என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mosquito"

    • இரத்தத்தை உண்ணும் பூச்சிகளுக்கு நச்சுத்தன்மையாக்குவது.
    • நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நிடிசினோனைப் பயன்படுத்தலாம்.

    சயின்ஸ் டிரான்ஸ்லேஷன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கொசுக்களின் எண்ணிக்கையை அடக்கி மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நிடிசினோன் என்ற மற்றொரு மருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    "பூச்சிகளால் பரவும் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கான ஒரு வழி, விலங்குகள் மற்றும் மனிதர்களின் இரத்தத்தை- இந்த இரத்தத்தை உண்ணும் பூச்சிகளுக்கு நச்சுத்தன்மையாக்குவதாகும்" என்று லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசின் கௌரவ உறுப்பினரும், ஆய்வின் இணை-தலைமை ஆசிரியருமான லீ ஹைன்ஸ் கூறினார்.

    "மலேரியா போன்ற பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நிடிசினோனைப் பயன்படுத்துவது ஒரு நம்பிக்கைக்குரிய புதிய கருவியாக இருக்கலாம் என்று எங்கள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன."

    இந்த மருந்து பொதுவாக அரிதான பரம்பரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து 4-ஹைட்ராக்ஸி-ஃபெனைல்பைருவேட் டைஆக்ஸிஜனேஸ் (HPPD) எனப்படும் ஒரு வகை என்சைமை (Enzyme) தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. இதைத் தடுப்பது மனித உடலில் தீங்கு விளைவிக்கும் நோய் துணை தயாரிப்புகள் குவிவதைத் தடுக்கிறது.

    இருப்பினும், ஒரு கொசு மருந்தை கொண்ட இரத்தத்தை குடிக்கும்போது, அது இந்த HPPD என்சைமையும் அவர்களின் உடலில் தடுக்கிறது. இது பூச்சி இரத்தத்தை ஜீரணிப்பதைத் தடுக்கிறது, இதனால் அவை விரைவாக இறக்கின்றன.

    அல்காப்டோனூரியா நோயால் கண்டறியப்பட்ட நான்கு பேர் ஆய்வுக்காக தங்கள் இரத்தத்தை தானம் செய்தனர், இது பல ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியாவை பரப்புவதற்கு பொறுப்பான முதன்மை கொசு இனமான பெண் அனோபிலிஸ் காம்பியா கொசுக்களுக்கு வழங்கப்பட்டது.

    கொசுக்களைக் கொல்ல மருந்தின் எந்த செறிவுகள் தேவை என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து, அதன் செயல்திறனை ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டினுடன் ஒப்பிட்டனர்.

    மனித இரத்த ஓட்டத்தில் ஐவர்மெக்டினை விட நிடிசினோன் நீண்ட காலம் நீடிக்கும் என்றும், மலேரியாவை பரப்பும் வயதானவை உட்பட அனைத்து வயது கொசுக்களையும் மட்டுமல்ல, பாரம்பரிய பூச்சி கொல்லிகளை எதிர்க்கும் உறுதியான கொசுக்களையும் கொல்ல முடிந்தது என்றும் காட்டப்பட்டது.

    மருந்தை ஊட்டப்பட்ட கொசுக்கள் முதலில் பறக்கும் திறனை இழந்து, பின்னர் விரைவாக முழு முடக்கம் மற்றும் மரணம் அடைந்தன என்று ஆய்வு ஆசிரியர்கள் விளக்குகின்றனர். இருப்பினும், மருந்தின் எந்த அளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை.

    • பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள்.
    • தாதா லக்டவாலாவின் கொசு வலை கோரிக்கை தொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    மும்பை :

    மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளி இஜாஜ் லக்டவாலா. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த 2000-ம் ஆண்டு போலீசார் மராட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்து நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் சிறையில் கொசு தொல்லை மிதமிஞ்சி இருப்பதால், தனக்கு கொசுவலை வழங்க உத்தரவிட கோரி மும்பை செசன்ஸ் கோர்ட்டில் லக்டவாலா மனு செய்து இருந்தார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது லக்டவாலா கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது நீதிபதியிடம், "சிறையில் கொசு தொல்லை பொறுக்க முடியவில்லை, இதோ பாருங்கள்... சிறையில் பிடித்த கொசுக்களை கொண்டு வந்து இருக்கிறேன்" என்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த செத்துப்போன கொசுக்களை லக்டவாலா காட்டினார்.

    "என்னை போல தான் மற்ற கைதிகளும் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள், ஆனால் பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள். சிறையில் கொசுவலை பயன்படுத்த அனுமதிக்க சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று நீதிபதியிடம் கைதி லக்டவாலா கேட்டுக்கொண்டார்.

    ஆனால் அவரது கோரிக்கைக்கு சிறை நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் காரணமாக கொசுவலை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து தாதா லக்டவாலாவின் கொசு வலை கோரிக்கை தொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கொசு வலைக்கு பதிலாக வேறு கொசு விரட்டிகளை பயன்படுத்தி கொள்ளுமாறு லக்டவாலாவை அறிவுறுத்திய கோர்ட்டு, கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னதாக கொசு அடங்கிய பாட்டிலை தாதா லக்டவாலா கோர்ட்டுக்கு கொண்டு வந்து நீதிபதியிடம் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் தாதாவின் நூதன முயற்சி அவருக்கு பயன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனுஷன் பொறக்கறத்துக்கு முன்னாலேயே பொறந்து...
    • மனுஷன் இருக்கற எண்ணிக்கைக்கு அதிகமாவே ... கொசு இருக்குதுங்க!

    உங்க வூட்டிலே நாலு பேரு இருக்கீங்க. ஆனா ஒங்களை மட்டும் கொசு, உடாம தொரத்தித் தொரத்திக் கடிச்சுது'னா .... பிரச்சனைக் கொசுகிட்டே இல்லேங்க! உங்க கிட்டேதான் !

    நல்ல ரத்தம் ஓடுறவங்களை கொசு அதிகம் கடிக்காது.

    என்னமோ நான் புளுகற மாதிரி அப்படி ன்'னு பாக்கறீங்க ?

    உண்மைத்தானுங்க.

    ரத்தத்தை சுத்தமாக வச்சிக்க தேவையான காய்கறிகள் பழங்கள் சாப்பிடணும்.

    அதிகமான, சுத்தமில்லாத ரத்தத்தை சுத்திகரிக்கறத்துக்கு ... நம் உடல் அதிக ஆக்ஸிஜனை எடுத்துக்கும்.

    அதனால, வெளியே அனுப்பும் கார்பன்டை ஆக்ஸைடின் அளவும் அதிகமாக போய்த் தொலைக்கும்.

    அதுமட்டுமல்ல, இரத்தத்தை சுத்திகரிக்கறதுக்கோசரம் உடல் கூடுதல் வேலை செய்ய வேண்டி இருப்பதால், உடல் வெப்பமும் அதிகமா ஆயிடும்.

    இது எல்லாத்துக்கும் மூலக்காரணம் எது?

    அதிக அளவு அசுத்தமான ரத்தம் நம்ம உடலில் இருப்பதுதான்.

    ரத்தத்தை சுத்தம் பண்ணுற உறுப்பு சிறுநீரகம்.

    அதுல பிரச்சினை இருக்கவங்களை கொசு அதிகம் கடிக்கும்.

    "கெட்ட ரத்தம், கார்பன்-டை-ஆக்ஸைடு, அதிக வெப்பம் ... இப்பிடி நமக்கு பிடிச்சமான பதார்த்தங்களை ... தேடித் தேடி சேர்த்து வச்சிருக்கானே? இவேன் ரொம்ப நல்லவன்'டா" அப்பிடி நெனைச்சிக்கிட்ட கொசுவுக்கு நீங்கள் ஒரு favourite flavour ஆகி ... அதன் மனதுக்கு இனியவன் ஆகி விடுவீர்கள்.

