என் மலர்
நீங்கள் தேடியது "marxist communist"
- புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்.
- இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார் பாளையம் அஜீஸ்நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு பின் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததற்கும் சாவார்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செங்கோலுக்கும், விடுதலை அதிகார பரிமாற்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதில் பா.ஜனதா அரசியல் செய்கிறது.
புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகம் செய்துள்ளனர்.
இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. சட்டசபையில் விவாதிக்கவில்லை. கட்டாய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கண்டிக்கத்தக்கது.
கியாஸ் மானியம் வழங்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு வைப்புத்தொகை நிதியும் அளிக்கவில்லை. அறிவித்த திட்டங்கள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. எல்.டி.சி, யூ.டி.சி பணிகளை உடனே நிரப்ப வேண்டும்.
ரெஸ்டோபார்கள் திறப்பது சமூக சீரழிவை ஏற்படுத்துகிறது. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒரு பகுதியாக கட்டணம் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளின் உரிமையை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- பலமுறை பொய்யான வாக்குறுதிகளை அளித்த அமைச்சரின் தற்போதைய வாக்குறுதியையும் விவசாயி கள் நம்பப்போவதில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு மின்துறையை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிக்க, அதை விற்கும் நடவடிக்கையில் தொடர்ந்து மத்திய பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கட்டணம் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளின் உரிமையை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய பம்ப் செட்டுக்கு மின் மீட்டர் பொருத்தும் பணியை அரசு செய்து வருகிறது. புதுவை அரசும், மத்திய பா.ஜனதா அரசும் விவசாயிகளின் மின்சார உரிமையை பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
விவசாயிகளுக்கு தனி மின்தடம் என்பதும் அவர்களை கடுமையாக பாதிக்கும். பலமுறை பொய்யான வாக்குறுதிகளை அளித்த அமைச்சரின் தற்போதைய வாக்குறுதியையும் விவசாயி கள் நம்பப்போவதில்லை.
எனவே முதல்-அமைச்சர் மவுனம் கலைந்து பம்பு செட்களுக்கு மின்மீட்டர் பொருத்தும் பணியை நிறுத்த வேண்டும். மின்துறை தனியார்மய நடவடிக்கை அனைத்தையும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளை திரட்டி, தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த இடத்தில் கொட்டப்பட்டு வந்தன.
- மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பேரூராட்சியின் பொது பயன்பாட்டிற்காக நகர தி.மு.க செயலாளரான நவநீத பாண்டியன் தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை கடந்த ஆண்டு தானமாக வழங்கினார். இதன் அன்றைய மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும்.
ஆறுமுகநேரி ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் பேரூராட்சி யில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனிடையே அந்த இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி பூங்காவுடன் கூடிய நவீன மின் மயானம் அமைக்க ரூ. 1 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரியான்விளை, செல்வ ராஜபுரம், பெருமாள்புரம், கணேசபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திரண்டு இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்தப் போராட்டம் காரணமாக திருச்செந்தூர்- தூத்துக்குடி நெடுஞ்சாலை யில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நூதன போராட்டம் நடந்தது.
- கைகளில் கட்டு போட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. நகர் குழு உறுப்பினர் பிரபு தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். கிருஷ்ணன்கோவிலில் இருந்து பூவாணி, கூட்டுறவு நூற்பாலை, ராமகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் உள்ள பாலங்களை விரிவுபடுத்த வேண்டும், சாலையின் இரு புறங்களிலும் உள்ள மணல் குவியல்களை அப்புறப்படுத்த வேண்டும்,
மதுரை-தென்காசி சாலையை பழுது பார்ப்பதற்கு பதில் புதிய சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. சேதமடைந்த சாலைகளால் பொதுமக்கள் விபத்தில் சிக்குவதை பிரதிபலிக்கும் வகையில் தலை மற்றும் கைகளில் கட்டு போட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 7-ந்தேதி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடக்கிறது
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் நாட்டில் மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையின்மையை போக்கிட வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக்கான சட்டம் இயற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. ஒப்பந்த அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், கூலி ரூ.600-ம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தனித்து போட்டியிடுவதுதான் ஒரே வழி என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவுக்கு வந்துள்ளது.
