search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Many policemen attended"

    • முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து விளக்கம்
    • எராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பாக சிப்காட்டில் உள்ள தனியார் பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நடந்தது.

    நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமை தாங்கினார். தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு பிரிவு மேலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.

    தொழிலாளர்களுக்கு மொபைல் போன் அழைப்புகள் மூலம் நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்படாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது.

    இதில் சிப்காட் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சஞ்சீவிராயன் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    ×