயானந்த் என்பவர் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு போன் பயன்படுத்தி கொண்டுள்ளார்.
    • அப்போது கட்டிலுக்கு கீழே அவரது வளர்ப்பு நாய் தூங்கி கொண்டிருந்தது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் குடியிருப்பு பகுதியில் தூங்கி கொண்டிருந்த நாயை சிறுத்தை வேட்டையாடிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேகான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெயானந்த் என்பவர் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு போன் பயன்படுத்தி கொண்டுள்ளார். அப்போது கட்டிலுக்கு கீழே அவரது வளர்ப்பு நாய் தூங்கி கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சத்தமில்லாமல் நுழைந்த சிறுத்தை தூங்கி கொண்டிருந்த நாயை வேட்டையாடியது. அப்போது சிறுத்தையை கண்டு ஜெயானந்த் அதிர்ச்சியடைந்த

    இதனையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

    • ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது.
    • நாயை சிறுத்தை தூக்கி செல்லும் காட்சி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. சமீப நாட்களாக இங்கு குடியிருப்புகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை சிறுத்தை அலேக்காக கவ்வி சென்றது. சத்தம் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர், வளர்ப்பு நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

    நாயை சிறுத்தை தூக்கி செல்லும் காட்சி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ஊட்டி எச்.பி.எப் பகுதியில் பசுமாட்டை புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க, 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பூனையை வாயில் கவ்விக்கொண்டு சாலையில் சுற்றி திரிந்தது.
    • இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது.

    குறிப்பாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. யானைகள் வீடுகளை அடித்து நொறுக்குவது, பொருட்களை சேதப்படுத்துவது என வாடிக்கையாக செய்து வருகிறது.

    இந்த நிலையில் சில தினங்களாக வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

    பின்னர் வெகுநேரம் அங்கு சுற்றி திரிந்த சிறுத்தை அந்த பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்தது.

    அப்போது அங்கு வளர்க்கப்பட்டு வந்த வளர்ப்பு பூனையை அடித்து கொன்றது. பின்னர் அந்த பூனையை வாயில் கவ்விக்கொண்டு சாலையில் சுற்றி திரிந்தது.

    இந்த காட்சிகள் அனைத்தும் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதில் 2 சிறுத்தைகள் சுற்றித்திரிவது பதிவாகி இருந்தது. இதனை பார்த்த வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரவு நேரங்களில் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து மேற்கொள்ள வேண்டும். இங்கு சுற்றி திரியும் சிறுத்தையை குடியிருப்புக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பருவநிலை மாற்றத்தினால் அவ்வப்போது வனப்பகுதிகளை விட்டு வனவிலங்குகள் வெளியேறி ஊருக்குள் வருவது என்பது தொடர்கதையாக விளங்கி வருகிறது.
    • தமிழக கேரள எல்லையான மேக்கரை - அச்சன்கோவில் செல்லும் சாலையில் உள்ள தமிழக - கேரளா சோதனை சாவடி அருகே சில தினங்களுக்கு முன்பு பகலில் சிறுத்தை ஒன்று நின்றபடி அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த வன ஊழியர்களை பார்த்துக் கொண்டிருந்துள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, மிளா மான், மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள் உள்ளன.

    பரவ நிலை மாற்றத்தி னால் அவ்வப்போது வனப் பகுதிகளை விட்டு வனவிலங்குகள் வெளியேறி ஊருக்குள் வருவது என்பது தொடர்கதையாக விளங்கி வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையம் அருகே கரடி ஒன்று மூன்று பேரை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையில் வன உயிரினங்களின் நட மாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர்.


    சிறுத்தை

    இந்நிலையில், தமிழக கேரள எல்லையான மேக்கரை - அச்சன்கோவில் செல்லும் சாலையில் உள்ள தமிழக - கேரளா சோதனை சாவடி அருகே சில தினங்களுக்கு முன்பு பகலில் சிறுத்தை ஒன்று நின்றபடி அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டி ருந்த வன ஊழியர் களை பார்த்துக் கொண்டிருந்துள்ளது.

    இதை பார்த்த வன ஊழியர்கள் அவர்களது செல்போனில் சிறுத்தையை புகைப்பட எடுத்த சூழலில், சிறுத்தை சோதனை சாவடி நோக்கி அடியெடுத்து வைக்கவே, வன ஊழியர்கள் பாதுகாப்பு கருதி உடனே அங்கிருந்த அறைக்குள் சென்றுள்ளனர்.

