என் மலர்
நீங்கள் தேடியது "lovers"
- அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அவர் வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார்.
- . இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.
கேரளா மாநிலம் எருமேலி பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாலன்(56). இவரது மனைவி ஸ்ரீஜா(48). இந்த தம்பதியினருக்கு அஞ்சலி(27) என்ற மகளும் அகிலேஷ்(24) என்ற மகனும் இருந்தனர்.
சத்தியபாலன் அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தி வந்தார். மகள் அஞ்சலி வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
இவர் விடுமுறைக்கு அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அஞ்சலி தனது தந்தையின் கடைக்கு அருகில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்த ஒருவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அஞ்சலி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அஞ்சலி வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார். இதனால் அஞ்சலியின் பெற்றோர் ஆத்திரடைந்தனர். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அஞ்சலியை கண்டித்து பெற்றோர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த தாய் ஸ்ரீஜா, வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது அவர்களின் மீதும் தீப்பற்றி கொண்டது. இதனால் 3 பேரும் உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்தனர். குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜாவின் மகன் அகிலேசும் பலத்த தீக்காயம் அடைந்தார்.
வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அக்கம்பத்தினர் தீயணைப்பு துறைக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து காயங்களுடன் கிடந்த 4 போரையும் மீட்டு கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியில் ஸ்ரீஜா பரிதாபமாக உயிரிழந்தார். சத்தியபாலனும், அஞ்சலியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த அகிலேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து எருமேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்தோணி மார்ட்டினும் வெள்ளத்தாயும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர்.
- பயந்து போன லெட்சுமி, திருச்செந்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பனையன்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்.
இவரது மகன் சுடலைக்கண்ணு என்ற அந்தோணி மார்ட்டின். இவரும், பாலாமடையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது மகள் வெள்ளத்தாயும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து ள்ளனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால் கடந்த மாதம் 28-ந் தேதி 2 பேரும் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளத்தாயின் தந்தை ஸ்ரீதர், அந்தோணி மார்ட்டினின் தாயார் லெட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பொருட்கள் சூறை
இதனால் பயந்து போன லெட்சுமி, பனையன்குளத்தில் இருந்து வெளியேறி, திருச்செந்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே ஸ்ரீதர், அவரது மனைவி சுப்புலெட்சுமி, மகன் சுடலைமுத்து, மருமகன்கள் கால்வாயை சேர்ந்த அருணாச்சலம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த சப்பாணி முத்து ஆகிய 5 பேரும் பனையன்குளத்தில் உள்ள அந்தோணி மார்ட்டின் வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அங்கிருந்த கதவுகள், பீரோ, டி.வி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு தப்பி சென்றனர்.
இதுபற்றி லெட்சுமி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெ க்டர் தாமரைலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீட்டை சூறையாடிய ஸ்ரீதர் உள்பட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- இளம்பெண் பூஜாவுக்கு 90 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்
- போலீஸ் தேடுவதை அறிந்த லோகேஷ், உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம்-பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இன்று மாலையில், இளம்பெண் ஒருவர், உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் பூஜா (வயது 19) என்பதும், ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அந்தப் பெண் லோகேஷ் என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும், இருவரும் இன்று தனியாக காட்டுப்பகுதியில் சந்தித்தபோது காதலிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால், ஆத்திரத்தில் தன்னை சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் லோகேஷை தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்த லோகேஷ், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பூஜாவுக்கு 90 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- அமிர்தராஜ் என்பவரை அருணாதேவி 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
- ஆலங்குளத்தில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாபேரியை சேர்ந்தவர் அருணா தேவி ( வயது 22).
கலெக்டர் அலுவலகத்தில் மனு
இவர் இன்று தனது காதல் கணவருடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில் கூறியி ருப்பதாவது:-
நான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறேன். நானும் எங்கள் பகுதியை சேர்ந்த அமிர்தராஜ் (27) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
எதிர்ப்பு
எங்கள் திருமணம் குறித்து எனது பெற்றோ ரிடம் கூறினேன். ஆனால் அவர்கள் எங்கள் திரும ணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எனது தந்தையும், சித்தப்பாவும் சேர்ந்து கொண்டு களக்காட்டை சேர்ந்த ஒரு போலீஸ்காரருக்கு என்னை திருமணம் செய்து கொடுக்க முயற்சி செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் நேற்று வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குளத்தில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்.
