என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "muslims"

    • காலம் காலமாக சிறுபான்மையின மக்களுக்கு நட்பாகவும் அரணாகவும் இருந்து திமுக தான்.
    • அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக உள்ளது.

    சென்னை திருவான்மியூரில் இஃப்தார் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில், பங்கேற்று நோன்பு திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காலம் காலமாக சிறுபான்மையின மக்களுக்கு நட்பாகவும் அரணாகவும் இருந்து திமுக தான்.

    அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக உள்ளது.

    பேரறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் இணைக்கும் பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம் தான்.

    மற்ற மாநிலங்களில் வருந்தத்தக்க சூழல் இருந்தாலும் தமிழ்நாட்டில் மதரீதியிலான மோதல் ஏற்படாமல் திமுக அரசு காக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
    • ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா?

    அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு எடுத்த முடிவு குறித்த விவாதம் அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

    பெங்களூரில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா விழாவில் இன்று கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் ஹோசபாலே பேசினார்.

    அப்போது, "பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.

    முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவால் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் 17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை குறித்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஹோசபாலே, ஔரங்கசீப் போன்றோர் சின்னமாக மாற்றப்பட்டனர். ஆனால் சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அவரது சகோதரர் தாரா ஷிகோ போன்றோர் மறக்கப்பட்டனர். இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிராகச் சென்றவர்கள் சின்னங்களாக மாற்றப்பட்டனர்.

    ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா? என்று கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய வர படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

    • ஏற்கனவே அரசு டெண்டர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருந்து வருகிறது.
    • பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர்.

    அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது கடும் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு மசோதா நகலை கிழித்து சபாநாயகர் யுடி காதர் மீது வீசி பரபரப்பை கிளப்பினர்.

    கடந்த மாதம், முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி முதல்வர் சித்தராமையாவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது. இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசு இதுதொடர்பாக புதிய மசோதாவை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்துள்ளது.

    ஏற்கனவே அரசு டெண்டர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருந்து வரும் நிலையில் அதோடு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடும் சேர்க்கப்பட்டுள்ளதில் எந்த தவறும் இல்லை என அரசு வாதிடுகிறது. ஆனால் எதிர்க்கட்சியான பாஜக, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று போராடி வருகிறது.

     

    இந்த நிலையில்தான் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதரின் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர்.

    அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் வழங்கும் மசோதா நகலை கிழித்து அவர் மீதுவீசினர். சில பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர். இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் பாஜக எம்எல்ஏக்களை வலுக்கட்டமையாக அவையை விட்டு வெளியேற்றும் சூழல் ஏற்பட்டது.

    • நான் பேசிய கருத்தை இட்டுக்கட்டி திரித்து பரப்புகின்றனர்
    • காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்

    திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

    த.வெ.க. தலைவர் விஜய் அண்மையில் ரம்ஜான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பாக திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, "இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் பேசிய கருத்தை வேறுவிதமாக சிலர் இட்டுக்கட்டி திரித்து பரப்புகின்றனர். இஸ்லாமியர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சியோ வெறுப்போ இல்லை; என் பேச்சில் வார்த்தை தடுமாறி இருந்தால் அதற்காக என் வருத்ததை பதிவு செய்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள்.
    • மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் வேண்டுகோள்.

    மகாராஷ்டிராவில் 100% இந்துக்களால் நடத்தப்படும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' என்ற சான்றிதழ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மீன்வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தினார். இதற்காக malharcertification.com என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.

    மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் நிதேஷ் ரானே இந்துக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

    ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள். இந்து மக்கள் ஹலால் மற்றும் ஹலால் இல்லாத கடைகளிலும் இறைச்சி வாங்குவார்கள். இந்நிலையில், ஹலால் இறைச்சி கடைகளுக்கு போட்டியாக இந்த புதிய நடைமுறையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

    ரம்ஜான் வருவதை ஒட்டி இந்து - முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை பாஜக அரசு முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

    • முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
    • வரும் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையே கொண்டாடப்படுகிறது.

