என் மலர்
நீங்கள் தேடியது "Motorists suffer"
- செல்லங்குப்பம் வழியாக முதுநகர் பச்சையாங்குப்பம் வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர் .
- மழை பெய்த காரணத்தினால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது
கடலூர்:
சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு புதுச்சேரி, கடலூர் வழியாக சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இவ்வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இது மட்டும் இன்றி கடலூர் அருகே சிப்காட் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கடலூரில் இருந்து சிதம்பரம் விருத்தாச்சலம் குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல வேண்டு மானால் செல்லங்குப்பம் வழியாக முதுநகர் பச்சையாங்குப்பம் வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்
கடந்த சிலநாட்களாக கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வந்ததால் சாலைகள் முழுவதும் உருக்குலைந்தது. இதன் காரணமாக பிரதான முக்கிய சாலையாக இருந்து வரும் கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள செல்லங்குப்பம் முதல் பச்சையாங்குப்பம் வரை சாலைகள் முழுவதும் பெயர்ந்து பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகின்றது. தற்போது மழை கணிசமாக குறைந்து வெயில் அதிகரித்து காணப்படுவதால் சாலைகள் முழுவதும் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் மண்கள் முழுவதும் பறந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடிய பொதுமக்கள் பெரிய அளவிலான வாகனங்கள் செல்லும் போது மண்கள் சிதறி முகத்தில் அடிப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகின்றது. மேலும் இவ்வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விரைவில் மூச்சு திணறல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது மட்டும் இன்றி சென்னை நாகப்பட்டினம் பிரதான சாலை என்பதால் நான்கு சக்கர வாகனங்களில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் இந்த சாலையில் சென்று வருவதற்கு மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இச்சாலை வழியாக செல்ல க்கூடிய அனைவருக்கும் கடும் உடல் வலி ஏற்படுவதோடு வாகனங்கள் முழுவதும் பெருமளவில் பாதிக்கப்பட்டு அடிக்கடி டயர்கள் பஞ்சராகும் நிலையையும் ஏற்பட்டு உள்ளது.
ஆனால் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் வழக்கம் போல் மழை பெய்த காரணத்தினால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது என அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர் மேலும் அதிகாரிகள் முதல் கட்டமாக சாலையை முழுமையாக போடா விட்டாலும் பரவாயில்லை தற்சமயத்திற்கு சாலை சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்வார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் பிரதான சாலையாக இருந்து வரும் இந்த சாலையை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அனைவருக்கும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- 4 மணி முதல் தொடங்கி 2 மணி நேரம் கனமழை பெய்தது .
- முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் இன்று அதிகாலை 4 மணி முதல் தொடங்கி 2 மணி நேரம் கனமழை பெய்தது . இதனால் வாகன ஓட்டி கள்கடும் அவதிக்கு உள்ளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளை நீராக பெருக்கெடுத்து ஓடியது.
பண்ருட்டி - சென்னை சாலையில் கண்டரக்கோட்டை வரையிலும், பண்ருட்டி-கும்பகோண ம்சாலையில் கொ ள்ளு காரன்குட்டைவரையிலும் கனமழை காரணமா ககுண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது. எல்.என்.புரம்,கும்பகோணம் ரோடு ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில்அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும்.
- தேசியநெடுஞ்சாலையில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருவதால் இங்குள்ள ஆறு, குளம், ஏரி, கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வழிகிறது. பொதுவாக ஆண்டுதோறும் மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியேகடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.
பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய இந்த பனிப்பொழிவு தொடக்கத்தில் மிதமான நிலையில் இருந்தது. அடுத்து படிப்படியாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் அவதி கடந்த சில தினங்களாக இரவு 7 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு விடிய, விடிய கடுமையாக உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிற்குள் முடங்கிய நிலையில் உள்ளனர். இன்று வழக்கம் போல் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பண்ருட்டிவழியாக தேசியநெடுஞ்சாலை யில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது. இதனால் இந்த சாலைகளில் சென்ற வாகனங்கள் மிதமான வேகத்தில் வாகனத்தில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஹாரன் அடித்துக்கொண்டு ஊர்ந்து சென்றது.
- மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
- முக்கிய சாலையாக தற்போது சரவணநகர் இணைப்பு சாலை செயல்பட்டு வருகின்றது.
கடலூர்:
சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் கடலூர் மஞ்சக்குப்பம், பாரதி சாலை, அண்ணா மேம்பாலம் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்ததால் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
எனவே கடலூர் செம்மண்டலம் வழியாக கம்மியம்பேட்டை ஜவான்பவன் பைபாஸ் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை வழியாக கனரக வாகனங்கள் பஸ் லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றது. இந்த நிலையில் பண்ருட்டி பாலூர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் வழியாக அனைத்து கனரக வாகனங்களும், பஸ்களும் கடலூர் பஸ் நிலையத்திற்கும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு தினந் தோறும் சென்று வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலில் திருப்பாதிரிப்புலியூர் பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது.
இதன் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சரவணா நகர் இணைப்பு சாலை வழியாக பஸ்கள் கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். கடலூர் பகுதிக்கு மிக முக்கிய சாலையாக தற்போது சரவணநகர் இணைப்பு சாலை செயல்பட்டு வருகின்றது. இதன் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு வரப்பிரசாதமாக அமைந்த சரவணா நகர் இணைப்பு சாலை தற்போது பல்லாங்குழி போல் குண்டு குழியுமாக காட்சியளித்து வருகின்றது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள குண்டு குழியுமான சாலையில் செல்லும்போது மிகுந்த அவதி அடைந்து வருவதோடு அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றது.
இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ கார் போன்ற வாகனங்கள் எளிதாக விபத்து ஏற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர் இது மட்டும் இன்றி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதும் மற்ற நேரங்களில் ஏதேனும் பாதாள சாக்கடை குழாய் அடைத்துக் கொண்டால் கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்குவதால் அடிக்கடி குண்டு குழியுமாக ஏற்பட்டு பாதிப்படைந்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் முறையாக வடிகால் வாய்க்கால் அமைத்து சரவணா நகர் இணைப்பு சாலையை முக்கியசாலையாக அதிகாரிகள் கருதி அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது குண்டு குழியுமான சாலை நாளடைவில் அந்த பகுதியில் சாலைகளே இல்லாத அளவிற்கு பெரிய அளவில் பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். அப்படியே சென்றாலும் அவர்கள் தவறி விழும் நிலையில் இந்த சாலை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிடம் கேட்ட போது, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சரவணன் நகர் இணைப்பு சாலை 780 மீட்டர் நீளம் கொண்டது. தற்போது பெரியளவில் குண்டும் குழியுமாக சாலையாக மாறி உள்ளது. இதன் காரணமாக மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதை எங்களுக்கு தொடர்ந்து புகார் இருந்து வந்தன. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் கீழ் சேதமடைந்த சாலையை 48 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மூலம் விரைவில் நிதி பெறப்பட்டு உடனடியாக சாலையை சீரமைத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறுஅவர் கூறினார்.
- தனது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது.
விழுப்புரம்:
திண்டிவனம் கசாமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் முபாரக் (வயது22). இவர் நேரு வீதி அருகே விவேகானந்தர் தெருவில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் மாலை வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம்மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர் ஒருவர் முபாரககின் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது.
எப்பொழுதும் பரபர ப்பாக காணப்படும் இந்த சாலையில் மர்ம நபர் ஒருவர் சர்வ சாதாரணமாக இருசக்கர வாகனத்தை திருடி விட்டு சென்றது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில்சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுபோய் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிஅடைந்து உள்ளனர்.
- சர்வீஸ் ரோடானது தார் சாலையாக அமைக்கப்படாத காரணத்தினால் வாகனங்கள் செல்லும்போது மண்புழுதி அதிக அளவில் பறக்கிறது.
- பாவூர்சத்திரம் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கும் இடத்தை வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்து சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரபாண்டியன் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை பணிகள் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் இருந்தது. அதனால் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தேன். அதன்படி உயர்நீதிமன்றம் 18 மாதங்களில் சாலை பணிகளை முடிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்திருந்தது. சாலை பணிகள் தற்பொழுது 80 சதவீதம் முடிக்கப்பட்டாலும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளும், ரெயில்வே மேம்பால பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றது.
பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணி நடைபெறும் இடத்திலும், அங்குள்ள பஸ் நிலையம் அருகிலும் சாலை அமைக்க வேண்டிய இடத்தில் நில ஆர்ஜிதம் செய்து எடுக்கப்பட்ட நிலத்தில் உள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்படாத காரணத்தினால் இப்பகுதிகளில் வேலை மந்தமாக நடைபெறுகிறது. மேலும் சர்வீஸ் ரோடானது தார் சாலையாக அமைக்கப்படாத காரணத்தினால் வாகனங்கள் செல்லும்போது மண்புழுதி அதிக அளவில் பறக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், அந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்களும் கடும் சிரமம் அடைகின்றனர்.
எனவே பாவூர்சத்திரம் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கும் இடத்தை வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை விரைவாக அளவீடு செய்து ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- 3 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக குனிச்சி, லக்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட 3 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு அதன் அருகிலேயே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாற்றுப்பாதையில் செல்ல ஒரே ஒரு இடத்தில் கூட தார் சாலை அமைக்கப்படவில்லை. 3 இடங்களிலுமே மண் நிரப்பப்பட்டு ஜல்லிக்கற்கள் மட்டுமே போடப்பட்டு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் கரடுமுரடான மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இந்த மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லும்போது, நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்க வாகனங்களில் செல் வோரின் கண்களில் மண்துகள்கள் விழுந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
மேலும் ஜல்லி கற்களில் இருசக்கர வாகனங்களில் செல் வோர் தவறி கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை, சம்பந்தப்பட்டதுறை அதிகா ரிகள் சிறு பாலங்கள் அமைக்கும் மூன்று இடங்களிலும் தார் சாலை அமைக்க வேண்டும் அல்லது காலை மாலை இரு வேளையிலும் டிராக்டர் மூலம் தண்ணீர் தெளிக்கவும், மாற் றுப்பாதையில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.
- பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பாலத்தின்கீழ் இரு புறமும் பலா் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனா்.
திருப்பூர்:
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரபாண்டியன், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சரிவர திட்டமிடாமல் கட்டப்பட்டதன் விளைவாக பெருமாள் கோவில் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்களும் ஒரே பகுதியில் வரும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பெருமாள் கோவில் வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து திரும்பும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தனியார் ஸ்வீட்ஸ் கடை எதிரில் பாலத்துக்கு கீழ் செல்லும் வகையில் வழி ஏற்படுத்திக் கொடுத்தால் விபத்துகளைத் தவிா்க்கலாம்.
மேலும் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பாலத்தின்கீழ் இரு புறமும் பலா் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனா். இத்தகைய சூழ்நிலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு பதாகை வைத்துள்ளது போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கும். ஆகவே, மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரையில் சாலைகளை ஆக்கிரமித்து திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
மதுரை
மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. மேலும் சில பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் பல்வேறு புதிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் முக்கிய சாலைகளில் நடுரோட்டை ஆக்கிரமித்து மாடுகள் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது.
கே.கே.நகர், பைபாஸ்ரோடு, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி ரோடு, நத்தம் பாலத்தின் கீழ் பகுதி, கோரிப்பாளையம், அண்ணா பஸ் நிலையம், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கார்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இந்த சாலைகளில் மாடுகள் நடுரோட்டை ஆக்கிரமித்து செல்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
வாகன நெரிசலை கண்டு கொள்ளாமல் மாடுகள் மெதுவாக நடந்து செல்கின்றன. சில இடங்களில் மாடுகள் நடுரோட்டில் படுத்து கிடப்பதையும் காண முடிகிறது. மாடுகள் மீது மோதி விடாமல் இருப்ப தற்காக வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சில நேரங்களில் வாகன ஓட்டிகளும், ேபாக்குவரத்து போலீசாரும் மாடுகளை துரத்தி விட்டு வாகனங்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து பாதிப்பு பற்றி உணராமல் மாடுகளின் உரிமையாளர்கள் அவிழ்த்து விடுகின்றனர்.