பொய் புகார்
ஆனால் எனது பெற்றோர், அமிர்தராஜ் என்னை கடத்தி சென்று விட்டதாக பாவூர்சத்திரம் போலீசில் பொய்யான புகார் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தாமல் போலீசார் எனது கணவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
- பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மானாசிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் சிவராமகிருஷ்ணன். இவர் திருப்பூர், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகள் ரம்யாவை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு ரம்யா வெளியேறினார். பின்னர் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சிவராம கிருஷ்ணனும், ரம்யாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு அவர்கள் இருவரும் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அப்போது தனது பெற்றோர் எங்களை பிரிக்க முயற்சிப்பதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் ரம்யா போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரம்யாவின் வயது சான்றிதழை ஆய்வு செய்த போது அவர் மேஜர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது விருப்பப்படி கணவர் சிவராமன் வீட்டிற்கு செல்லலாம் என்று தெரிவித்தனர் .இதையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் மானாசிபாளையத்தில் உள்ள சிவராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றனர்.
- பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர்.
- காதல் ஜோடியின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் காதல் ஜோடி ஒன்று பரபரப்பான சாலையில் நீண்ட நேரமாக கட்டிப்பிடித்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இடையூராக நடுரோட்டில் நின்றபடி காதல் ஜோடி கட்டிப்பிடித்து இருந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைக்கண்டு திகைத்துப்போன பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து ஜோடியை அப்புறப்படுத்த முற்பட்டார். பின்னர் அங்கு மக்கள் கூடியதை அடுத்து நடப்பதை அறிந்த காதல் ஜோடி சுயநினைவுக்கு வந்து விலகினர்.
காதல் ஜோடியின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.
- கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
வீரேநகர்:
நெதர்லாந்த் வீரேநகரில் புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. காதலர்களின் சொர்க்கபுரியாக திகழும் இந்த கடற்கரைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் ஏராளமான காதல் ஜோடிகள் இங்கு திரளுவார்கள்.
காதலர்கள் தனிமையில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுவது உண்டு. சில காதலர்கள் மெய்மறந்து அத்துமீறுவதும் உண்டு. பக்கத்தில் யார்? இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர்கள் நிர்வாணமாக உல்லாசத்திலும் ஈடுபடுவார்கள், கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிறு குன்றுகளை கூட காதலர்கள் விடுவது இல்லை. அங்கும் அவர்கள் ஜாலியாக இருப்பார்கள்.
இதனால் அந்த கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.
கடற்கரையை படுக்கை அறைகாக மாற்றும் இளசுகளின் இந்த அத்துமீறல் குறித்து வீரேநகர் மாநகராட்சிக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தது. இதையடுத்து வீரேநகர் கடற்கரையில் காதல் ஜோடியினர் உல்லாசமாக இருக்க தற்போது நெதர்லாந்து அரசு தடை விதித்துள்ளது. கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி யாராவது கடற்கரையில் உல்லாசமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது.
இந்த தடையால் கடற்கரையில் நிர்வாணமாக சன்பாத் எடுக்க வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது இடங்களில் நாங்கள் உல்லாசமாக இருப்பதில்லை என்றும் உடல் ஆரோக்கியத்துக்காக சன்பாத் எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
- காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- மாணவியின் பெற்றோர் மகளை தங்களுடன் வா என அழைத்தனர்.
கோவை:
கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் 23 வயது மாணவி.
இவர் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இடுக்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் அனீஸ் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாணவி தனது காதலை தொடர்ந்து வந்தார்.
நேற்றுடன் மாணவியின் பட்டப்படிப்பு முடிந்தது. எனவே தன்னை அழைத்து செல்ல வருமாறு மாணவி அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து அனீஸ் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 9 பேருடன் கல்லூரிக்கு வந்தார்.
மாணவியின் பெற்றோரும் தங்களது மகளை அழைத்து செல்வதற்காக கல்லூரிக்கு வந்திருந்தனர்.
மாணவி தனது பெற்றோர் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. மாணவியின் பெற்றோர் மகளை தங்களுடன் வா என அழைத்தனர். ஆனால் அவருக்கு தான் வீட்டிற்கு சென்றால் காதலை மறந்து விடு என்பார்கள்.
அத்துடன் வேறு யாருக்காவது தன்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என நினைத்து பயந்தார். இதனால் அவர்கள் கூப்பிட்டதற்கு மறுப்பு தெரிவித்தார்.
நான் உங்களுடன் வரமாட்டேன். எனது காதலருடன் தான் செல்வேன் என கூறினார். இதனால் பெற்றோர் மீண்டும் அவரிடம் பேசி பார்த்தனர். ஆனால் மாணவி தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.
