search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mada Jyoti Darshan"

    • மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
    • நேற்று இரவு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபை உள்ளது, இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாத பூச நட்சத்திரம் நேற்று இரவு 7.45 மணிக்கு தொடங்கியது.

    இதனை முன்னிட்டு நேற்று இரவு சத்திய ஞான சபையில், 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள், அருட்பெருஞ் சோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகா மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதியை தரிசித்தனர்.

    தமிழகத்தின் பல்வேறு பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான, சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர், ஜோதி தரிசனத்தை தொடர்ந்து சபை வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் திரு மாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    ஞானசபை உள்ள பொதுவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×