என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money robbery"

    • திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
    • ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக இடம் வாங்குவதற்காக சென்னை பூந்தமல்லியை சேர்ந்த தீனதயாளன் என்பவரை அணுகியுள்ளார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையூரை சேர்ந்தவர் சீனிவாசன்(44). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும், ராமச்சந்திரன் என்ற மகனும், தனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கடந்த 25-ந்தேதி இவர் தொழில் விசயமாக வெளியூர் சென்றுவிட்டார்.

    அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் கத்தி முனையில் குழந்தைகளை மிரட்டி பீரோக்களை உடைத்து அதிலிருந்த 41 பவுன் நகை, ரூ.18 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் டி.எஸ்.பி துர்க்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த நபர் முன்னுக்குபின் முரணான பதில் அளித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக இடம் வாங்குவதற்காக சென்னை பூந்தமல்லியை சேர்ந்த தீனதயாளன் என்பவரை அணுகியுள்ளார். இவர் சர்வதேச மனிதஉரிமைகள் கழக மதுரை மண்டல பொதுச்செயலாளராக உள்ளார். மேலும் தீனதயாளனை தனது வீட்டிற்கு வரவழைத்து இடத்திற்காக ரூ.5 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இடம் பேசி முடிப்பதற்கு முன்பாகவே ரூ.5 லட்சம் கொடுத்ததால் சீனிவாசன் வீட்டில் பணம், நகை அதிகளவு இருக்கும் என்று உறுதி செய்தார்.

    இதனையடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த ஜோதி என்பவரிடம் இதுகுறித்து பேசியுள்ளார். இவர் மனித உரிமைகள் அமைப்பின் மதுரை மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கு பெங்களூரு, ஓசூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் எப்போதாவது சில முறை மட்டுமே ஒன்று சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுவதும், அதன்பிறகு பங்கை பிரித்துக்கொண்டு தனித்தனியாக சென்றுவிடுவதும் வாடிக்கையாக உள்ளது.

    அதன்படி சீனிவாசன் வீட்டில் கொள்ளையடிக்க தீனதயாளன், ஜோதி ஆகியோர் 16 பேரை தேர்வு செய்தனர். இதில் சென்னையில் போலீசாக வேலைபார்த்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்ட செல்வக்குமார், சிராஜூதீன், சதீஸ், சுரேஷ், ரகு, பாஸ்கர் உள்பட 18 பேர் கொள்ளையடிக்க முடிவு செய்தனர். இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று அஞ்சலி ரவுண்டானா பகுதியில் ஒன்றுகூடினர். பின்னர் அங்கிருந்து தீனதயாளன் கார் மூலம் சீனிவாசன் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்குள் 5 பேர் மட்டும் சென்றுவிட மற்ற 11 பேரும் வீட்டைச்சுற்றி கண்காணித்து வந்தனர். கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு அதேகாரில் தருமத்துப்பட்டிக்கு சென்றனர். அங்கு பணத்தை பங்குபோட்டுவிட்டு சென்றுவிட்டனர். கொள்ளைநடந்த நாளில் தீனதயாளனின் கார் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

    அதனைவைத்து அந்த காரை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போதுதான் இவரது கார் சோதனைச்சாவடி அருகே வந்தபோது சிக்கி கொண்டது. போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ரூ.3 கோடிக்கு மேல் பணம்-நகை இருப்பது தெரிய வந்துள்ளதால் அதனை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருந்தனர். ஆனால் போலீசார் அதற்குள் அவர்களை சுற்றிவளைத்துவிடவே அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 8 பேர் கைது செய்யப்பட்டு வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 8 பேர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச்சம்பவத்தில் கைவரிசை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

    • மற்றொரு காரில் வந்த 5 பேர் காருடன் தலைமறைவாகிவிட்டனர்.
    • தலைமறைவாக இருக்கும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவர் கடந்த 21-ந் தேதி காரில் கோவை நோக்கி சென்ற போது, பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில், மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல் காரை வழிமறித்து அவரை தாக்கி காரை கடத்தி சென்றது.