    அறிவுறுத்தல்

    மேலும், பகலிலே அச்சன்கோவில் சாலையில், வன உயிரினங்கள் நட மாட்டம் அதிகம் இருப்பதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும், அச்சன்கோவில் சாலையில் இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது எனவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

    • 12 சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு விமானப்படை விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.
    • 2-வது கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள சிவிங்கி புலிகளில் 7 ஆண்கள், 5 பெண்கள் ஆகும்.

    போபால்:

    சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன.

    இந்தியாவின் சத்தீஸ்கர் வனப் பகுதியில் கடந்த 1947-ம் ஆண்டு கடைசி சிவிங்கிபுலி இறந்தது. அதன் பிறகு 1952-ம் ஆண்டு அந்த இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த பகுதியிலும் சிவிங்கி புலி கண்டுபிடிக்கப் படவில்லை.

    இதையடுத்து சீட்டாவை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அந்நாட்டில் இருந்து 8 சீட்டாக்கள் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. இதில் 5 பெண், 3 ஆண் சிவிங்கி புலிகள் ஆகும்.

    இந்த சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தின் குனோ-பல்புர் தேசிய பூங்காவில் திறந்துவிட்டார்.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

    இது தொடர்பாக இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கி புலிகளை கொண்டு வர இந்திய விமான படையின் சி-17 ரக விமானம் கடந்த 16-ந்தேதி புறப்பட்டு சென்றது. அங்கு 12 சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு விமானப்படை விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.

    சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் இன்று காலை 10 மணிக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. 2-வது கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள சிவிங்கி புலிகளில் 7 ஆண்கள், 5 பெண்கள் ஆகும்.

    அவைகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிவிங்கி புலிகளை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் ஆகியோர் கூண்டில் இருந்து திறந்து விடுகிறார்கள்.

    மேலும் 12 சீட்டாக்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

    • கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
    • நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா விற்கு உட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை,வெள்ளாளபாளையம்,ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள், கன்றுகள், நாய்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்டவைகளை கடந்த 15 நாட்களுக்கு மேலாக வேட்டையாடி வந்த சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை.

    கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.

    செஞ்சுடையாம்பா ளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை புலி வந்து சென்றதற்கான கால்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து இரவில் 30 கிலோமீட்டர் தூரம் வெளியே சென்று வேட்டையாடிவிட்டு மீண்டும் அதன் இருப்பி டத்திற்கு திரும்பி வருவதும் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட வனசரக அலுவலர் பிரவீன் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் சிறுத்தை புலி வந்து செல்லும் இடம் கண்டறியப்பட்ட பகுதியில் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி யும், இரண்டு கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியின்

    நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தை புலியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை புலி எந்த கால்நடைகளையும் பிடிக்க வில்லை என்பதால் இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா? என வனத்துறையினர் தீவிர மாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்பு தூர் பகுதியில் உள்ள தோட்டப் பகுதியில் சிறுத்தை புலியின் கால் தடங்கள் பதிந்து இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் மற்றும் ராமாயி ஆகியோரது தோட்டப் பகுதிக்கு சென்று சிறுத்தை புலியின் கால் தடங்களை ஆய்வு செய்ததில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு

    சிறுத்தை புலி வந்து சென்ற

    தற்கான பழைய கால்த டங்கள் என்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை யினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பரமத்தி

    அருகே காளிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது

    38).விவசாயி.அதே பகுதி யில் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஆடு களை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு

    காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதி யில் பதிவான கால் தடங்கள்

    சிறுத்தை புலி கால் தடமா?

    என ஆய்வு செய்து வருகின்ற

    னர்.இந்நிலையில் பரமத்தி வேலூர் பகுதியில் கால்ந டைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலியின் நட

    மாட்டம் பற்றிய எந்த தடை

    யும் இல்லை. இதனால் சிறுத்தை இடம் மாறி

    இருக்கலாம் என்று

    வனத்துறை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.

    அதை உறுதி செய்யும் வகையில் நேற்று கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதியில் சிறுத்த புலி ஆட்டை வேட்டையாடி உள்ளது. பரமத்தி வேலூரில் முகாமில் இருந்த வனத்துறையை சேர்ந்த மலைவாழ் மக்கள் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலி பற்றிய எந்த தடையும் இல்லை. இருக்கூர் சுற்றுவட்டார பகுதியில் வனத்துறையினரின் தேடுதல் வேட்டை அதி கரித்திருப்பதால் பயந்து போன சிறுத்தை புலி இருக்கூர்பகுதியில் இருந்து காவிரி ஆற்றை கடந்து அக்கரையான கரூர் மாவட்டம் நொய்யல் வருகை அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளது. ஆனால் நீண்ட காலமாக தான் வசித்த கல்குவாரியை விட்டு போகாது. மீண்டும் இதே பகுதிக்கு திரும்ப வரலாம். அதனால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையுடன் தங்களது கால்நடைகளையும், குழந்தை

    களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இருக்கூர் பகுதி மற்றும் கல்குவாரிகளில் புலிகளின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
    • கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் ஊராட்சி செஞ்சுடையாம்பாளையம், வெள்ளாளபாளையம், புளியம்பட்டி மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, கன்று குட்டி, கோழிகள், மயில்கள், நாய் உள்ளிட்டவைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை புலி பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

    இந்த சிறுத்தை புலியை பிடிக்க வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறை யினர் ட்ரோன், கண்காணிப்பு காமிரா மற்றும் கூண்டு அமைத்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

    அதை உறுதி செய்யும் வகையில், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம்புதூரில் கடந்த 16-ந் தேதி சிறுத்தை புலி 5 ஆடுகளை கடித்து கொன்றது. தகவல் அறிந்த இருக்கூர் சமுதாய கூடத்தில் முகாமில் இருந்த சேலம், நாமக்கல், ஈரோடு, சத்தியமங்கலம், முதுமலை பகுதிகளை சேர்ந்த வனத்துறையினர், கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

    மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தங்களது கூடாரங்களை காலி செய்து வருகின்றனர். தற்போது 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    பரமத்திவேலூர், கரூர் பகுதிகளில் சிறுத்தை புலியின் நடமாட்டம் தென்படவில்லை. சிறுத்தை புலி ஒரே இரவில் 50 கிலோமீட்டர் வரை கடந்து செல்லும் திறன் உடையது. மேலும் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்து கொடைக்கானல் மலை, 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் சிறுத்தை புலி கொடைக்கானல் பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

    • காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது தொடா்ந்து வருகிறது.
    • சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது தொடா்ந்து வருகிறது.

    இந்த நிலையில் அரவேனு பெரியாா் நகா் பகுதியில் சிறுத்தை ஒன்று நீண்ட நேரம் குடியிருப்புப் பகுதியில் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடமாடியது அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குடியிருப்புவாசிகளை அச்சமடையச் செய்துள்ளது.

    இந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

    • கன்றுக்குட்டியை கடித்து இழுத்துச் சென்று கொன்று போட்டு விட்டு ஓடிவிட்டது.
    • சிறுத்தை நடமாட்டம் உள்ளது என எச்சரிக்கை பதாகைகளையும் வைத்தனர்.

    காங்கயம் :

    காங்கயம்- தாராபுரம் சாலையில் ஊதியூர் மலை உள்ளது. 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த மலையில் மான், நரி, காட்டுப்பன்றி, உடும்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஒன்று, அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து இழுத்துச் சென்று விடுகிறது. கடந்த வாரம் தாயம்பாளையம் ரத்தினசாமி என்பவரது ஆட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை ஆட்டை கடித்து கொன்றது. அதன்பின்னர் ஊதியூர் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் அருகிலுள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டையும், காசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீட்டின் முன்பு கட்டிப் போட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்து இழுத்துச் சென்று கொன்று போட்டு விட்டு ஓடிவிட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கயம் வனத்துறை அலுவலர் தனபால் தலைமையில் வனத்துறையினர் ஊதியூர் வந்து மலையடிவாரத்தில் ஆங்காங்கே சிறுத்தை நடமாட்டம் உள்ளது என எச்சரிக்கை பதாகை களையும் வைத்தனர். தொடர்ந்து 3 கூண்டுகள் வரவழைக்கப்பட்டு ஊதியூர் பகுதியில் வைக்கப்பட்டு, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி வனத்துறை அலுவலர் தனபால் கூறும்போது, கூண்டுகளில் உயிருடன் ஆட்டுக்குட்டியை விட்டு அதன் மூலம் சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். தொடர்ந்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக டிரோன் ஆப்ப ரேட்டர் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிறுத்தை நடமா ட்டத்தை கண்காணிக்கும் பணியும் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. 25 பணியாளர்களை கொண்டு 4 குழுக்களாக பிரிந்து இரவு பகல் என தீவிர ரோந்து பணியினை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

    • பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு மற்றும்கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று போட்டு விடுகிறது.
    • சிறுத்தையை பிடிக்க மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே ஊதியூர் மலை 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த மலையில் மான், நரி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ள சிறுத்தை ஒன்று, மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு மற்றும்கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று போட்டு விடுகிறது.

