search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manu Bhaker"

    • துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
    • மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    இதற்கிடையே, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது பதக்கம் இதுவாகும்.


    இந்நிலையில், வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள். ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாக்கர். அவர் எங்களை மிகவும் பெருமைப்படுத்தினாள். அவருக்கும் சரப்ஜோத் சிங்குக்கும் எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
    • இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    இதையடுத்து, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார்.

    இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாக்கர்- சரோப்ஜோத் இணைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எங்கள் துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து எங்களை பெருமைப்படுத்துகிறார்கள்!

    மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஒலிம்பிக்ஸில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.

    மானுவைப் பொறுத்தவரை, இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும். இது அவரது நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

    • இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    போட்டியின் 2-வது நாளில் அவர் பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

    இந்த நிலையில் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரும், சரப்ஜோத் சிங் ஜோடியும் இணைந்து நேற்று நடந்த தகுதி சுற்றில் 580 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

    இதன் மூலம் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார். 

    அந்த வகையில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை மனுபாக்கர் பெற்றுள்ளார். மேலும் 124 ஆண்டுகளில் ஒரே ஒலிம்பிக் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த ரமீதா 7-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். அவர் 145.3 புள்ளிகளை பெற்றார்.

    இதேபோல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். அவர் 208.4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார்.

    • சரப்ஜோத் சிங் - மனுபாகெர் ஜோடி 3 ஆம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    • அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் ஜோடி 7 ஆம் இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றுப் போட்டி பகல் 12.45 மணிக்கு நடைபெற்றது. அதில், இந்தியாவை சேர்ந்த சரப்ஜோத் சிங் - மனுபாகெர் ஜோடி 3 ஆம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு சரப்ஜோத் சிங்- மனுபாகெர் ஜோடி முன்னேறியுள்ளது.

    அதே சமயம், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் ஜோடி 7 ஆம் இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியது.

    10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ரமிதா ஜிண்டால் ஏழாவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

    முன்னதாக, இந்திய ஆடவர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி ஜோடி ஜெர்மனியின் மார்வின் சீடல் மற்றும் மார்க் லாம்ஸ்ஃபஸ் ஆகியோருக்கு எதிரான ஆட்டம் ஜெர்மனி வீரர் மார்க்கின் முழங்கால் காயம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    • சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றிருப்பது சிறப்புக்குரியது.
    • வீராங்கனையின் வெற்றிக்கு துணை நின்ற பெற்றோரையும், பயிற்சியாளரையும் பாராட்டுகிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலுக்கான இறுதிப்போட்டியில் மனு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

    இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கம் பெற்றிருக்கும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பாக்கர் தாய் நாட்டிற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறார்.

    இவர் ஏற்கனவே சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றிருப்பது சிறப்புக்குரியது.

    வீராங்கனையின் வெற்றிக்கு துணை நின்ற பெற்றோரையும், பயிற்சியாளரையும் பாராட்டுகிறேன்.

    ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்திய நாட்டிற்கு முதல் பதக்கம் வென்று கொடுத்திருக்கும் மனு பாகெர் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைப் படைத்துமென் மேலும் வளர, வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
    • துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் கிடைத்துள்ளது.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச் சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

    போட்டியின் 2-வது நாளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இந்திய வீராங்கனை மனுபாகெர் வெண்கல பதக்கம் வென்றார். அவர் 221.7 புள்ளிகள் பெற்றார்.

    வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் மனுபாகெர் புதிய வரலாறு படைத்தார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

    ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளான மல்லேஸ்வரி (பளு தூக்குதல்), சாய்னா நேவால் (பேட்மின்டன்), மேரிகோம் (குத்துச்சண்டை), பி.வி.சிந்து (பேட்மின்டன்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்), மீரா பாய்சானு (பளு தூக்குதல்), லவ்லினா (குத்துச் சண்டை) ஆகியோருடன் மனுபாக்கர் இணைந்தார்.

    துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதலில் விஜய் குமார் (வெள்ளி), ககன்நரங் (வெண்கலம்) பதக்கம் பெற்றனர். ரியோடி ஜெனீரோ, டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் கிடைக்கவில்லை. தற்போது இந்தப் போட்டியில்தான் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடங்கியது.


    ஒட்டு மொத்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 5-வது பதக்கம் கிடைத்தது.

    மனுபாகெரை தொடர்ந்து துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இன்று மேலும் பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் ரமிதா ஜின்டல், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றனர். இதில் ரமிதா 631.5 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இளவேனில் வாலறிவன் 630.7 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தை பெற்று ஏமாற்றம் அடைந்தார். முதல் 8 இடங்கள் வரையே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

    இதே போல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அர்ஜுன் பபுதா 630.1 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தார். மற்றொரு இந்தியரான சந்தீப்சிங் 629.3 புள்ளிகளு டன் 12-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

    ரமிதா மோதும் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் நடக்கிறது. அர்ஜுன் பபுதா விளையாடும் இறுதி சுற்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த இருவரும் பதக்கம் பெறுவார்களா? என்று ஆர்வத்துடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இதே போல ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவிலும் பதக்கம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    தருணதீப்ராய், தீரஜ் பொம்ம தேவரா, பிரவீன் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி நேரடியாக கால் இறுதியில் பங்கேற்கிறது. தர வரிசையில் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி கால் இறுதி, அரை இறுதியில் வெற்றி பெற்று பதக்கம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
    • குத்துச்சண்டையின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரின் வென்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர்

    பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர். ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பதக்கம் வென்றது குறித்து மானு பாகெர் கூறியதாவது:

    டோக்கியோவிற்குப் பிறகு நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அதைக் கடக்க எனக்கு மிக நீண்ட காலம் பிடித்தது. வெளிப்படையாகச் சொன்னால், இன்று நான் எவ்வளவு நன்றாக உணர்கிறேன் என்பதை என்னால் விளக்க முடியாது.