    பிறகென்ன ...

    கொசுக்களுக்கெல்லாம் ...

    sweet எடு, கொண்டாடு.

    நாலு பேரு இருக்குற வீட்டுல உங்களை கொசு அதிகம் கடிச்சா உங்க சிறுநீரகத்தில் ஏதோ பிரச்சினை இருக்கு'னு தெரிஞ்சிக்கங்க.

    "கொசுக்களால் நோய் உருவாகிறது. டெங்கு'வும் அதனாலேயே உருவாகிறது. எனவே கொசுக்களை ஒழியுங்கள். டெங்கு அவதியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். "

    கொசு என்னா முந்தா நேத்திக்கி மொதோ நாள் ஊரில் இருந்து வந்திச்சா?

    மனுஷன் பொறக்கறத்துக்கு முன்னாலேயே பொறந்து... மனுஷன் இருக்கற எண்ணிக்கைக்கு அதிகமாவே ... கொசு இருக்குதுங்க!

    பருப்பு டப்பாவை மறந்து போயி பரண்'ல வச்சிட்டாக்க வண்டு வந்து மொச்சிடுது.

    செடியில இருக்கற வெண்டைக்காய் ... கொஞ்சம் ஏமாந்துச்சினா ... பூச்சி புடிச்சி போயிடுது.

    ஊறுகாயைக் கொஞ்சம் லேசு, பாசா ... கவனிக்காம உட்டோமுன்னா ... பூசனம் புடிச்சி போயிடுது.

    இதெல்லாம் இயற்கையின் நியதி.

    புடிச்ச உணவு, பக்குவமான எடத்துல, சுமூகமான சூழல்ல, தன்னை பாதிக்காத வகையில் இருந்தாக்க ... வாழும் உயிர் அந்த பொருளைத் தேடிப் போயி தின்று, தன் உயிரை வளர்த்துக் கொள்ளும் - என்பது நியதி.

    நம்ம உடம்புல கழிவு உருவாகுவது நியதி.

    அது பல நுண் உயிரிகளுக்கு உணவாக மாறுவது நியதி.

    புடிச்ச உணவு, பக்குவமான எடத்துல, சுமூகமான சூழல்ல, தன்னை பாதிக்காத வகையில் இருந்தாக்க ... வாழும் உயிர் அந்த பொருளைத் தேடிப் போயி தின்று, தன் உயிரை வளர்த்துக் கொள்ளும் - என்பது நியதி. இது மொதல்லேயே பார்த்தோமில்ல?

    நம்ம உடம்புல தேங்கற அழுக்கு ... கொசுவுல இருக்கற சிக்கன் குனியா வைரஸ்க்கு புடிச்சிது'னா ... கொஞ்சம் வைரஸ்ஸை ... உடம்புல உட்டுட்டு போயி அந்த உயிரியை வாழ வைக்குது; டெங்கு உயிரிக்கு புடிச்ச பக்குவத்துல அந்த கழிவு நம்ம உடம்புல இருந்தாக்க ... டெங்கு உயிரி பல்கி பெருகும்.

    ஈ'க்களுக்கு புடிச்ச வகையில் நம்ம கழிவுகள் இருந்திச்சி'னா ... அந்த கழிவு அல்வா'வை ஈக்களில் உள்ள ஃபுளூ உயிரிகள் வந்து ஒக்காந்து தின்னுட்டு அந்த ஜூரத்தைக் குடுத்துட்டு போயிடும்.

    ஆக, கொசுவோ, ஈயோ, எலியோ ... மெனக்கட்டு நோயைக் குடுத்துட்டு போறதில்லை. அதுங்களுக்கு சாதகமான சூழலை ... நம்ம உடம்புல உருவாக்கி குடுத்துட்டு ... என் வூட்டுல வந்து தங்கிக்கோ, தங்கிக்கோ'னு வருந்தி வருந்தி அழைத்து விட்டு... பின்னர் வாடுகிறோம்.

