search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Megamalai Falls"

    • தேனி மாவட்டம் மேகமலை அருவியில் ஆடிப்பிறப்பை முன்னிட்டு மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
    • ஆடி பிறப்பு, அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

    வருசநாடு:

    ஆடிப்பிறப்பை முன்னிட்டு மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்ததால் கூட்டம் அலைமோதியது.

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் இருந்து 15கிமீ. தூரத்தில் மேகமலை அமைந்துள்ளது. மேகமலையில்இருந்து வரும் மழை மற்றும் ஊற்றுநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது. பொதுவாக இந்த மாதம் நீர்வரத்து இருப்பதில்லை. ஆனால் மேகமலையில் பெய்து வரும் மழையினால் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    வனப்பகுதியில் அமை ந்துள்ள இந்த அருவிக்கு ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாபயணி கள் அதிகளவில் வருவது வழக்கம்.

    நேற்று ஆடிப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் அருவிக்கு வந்து நீராடினர். இதனால் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது. தலை ஆடிக்கு விருந்துக்கு அழைக்கப்பட்ட புதுமண தம்பதியினரும் அருவியில் நீராடி ஆனந்தமாக பொழுதை கழித்து சென்ற னர். இருப்பினும் பெண்கள் தனியே குளிக்கும் வசதி இல்லாததால் சிரமப்ப–ட்டனர். மேலும் உடை மாற்றும் அறையும் இல்லை.

    இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், குளிப்பதற்காக வனத்துறை சார்பில் ரூ.30 கட்டணம் பெறப்படுகிறது. ஆனால் உரிய வசதி இல்லை. வனத்துறையினரும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிப்பதில்லை. ஆடி மாதத்தில் கிராமங்களில் இறைச்சி விருந்து, புதுமணத்தம்பதியர் அழைப்பு என்று களை–கட்டும். எனவேஇம்மாதம் முழுவதும் அருவிக்கு வர பலரும் ஆர்வம் காட்டுவர். எனவே பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.

    ஆண்டிப்பட்டிஅருகே மேகமலை வனப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு பகுதியில் அமைந்துள்ளது மேகமலை அருவி. வனச்சரகத்திற்குட்பட்ட இந்த அருவிக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    கடந்த சில மாதமாக மழை இல்லாத காரணத்தால் மேகமலை அருவி வறண்டு காணப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து செல்கின்றனர்.

    விடுமுறை நாட்கள் மட்டுமின்றி தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் மேகமலை அருவிக்கு வருகின்றனர். இப்பகுதியை தமிழக அரசு சுற்றுலாத்தலமாக அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேகமலை கூட்டு குடிநீர் திட்டத்தின்மூலம் பயன்பெறும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு குறையும் என்றும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×