என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipality"

    • பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும்,கடை வாடகை உரிய காலத்திற்குள் செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    மேலும் பல்லடம் நகராட்சியில்,பஸ் நிலையம்,அண்ணா வணிகவளாகம் போன்றவற்றில் கடை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் உரிய காலத்திற்குள் வாடகை செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவேபொதுமக்கள் வரி இனங்களை உடனடியாக செலுத்தி 18 சதவீத தண்ட வட்டி,குடிநீர் இணைப்பு துண்டிப்பு,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளவேண்டும். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிஎன் அர்பன் இ சேவை என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் .அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பின்னர் பல்லடம்,கடைவீதியில் உள்ள கடைகளில், நகராட்சி ஆணையாளர் விநாயகம் தலைமையிலான அதிகாரிகள் வசூலில் ஈடுபட்டனர்.

    • கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர்.
    • வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி அவசரக்கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி, கமிஷனர் முகமது சம்சுதீன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர். நகராட்சி தலைவர் பதில் அளித்து பேசிய போது, நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொது நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள், சாக்கடை தெருவிளக்கு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    • நவீன சுகாதார வளாகம் திறப்பு விழாவிற்கு சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு விருந்தினராக பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

    சுரண்டை:

    கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் சுரண்டை பஸ் நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் நவீன சுகாதார வளாகம் திறக்கப்பட்டது. சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஒப்பந்ததாரர் சவுந்தர் வரவேற்று பேசினார். பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

    விழாவில் முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் முத்துக்குமார்,ஆறுமுகசாமி,திமுக நிர்வாகிகள் பூல்பாண்டியன்,சுப்பிரமணயன், ஸ்டீபன் சத்யராஜ், அல்லா பிச்சை, பீர்முகமது,ஜோசியர் தங்க இசக்கி,தனலட்சுமி மாரியப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.ஆர். பால்துரை, பிரபாகர், கஸ்பா செல்வம், ஆட்டோ செல்வராஜ்,ராஜன், சுரண்டை நகர் மன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன்,அமுதா சந்திரன், ராஜ்குமார்,உஷா பேபி பிரபு,வேல் முத்து, ராஜேஷ், அந்தோணி சுதா ஜேம்ஸ், செல்வி, சிவசண்முக ஞான லெட்சுமி,மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • சோழவந்தான் பேரூராட்சியில் திட்டப் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    மூலதன மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் நவீன எரிவாயு தகனமேடை, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படும் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணிகள், வளமைப்பு பூங்காவில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தனர்.

    பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர், சகாய அந்தோனியூசின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் தலைமை வகித்தார். இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு, துாய்மைப்பணி தனியார் வசம் ஒப்படைப்பு அரசாணை எண்.139-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
    • 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகர்மன்றத்தலைவர் சூரியபிரகாஷ் பேசுகையில் "காங்கயம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். காங்கயம் நகரில் 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது. இதற்காக காங்கயம் அருகே தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நகராட்சி சார்பில் மாட்டு சந்தை செயல்படுத்தப்படும்.

    காங்கயம் நகராட்சியில் 2022-2023 ஆண்டுக்குரிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி ஆகிய அனைத்து வரியினங்களும் 100 சதவீதம் வசூல் செய்து, தமிழ்நாட்டில் முதல் நிலை நகராட்சியாக காங்கயம் நகராட்சி சாதனை படைத்துள்ளது.வரி வசூல் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நகராட்சி ஊழியர்கள் மற்றும் காங்கயம் நகரப்பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.கூட்டத்தில் குடிநீர்குழாய் பழுது நீக்குதல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தொடங்கப்பட்டு சுமார் 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1½ லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைய போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

