search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malligarjun Kharge"

    • சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால்....
    • நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜக-வால் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனது.

    காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி 240 இடங்களில் வெற்றி பெற்றது. 32 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்திருக்கும்.

    இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் வெற்றியை பெற இந்தியா கூட்டணி கடுமையாக உழைக்க தீர்மானித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்கார்ஜூன கார்கே, கட்சி தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களவை தேர்தில் நாம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்றது. ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் மற்ற சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால் ராகுல் காந்தி பிரதமராகியிருப்பார்.

    இதற்காகத்தான் நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது. களப்பணியை செய்வதை தவிர்த்து நாம் பேசிக் கொண்டிருந்தால் அது நிறைவேறாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மீட்டெடுப்பதற்கு வெற்றி முக்கியமானது. வெற்றி பெற்றால் மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும். வெற்றி பெற்றால் சட்ட மன்றம் திரும்பும். வெற்றி பெற்றால் மாவட்டம், ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்

    இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

    • ராகுல் காந்தி கடந்த 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மணிப்பூரில் தொடங்கினார்.
    • அசாமில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்திக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மணிப்பூரில் தொடங்கினார். தற்போது அவரது யாத்திரை அசாமில் நடந்து வருகிறது. அங்கு யாத்திரையில் ராகுல் காந்திக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று கவுகாத்தி நகர எல்லையில் ராகுல் காந்தியின் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நடத்தி வரும் நிலையில் அசாமின் நாகோன் மாவட்டத்தில் யாத்திரையில் பா.ஜ.க.வினர் இடையூறு ஏற்படுத்தினர். ஆபத்தான முறையில் ராகுல் காந்திக்கு அருகில் வந்து மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கினர்.

    இதில் அசாம் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தனர். சில நேரங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் யாத்திரைக்குள் செல்ல வசதி செய்து தந்துள்ளனர். இது ராகுல் காந்தியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையத்தை உடைத்து அவரது மற்றும் யாத்திரையில் பங்கேற்பவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.

    எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அசாம் முதல் மந்திரி மற்றும் அசாம் காவல்துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க நீங்கள் தலையிட்டு உத்தரவிட வேண்டும். ராகுல் காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றுள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்தார்.

    ×