search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lok sabha speaker"

    • பாராளுமன்றத்தின் கண்ணியத்தையும் ஒழுங்கையும் காக்க வேண்டும்.
    • பாராளுமன்றத்தில் தேவையற்ற கூச்சலிடுவதை எம்.பி.க்கள் தவிர்க்க வேண்டும்.

    மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லா, பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது :

    அரசியலமைப்புச் சட்டத்தின்படியே பாராளுமன்றம் செயல்படுகிறது. அரசியலமைப்பின் முன் அனைத்து மதங்களும் சமம். எம்.பி.க்கள் எந்த மதத்தைப் பற்றியும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    எல்லா நேரங்களிலும் பாராளுமன்றத்தின் கண்ணியத்தையும் ஒழுங்கையும் காக்க வேண்டும். 17வது மக்களவையில் இதுவரை எட்டு அமர்வுகளின் கீழ் 1,000 மணி நேரம் சபை செயல்பட்டுள்ளது.

    உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசும்போது தேவையற்ற ஆக்கிரமிப்பு மற்றும் கூச்சலிடுவதை தவிர்க்க வேண்டும். விவாதங்கள் எதிர் விவாதங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை அலங்கரிக்கின்றன.

    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மேடையாக பாராளுமன்றத்தை எம்.பிக்கள் பயன்படுத்தக் கூடாது. புதிய பாராளுமன்ற கட்ட பணிகளை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும்.

    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு இரு அவைகளின் சபாநாயகர்கள் இன்று அழைப்பு விடுத்துள்ளனர். #LokSabha #SumitraMahajan #allpartymeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு அலுவல்களை நிறைவேற்ற முடியாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய போராட்டத்தால் ஸ்தம்பித்தது.

    எனினும், வருமானத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டம் உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேறியது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியின் இறுதி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் ஜனவரி 30-ம் தேதி அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று அழைப்பு விடுத்துள்ளார். 

    இதேபோல், மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு வரும் 31-ம் தேதி அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த அவைத்தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். #LokSabha #SumitraMahajan #allpartymeeting 
    மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவை சேர்ந்த மேலும் 7 எம்பிக்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்துள்ளார். #WinterSession #ADMKMPsProtest
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்பிக்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேர் 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அதிமுக எம்பிக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

    இதையடுத்து அருண்மொழித்தேவன், கோபாலகிருஷணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவர்கள் 7 பேரும் மக்களவையில் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்குள் கூட்டத் தொடரும் முடிவடைந்துவிடும். எனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்பிக்கள் அனைவரும் இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. #WinterSession #ADMKMPsProtest
    நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் 18-ந் தேதி தொடங்குகிறது. அதையொட்டி, நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்துகிறார். #LokSabhaSpeaker #SumitraMahajan
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், 18-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். நாளை இந்த கூட்டம் நடக்கிறது.

    அந்த கூட்டத்துக்கு முன்பாக, பல்வேறு கட்சி தலைவர்களை சபாநாயகர் தனித்தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது, எம்.பி.க்கள் அவரவர் பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

    மக்களவை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தபோதிலும், காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், ராகுல் காந்தியை சபாநாயகர் அழைத்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நான் வெளிநாடுகளுக்கு சென்றபோது, அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்தேன். அப்போது, இந்திய நாடாளுமன்றம் அடிக்கடி முடங்குவது குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். இந்த மக்களவை பதவிக்காலத்தின் கடைசி ஆண்டில் நாம் நுழைந்துள்ளோம். இன்னும் 3 கூட்டத்தொடர்கள்தான் உள்ளன. அவற்றிலும், மழைக்கால கூட்டத்தொடரிலும், குளிர்கால கூட்டத்தொடரிலும்தான் மசோதா தொடர்பான பணிகளை கவனிக்க முடியும்.

    ஆகவே, எம்.பி.க்கள் அவரவர் பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்க வேண்டும். முதல்முறை எம்.பி. ஆனவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

    கட்சி மேலிடத்தின் செல்வாக்குடன், வேட்பாளரின் நற்பெயரும் தொகுதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கட்சி மேலிடத்தின் செல்வாக்கால் மட்டுமே தொகுதியில் வெற்றி பெற முடியாது. எனவே, எம்.பி.க்கள் தங்களது நாடாளுமன்ற கடமைகளை ஆற்ற அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வாக்காளர்களின் நம்பிக்கையை அவர்கள் பெற முடியும்.

    எதிர்க்கட்சிகளின் யோசனைகளை பரிசீலிக்க நான் தயாராக இருக்கிறேன். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாதுகாப்பது அனைத்து உறுப்பினர்களின் கூட்டு பொறுப்பு ஆகும்.

    இவ்வாறு சுமித்ரா மகாஜன் கூறினார்.  #LokSabhaSpeaker #SumitraMahajan #Tamilnews
    ×