    அதனை ஏற்று நேற்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது தாராபுரம் நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு தலைவரும், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் ஆகியோருக்கு தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர செயலாளர் டி.எஸ்.முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள், தாராபுரம் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது.
    • 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் -1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இவற்றின் மூலம் பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது. இந்த நிலையில்,நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    அதன்படி இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    இதன்படி நகராட்சி அலுவலக வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனர். இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நகராட்சி தலைவரின் அறிவுறுத்தலின் படி பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் வரி இனங்களை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும். அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.
    • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலெக்டர் பாலசுப்ரமணியம், எம்.எல்.ஏ க்கள் அய்யப்பன், சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்  இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சியில் கறையேறவிட்டகுப்பத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் திட்டம், வண்டிப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் பகுதியில் குளங்கள் அமைத்தல், கடற்கரை சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கும் பணிக்கான கட்டிடம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு நிர்ணயித்த காலத்திற்குள் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.  அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நகராட்சி நிர்வாக துறை) ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக துறை வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி,அய்யப்பன் எம்.எல். ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாநகராட்சி பொறியாளர் மகாதேவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஹேமலதா சுந்தரமூர்த்தி, பார்வதி, சக்திவேல், சசிகலா ஜெயசீலன், சாய்துனிஷா சலீம், விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சுதா அரங்கநாதன், ஆராமுது, கவிதா ரகு, பாலசுந்தர், செந்தில் குமாரி, மாநகர அவை தலைவர் பழனிவேல், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பகுதி துணை செயலாளர்கள் கார் வெங்கடேசன், ஜெயசீலன், லெனின் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்து ராமலிங்கம் வரவேற்றார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணை சேர்மன்: சாயல்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் உள்ள இடத்தை சுத்தம் செய்து அந்த பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் காமராஜ்: 14-வது வார்டில் உள்ள குடிநீர் பைப் லைன்கள் 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டவை. அவை சேதமடைந்துஅந்த பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பெற முடியாமல் உள்ளனர். புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி வி.வி.ஆர். நகர், நொண்டி பெருமாள் ஊரணி பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க பலமுறை வலியுறுத்தியும் பூங்கா அமைக்கவில்லை. விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் அழகர் வேல் பாண்டியன்: சாயல்குடி பொது மயானத்தை மின்சார மயானமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் மாணிக்கவேல்: 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் குமரையா: சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருந்து அண்ணாநகர் வழியாக இரு வேலி பகுதிக்கு தார்சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர்ச ண்முகத்தாய் சுப்பிரமணியன்: சாயல்குடி சிவன் கோவில் ஊரணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாயல்குடி பெரிய கண்மாயில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குளியல் தொட்டி அமைக்க வேண்டும்..

    கவுன்சிலர் ஆபிதா அனிபா: அண்ணா, இருவேலி பகுதியில் இருந்து பெரிய கண்மாய் கரை முதல் கூரான் கோட்டை விலக்கு ரோடு வரை கண்மாய் கரையில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் இந்திரா செல்லத்துரை: எனது வார்டில் இதுவரை எந்த பணிகளும் செய்து தரவில்லை எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் மாணிக்க வள்ளி பால்பாண்டியன், இந்திராணி பானுமதி, அமுதா உள்ளிட்ட கவுன்சிலர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக அளித்தனர். இந்த கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி பெற்று பணிகள் நடைபெறும் என சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.

    • அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.
    • 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

    இதற்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    பின்னர் அவர் தெரிவித்தாவது:மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 28 பேர், தஞ்சாவூர் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 51 பேர், கும்பகோணம் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 48 பேர், பட்டுக்கோட்டை நகர் மன்ற வார்டு உறுப்பினர்கள் 33 பேர், அதிராம்பட்டினம் நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் 27 பேர், 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கான வரைவு வாக்காளார் பட்டியல் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளான தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகங்கள், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி அலுவலகம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகங்கள், உதவி இயக்குநர் (பேரூரா ட்சிகள்) அலுவலகம், 20 பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் வட்டாட்சியர் (தேர்தல்) ராமலிங்கம், தி.மு.க ஒன்றியச் செயலர் முரசொலி, அ.தி.மு.க ஒன்றியச் செயலர் முத்துமாறன், காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலர் மோகன்ராஜ், பா.ஜ.க காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க பணியாளர்களுக்கு அறிவுறு த்தினர். ஆய்வின்போது பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி செயல்மணி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×