search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mundakkai area"

    • ஏராளமான மாவட்டங்கள் மலையோர பகுதிகளை ஒட்டி இருக்கின்றன.
    • நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏராளமான மாவட்டங்கள் மலையோர பகுதிகளை ஒட்டி இருக்கின்றன. கனமழை பெய்யும்போது மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. அவ்வாறு ஏற்படும் நேரத்தில் உயிர்பலியும் ஏற்பட்டு விடுகிறது.

    தற்போது வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது.

    முண்டகை இதற்கு முன்பும் ஒருமுறை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட அேத இடத்தில் கடந்த 1984-ம் ஆண்டு இந்த பகுதி யில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் 14 பேர் பலியாகி இருக்கின்றனர். ஏராளமானோர் கை, கால்களை இழந்தனர்.

    அந்த நிலச்சரிவின் போதும், தற்போது இருப்பது போன்றே முண்டகை பகுதி தரை மட்டமாகி இருக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    அந்த நிலச்சரிவின்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தை கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலாளராக இருக்கும் சேகர் குரியகோஸ், "கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய வரலாறு மற்றும் நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான பகுதிகளின் வரலாறு" என்ற கட்டுரையில் நினைவு கூர்ந்துள்ளார்.

    1984-ம் ஆண்டு எடுக்கப் பட்ட புகைப்படம் மற்றும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    ×