    என்னிடமுள்ள முழு ஆற்றலுடன் நான் போராடினேன். நான் வெண்கலத்தை வென்றதற்கு உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

    நான் பகவத் கீதையைப் படித்தேன், நான் செய்ய வேண்டியதை எப்போதும் செய்ய முயற்சித்தேன். எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். நாம் விதியை எதிர்த்துப் போராட முடியாது என தெரிவித்தார்.

    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
    • இன்று டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர்

    பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

    ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.
    • ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர், ரிதம் சங்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    44 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் பதக்கத்திற்கான சுற்றுக்கு (இறுதி சுற்று) முன்னேறியுள்ளார்.

    ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.

    ரிதம் சங்வான் 573-14x புள்ளிகள் பெற்று 15-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.

    நாளை பதக்கத்திற்கான சுற்று நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் பதக்கத்தை உறுதி செய்வார்கள்.

    ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய வீராங்கனை மனு பாகர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
    ரஷியாவில் உள்ள முனிச்சில் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டி நடைபெற்றது.

    இதில் இந்திய வீராங்கனை மனு பாகர் நான்காவது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இவருடன் தற்போது 7 முறை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது. #AsianAirgunChampionship #ManuBhaker #SaurabhChaudhary
    புதுடெல்லி:

    12-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி 484.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.



    தென்கொரியாவின் ஹவாங் சியோன்குன்-கிம் மோஸ் ஜோடி 481.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சீன தைபேயின் வு ஷியா யிங்-கு குயான் டிங் இணை 413.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய ஜோடியான அனுராதா-அபிஷேக் வர்மா 372.1 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த போட்டியின் தகுதி சுற்றில் 17 வயதான மானு பாகெர், 16 வயதான சவுரப் சவுத்ரி ஜோடி 784 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. இந்த வகையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் விடாலினா பாட்சாராஷ்கினா-அர்டெம் செர்னோசோவ் ஜோடி 782 புள்ளிகள் சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது. #AsianAirgunChampionship #ManuBhaker #-SaurabhChaudhary
    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் தங்கப்பதக்கம் வென்றனர். #YouthOlympics2018 #ManuBhaker
    பியூனஸ் அயர்ஸ்:

    206 நாடுகள் பங்கேற்றுள்ள 3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பளுதூக்குதல் போட்டியில் ஆண்களுக்கான 62 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரினுங்கா மொத்தம் 274 கிலோ (ஸ்னாட்ச்-124, கிளன் அண்ட் ஜெர்க்-150 கிலோ) எடை தூக்கி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். துருக்கி வீரர் தோப்தாஸ் கானெர் மொத்தம் 263 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கமும், கொலம்பியா வீரர் வில்லார் எஸ்டீவன் ஜோஸ் மொத்தம் 260 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.



    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். மிசோரமை சேர்ந்த 15 வயதான ஜெர்மி லால்ரினுங்கா உலக இளையோர் மற்றும் ஆசிய இளையோர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லால்ரினுங்கா கூறுகையில், ‘இளையோர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தந்தை குத்துச்சண்டையில் தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்றவர். அதனால் நானும் குத்துச்சண்டை வீரராக ஆக வேண்டும் என்று விரும்பி, ஆரம்ப காலத்தில் அதற்குரிய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தேன். அந்த சமயத்தில் தான் எங்களது கிராமத்தில் புதிதாக பளுதூக்குதல் அகாடமி திறக்கப்பட்டது. அதை பார்த்ததும் எனக்குள் பளுதூக்குதல் வீரராக உருவெடுக்க வேண்டும் என்று ஆசை துளிர்விட்டது. அதன் பிறகு பளுதூக்குதலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த போட்டிக்கு உடல்ரீதியாக நம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதனால் தான் இந்த போட்டியை மிகவும் விரும்புகிறேன்’ என்றார்.



    மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த மே மாதம் அம்மை நோயால் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து குணமடைந்ததும், பழைய நிலையை எட்ட கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. இனி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இன்னும் தீவிரமாக தயாராகுவேன். ஒலிம்பிக் போட்டிக்கு எனது உடல் எடைப்பிரிவை 67 கிலோவுக்கு மாற்றப்போகிறேன்’ என்றார்.

    இதன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீராங்கனை மானு பாகெர் 236.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ரஷிய வீராங்கனை இயானா எனினா 235.9 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜார்ஜியா வீராங்கனை நினோ குட்சிபெரிட்ஸ் (214.6 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

    அரியானாவை சேர்ந்த 16 வயதான மானு பாகெர் உலக கோப்பை போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தி இருந்தார். சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அவர் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் அவர் பதக்கமின்றி ஏமாற்றம் அளித்தார். அதற்கு இந்த போட்டியில் மானு பாகெர் பரிகாரம் தேடிக் கொண்டார். இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    மானு பாகெர் கூறுகையில், ‘இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆசிய போட்டி ஏமாற்றத்திற்கு பிறகு கிடைத்த இந்த வெற்றி எனது மனஉறுதிக்கு வலுசேர்க்கும். ஒவ்வொரு முறையும் முழுதிறமையை வெளிப்படுத்தவே முயற்சிக்கிறேன். சில நேரம் வெற்றிகரமாக அமையாமல் போகலாம். ஆனால் விடா முயற்சியை சிறந்த முறையில் தொடர்வதும், அதிக புள்ளிகள் குவிப்பதும் திருப்தி அளிக்கிறது’ என்றார்.

    ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 9-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் தோற்கடித்தது. பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.  #YouthOlympics2018 #ManuBhaker
    ×