என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "muslims"

    • அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய முடிவுகளை ஆய்வு செய்வோம்.
    • பகுஜன் சமாஜ் கட்சியில் முஸ்லிம்கள் முக்கிய அங்கமாவர்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அள வுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தோல்வி அடைந்தது. கடந்த 2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி இந்த முறை தனித்துப் போட்டியிட்டு ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 35 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட வாய்ப்பளித் திருந்தது.

    இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து மாயாவதி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கட்சியின் நலன் கருதி அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய முடிவுகளை ஆய்வு செய்வோம். தலித் மக்கள் முக்கியமாக ஜாதவ் பிரிவினர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அவர்க ளுக்கு நன்றி.

    அதே நேரத்தில் முஸ்லிம்கள் பகுஜன் சமாஜ் கட்சியைப் புரிந்துகொண்டு வாக்களிக்கத் தவறியது வருத்தம் அளிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியில் முஸ்லிம்கள் முக்கிய அங்கமாவர்.

    இந்த மக்களவைத் தேர்த லில் மட்டுமின்றி இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்க ளிலும் முஸ்லிம் களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதிக முஸ்லிம் வேட்பாளர்களை பகுஜன் சமாஜ் நிறுத்தியது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தோல்வியைச் சந்தித்துள் ளது என்றார்.

    • மத சுதந்திரம் 2023 என்ற அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டார்.
    • சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகிறது.

    கடந்த வாரம் 200 நாடுகளை உள்ளடக்கிய மத சுதந்திரம் 2023 என்ற அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டார்.

    அந்த அறிக்கையில், இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரிப்பதாகவும், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், வெறுப்புப் பேச்சு, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

    இந்நிலையில், அமெரிக்காவின் இந்த மத சுதந்திரம் 2023 அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், "மத சுதந்திரம் குறித்து அமெரிக்காவின் அறிக்கை ஒருதலைபட்சமானது, இந்தியாவில் மத, சமூக கட்டமைப்பை புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களை வைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லிம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.
    • இஸ்லாமின் ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் AIMPLB உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    விவாகரத்தான இஸ்லாமிய பெண்களும் கணவனிடம் ஜீவனாம்சம் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒன்றில், விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம்வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார்.

    கடந்த ஜூலை 10 ஆம் தேதி அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், அதை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.

    ஜீவநாமசம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்து இருதப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவிதித்திருந்தது. மிகவும் முக்கியமான தீர்ப்பாக இந்த தீர்ப்பு பார்க்கப்பட்டது.

     

    இந்நிலையில் விவாகரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கு பராமரிப்பு செலவுக்கான ஜீவனாம்சம் வழங்குவது என்பது இஸ்லாமின் ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்  AIMPLB உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக வாரியம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெட்ரா மகாகாளி கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பாதுகாப்புக்காகவும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய மட்டுமே என்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை குறிவைத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக உஜ்ஜைன் மாநகராட்சி மேயர் முகேஷ் தட்வால் வெளியிட்டுள்ள உத்தரவில், தங்களின் கடைகளின் முன் உரிமையாளர்கள் தங்களின் பெயரையும், தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். உத்தரவைப் பின்பற்ற தவறும் பட்சத்தில் முதல் முறை 2000 ரூபாயும் 2 வது முறை 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து வருடம் முழுவதும் மகாகாளேஸ்வர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவர் என்பது கவனிக்கத்தக்கது.

     

    இந்த உத்தரவு பாதுகாப்புக்காகவும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய மட்டுமே என்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை குறிவைத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக தொடங்கிவைத்துள்ள இந்த புதிய சர்ச்சை மக்கள் அதிகம் வருகை தரும் நகரங்களில் இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்ற விமர்சனக்குரல்கள் எழுந்துள்ளன.

     

    • தலைவர் பிங்கி சவுத்ரி தலைமையில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அங்கு வசித்து வந்த குடுமபங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் மீதும் நடத்தினர்.