    காட்டில் வாழும் கோடூர மிருகங்கள் யாவை'னு ஒரு முயல் கிட்டே கேட்டாக்க அது சொல்லும்.

    சிங்கம், புலி, கரடி'னு.

    "அடப்போங்க நீங்க ஒன்னு ... இந்த சிங்கம், புலி, கரடி மூனும் ரொம்ப சாது ... அதுங்க பாட்டுக்கும் வரும், போகும் ... நம்மளை ஒன்னுமே பண்ணாது. ஆனா ரொம்ப கொடூரமான மூனு கேட்டீங்கன்னா ... இது கொக்கு, காக்கா, வாத்து!"

    இப்புடி சொல்றது யாருங்க?

    அதே காட்டில் வாழற புழுக்கள்தான் !

    ஆக நோய், உணவு, ஆபத்து ... போன்ற எதுவுமே எல்லோருக்கும் நிரந்தரமல்ல ... கால தேச வர்த்தமானங்களைப் பொருத்து, உயிரிகளைப் பொருத்து மாறுபடும்.

    -மானெக்‌ஷா

    • காருகுடி மேல வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி, சாக்கடை கால்வாயாக மாறியுள்ளது.
    • டெங்கு முதலிய கொசு தொல்லைகளும் சுகாதார கேடு மிகுந்ததாகவும் இருக்கிறது.

    திருவையாறு:

    திருவையாறில் அருகே கும்பகோணம் மெயின்ரோடில் அமைந்துள்ளது காருகுடி கிராமம். காருகுடி மெயின்ரோடிலிருந்து வடபுறமாக பிரிந்து செல்லும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் காவேரி பாசன மேல வாய்க்கால் சாலை பராமரிக்கப்படாமல் சிதைவுற்று குண்டும் குழியுமாக இருக்கிறது.மேலும், இந்த சாலையோரத்தில் உள்ள பாழடைந்த சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமலும், பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் உலவும் இடமாகவும் உள்ளது.

    மேலும், மெயின் ரோடின் தென்புறத்தில் உள்ள காவிரி ஆற்றின் தலைமதகிலிருந்து காருகுடிபிரிவுச் சாலையின் மேல்புறத்திலேயே சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரையில் சென்று காருகுடி, ராயம்பேட்டை, அம்மாள்கிராம் மற்றும் பருத்திகுடி ஆகிய கிராமங்களிலுள்ள சுமார் 800 ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாக உள்ள காருகுடி மேல வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி, சாக்கடைக் கால்வாயாக மாறியுள்ளது.

    இதனால், மேலவாய்க்காலின் ஓரத்தில் குடியிருப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதோடு, டெங்கு முதலிய கொசுத் தொல்லைகளும் சுகாதாரக் கேடு மிகுந்ததாகவும் இருக்கிறது.

    எனவே, காருகுடி கிராம மேல வாய்க்கால் சாலையை குண்டும் குழியும் இல்லாமல் புதுப்பிப்பதோடு,தண்ணீர் வசதியுடன் கூடிய புதிய சுகாதார வளாகம் கட்டிடவும், பாசன மேல வாய்க்காலை முழுமையாக தூர்வாரி பாசனத்திற்கும் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும்படி பராமரிப்பு செய்திடவும் ஆவன செய்யுமாறு சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்களிடம் காருகுடி கிராம பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திறந்தவெளி கொசு பிரச்சினையை தீர்க்க அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
    • மாநகராட்சி அதிகாரிகளும் கொசுவை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொசுத் தொல்லை அதிகரித்து உள்ளன.

    தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. பல காலி மனைகளில் இன்னும் தண்ணீர் தேங்கியே இருக்கிறது. மேலும் காலி மனைகள் குப்பை மேடாக இருப்பதால் கொசுக்களின் கூடாரமாக மாறியுள்ளன.

