என் மலர்
நீங்கள் தேடியது "murdered"
- ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்திற்கு கீழே சடலம் ஒன்று கிடந்தது.
- போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்திற்கு கீழே சடலம் ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த சந்திரன்-கோவிந்தம்மாள் தம்பதியின் 22 வயதான அஞ்சலி என்கின்ற திருநம்பி சஞ்சய் என்பதும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணாக இருந்தவள் ஆணாக மாறி வீட்டை விட்டு வெளியேறி ஆங்காங்கே சுற்றி திரிந்து வந்தது தெரியவந்தது. ஆடைகள் கலைந்து இருந்தது.
இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருநம்பி அஞ்சலி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சரண் அடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
- மாணவனை போலீசார் கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 18-ந் தேதி அதிகாலையில் ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது 3 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக், அவருடைய சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர் ஷா ஆகியோரை தேடி வந்தனர். இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கிருஷ்ணமூர்த்தியை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
சரண் அடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களுடைய உறவினரான 16 வயது சிறுவன், இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
பிளஸ்-1 படித்து வரும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி தொழுகையை முடித்து விட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாணவனை போலீசார் நேற்று கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஜாகீர் உசேன் கொலை வழக்கில் சரணடைந்த அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது (37) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாகீர் உசேனை கொலை செய்ய அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது உதவியதாக கிடைத்த தகவலின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- மாணவனை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளி வாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார்.
இவர் கடந்த 18-ந்தேதி அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகே உள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.
இதுகுறித்து டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கும், தொட்டிப்பாலம் தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே இருந்து வந்த இடப்பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில், 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கோர்ட்டில் மீண்டும் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கார்த்திக், அக்பர் ஷாவிடம் நடத்திய விசாரணையில், அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலையில் சிறுவனை பிடித்து விசாரித்தனர். பிளஸ்-1 படிக்கும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது தெரியவந்தது.
இதையடுத்து மாணவனையும் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நூர்நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அனுஜ் சர்மா இரவு நேரங்களில் சூட்கேசை வெளியே எடுத்து செல்லும் காட்சிகள் இருந்தது.
- சரோஜ் சர்மா உடலை வெட்டிய என்ஜினீயர் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி, சில இடங்களில் மண்ணில் புதைத்து வைத்ததும் தெரிய வந்தது.
ஜெய்ப்பூர்:
டெல்லியில் ஸ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொடூரமாக கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போல டெல்லி பாண்டவ நகரில் மகன் உதவியுடன் கணவரை துண்டு துண்டாக வெட்டிய வீசிய பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவங்களை போலவே ராஜஸ்தானிலும் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வித்யா நகரை சேர்ந்தவர் சரோஜ் சர்மா. இவரது கணவர் 26 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர்.
இதனால் சரோஜ் சர்மாவுடன் அவரது கணவரின் அண்ணனும், அவரது மகனான அனுஜ் சர்மா (வயது 32) என்ற வாலிபரும் வசித்து வந்தனர். அனுஜ் சர்மா என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 11-ந் தேதி அனுஜ் சர்மாவின் தந்தை வெளியூர் சென்றிருந்தார்.
அப்போது சரோஜ் சர்மா கோவிலுக்கு சென்றதாகவும், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை எனவும் அனுஜ் சர்மா போலீசில் புகார் செய்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் சரோஜ் சர்மாவை தேடி வந்தனர். மேலும் இதுபற்றி அவர் சரோஜ் சர்மாவின் மகள் பூஜாவிடமும் கூறி உள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது வீட்டிற்கு சென்றபோது அங்கு அனுஜ், சமையல் அறையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட பூஜா எப்படி இங்கு ரத்தம் வந்தது என கேட்டார். இதற்கு பதில் அளித்த அனுஜ், தனது மூக்கில் இருந்து ரத்தம் கசிவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பூஜா இதுபற்றி தனது சகோதரியிடம் கூறினார்.
பின்னர் இருவரும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீட்டில் சோதனை செய்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அனுஜ் சர்மா இரவு நேரங்களில் சூட்கேசை வெளியே எடுத்து செல்லும் காட்சிகள் இருந்தது.