    வங்காள தேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற நிலையில் நாட்டில் உள்ள நிலையின்மையை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து இன்று தலைநகர் டாக்காவில் பெரிய அளவிலான பேரணி நடந்து வருகிறது. அந்நாட்டின் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்ற முகமது யூனிசுக்கு தெரிவித்த வாழ்த்துச் செய்தியிலும் பிரதமர் மோடி அதையே வலியுறுத்தியுள்ளார். மேலும் வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவுக்கும் மக்கள் நுழைய வாய்ப்புள்ளதால் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நிலைமை இப்படியாக இருக்க இதைச் சாதகமாகப் பயன்படுத்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்து ரக்ஷா தல் என்ற தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காசியாபாத் நகரில் உள்ள கவி நகரின் குல்தார் ரயில் நிலையத்தின் அருகே வசித்து வந்த இஸ்லாமியர்களை வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறி அவர்களது குடியிருப்பைச் சூறையாடி கபளீகரம் செய்துள்ளனர். தலைவர் பிங்கி சவுத்ரி தலைமையில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     

    அந்த குடிசைப் பகுதியில் சுமார் 100 - 150 குடும்பங்கள் இருக்கிறது. இரவு 7.30 மணியளவில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் கூடாரங்களைப் பிய்த்து எறிந்து அவர்களின் உடைகளையும், உடைமைகளையும் தீவைத்து எரித்துள்ளனர்.  islamiyargalaiலத்திகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர். இதே வாரத்தில் அப்பகுதியில் அந்த அமைப்பினர் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இது.  

     தாக்குதல் குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், 'திடீரென்று 30க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து இஸ்லாமிய குடும்பத்தினரை தேடி தாக்குதல் நடத்தினர். அந்த குடுமபங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் மீதும் நடத்தினர். நாங்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. நாங்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லியும், அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். அடிப்பதுடன் நிற்காமல் உடைமைகளுக்கு தீயும் வைத்தனர். எல்லாமே சேதமடைந்த பிறகுதான் காவல்துறையினர் வந்தனர்' என்று தெரிவித்தனர்.

    தற்போது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அவ்வமைப்பின் தலைவர் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். பலர் தலைமறைவாகியுள்ளனர். இந்து ரக்ஷா தல் தலைவர் பிங்கி சவுத்ரி இந்த தாக்குதலுக்கு தாங்கள் முழுமையாக பொறுப்பேற்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

    • முதல்வர் நயாப் சிங் சைனி, பசு மீதான பாசத்தில் மக்கள் அப்படி செய்வதை யாரால் தடுக்க முடியும், அவர்களை குண்டர்கள் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
    • 'வெறுப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகார ஏணியில் ஏறியவர்கள், நாடு முழுவதும் தங்களின் ஆட்சியின் மீதான பயத்தை விதைத்து வருகின்றனர்'

    அரியானாவில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக எண்ணி பசு பாதுகாப்பு குண்டர்களால் புலம்பெயர் தொழிலாளியான சாபிர் மாலிக் என்ற இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். மகாராஷ்டிராவில் ரெயிலில் மாட்டுக்கறி எடுத்துவந்ததாகத் தனது மகளுடன் வந்த இஸ்லாமிய முதியவரை சக பயணிகள் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

    இந்த இரண்டு சம்பவங்களில் வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரியானாவில் நடந்த சம்பவம் தொடர்பாக பேசிய பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, பசு மீதான பாசத்தில் மக்கள் அப்படி செய்வதை யாரால் தடுக்க முடியும், அவர்களை குண்டர்கள் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆளும் பாஜக அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், வெறுப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகார ஏணியில் ஏறியவர்கள், நாடு முழுவதும் தங்களின் ஆட்சியின் மீதான பயத்தை விதைத்து வருகின்றனர். பாதுகாலவர்கள் என்ற போர்வையில் ஒளிந்துள்ள வெறுப்பு சக்திகள், வெளிப்படையாகவே வன்முறையைப் பரப்பத் தொடங்கியுள்ளன. அதன்மூலம் சட்டத்தின் ஆட்சிக்கு பகிரங்கமாகச் சாவல் விடுத்துள்ளது.

    பாஜக அரசால் இந்த அயோக்கியர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, அதனால்தான் துணிச்சலாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுப் போரில் எந்த விலையையும் கொடுத்தாகினும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார். 

    • பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் மகனும் மகாராஷ்டிர மாநிலம் கன்காவிலி தொகுதி பாஜக எம்.எல்.ஏவுமான நிதேஷ் ரானே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்
    • கடந்த காலங்களிலும் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக நிதேஷ் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமியர்களை மசூதிக்குள் புகுந்து வேட்டையாடுவோம் என்று மகாராட்டிர பாஜக எம்.எல்.ஏ நிதேஷ் ரானாபொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து மத குரு மஹாந்த் ராம்கிரி மஹராஜ் என்பவர் கடந்த மாதம் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

    இந்நிலையில் ராம்கிரி மஹராஜூக்கு ஆதரவாக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் மகனும் மகாராஷ்டிர மாநிலம் கன்காவிலி[Kankavli] தொகுதி பாஜக எம்.எல்.ஏவுமான நிதேஷ் ரானே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். 'மதகுரு மஹாந்த் ராம்கிரி மஹராஜூக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உங்களின் மசூதிகளுக்குள் புகுந்து உங்களை ஒவ்வொருவராக வேட்டையாடுவோம் [chun chun ke marenge]. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்' என்று நிதேஷ் ரானே தெரிவித்தார். அவரின் பேச்சை கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது தட்டி ஆரவாரம் செய்தனர்.