    கொசு தொல்லை அதிகரிப்பால் இரவில் தூங்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

    மாலை நேரம், இரவு நேரங்களில் கொசுக்களால் தங்களது குழந்தைகளுக்கு டைபாய்டு மற்றும் டெங்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்படக்கூடும் என்று பல பெற்றோர்கள் பயப்படுகி றார்கள்.

    திறந்தவெளி கொசு பிரச்சினையை தீர்க்க அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளும் கொசுவை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொசு உற்பத்திக்கு இடமளிக்கும் குடியிருப்பாளர்களிடம் அபராதம் வசூலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    • கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி 17 மற்றும் 23 ஆகிய வார்டுகளில் இன்று மேயர் சண். ராமநாதன் ஆய்வு செய்தார்.

    அப்போது தெற்கு வீதியில் அவர் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

    கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    அப்போது கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மேயர் கூறினார்.

    இதையடுத்து தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    மேலும் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வில் மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர்கள் கோபால், சசிகலா அமர்நாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தெருக்களிலும், வீடுகளை சுற்றியும் புகை அடிக்கப்படுகிறது.
    • தொடர் நடவடிக்கையின் மூலம் கொசுக்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    இயற்கை மாற்றத்தால் சென்னையில் இந்த வருடம் கொசு உற்பத்தி பன்மடங்கு பெருகி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக ஜனவரி மாதத்தோடு கொசு உற்பத்தி குறைந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு மாநகராட்சி தீவிர கொசு ஒழிப்பு பணி மேற்கொண்ட போதிலும் கொத்து கொத்தாக பெருகி வருகிறது.

    ஆனாலும் சுகாதாரப் பணியாளர்கள் 200 வார்டுகளிலும் பகல் மற்றும் மாலை நேரங்களில் கடந்த 2 வாரமாக தீவிர கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் படகு மற்றும் டிரோன் மூலம் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் தெருக்களிலும், வீடுகளை சுற்றியும் புகை அடிக்கப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு பணி நகரம் முழுவதும் நடை பெற்று வருகின்றன. இதன்மூலம் ஓரளவுக்கு கொசுக்கடி குறைந்துள்ளது.

    பகல் நேரத்தில் கொசுக்கள் நடமாட்டம் இருந்ததால் 'ஏடிஸ்' வகை கொடுக்களாக இருக்கலாம் என கருதி வீடுகளை சுற்றி கொசுமருந்து, புகை அடிக் கப்பட்டன. இந்த வாரத்தில் இருந்து காலையில் நடை பெற்ற கொசு ஒழிப்பு பணி மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை நடக்கிறது. இதுதவிர கூவம் முகத்துவாரப்பகுதியிலும் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. கடல் நீரோடு கூவம் ஆற்றின் நீர் இணைவதற்கு மணல் திட்டுக்கள் தடையாக இருந்ததால் கொசு உற்பத்தி அதிகமானது. முகத்துவாரம் பகுதியில் கடலின் பெரிய அலையும், சிறிய அலையும் மாறி வரும் போது கடல்நீர் நேப்பியர் பாலம் முகத்து வாரம் மற்றும் அடையாறு முகத்துவாரம் பகுதியில் கூவம் நீருடன் இணையும்போது கூவம் ஆற்றில் உற்பத்தியாகக்கூடிய கொசுக்கள் அடித்து செல்லப்பட்டு அழிந்து விடுவது வழக்கம்.

    இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் முகத்துவாரப் பகுதியில் நடைபெற்றால் தான் சென்னையில் கொசுக்கள் உற்பத்தி குறையும். தற்போது அந்த பகுதியில் மண்மூடி இருந்ததால் வழக்கமான நிகழ்வு நடை பெறவில்லை. இதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகியது.