    அடுத்த சில மணி நேரத்தில் சித்தோடு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் மீட்கப்பட்டது. காரில் ரூ.2 கோடி பணம் இருந்ததாகவும், மர்ம கும்பல் அதனை கொள்ளையடித்து சென்றதாகவும் விகாஸ் சித்தோடு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சித்தோடு போலீசார் இதில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். மேலும் டவுன் டி.எஸ்.பி., பவானி டி.எஸ்.பி. தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சித்தோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரில் 6 வாலிபர்கள் இருந்தனர்.

    காரில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். மேலும் சோதனை நடத்தியதில் வீச்சரிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்துள்ளன.

    மேலும் ரொக்கப்பணம் ரூ.20,000 இருந்தது. இதனால் சந்தேமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயன், சந்தோஷ், டைடாஸ், விபூல் என்கிற சந்தோஷ், முஜிப் ரஹ்மான், முஜூபூர் ரஹ்மான் ஆகியோர் என்பதும். இவர்கள் கடந்த 21-ந் தேதி பவானி லட்சுமி நகர் அருகே விகாஸ் காரை வழிமறித்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.

    இதேபோலவே மற்றொரு கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு சென்றபோது போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர். 6 பேரையும் கைது செய்ததுடன் அவர்கள் வந்த வாகனத்தையும், ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசாரின் சோதனையை கண்டதும் இந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 5 பேர் காருடன் தலைமறைவாகிவிட்டனர். இந்த 5 பேர் கும்பலுக்கும் ரூ.2 கோடி கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் அந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தக் கொள்ளை கும்பல் இதே போல் பலரிடம் கைவரிசை காட்டி இருக்ககூடும் என கருதப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • நகை வாங்க வருவதை நன்கு அறிந்த கொள்ளை கும்பல் அவர்களை பின்தொடர்ந்து வந்து பணத்தை பறித்து சென்று உள்ளனர்.
    • நகை வியாபாரிகளிடம் ரூ.1 கோடியே 40 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராயபுரம்:

    ஆந்திர மாநிலம், பப்பட்டலா பகுதியை சேர்ந்தவர்கள் சுபாராவ், ரஹ்மான். நகை வியாபாரிகள். இவர்கள் அடிக்கடி சென்னை சவுகார்பேட்டையில் உள்ள குறிப்பிட்ட நகை வியாபாரியிடம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நகைகள் வாங்கிச்செல்வது வழக்கம்.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுகார்பேட்டையில் உள்ள மொத்த வியாபாரியிடம் நகை ஆர்டர் கொடுத்து இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை வியாபாரிகள் சுபாராவ், ரஹ்மான் ஆகியோர் நகைக்கு கொடுப்பதற்காக ரூ.1 கோடியே 40 லட்சம் ரொக்கத்தை பையில் வைத்துக்கொண்டு சென்னை வந்தனர்.

    அவர்கள் சென்ட்ரலில் இருந்து சவுகார்பேட்டை நோக்கி அதிகாலை 3.30 மணியளவில் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.

    யானைக்கவுனி, துளசிங்கம் தெரு-வீரப்பன் தெரு சந்திப்பில் வந்தபோது திடீரென ஒரு கார் ஆட்டோவை வழிமறித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 வாலிபர்கள் தாங்கள் போலீசார், உங்களை சோதனை செய்ய வேண்டும் என்று சுபாராவ், ரஹ்மான் ஆகியோரிடம் தெரிவித்தனர்.

    அவர்கள் கையில் லத்தி மற்றும் கைவிலங்கு ஆகியவை வைத்து இருந்தனர். இதனால் வியாபாரிகள் சுபாராவ், ரஹ்மானுக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

    3 வாலிபர்களும் வியாபாரிகளின் பையை சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டனர். உடனே அவர்கள் வியாபாரிகள் சுபாராவ், ரஹ்மானை தாக்கி கீழே தள்ளினர்.

    மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.1 கோடியே 40 லட்சம் ரொக்கத்தை பறித்து அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர். இதனால் நகை வியாபாரிகள் சுபா ராவ், ரஹ்மான் மற்றும் ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதனை வைத்து போலீஸ்போல் நடித்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வியாபாரிகள் நகை வாங்க வருவதை நன்கு அறிந்த கொள்ளைகும்பல் அவர்களை பின்தொடர்ந்து வந்து பணத்தை பறித்து சென்று உள்ளனர். அவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

    கொள்ளையர்கள் ஆந்திராவில் இருந்தே வியாபாரிகளை பின்தொடர்ந்து வந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    நகை வியாபாரிகளிடம் ரூ.1 கோடியே 40 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடையில் விற்பனை செய்த பணம் ரூ.24 ஆயிரத்து 500-யை கல்லா பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் பஜார் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் சேகர்(வயது43) ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது கடையில் விற்பனை செய்த பணம் ரூ.24 ஆயிரத்து 500-யை கல்லா பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கடையை திறக்க வந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லா பெட்டியலில் இருந்த ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சேகர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • பின்பக்க தகரம் பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கார் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல கடையை நேற்று இரவு மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அவசர பணிக்காக இரவு 11 மணிக்கு ஓர்க்ஷாப்பை மீண்டும் திறந்தார். உள்ளே சென்ற பார்த்தபோது பின்பக்க தகரம் பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கல்லாவில் வைத்திருந்த ரூ.ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கபட்டிருந்தது. இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    கொள்ளையர்கள் ஓர்க்ஷாப்பில் இருந்த காருக்கு அடியில் 2 மர்ம பொருளை வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனை கைப்பற்றிய போலீசார் அது நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனும் மர்ம பொருளா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை யர்கள் ஆட்டோவில் வந்து கொள்ளையடித்து சென்றது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்க ப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • பிரபு (வயது 42). மளிகை வியாபாரம் செய்து வரும் இவர், பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
    • சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அதில் உள்ள பெட்டியை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த ரூ.5.17 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    வாழப்பாடி:

    வாழப்பாடியை அடுத்த குறிச்சி ஊராட்சி கண்ணுக்காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 42). மளிகை வியாபாரம் செய்து வரும் இவர், பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று இவர் தனியார் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து, தனது இருசக்கர வாகனத்திலுள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு, வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே ஒரு உணவகத்தில் சாப்பிடு வதற்காக சென்றார்.

    தனது இரு சக்கர வாகனத்தை உணவகம் முன்பாக நிறுத்தியிருந்தார். சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அதில் உள்ள பெட்டியை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த ரூ.5.17 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதனால் பதறிப்போன வியாபாரி பிரபு, இதுகுறித்து வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

    வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் ரூ.5.17 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வாழப்பாடியில் பட்டப்ப கலில் நகை வியாபாரியின் ரூ 5.17 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போன சம்பவம், இப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையம் அருகிலுள்ள உணவகங்களில், ஓரிரு தினங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என இன்ஸ்பெக்டர் உமா சங்கர் அறிவுறுத்தி உள்ளார்.

    • பணத்தை பறி கொடுத்த 2 பேரும் கொள்ளை குறித்து கே.ஜி. சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கொள்ளை கும்பலை பிடிக்க பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கூட்நாட்டை சேர்ந்தவர் பரத் (வயது 50). தங்க நகை வியாபாரி. இவர் தங்கத்தை ஆபரணங்களாக தயாரித்து கோவை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்வது வழக்கம்.

    சம்பவத்தன்று இவர் செயின், மோதிரம், வளையல் உள்பட 600 தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக உறவினரான அதே பகுதியை சேர்ந்த ரோகித் (42) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவைக்கு வந்தார்.

    பின்னர் நகைகளை டவுன்ஹால் ராஜவீதியை சேர்ந்த தங்க நகை வியாபாரி நந்தா கணேஷ் (42) என்பவரிடம் விற்பனை செய்தார். பின்னர் பணம் வாங்குவதற்காக அன்று இரவு பரத், ரோகித் ஆகியோர் தங்க நகை வியாபாரி நந்தா கணேஷின் வீட்டில் தங்கினர்.