அதன் மூலம் நடந்த விசாரணையில் சரோஜ் சர்மா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில், சம்பவத்தன்று அனுஜ் சர்மா, தான் டெல்லி செல்ல விரும்பியதாகவும், அதற்கு பெரியம்மா எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை சமையல் அறைக்கு கொண்டு சென்று அங்கு வைத்து மார்பிள் கட்டர் மூலம் உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டியதாகவும் கூறினார்.
மேலும் வெட்டப்பட்ட உடல் பாகங்களை சூட்கேசில் மறைத்து எடுத்து சென்று ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் காட்டு பகுதியில் பல்வேறு இடங்களில் வீசியதாகவும் கூறினார்.
மொத்தம் 10 துண்டுகளாக சரோஜ் சர்மா உடலை வெட்டிய அவர் சில உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி எடுத்து சென்று சில இடங்களில் மண்ணில் புதைத்து வைத்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சரோஜ் சர்மாவின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதுவரை 8 உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 53), லாரி டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்லத்துரை (55), விவசாயி. இவர் பா.ஜனதா கூட்டுறவு பிரிவின் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார்.
இவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை தெருவில் வைத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை கத்தியால் ஐயப்பனை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
அப்போது அங்கு வந்த ஐயப்பனின் 17 வயதான மகன் தனது தந்தையை கொன்ற ஆத்திரத்தில் செல்லத்துரை கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தியாக கூறப்படுகிறது. இதில் செல்லத்துரையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார். பின்னர் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
- வயதான தம்பதி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
- மயிலி அணிந்திருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் குடிசை வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
கரூர்,
திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், இவரது மனைவி மயிலி. இவர்கள் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே ஓடையூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான மாங்காய் தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் தோட்டத்தில் உள்ள குடிசையில் தங்கவேலும், மயிலியும் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். மேலும் மயிலி அணிந்திருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் குடிசை வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த கொலை சம்பவம் வாங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க திருச்சி டி.ஐ.ஜி., சரவணசுந்தர் உத்தரவுபடி கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம்.
- கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.
புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம். இதுவே பழிக்குப்பழியாக மாறி கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இது போன்ற சம்பவங்களில் சர்வ சாதாரணமாக வெடிகுண்டுகளை கையாளுவது தொடர்கதையாகி உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார், அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர் வீரப்பன், தொழில் அதிபர் வேலழகன், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் ஆகியோர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதே பாணியில் 2019-ம் ஆண்டில் வாணரப்பேட்டை ரவுடி சாணிக்குமார், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர், அரியாங்குப்பம் பாண்டியன், முத்தியால்பேட்டை காங்கிரஸ் பிரமுகர் அன்பு ரஜினி ஆகியோரும் 2021-ம் ஆண்டில் முதலியார்பேட்டை பாம் ரவி, அவரது நண்பர் அந்தோணியும், கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- திருமணம் முடிந்து ரகுபதி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லாமல் அந்த பகுதியில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்.
- செல்வராஜ் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ரகுபதியை சரமாரி தாக்கினார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35) பி.இ. படித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரான நிதிநத்தம் வந்தார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை ரகுபதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து ரகுபதி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லாமல் அந்த பகுதியில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரகுபதிக்கு முன்னதாகவே மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ரகுபதி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி சத்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
நேற்று வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்து சத்யாவை மதுபோதையில் தாக்கி உள்ளார். ரகுபதி தாக்கியதில் வலி தாங்க முடியாமல் சத்யா அலறினார். இதனால் இவர்களது வீட்டின் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சத்யாவின் தாய் சசிகலா (50) மகளின் அலறல் சத்தம் கேட்டு ரகுபதி வீட்டிற்கு ஓடி வந்து ஏன் என் மகளை அடித்து துன்புறுத்துகிறாய்? என்ன பிரச்சனை? என்று ரகுபதியிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரகுபதி மதுபோதையில் அங்கு கீழே கிடந்த செங்கலை எடுத்து மாமியார் சசிகலாவை முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பற்கள் உடைந்து பலத்த காயம் அடைந்த சசிகலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த ரகுபதியின் மாமனார் செல்வராஜ் (55) தொடர்ந்து குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்து வருகிறாயே என்று கேட்டபோது ரகுபதிக்கும் செல்வராஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு வாக்குவாதமாக மாறி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். அப்போது செல்வராஜ் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ரகுபதியை சரமாரி தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரகுபதி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரகுபதியின் தாய் சகுந்தலா ஆவினங்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ரகுபதி மாமனார் செல்வராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தி வருகிறார். மதுபோதையில் மகளை அடித்து துன்புறுத்திய மருமகனை மாமனார் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது
- பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
கொல்கத்தா பயங்கரம்
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தினந்தோறும் வெளியாகும் தகவல்கள் இந்த சம்பவத்தில் உண்மையில் என்னதான் நடந்தது என்ற கேள்வியைப் பலமாக எழுப்புகிறது.