இதனை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். கல்லூரி நிர்வாகம் பெற்றோருடனே செல்லவே நாங்கள் அனுமதிப்போம் என தெரிவித்தனர். அப்போதும் அவர் பெற்றோருடன் செல்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதுபற்றிய தகவல் ஆனைமலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவி, அவரது பெற்றோர், மாணவியின் காதலன், காதலனின் பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போதும் மாணவி தான் காதலனுடன் தான் செல்வேன். பெற்றோருடன் செல்லமாட்டேன் என தெரிவித்ததால், போலீசார் மாணவியை அவரது காதலனுடன் அனுப்பி வைத்தனர்.
- பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
- ஆண் நண்பர், மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்தப்பெண் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் பல்லடம் அருகே உள்ள அருள் புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பெண்ணின் ஊர் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் நல்லூர் காவல் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களைப் பின்தொடர்ந்து பைக் மற்றும் 3 கார்களில் வந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் அந்த ஆண் நண்பர், மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவர் மகன் ராமகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரது மகன் விக்னேஷ் இருவரையும் பல்லடம் பனப் பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருநங்கை திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- வாலிபர் திருநங்கை வினோதினியை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை 5-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேரில் வந்தனர். அப்போது ஒரு திருநங்கை திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார், அதிர்ச்சியடைந்து திருநங்கையிடம் இருந்த மண்எண்ணை கேனை பிடுங்கினர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் பாலூர் நடு காலனியை சேர்ந்த வினோதினி (வயது 26) திருநங்கை என்பது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கை வினோதினி வினோத்குமாராக இருந்தபோது, நத்தப்பட்டை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலர்களாக இருந்து வந்துள்ளனர்.
அந்த வாலிபர் கூறிய காரணத்தினால் வினோத் குமார், திருநங்கையாக மாறினார். தற்போது அந்த வாலிபர் திருநங்கை வினோதினியை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார். எனவே, இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக திருநங்கை வினோதினி போலீசாரிடம் கூறினார். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இன்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
- அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 264 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத திரையில் காதலர்கள் மடியில் படுத்து இருப்பது போன்ற காட்சி வெளியானது. இதனை பார்த்த அந்த காதலர்கள் முகத்தை மூடிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நல்ல வேலை செய்தீர்கள் கேமரான் மேன், கொடுத்த வேலைக்கு மேல் கூடுதல் வேலை பார்த்துள்ளீர்கள், போட்டியை காண வந்தீர்களா காதல் செய்ய வந்தீர்களா, என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். பல ரசிகர்கள் போட்டியை வீடியோ எடுக்க சொன்னா அப்பாவி காதலர்களை வீடியோ எடுத்து காட்டிக் கொடுத்து வீட்டீர்களே கேமரா மேன் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர்.
- சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர்.
சேலம்:
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் தங்களது காதலர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தும், வாழ்த்து தெரிவித்தும் காதலை பரிமாறிக்கொண்டனர். மேலும் காதலர்கள் இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க தங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு காலை முதலே படையெடுத்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் காதல் ஜோடிகள் வந்தனர். இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும், சாரையாக காதல் ஜோடிகள் வந்தனர். மேலும் காதல் திருமணம் செய்தவர்களும் அங்கு குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் காதல் ஜோடிகள் மற்றும் இளம் ஜோடிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
ஏற்காட்டில் குவிந்த காதல் ஜோடிகள் அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மீன் பண்ணை உள்பட அனைத்து பகுதிகளையும் ஆனந்தமாக சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் முக்கியமான பகுதிகளில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் குரும்பப்பட்டியில் இயற்கை சூழலில் அனைவரையும் கவரும் வகையில், உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் காதல் ஜோடிகள் இன்று காலை முதலே அதிக அளவில் அங்கு வந்தனர்.
மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகள் முன்பும் நின்று காதல் ஜோடிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள், குரங்குகள், மயில்கள், மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்ததுடன் உற்சகாமாக பொழுதை கழித்தனர்.
காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து தங்களுக்கு பிடித்த மீன்கள் மற்றும் உணவுகளையும் வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்.
இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள புல் தரையில் அமர்ந்தும், செயற்கை நீரூற்று முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் காலை முதலே அண்ணா பூங்காவில் காதல் ஜோடிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் திரண்டு தங்களுக்கு பிடித்த சினிமாக்களை பார்த்து மகிழ்ந்தனர்.