    அரசு மருத்துவமனைகளில் முஸ்லிம்களுக்கு தனி வார்டு ஒதுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச பெண் பாஜக எம்.எல்.ஏ. கேட்டகீ சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்களிடம் பேசிய கேட்டகீ சிங், "ஹோலி பண்டிகை வருடத்திற்கு 1 நாள் மட்டும் தான் வருகிறது. ஆனால் வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமை வருகிறது என சம்பல் மாவட்டத்தில் ஒரு போலீஸ்காரர் தெளிவாக பேசினார். அந்த நாளில் எதாவது தவறுதலாக நடந்தால் அந்த அழுகை கும்பல் (முஸ்லிம்) தெருவில் இறங்குவார்கள். நம் மக்களை (இந்துக்களை) பார்த்து இவ்வளவு பயம் இருந்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியில் ஒரு மருத்துவக் கல்லூரியில், முஸ்லிம்களுக்கு ஒரு தனிப் பிரிவு உருவாக்க வேண்டும்

    முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். முஸ்லிம்கள் பழங்களில் காய்கறிகளில் எச்சில் துப்புவது, சிறுநீர் கலப்பது போன்ற வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தனிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று நான் முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்.

    வரும் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையே கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக சம்பல் மாவட்ட சர்க்கிள் அதிகாரி பேசுகையில், "ஹோலி என்பது வருடத்திற்கு ஒரு முறை வரும் பண்டிகை, அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை வருடத்திற்கு 52 முறை நடைபெறும். ஹோலியின் வண்ணங்களால் யாராவது சங்கடமாக உணர்ந்தால், அவர்கள் அந்த நாளில் வீட்டிலேயே இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாபநாசம் அருகே பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள், கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி மதரஸாயே ஹிதாயத்துன் நிஸ்வான் பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பாபநாசம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் துணைத்தலைவர் ஏ.ஹாஜாமைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கௌரவ ஆலோசகர் எம்.ஜெ.அப்துல்ரவூப், ராசகிரி பெரி பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் யூசுப்அலி, ஆர்டிபி கல்லூரி தாளாளர் தாவூத்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெரிய பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.ஜமாத்துல் உலமா சபை மாநில துணை தலைவர் ஜீயாவுதீன் பார்கவி நோம்பை திறந்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் நிஸ்வான் பள்ளியின் தலைவர் நூர்முஹம்மது, செயலாளர் முஹம்மது பாரூக், பொருளாளர் முஹம்மதுரபி, மற்றும் பாபநாசம் ராசகிரி, பண்டா ரவாடை ஜமாத்தார்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள், கலந்து கொண்டனர்.

    • தேர்த்திருவிழா நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
    • அம்மனுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவிலுக்கு வந்தனர்.

    உடுமலை :

    மதங்களின் பெயரால் பல கலவரங்கள்,பல போராட்டங்கள் நடந்து வரும் இன்றைய சூழலில் தொப்புள் கொடி உறவுக ளாக வாழ்ந்து வரும் உடுமலை மக்கள் வியக்க வைக்கிறார்கள்.

    ஆண்டுதோறும் நடைபெறும் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை அனைத்து மதத்தினரும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.குறிப்பாக தேர்த்திருவிழாவன்று தேரோடும் வீதிகளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் நின்று தேருக்கு வரவேற்பளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.தற்போது தேர்த்திருவிழா நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் இஸ்லாமியர்கள் ஊர்வ லமாக வந்து மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்று ள்ளது.உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் நேற்று உடுமலை நகர்மன்றத் தலைவர் மத்தீன் தலை மையில் அம்மனுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவி லுக்கு வந்தனர்.அவர்களை கோவில் பரம்பரை அற ங்காவலர் யு.எஸ்.எஸ் ,ஸ்ரீதர்உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.மேலும் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.சீர்வரிசைத் தட்டுக்களை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கிய இஸ்லாமியர்கள் தேர்த்தி ருவிழா சிறக்க வாழ்த்து க்களை தெரிவித்தனர்.

    மதங்களைக் கடந்து மனித நேயத்துடன் ஒருவரு க்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது.பல இடங்களில் மத ரீதியான மோதல்கள் நடந்து வரும் நிலையில் மதங்களை விட மனிதமே பெரிது என உடுமலை மக்கள் உதாரண மாக வாழ்வது இந்த நிகழ்வால் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிககளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அன்னை பாத்திமா இஸ்லாமிய மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் ஏழை, எளியோருக்கு ரம்ஜான் பண்டிகையை யொட்டி புத்தாடைகள் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார். சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் டிரஸ்டி ஓஜிர்கான், தலைவர் அக்பர்கான், செயலாளர் ஆரிப்கான், பொருளாளர் ரபிக் முன்னிலை வகித்தனர்.

    பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பாத்திமா பீவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு இஸ்லாமி யர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், கவிஞர் மோகன் தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டச் செயலாளர்கள் பாலமுருகன் தவிடன், பாண்டுரங்கன், வேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், சவுந்தர், அக்பர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 பள்ளிவாசல்கள் மற்றும் பெண்கள் வழிபடும் தைக்காகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • தொழுகையில் செயலாளர் மக்கின், முன்னாள் மாவட்ட தலைவர் சம்சுதீன் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி :

    ரம்ஜான் பண்டிகையை யொட்டி தூத்துக்குடி, தென்காசி, மாவட்டங்களில் இன்று காலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 பள்ளிவாசல்கள் மற்றும் பெண்கள் வழிபடும் தைக்காகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து க்களை பரிமாறிக்கொண்டனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில் நிர்வாகி சாகுல் ஹமீது தலைமையில் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையில் செயலாளர் மக்கின், முன்னாள் மாவட்ட தலைவர் சம்சுதீன் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் காயல்பட்டினம் ஜெய்லானி நகர் ஷாகின்பாக் திடலிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இங்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பில் ஹசனா லெப்பை தொழுகை நடத்தினார். அப்துல் பாசித் குத்பா உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் அமைப்பின் நகர தலைவர் ஜாபர் சாதிக், செயலாளர் முகம்மது இத்ரிஸ், பொருளாளர் ரைய்யான் சாகுல் ஹமீது உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று மாலை காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் கூடி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வர்.

    உடன்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள திடலில் தலைவர் தவுலத்துல்லா, செயலாளர் குத்புதீன், பொருளாளர் அர்சிக் ரகுமான், துனைத்தலைவர் இப்ராகிம் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். மேலும் சிதம்பர தெரு, பெரிய தெரு, புதுமனை தெரு, முகைதீன் புதுத்தெரு, சுல்தான்புரத்தில் தொழுகை நடைபெற்றது.

    தூத்துக்குடி மாநகரில் முத்தையாபுரம், திரேஸ்புரம், தாளமுத்துநகர் உள்ளிட்ட இடங்களிலும், விவிடி சிக்னல் அருகே தனியார் பள்ளியிலும் தொழுகை நடந்தது. கயத்தாறில் ஜூம்மா நயினார் பள்ளிவாசல் சார்பில் பேரணியாக சென்று ஈத்கா திடலில் திரண்டு ஜமாத் தலைவர் பீர் மைதீன் தலைமையில் தொழுகை நடத்தினர். இதில் 870 பேர் கலந்து கொண்டனர். செய்துங்கநல்லூர் பழைய பள்ளிவாசலில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பேச்சாளர் சுலைமான் தலைமையில் தொழுகையில் ஈடுபட்டனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் 4 இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜார் சாலையில் ஜமாஅத் தலைவர் மவ்லவி ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார் . இது போல் கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிர் அஹ்மத் உமரியும் மக்கா நகர் மஸ்ஜித் ஆயிஷா திடலில் ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ்வும் பேட்டை மஸ்ஜித் அக்ஸா திடலில் முஹிப்புல்லாஹ் உமரி ஆகியோர் தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார்கள்.

    முன்னதாக கமிட்டி சார்பில் நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுக்கு உணவு சமைக்க தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இதுபோல் நேஷனல் தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் இக்பால் நகர், ரகுமானியாபுரம் , மக்கா நகர் பகுதிகளில் தொழுகை நடத்தினர். இதுபோல் எஸ்.டி.பி.ஐ. சார்பில் இக்பால் நகர் ,மதினா நகர் ஆகிய பகுதிகளில் பெருநாள் தொழுகை நடத்தினர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். காயிதே மில்லத் திடலில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசிர் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர்.

    பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி, ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துல் காதர் , மக்காநகர் தவ்ஹீத் திடலில் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம், தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் ரபீக் ராஜா, பாத்திமா நகர் பள்ளி திடலில் குத்தூஸ், இக்பால் நகர் ரய்யான் பள்ளி திடலில் ரயான் மைதீன் , மஹ்மூ நகர் திடலில் குல்லி அலி மதினா நகர் தவ்ஹீத் திடலில் ஹாஜா மைதீன் என நகரில் 9 இடங்களில் தொழுகை நடைபெற்றது.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் சன்முகம் மேற்பார்வையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்ரா அரிசி வழங்கினர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் , வடகரை, வீராணம் ,சங்கரன்கோவில், புளியங்குடி , வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 32-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது.