கேள்விக்குறி?
இந்த குற்றத்தில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர் சந்தீப் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தின் முதற்கட்ட போலீஸ் விசாரணைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

விடை கிடைக்காத மர்மங்கள்
இதோடு, இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் பலர் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற அம்மாநிலத்தில் ஆளும் அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உயிரிழந்த பெண்ணின் பெற்றோரும், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பினார். பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.
அதிர்ச்சியூட்டும் பின்புலம்
இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் மர்மங்களும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. இந்த சம்பவத்துக்கு பிறகு பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உரிமை கோரப்படாத உடல்களை உறுப்புகளுக்காக விற்று கமிஷன் பெற்றது, மருத்துவ கழிவுகளையும் சட்டவிரோதமான முறையில் விற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சக ஊழியர் ஒருவர் முன்வைத்துள்ளார். இதற்கிடையில் சந்தீப் கோஸ் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

விசரணையும் போராட்டங்களும்
இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணை செய்ய கொல்கத்தா உயர்நதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் குழு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்தும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாடு முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கையை உறுதிப்படுத்த உடனடியாக மத்திய அரசு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் நாடு முழுக்க மருத்துவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்துக்கு நிகரான பாதுகாப்பை மருத்துவமனைகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை இந்திய மருத்துவ சங்கம் முன்வைத்தது.

உச்சநீதிமன்றத்தின் தலையீடு
போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் ஆங்காங்கே இன்னும் காலவரையின்றி நடந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் மீது நேற்று நடந்த விசாரணையில் மேற்கு வங்காள மாநில அரசு மற்றும் போலீசின் மெத்தனப் போக்கை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.

வழக்கில் நடந்த குளறுபடிகள் குறித்து சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர். மேலும் நாடு இன்னொரு வன்கொடுமை நடக்கும் வரை காத்திருக்காது என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் பயிற்சி மருத்துவர்களின் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உத்தரவிட்டனர்.

அடுத்தது என்ன?
மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரிக்கை வைத்தனர். ஒட்டுமொத்தமாகப் பதில் கிடைக்காத கேள்விகளும், மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும் இந்த வழக்கின் போக்கை அடுத்து எந்த திசையில் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது திண்ணம்.
- டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார்.
- அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த டெலிவரி மேன் (35) ஒருவர் ஐபோனை டெலிவரி செய்யச் சென்றபோது இருவரால் கொல்லப்பட்டார். ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனுக்காக அவரை கொலை செய்த அவர்கள், இந்திரா கால்வாயில் அவரது உடலை வீசி உள்ளனர்.
இது சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் ஷஷாங்க் சிங் கூறுகையில்,
சின்ஹாட்டைச் சேர்ந்த கஜனன், பிளிப்கார்ட்டில் இருந்து சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். மேலும் கேஷ் ஆன் டெலிவரி (COD) கட்டண விருப்பத்தை அவர் தேர்வு செய்துள்ளார்.
பாரத் சாஹு என்ற அந்த டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார்.
அப்போது சாஹுவை கஜனனும் அவரது நண்பரும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர்.
சாஹு இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செப். 25 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சாஹுவின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவனது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில், போலீசார் கஜனனின் எண்ணை கண்டுபிடித்து, அவரது நண்பர் ஆகாஷை தொடர்பு கொண்டனர்.
போலீஸ் விசாரணையில், ஆகாஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், உடலை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையின் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- வக்கீலான கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார்.