    இதையடுத்து கூவம் முகத்துவாரப்பகுதிகளில் தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 6 மாதமாக கடல்நீரும், கூவம் நீரும் சேராததே கொசு உற்பத்திக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    தற்போது முகத்துவாரம் பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேப்பியர் பால அகலத்திற்கு அதாவது 500 மீட்டர் தூரத்துக்கு மண் திட்டுகள் அகற்றப்படுகிறது.

    கடலுக்குள் இறங்கி தண்ணீரை அகற்றி ஆழப்படுத்தும் நவீன எந்திரம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு சில நாட்களில் வருகிறது. அந்த எந்திரம் வந்தவுடன் முகத்துவாரம் பகுதியில் உள்ள மணல் பகுதிகள் அகற்றப்பட்டு கடல்நீரும் கூவம் நீரும் இணைய வழிவகை செய்யப்படுகிறது. இந்த பணிகளை பொதுப் பணித்துறை மேற்கொண்டு வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி தலைமை பூச்சியியல் அதிகாரி செல்வகுமார் கூறும்போது, 'தொடர் நடவடிக்கையின் மூலம் கொசுக்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனி இரவு நேரத்தில் கொசு மருந்து புகை அடிக்கப்படும். நேப்பியர், அடையாறு சீனிவாசபுரம் முகத்துவாரப் பகுதியில் தூர்வாரும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    நேப்பியர் முகத்துவாரப் பகுதியில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.ஒ.டி. மேற்பார்வையில் இந்த பணி விரைவில் தொடங்கும்' என்றார்.

    • புதுவையில் கொசு பெருக்கம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
    • தொகுதி தகவல் தொழிநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விமல், தொகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் யோகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொசு பெருக்கம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    அதனை தடுக்கும் வகையில் உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க. பொறுப்பாளர் கோபால் கொசு மருந்து தெளிக்கும் பணியை தொகுதி முழுவதும் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சஞ்சய் காந்தி நகர், சுப்பையா நகர் கிளை பகுதிகளில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் குரு, மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மன், உருளையன்பேட்டை தொகுதி அவைத் தலைவர் ஆதி நாராயணன், தொகுதி துணை செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சசிகுமார்,

    மாநில பிரதிநிதி பொன்னுசாமி, கிளை தி.மு.க. செயலாளர்கள் முருகன், முத்து, அந்தோனி, கருணாகரன், சரவணன், குருசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மூர்த்தி, ராஜேந்திரன், தேவா, அன்பு, பிரகாஷ், கோபால கிருஷ்ணன், அய்யப்பன், வினோத், தொகுதி தகவல் தொழிநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விமல், தொகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் யோகேஷ் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

    • மலேரியா கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது.
    • கொசு மருந்து தெளிப்பு பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட் டுள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் உள்ள ஏர்வாடி, வாலி நோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் வருடத்திற்கு இரண்டு முறை வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது.

    அதன்படி மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தலின் படி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், டாக்டர் செல்வ விநாயகம், பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் இந்திரா ஆகியோரின் உத்தரவுப் படி ஏர்வாடி தர்கா பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியினை மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தலைமையில் ஏர்வாடி தர்ஹா கமிட்டி தலைவர் முகமது பாக்கீர் சுல்தான் தொடங்கி வைத்தார்.

    30 நாட்கள் நடைபெறும் இந்த கொசு மருந்து தெளிப்பு பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட் டுள்ளனர். அவர்களோடு இணைந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியா ளர்களும் வீடு வீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ள னர்.

    நேற்று தொடங்கிய இப்பணிகளை பரமக்குடி சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுனர்கள், கண்ணன், பாலசுப்பிர மணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லத் துரை, ராஜசேகரன், சுப்பிர மணியன், இஜாஜ் முகமது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மேலப்பாளையம் மண்டலத்தில் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள ஆய்வு செய்யப்படுகிறது
    • தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல்மழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின்பேரில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் (பொறுப்பு) காளிமுத்து அறிவுறுத்தலின்படி மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலர் அரச குமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள பணியாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.