இது மாடுகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மாநகராட்சியில் இருந்து அவ்வப்போது மாடுகளை பிடித்து சென்று உரிமையாளர்களிடம் எச்சரித்து ஒப்படைக் கின்றனர். இருந்தபோதும் நடுரோட்டில் மாடுகள் திரிவது தொடர்கதையாக உள்ளது.
வாகன நெரிசலை குறைக்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாடுகள் சாலைகளில் சுற்றி திரியாமல் இருப்பதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்கள் இங்குள்ள குறுகிய அளவில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவதில் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
- இடிந்து விழும் நிலையிலும் புதர் மண்டியும் உள்ள மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய 2 அலுவலகங்களையும் அகற்றினால் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் சிரமம் குறையும்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அண்ணா சாலை நகரப் பகுதிகளில் மிகவும் பரபரப்பான சாலையாகும். இப்பகுதியில் தாலுகா அலுவலகம், குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம், சார்நிலை கருவூலம், சார்பதிவாளர் அலுவலகம், இ-சேவை மையம், குடிமைப் பொருள் வட்ட வழங்கல் அலுவலகம் என அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இங்குள்ள குறுகிய அளவில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவதில் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
பழைய தாலுகா அலுவல கம், பழைய மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டது. ஆனால் இக்கட்டிடங்கள் இடிந்து விடும் நிலையில் இருந்தும் அகற்றாததால் கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த அலுவல கங்களுக்கு நுழையும் வழியில் முன்பு நீதிமன்றமாக இயங்கி வந்து தற்போது குடிமைப்பொருள் வட்ட வழங்கல் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
அந்த அலுவலகத்தை பழைய தாலுகா அலுவலகத்துக்கு மாற்றவும், இடிந்து விழும் நிலையிலும் புதர் மண்டியும் உள்ள மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய 2 அலுவலகங்களையும் அகற்றினால் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் சிரமம் குறையும். மேலும் மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டு வரும் வணிக வளாகப் பகுதியில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால் அங்கு வரும் பொதுமக்களும் இப்பகுதி யில் தங்கள் வாகனங்களை நிறுத்தும் சூழல் உள்ளது.
தற்போது இந்த அலுவலகங்களுக்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக சிதிலம் அடைந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிரம மடைந்து வருகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. பல்வேறு அலுவலகங்கள் நிறைந்த இப்பகுதியில் முறையான சாலை வசதியையும் கார்கள் நிறுத்தும் வசதியையும் மாவட்ட நிர்வாகம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மின்விளக்குகள் எரியாததால் திருப்பரங்குன்றம் நிலையூர் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
- வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர், கைத்தறிநகரில் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து நாள் ேதாறும் ஏராளமானோர் வேலைக்கு நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் மாணவ-மாணவி கள் பள்ளி, கல்லூரி களுக்கு செல்கின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் இருந்து நிலையூர் செல்லும் மெயின்ரோடு பெரும் பாலான நேரங்களில் ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும். தற்போது இந்த ரோட்டில் மின்விளக்கு களும் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திருப்ப ரங்குன்றம்-நிலையூர் ரோடு இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி செல்ல வேண்டி உள்ளது.
மோட்டார் சைக்கிளில் பெண், குழந்தைகளுடன் செல்வோர்கள் அச்சத்து டன் செல்ல வேண்டி உள்ளது. மேலும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள், வழிப் பறி, பணம் பறிப்பு போன்ற செயல்களிலும் ஈடுபடு கின்றனர். போலீசாரும் இந்த பகுதியில் ரோந்து வருவதில்லை என புகார் எழுந்துள்ளது.
எனவே திருப்பரங் குன்றம்-நிலையூர் ரோட்டில் மின்விளக்குகள் பழுதை சரி செய்து பொதுமக்கள் அச்சமின்றி செல்ல மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேலம் மாவட்டம் ஏற்காடடில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் லேசான மழையாக பெய்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடடில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் லேசான மழையாக பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்த மழை மாலை 5 மணிக்கு மேல் கனமழையாக கொட்டியது.
ஏற்காடு மலைப்பாதையில் பெய்த மழையால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். மேலும் மலைபாதையில் உள்ள அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்காட்டில் குளிரின் தாக்கமும் அதிகமாக நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.