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பீமநகரி விதை ஆராய்ச்சி மையம் அருகே சந்தியான் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் இன்று காலை வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அவரை யாரோ கொன்று உடலை எரித்துள்ளனர். இறந்து கிடந்தவரின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்த நிலையில் கிடந்ததால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் முதலில் தெரியவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது திருப்பதி சாரம் கீழூர் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 21) என்பவர் ஒருவரை அழைத்து செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் இசக்கிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவரை இசக்கிமுத்து கொன்றதும், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தக்கலை குமாரபுரம் சரல்விளை பகுதியை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி(50) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிணமாக கிடந்த கிறிஸ்டோபர் சோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து இசக்கி முத்துவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிறிஸ்டோபர் சோபி கொலைக்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
வக்கீலான கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார். அந்த வழக்கை விரைந்து முடிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் இசக்கி முத்து தனது சொத்து பத்திரங்களை தன்னிடம் தருமாறு கிறிஸ்டோபர் சோபியிடம் கூறியுள்ளார்.
ஆனால் பத்திரங்களை கொடுக்க அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை தீர்த்துக்கட்ட இசக்கிமுத்து முடிவு செய்துள்ளார் . இந்த நிலையில் நேற்று கிறிஸ்டோபர் சோபி தனக்கு வாழைக் கன்றுகள் வேண்டுமென்று இசக்கிமுத்துவிடம் கேட்டுள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்டோபர் சோபியை தீர்த்துக்கட்ட இசக்கிமுத்து திட்டமிட்டுள்ளார். தங்களது ஊரில் வாழைக்கன்றுகள் இருப்பதாகவும், அங்கு வருமாறும் கிறிஸ்டோபர் சோபியிடம் கூறியுள்ளார். அதனை நம்பி அவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் இசக்கிமுத்து வீட்டிற்கு வந்துள்ளார்.
சந்தியான் குளக்கரை பகுதியில் உள்ள தோட்டத்தில் வாழைக்கன்று இருப்பதாக கூறி அங்கு கிறிஸ்டோபர் சோபியை தனது மோட்டார் சைக்கிளில் இசக்கிமுத்து அழைத்து சென்றார். அங்கு வைத்து கிறிஸ்டோபர் சோபியை தன்னிடம் இருந்த அரிவாளால் இசக்கிமுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். கொலை செய்யப்பட்ட கிறிஸ்டோபர் சோபியை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை எரித்துவிட முடிவு செய்தார். அதற்காக தனது மோட்டார் சைக்கிளில் இருந்தே பெட்ரோலை எடுத்து, கிறிஸ்டோபர் சோபி உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
பின்பு அங்கிருந்து இசக்கிமுத்து அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததால் இசக்கிமுத்து சிக்கினார். கைது செய்யப்பட்ட இசக்கி முத்துமிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வக்கீல் வெட்டிக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தால் ஆரல்வாய்மொழி மற்றும் தக்கலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆத்திரம் அடைந்த மனு, மனைவி கவுரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
- கவுரம்மாவின் பெற்றோர் சிகாரிப்புரா போலீசில் புகார் அளித்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகாவை அடுத்த அம்பிளிகொளா பகுதியை சேர்ந்தவர் மனு. இவரது மனைவி கவுரம்மா (வயது 28). கவுரம்மா சிகாரிப்புராவில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மனு அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை மனு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மனைவியிடம் உணவு பரிமாறும்படி கேட்டுள்ளார்.
ஆனால் கவுரம்மா நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதற்கிடையே ஒரு கட்டத்தில் நீங்களே உணவு பரிமாறி சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று கவுரம்மா கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனு, மனைவி கவுரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் கடும் கோபமடைந்த மனு, மனைவியின் கழுத்தை நெரித்து உள்ளார். இதில் கவுரம்மா மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மனு, மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களது மகள் எனக்கு உணவு பரிமாறாமல் செல்போனில் மூழ்கி இருந்தார். இதனால் ஆத்திரத்தில் கவுரம்மாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கவுரம்மாவின் பெற்றோர் சிகாரிப்புரா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து கவுரம்மாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பி ஓடிய மனுவை போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மனுவை நேற்று போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சிகாரிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.