    அப்போது சுற்றுப்புறங் களில் தூய்மை பணிகள் மேற் கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி கொசுப் புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி அகற்றினர்.

    மேலும், பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி னார்கள். புதிய கட்டிடங் களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகை யில் பராமரித்து கொள்ள வும் அறிவுரையும் வழங்கப்பட்டது.

    • மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பல வாரங்களாக முறையாக கிடைப்பதில்லை.
    • கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதியில் வசிப்பவர்கள் சிரமப்படுகின்றனர்.


    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயர் ராஜு, துணை கமிஷனர் தாணு மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் செயின்ட் பால்ஸ் நகர் குடியிருப்பு வாசிகள் கழுத்தில் தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்தபடி வந்து மனு அளித்தனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

    பாளை மண்டலம் 32-வது வார்டு செயின்ட் பால்ஸ் நகரில் ஆயுதப்படை குடியிருப்பு தென்புறம், இசக்கி அம்மன் கோவில் வடபுறம் உள்ளிட்ட பகுதி களில் மற்றும் செயின்ட் பால்ஸ் நகர் மேற்கு அப்பா சாமி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பல வாரங்களாக முறையாக கிடைப்பதில்லை.

    ஒரு சில நாட்கள் மட்டும் சிறிது நேரம் குழாய்களில் குடிதண்ணீர் வருகிறது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சீராக குடிதண்ணீர் தினமும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    தொடர்ந்து அவருடன் வந்திருந்த செயின்ட் பால்ஸ் நகர் மக்கள் நல அபிவிருத்தி சங்க தலைவர் சாம் சுந்தர் ராஜா, செயலாளர் சங்கர நாராயணன், பொருளாளர் முருகேசன், உப தலைவர் மனோகரன், துணை செயலாளர் ராஜதுரை ஆகியோர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    செயின்ட் பால்ஸ் நகர் மேற்கு பகுதி சாலையானது 15 வருடங்களுக்கும் மேலாக மோசமாக இருந்து வந்தது. தற்போது புதிய தார் சாலை அமைத்து தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். புதிதாக அமைக்கப்பட்ட சாலை சற்று உயர்ந்துள்ளதால் அதன் இரு ஓரங்களிலும் செம்மண் நிரப்பி விபத்தை தடுக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய சாலை அமைக்கப்பட்ட தெருவில் பாதாள சாக்கடை இல்லாததால் கழிவு நீர் திறந்த வெளி சாக்கடையில் விடப்படு கிறது.

    இதனால் ஆங்காங்கே சாக்கடை தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. அதேபோல் சாக்கடைக்கு மேல் நான்கு இடத்தில் ரோடு பாலம் உள்ளது. அந்த பாலங்கள் இடிந்துள்ளதால் சாக்கடை வெளியே வர முடியாமல் இருக்கிறது. எனவே சாக்கடை அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதான சாலையில் மழைநீர் தேங்கும் நிலையில் சில சாலையில் உள்ளன. அதை சரி செய்ய வேண்டும். இலந்தைகுளம் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருந்து வருவதால் குளம் மேடாகி விட்டது. அதனையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் நகரை பொறுத்த வரை கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்கங்களில் மழைநீர் தேங்கியது.

    கொசுப்புழு ஒழித்தல்

    இதையடுத்து நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மேலும் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், கொசுப்புழு ஒழித்தல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி வாரம் தோறும் வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தினமும் 45 பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட 12 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் உத்தரவின்படி நகராட்சி பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், வீடுகளின் முன்புறம் உள்ள தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

    டெங்கு

    இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திருமூர்த்தி கூறுகையில் மழைக் காலங்களில் கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க நகராட்சி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் டெங்கு பரவலை தடுக்க முடியும் என்றார்.

    ×