- இந்தியா கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடை பெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" எனும் கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன.
காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. கம்யூ னிஸ்டு கட்சியினரும் அந்த கூட்டணியில் இடம் பெற்று இருந்தனர்.
இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு, குறைந்தபட்ச பொது செயல் திட்டம் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்காக 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 13 கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அறிவித்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மட்டும் பிரதிநிதி பெயரை தெரிவிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் உயர்நிலை அமைப்பான பொலிட்பீரோ அமைப்பின் கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடந்தது. அந்த கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில் சில முக்கிய முடிவுகளை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எடுத்துள்ளது.
அதன்படி இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு எடுத்துள்ளது. பாட்னா, பெங்களூர், மும்பையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட் டத்தில் பங்கேற்ற போதிலும் தொடர்ந்து இந்தியா கூட் டணியில் நீடிக்க இயலாது என்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சில தலைவர்கள் கூறுகையில், "இந்தியா கூட்டணியில் தேசிய அளவில் இடம் பெறுகிறோம். மாநில அளவில் இடம் பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே ஒட்டு மொத்தமாக ஒருமித்த அளவில் கூட்டணியில் நீடிக்க இயலாது" என்று தெரிவித்து உள்ளனர்.
டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஒரு முடிவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மிக உறுதியாக எடுத்துள்ளனர். அதாவது மேற்கு வங்காளம், கேரளாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க இயலாது. எனவே இந்த 2 மாநிலங்களிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்துள்ளனர்.
கேரளாவில் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் எலியும், பூனையுமாக உள்ளனர். எனவே அங்கு ஒருமித்த கருத்து உருவாக வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்தது.
அதுபோல மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுடன் சுமூகமான மனநிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பரம விரோதிகளாக பார்க்கிறார்கள். எனவே தனித்து போட்டியிடுவதுதான் ஒரே வழி என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்கும் கூட்டணி அமைக்க இயலாத நிலை ஏற்பட்டு இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தெரி வித்து உள்ளனர். சில மாநி லங்களில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட விரும்புகிறது.
எனவே மேலும் சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு செய்து கொள்வதில் இந்தியா கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இவற்றையும் ஆய்வு செய்து இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொலிட் பீரோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மூத்த தலைவர் பிரகாஷ்காரத் அளித்த பேட்டியில் கூறி இருப்பதா வது:-
இந்தியா கூட்டணியில் அடிப்படை புரிதல் வேண்டும். அது இல்லாமல் எந்த அரசியல் கூட்டணியையும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மேற்கொள்ளாது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி ஆய்வு செய்யப்படும். அதற் கேற்ப கூட்டணி அமைப்பதும், தொகுதி பங்கீடு செய்வதும் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி விலகி செல்வது உறுதியாகி இருக்கிறது.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.பி.யும், பொலிட் பீரோ உறுப்பினருமான நிலோத்பல் பாசு கூறியிருப்பதாவது:-
இந்தியா கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன. நாங்கள் சில இடங்களில் சமரசம் செய்து கொண்டால் ஓட்டுகள் சிதறி விடும். ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக நாங்கள் சில முடிவுகளை எடுத்து இருக்கிறோம்.
கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் தனித்து போட்டியிடும் முடிவை திட்டவட்டமாக சொல்லி விட்டோம். எனவே தேசிய அளவில் தொகுதி பங்கீடு செய்து கொள்ளமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் எடுத்துள்ள முடிவை காங்கிரஸ் தலை வர்களிடமும், மற்ற கூட் டணி கட்சி தலைவர்களிடமும் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இது காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தங்கள் கட்சி சார்பில் பிரதிநிதி நியமனம் செய்யமாட்டாது என்றும் எதிர்க்கட்சிகளிடம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசித்து வருகின்றன.