    மறுநாள் காலை 5.30 மணிக்கு தங்க நகைகளை விற்ற பணமான ரூ.43.50 லட்சம் பணத்தை அவரிடம் இருந்து பெற்றனர். பின்னர் பணத்தை தங்களது உடலில் ஆடைகளுக்கு இடையே மறைத்து வைத்து விட்டு பாலக்காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிள் காலை 6.30 மணிக்கு வேலந்தாவளம் ரோட்டில் தனியார் ஸ்டீல் கம்பெனி அருகே சென்று கொண்டு இருந்தது.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி 2 பேரும், ஒரு காரில் முகமூடி அணிந்த படி 4 பேர் என மொத்தம் 6 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பரத், ரோகித் சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் தாக்கி, கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி பரத், ரோகித் ஆகியோர் உடலில் மறைத்து வைத்து இருந்த ரூ.43.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    பணத்தை பறி கொடுத்த 2 பேரும் இது குறித்து கே.ஜி. சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த கொள்ளை கும்பலை பிடிக்க பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் சாலைகள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    • அசோக்குமார் (வயது 46). இவர் காந்தி ஸ்டேடியத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
    • வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர், இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெரு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 46). இவர் காந்தி ஸ்டேடியத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர், இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இது குறித்து அசோக்குமார் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மீட்கப்பட்ட பணம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
    • தொடர்ந்து ஸ்ரீதர் மற்றும் பிரவீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் சுகந்தி. இவருக்கு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பாரதிநகரில் சொந்தமாக வீடு உள்ளது. இவரது வீட்டை கோபிசெட்டிபாளையம் வடக்கு பார்க் வீதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் என்பவர் வாங்க விலை பேசினார். வீட்டை ரூ.3 கோடிக்கு வாங்க சுதர்சன் முடிவு செய்தார். அதன்படி முன் பணமாக சுதர்சன் ரூ.15 லட்சம் கொடுத்து உள்ளார். இதன் பின்னர் சுதர்சன் அந்த வீட்டின் சாவியை வாங்கிக் கொண்டார்.

    இந்நிலையில் சுதர்சன் புதிதாக வாங்க இருக்கும் வீட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவும், புதிய வீட்டிற்கு மீதி பணம் கொடுப்பதற்காகவும் 4 பேக்குகளில் ரூ.2.80 கோடியை புதிய வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் வைத்து பூட்டி சென்றார். வீட்டில் பணம் இருக்கும் விஷயம் சுதர்சன் பங்குதாரர்களான கோபி அடுத்த களஞ்சியம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (26), கோபி அடுத்த கேடாரை பகுதியை சேர்ந்த பிரவீன் (25) ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சுதர்சன் புதிய வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ரூ.2.80 கோடி பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் சுதர்சன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு, வடிவேல்குமார், கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செ ல்வம் ஆகிய கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    மேலும் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை நடந்த அன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு வெள்ளை நிற கார் புறப்பட்டு சென்றது பதிவாகி இருந்தது. அதில் 2 பேர் சென்றதும் பதிவாகி இருந்தது. இதை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சனின் பங்குதாரர்களான ஸ்ரீதர் மற்றும் பிரவீன் என்ன தெரிய வந்தது. இதில் ஸ்ரீதர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சனின் பங்குதாரர்களாக ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர் பிரவீன் ஆகியோர் இருந்துள்ளனர். இதில் ஸ்ரீதர் என்ஜினீயரிங் படித்துவிட்டு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தான் சுதர்சனன் வீட்டில் ரூ.2.80 கோடி பணம் இருப்பது ஸ்ரீதருக்கும், பிரவீனுக்கும் தெரிந்து உள்ளது. பணத்தைத் திருட 2 பேரும் திட்டம் போட்டு உள்ளனர்.