    நிதேஷின் கருத்துக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நிதேஷ் பிரயோகித்த வார்த்தைகளுக்கு பாஜகவும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. பொதுவாழ்க்கையில், குறிப்பாக அரசியல் வாதிகள் இதுபோன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடாது என்று பாஜக செய்தி தொடர்பாளர் துஷின் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நிதேஷ் மீது இரண்டு எப்.ஐ ஆர் கள் பதியப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக நிதேஷ் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
    • ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா. 7 சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன.

    ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி மங்கலம் இஸ்லாமியர்களின் பூர்வீக பள்ளிவாசலான மங்கலம் சுன்னத்வல் ஜமாஅத் பெரியபள்ளிவாசல் சார்பில் மங்கலம் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 7 சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    அவை கோவில் திருப்பணிக்குழு மற்றும் கும்பாபிஷேக விழாக்கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற நிகழ்வு காண்போரை ஆச்சரியப்பட வைத்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன்
    • லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத்தை சுட்டிக்காட்டி பெண்ணின் சாட்சியையும் மீறி இளைஞருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரைலியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 22 வயது இந்து பெண்ணை காதலித்த திருணம் செய்த நபர் முஸ்லீம் என்று பின்னரே தெரியவந்தது என்றும் அவர் ஏமாற்றப்பட்டதாகவும் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையில் தோன்றிய அந்த பெண் புகாரில் கூறப்பட்டது உண்மைதான் என்று கடந்த ஜூலை 31 ஆம் தேதி சாட்சி சொல்லியிருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையிலிருந்த நிலையில் தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் தோன்றிய அந்த பெண், தஉள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன் பிறழ் சாட்சியம் வழங்கியுள்ளார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி ரவிக்குமார் திவாகர் லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி ரவிக்குமார் கடந்த 2022 இல் ஞானவாபி மசூதியில் இந்து கோவில் இருபதுகுறித்து ஆய்வு நடந்த தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • யாகசாலை அமைத்து கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.
    • சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் ஏராளமானோர் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி தாலுகா அரசர்குளம் வடபாதியில் அமைந்து ஸ்ரீமகா முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி மக்களால் முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக யாகசாலை அமைத்து கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3 நாட்களாக நான்கு கால யாக பூஜை நடைபெற்று வந்தது.

    பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    முன்னதாக அப்பகுதியை சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் ஏராளமானோர் சீர்வரிசை எடுத்து வந்தனர். அவர்களுக்கு விழா குழு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • மதச்சார்பின்மை இருப்பதில்லை என்று கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
    • மதச்சார்பின்மை முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறியுள்ளார்.

    மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முஸ்லீம் மக்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 51 சதவீதத்தை அதிகரித்த நாடுகளில் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை இருப்பதில்லை என்று கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இது குறித்து பேசிய அவர், "நான் வரலாற்றை தான் உங்களிடம் கூறுகிறேன். இஸ்லாமியர் மக்கள் தொகை 51 சதவீதத்தை கடந்துள்ள நாடுகளில் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை முடிவுக்கு வந்துவிட்டன," என்று கூறியுள்ளார்.

    இந்தியாவில் மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவை பிரச்சினைக்குரிய விஷயங்களாக பார்க்கப்படும் நிலையில், மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    இந்த வீடியோவில் மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்களுக்கு நெட்டிசன்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இவரது கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

    • நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவையில் கர்நாடக அரசு சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    • காங்கிரஸைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே.

    கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அரசு டெண்டர்களில் பட்டியல் சாதியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு இருந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த மாதம், முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி முதல்வர் சித்தராமையாவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை பரிசீலித்து வரும் அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவையில்  சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை குறிப்பிட்டு கர்நாடக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

    கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், மாநிலம் முழுவதும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.

    பாஜக இந்த நடவடிக்கையை எதிர்க்கும், இது திருப்திப்படுத்தும் அரசியல். எஸ்சி மற்றும் எஸ்டிக்கு இடஒதுக்கீடு உள்ளது, ஆனால் கர்நாடகாவில் வளர்ச்சி என்ன? காங்கிரஸைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே. பாஜக இதை அவையில் எதிர்க்கும் என்று தெரிவித்தார்.

    ×