- 40 பேர் கைது
- குருவிநத்தம் பெண்கள் கிளை செயலா ளர் வளர்மதி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பாகூர் கொம்யூன் சார்பில் பாகூர் மின் இளநிலை பொறியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு கட்சியின் கொம்யூன் செய லாளர் சரவணன் தலைமை தாங்கினார், பாகூர் கமிட்டி உறுப்பினர் அரிதாஸ், வடிவேலு ஆகியோர் முன்னி லை வகித்தனர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தில் பாகூர் கமிட்டி உறுப்பினர் கலைச்செல்வன், கிளை செயலாளர் முருகையன், சோரியங்குப்பம் கிளை செயலாளர் வெங்கடாசலம், பூங்காவனம், குருவிநத்தம் பெண்கள் கிளை செயலா ளர் வளர்மதி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மின்துறை தனியார்மயம், ப்ரீபெய்டு மீட்டர், ஸ்மார்ட் மீட்டர்திட்டத்தை கைவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் மின் கட்டணத்தை பாதியாக குறைக்க கோரி இந்த போராட்டம் நடந்தது. இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்ட னர்.
- விவசாயிகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி இலவச மின்சாரத்தை பறிக்கக்கூடாது.
- கிருஷ்ணமூர்த்தி, ரகுநாத், கோதண்டபாணி, ராஜா, உமா விநாயகம், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டி சார்பில் திருக்கனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் அன்புமணி தலைமை வகித்தார். விநாயகம், தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில நிர்வாகிகள் சீனுவாசன், சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.
புதுவை மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது. விவசாயிகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி இலவச மின்சாரத்தை பறிக்கக்கூடாது. மின்சார திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
புதுவை அரசு மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கந்தநாதன், முத்து, நாகராஜ், அமிர்தவள்ளி, தமிழ்குமரன், பாரதி, சிவசங்கரி, மாரியப்பன், கல்வராயன், அருள், தீனதயாளன், பாலச்சந்திரன், பெரியசாமி, ராமச்ச்சந்திரன், முருகன், பிரபாகர், சந்திரன், அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி, ரகுநாத், கோதண்டபாணி, ராஜா, உமா விநாயகம், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.
- பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் கோட்டாலி பகுதியை சேர்ந்தவர் சாஜிமோன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.
அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேறு ஒரு நபர் ஈடுபட்டது போன்று, வழக்கை திசை திருப்பவும் முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போனது. சாஜிமோன் மீதான பாலியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். மேலும் கோட்டாலி பிரிவு கிளைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சாஜிமோன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஊழியராக இருந்துவரும் பெண் ஒருவரை நிர்வாண படம் எடுத்த வழக்கில் சிக்கினார்.
இதையடுத்து அவர் கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேல்சபை தொகுதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
- தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்டமாக தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. கடந்த தேர்தலில் 2 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலக் குழு கூட்டம் நடந்தது. அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். ஒரு மேல்சபை தொகுதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கடந்த தேர்தலை விட அதிக ஓட்டுகள் பெறவும், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு முழுமையாக வேலை செய்வது எனவும் முடிவு செய்தனர். அடுத்த வாரம் நடைபெறும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது இக்கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவை தெரி விக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
- நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
- கருத்துக்கணிப்புகள் கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.
கொல்கத்தா:
7 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அதன்பிறகு நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இதில் பா.ஜ.க ஹாட்ரிக் வெற்றி பெறும் என பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை விட பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தன. இந்த கருத்துக்கணிப்புகளை மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நிராகரித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை கடந்த 2016, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நாங்கள் பார்த்தோம். எந்த கணிப்பும் இதுவரை சரியாக இருக்கவில்லை.
இந்த கருத்துக்கணிப்புகள் ஊடகங்களுக்காக சிலரால் 2½ மாதங்களுக்கு முன்னரே வீட்டில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவை கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.
தேர்தல் களத்தில் பிளவுபடுத்துவதற்கு பா.ஜ.க. முயற்சித்த விதம் மற்றும் முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்கிறார்கள் என்று தவறான தகவலை பரப்பியது போன்றவற்றால் பா.ஜ.க.வுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியிருக்கும் என நினைக்கிறேன். இந்தியா கூட்டணிக்கான வாய்ப்பை பொறுத்தவரை, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலையிடாதவரை அந்த அரசில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இருக்காது. எங்களை அழைத்தால் செல்வோம். ஆனால் முதலில் தேர்தல் முடிவுகள் வரட்டும்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
- பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல்.
நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு பெண் வீட்டாரை சேர்ந்த 30 பேர் நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் வீட்டார் அடித்து நொறுக்கியுள்ளனர்.