    அதன்படி சம்பவத்தன்று வெள்ள நிற காரில் வந்து வீட்டுக்குள் இருந்த ரூ.2.80 கோடி பணத்தை 4 பேக்குகளில் வைத்து திருடி சென்றுள்ளனர். முதலில் சுதர்சனத்துடன் ஸ்ரீதரும் புகார் கொடுக்க வந்திருந்தார். அவரது நடவடிக்கையில் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. அவரிடம் 2 நாட்களாக விசாரணை நடத்தினோம். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.

    பின்னர் உரிய முறையில் விசாரித்தபோது 2 பேரும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். முதலில் வெள்ளை காரில் பணத்தை திருடி அவர்கள் பின்னர் சிறிது தூரம் சென்றதும் அந்த காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் சென்று உள்ளனர். அந்த காரில் தான் பணத்தை வைத்திருந்தனர். நாங்கள் அந்த காரில் இருந்த பணத்தை மீட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதனையடுத்து மீட்கப்பட்ட பணம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையம் மட்டுமின்றி போலீஸ் நிலைய சுற்று வட்டார பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தொடர்ந்து ஸ்ரீதர் மற்றும் பிரவீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் பணம் திருடப்பட்ட அதற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசார் விசாரணை
    • பூட்டிய வீடுகளில் புகுந்து துணிகரம்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ெரயில்வே மேம்பாலம் சக்தி நகரை சேர்ந்தவர் திருமால் நாதன். வியாபாரி.

    இவரது மனைவி துளசி அங்கன்வாடி பணியாளர் இவர்கள் கடந்த 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் 1 ½ பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர்.

    அதே தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது வீட்டிலும் மர்ம கும்பல் புகுந்தனர். 4 பவுன் நகையை கொள்ளை யடித்துச் சென்றனர்.

    அதே தெருவை சேர்ந்தவர் மதியழகன் தொழிலாளி. இவரது மனைவி செல்வி அங்கன்வாடி பணியாளர். இவர்கள் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

    அப் போது பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.23 ஆயிரம் ரொக்கம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றுள்ளனர்.

    இதே போல் அருகே உள்ள ராணுவ வீரர் உயர்ந்தவன் வீட்டில் நகை, ரூ.10, ஆயிரத்தை திருடி சென்றனர். இவரது தம்பி வீரன். இவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்கள் அருகே உள்ள ஊரில் திருவிழா நடப்பதால் அங்கு சென்றனர்.

    இவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து மர்மகும்பல் 12 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர்.
    • காலையில் கோவில் குருக்கள் வந்து பார்த்தபோது உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த குமரஞ்சேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற குமாரசாமி முருகன்கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிச்சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். அவர்கள் கடப்பாரையால் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளினர்.

    மேலும் அங்கிருந்த பீரோவை உடைத்து ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். காலையில் கோவில் குருக்கள் வந்து பார்த்தபோது உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    முருகன் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் விரைந்து வந்து மூதாட்டி கோமளாவை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • விசாரணையில் நள்ளிரவில் கொள்ளைகும்பல் குடிசை வீட்டுக்குள்புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்ன வேம்பாக்கம் ரெயில்வே சாலை அருகே குடிசை வீட்டில் தனியாக வசித்து வருபவர் கோமளா (வயது65). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகள் திருமணமாகி கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு கோமளா தூங்கினார். அதிகாலையில் அவர் நடை பயிற்சி செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கோமளா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள்சென்று பார்த்த போது கோமளா ரத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது முகம் தாக்கப்பட்டதால் வீங்கி இருந்தது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மூதாட்டி கோமளாவை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணையில் நள்ளிரவில் கொள்ளைகும்பல் குடிசை வீட்டுக்குள்புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. சத்தம்கேட்டு கோமளா எழுந்ததும் அவரை மிரட்டி உள்ளனர்.

    பின்னர் வீட்டில் நகை-பணம் பெரிய அளவில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கும்பல் கோமளாவை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்து இருந்த நகை, மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

    மூதாட்டி கோமளா தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொள்ளை கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×