    சங்கரன்கோவிலில் ஈத்கா திடலில் ஜமாத் கமிட்டி தொழுகையை அசரத் முகமது ரபீக் நடத்தினார். தலைவர் அப்துல் காதர், செயலாளர் நயினா முகமது, பொருளாளர் அப்பாஸ், துணைச்செயலாளர் ரக்மத்துல்லா, அப்பாஸ், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, ம.தி.மு.க. இளைஞரணி முகமது ஹக்கீம், தே.மு.தி.க. அயூப்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரும்பாலான பள்ளிவாசல்களில் காலை 8 மணி வரையிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
    • மேலப்பாளையத்தில் பஜார் திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    நெல்லை:

    ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    20 இடங்களில் தொழுகை

    நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே பள்ளிவாசல்களில் திரளான இஸ்லாமியர்கள் திரண்டனர். பெரும்பாலான பள்ளிவாசல்களில் காலை 8 மணி வரையிலும் சிறப்பு தொழுகை நடந்தது. நெல்லை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது. மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த தொழுகையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    தொடர்ந்து அவர் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.மேலப்பாளையம் விரிவாக்க பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா பள்ளி வாசல் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை மதீனா சி.பி.எஸ்.இ. பள்ளி திடலில் நடைபெற்றது.

    பள்ளி வாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரை ஆற்றினார்.இதில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு, பசித்தோருக்கு உணவ ளியுங்கள், நோயுற்றவரை நலம் விசாரியுங்கள், நலிவடைந்தவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று இஸ்லாம் எடுத்துரைத்துள்ள சகோ தரத்துவத்தை நம் வாழ்வில் உறுதியாக பற்றி பிடித்திடுவோம்.

    புத்தாடை அணிந்து, அறுசுவை உணவுகளை உட்கொண்டு, உற்றார் உறவுகளுடன் இன்பமுடன் இந்நாளில் மகிழ்வது போல், வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் என்று தெரிவித்தார்.

    இந்த தொழுகையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா ஜாபர் அலி , ஜவஹர், தாவுத் ஹாஜியார்,முஸ்தபா, ஜெய்னுல் ஆபிதீன்,கட்சி நிர்வாகிகள் கனி, லெப்பை, கல்வத், சலீம் தீன், சிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்நெல்லை மேலப்பாளையம் ஈத்கா திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். மேலப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்றம் கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் பஜார் திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், ஏர்வாடி, பத்தமடை உள்பட ஏராளமான இடங்களில் திறந்த வெளிகளிலும், பள்ளி வாசல்களிலும் காலையில் தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமா றிக்கொண்டனர். மேலும் அன்பு, கருணை, சகோதரத்துவம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது வாழ்த்து க்களை தெரிவித்துக் கொண்டனர்.

    • இஸ்லாமிய மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக “சமத்துவ விருந்து” வழங்கி அசத்தியுள்ளனர்.
    • விருந்தில் கலந்து கொண்ட இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உணவருந்தியப்பின் ஒன்றாக கூடி அமர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள இஸ்லா மிய மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக "சமத்துவ விருந்து" வழங்கி அசத்தி யுள்ளனர். இந்த சமத்துவ விருந்தில் அரியநாயகிபுரம் கிராம மக்கள் மட்டுமில்லா மல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் உட்பட பலர் கலந்து கொண்டு சமத்துவ விருந்தில் வழங்கப்பட்ட சுவையான அசைவ விருந்தை ஒன்றாக கூடி அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் விருந்தில் கலந்து கொண்ட இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உணவருந்தியப் பின் ஒன்றாக கூடி அமர்ந்து பழைய நினைவுகளை சுவைத்து அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

    மேலும், அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் கந்தூரி திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை இக்கிராமத்தில் 3 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவில் இக்கிராமத்தில் இருந்து வெளியூர், வெளிநாடு என பணி மற்றும் தொழில் ரீதியாக சென்றிருந்தவர்கள் கூட தவறாமல் கலந்து கொண்டு சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்க படை யெடுத்து வந்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் விளாத்தி குளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் அன்வர் அலி, அரசு பதிவு பெற்ற பொறியாளர் முகமது இக்பால், அரியநாயகிபுரம் சுன்னத் ஜமாஅத் (சென் னை) தலைவர் நாகூர் பிச்சை, அரிய நாயகிபுரம் சுன்னத் ஜமாஅத் தலைவா் முகமது இப்ராஹிம், அரிய நாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் மாாியம்மாள், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் வரிசை முகமது, ஜாகிர் உசேன், விளாத்திகுளம் தி.மு.க. ஒன்றிய செய லாளர்கள் சின்னமாரிமுத்து, ராமசுப்பு, பொதுக்குழு உறுப்பினர் ராஜாகண்ணு, நகர செயலாளா் வேலுச் சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், முத்தையா புரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, சமூக வலைதள பொறு ப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×