    இதனால் ஊதியூர் மலை பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இதனால் சிறுத்தையை பிடிக்க மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக்குள் ஆடுகள் கட்டி வைத்துள்ளனர். மேலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தி இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சிறுத்தை உருவம் பதிவு ஆகவில்லை. இதனால் கூண்டுகள் வைக்கப்பட்ட இடத்திற்கு சிறுத்தை வரவில்லை என தெரிகிறது.

    வனப்பகுதிக்குள் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்க டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த முயற்சியிலும் சிறுத்தை தென்படவில்லை. இருப்பினும் பல்வேறு குழுக்களாக பிரிந்து பாதுகாப்புடன் வனப்பகுதி மற்றும் மலையடிவாரம் என அனைத்து இடங்களிலும் சிறுத்தையை தேடி வருகின்றனர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது " மலைப்பகுதியில் சிறுத்தை எங்கு பதுங்கி உள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கேமராவிலும் பதிவாகவில்லை. டிரோன் கேமராவிலும் சிக்கவில்லை. கூண்டுக்குள்ளும் மாட்டவில்லை. ஒருவேளை சிறுத்தை இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்று விட்டதா? என்ற சந்தேகமும் உள்ளது. இருப்பினும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறோம். எனவே பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்" என்றார்.

    • கன்றுக்குட்டி, ஆடு என 3 கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்றது
    • கூண்டு வைத்தும், 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் - ஊதியூர் பகுதியில் கடந்த 3ந் தேதி துவங்கி 7ந் தேதி வரை குறிப்பிட்ட நாள் இடைவெ ளியில் கன்றுக்குட்டி, ஆடு என 3 கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனை உறுதி செய்த வனத்துறையினர் 4 இடங்களில் கூண்டு வைத்தும், 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

    இருப்பினும் சிறுத்தை கேமராவில் சிக்கவில்லை. இந்நிலையில் காசிகவுண்ட ம்பாளையம் பகுதியில், அகஸ்டின் என்பவரது வளர்ப்பு நாயை சிறுத்தை இழுத்து சென்றதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், செடி, கொடி, மரங்கள் அடர்ந்து படர்ந்துள்ள நிலையில் மலையின் மேல் பகுதியில் சமதள பரப்பை காண முடிகிறது. மலைத்தொடரில் ஆங்காங்கே குகைகளும் உள்ளன. இவை சிறுத்தைகள் வாழ்வதற்கான கட்டமைப்பு டன் தான் உள்ளன.எனவே அங்கு சுற்றித்திரியும் சிறுத்தை அந்த மலைத்தொ டரை தனது வாழ்விடமாக்கி கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும் சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

    • சிறுத்தையின் செயல்பாடுகள் வனவிலங்கு ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
    • சூரிய நமஸ்காரம் செய்வதில் சிறுத்தைக்கும் இத்தனை ஆர்வமா? என கேள்வி கேட்ட இணையதளவாசிகள், அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

    வனவிலங்குகள் காட்டுக்குள் சுற்றிவருவதையும், எதிரிகளை வேட்டையாடுவதையும் வனவிலங்கு ஆர்வலர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம்.

    மின்னல் வேகத்தில் ஓடும் மான், வேட்டையை துரத்தி செல்லும் சிங்கம், புலி, சிறுத்தை, இவற்றிடம் இருந்து தப்பிக்க முயலும் சிறு விலங்குகள் போன்றவற்றை வீடியோவாக பார்க்கும் பலரும் வனவிலங்குகளை கண்டு மிரண்டுபோவார்கள்.

    அந்த வகையில் இந்திய வனத்துறை அதிகாரி சாகேத் படேலா என்பவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ, சிறுத்தைகள் பற்றிய சிந்தனையை மாற்றும் விதத்தில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று அதிகாலை பொழுதில் எழுந்து காட்டுக்குள் நடைபோடுகிறது. பின்னர் சூரியனை பார்த்தபடி கால்களை நீட்டுகிறது.

    பின்னர் சூரியநமஸ்காரம் செய்வது போல செயல்படுகிறது. சிறுத்தையின் இந்த செயல்பாடுகள் வனவிலங்கு ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த வீடியோ ரஷிய தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. சூரிய நமஸ்காரம் செய்வதில் சிறுத்தைக்கும் இத்தனை ஆர்வமா? என கேள்வி கேட்ட இணையதளவாசிகள், அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

    யோகா ஆசிரியர் இல்லாமல் இந்த சிறுத்தைக்கு யோக கற்று கொடுத்தது யார்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    ×