என் மலர்
நீங்கள் தேடியது "Mysterious people"
- முன்பக்கம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.
- மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவஸ்தாசா வடியை சேர்ந்தவர்அசார் முகமது.
இவர் வெளிநா ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நஷியாபேகம் (வயது 28).
சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முன்பக்கம் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.
மேலும் வீட்டினுள் இருந்த ஹோம் தியேட்டர், தையல் எந்திரம், பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- பித்தளைக்கு பாலிஷ் போடுவதாக கூறி விளக்கை கொண்டு வந்து கொடுத்து பாலிஷ் போட்டுள்ளார்.
- மர்மநபர்கள் அவர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ள னர்
கடலூர்:
திட்டக்குடி அருகே வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதமொழி (29) தற்பொழுது தனது தாய் வீடான டி.ஏந்தல் வீட்டில் உள்ளார். நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பித்தளைக்கு பாலிஷ் போடுவதாக கூறியதன் பேரில், அமுதமொழி வீட்டில் இருந்த விளக்கை கொண்டு வந்து கொடுத்து பாலிஷ் போட்டுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி பாலிஷ் போடும்போது, பளிச்சென்று தெரியவே, அமுதமொழி தன்னுடைய கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் ஒரு கிராம் மோதிரம் மொத்தம் 8 பவுன் நகையை கழற்றி பாலிஷ் போட்டு தரும்படி கொடுத்தார்.
அப்போது மர்ம நபர்கள் அதிக நகை இருப்பதால் வெந்நீர் இருந்தால் தான் பாலிஷ் போட முடியும் என தெரிவித்தவுடன் அமுதமொழி வெண்ணீர் எடுப்பதற்காக வீட்டின் உள்ளே சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய மர்மநபர்கள் அவர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ள னர் வெளியே வந்து பார்த்த அமுதமொழி மர்ம நபர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த பொழுது நடந்தவற்றை அமுதமொழி கூறி அழுதுள்ளார். உடனடியாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமுதமொழி வீட்டிற்கு வருவதற்கு முன் அந்தப் பகுதியல் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று டிப்டாப் ஆசாமிகள் 2 பேர் வீட்டில் இருந்த பெண்ணிடம் பாலிஷ் போடலாமா என கேட்கும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்ததால் அந்த காட்சிகளை கொண்டு ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் டிப்டாப் ஆசாமிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
- செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
வடவள்ளி,
கோவை ஓனப்பாளையம் அடுத்த பூச்சியூரில் பூபதி ராஜா நகர் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியையொட்டி அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இந்த நிலம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் மது போதையில் அருகில் இருக்கும் வீடுகளின் கதவையும் தட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செடி, கொடிகளை அகற்றினர். இருப்பினும் சமூக விரோதிகள் இங்கு இரவு நேரங்களில் சுற்றி திரிவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே இந்த இடத்தை அரசு கையகப்படுத்தி தங்கள் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கலெக்டர், பேரூர் தாசில்தாரிடம் மனு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
- ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
- சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கடைவீதியில் செல்போன் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் சிவக்குமார் (வயது48). இவர் நேற்று முன்தினம் இரவு செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
உடனடியாக தனது கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார். அதில் மணல்மேடு மாதாகோவில் தெருவை சேர்ந்த நிலவழகன் (40) என்பவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து செல்போன்களை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து அவர் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளுடன் சென்று மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலவழகனை கைது செய்தனர்.
- கீழ மேட்டுப்பட்டியில் இருந்து திருவோணம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
திருவோணம்:
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள கீழமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி
பானுமதி (வயது 65). பன்னீர்செல்வம் ஏற்கனவே இறந்து விட்டார்.
இதனால் வறுமையில் வாடிய பானுமதி பிழைப்பிற்காக வீட்டில் பசுமாடுகள் வளர்த்து வருகிறார்.
தினமும் அதிகாலையில் மாட்டின் பாலை கறந்து இப்குதியில் உள்ள கடைகளுக்கு சென்று கொடுப்பது இவரது வழக்கம். வழக்கம் போல் இன்று காலையும் மாட்டின் பாலை கறந்து கடைக்கு கொடுப்பதற்காக கீழ மேட்டுப்பட்டியில் இருந்து திருவோணம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் பானுமதியை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இது குறித்து பானுமதி திருவோணம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் நகைபறிப்பில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் திருவோணம் பகுதியில் மோட்டார்சைக்கிள் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள்.
பரமத்திவேலுார்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வடகரையாத்தூர் ஊராட்சி கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 13-ந் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.
இதேபோல் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (வயது 60). இவரது விவசாய தோட்டம் ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் செல்லும் வழியில் விவசாய நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கரில் சுமார் 3,000 பாக்கு மரம் நடவு செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்து தோட்டத்துக்காரர் தங்கமுத்து அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது சவுந்தர்ராஜன் தோட்டத்தில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கமுத்து நிலத்தின் உரிமையாளர் சவுந்தர்ராஜனுக்கும், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள் மேலும் பாக்கு மரம் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றவர்களின் கால் தடத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஊர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றன. பாக்கு மரம் வெட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார், வருவாய்த்துறையினர் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை.
- லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.
பின்னர் இரவு வீட்டுக்கு வந்தபோது மாடியின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த 2 லேப்டாப்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப் பிரண்டு சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் அதேப்பகுதியை சேர்ந்த டேவிட் (25) என்பவர் பொருட்களை திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
காவேரிப்பாக்கம்:
பனப்பாக்கம் அருகே உள்ள துறையூர், உளியநல்லூர், சிறுவ ளையம், பொய்கைநல்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இவர்கள் வேலை முடிந்து திரும்பும்போது கம்பெனி பஸ்சில் இருந்து இறங்கி நள்ளிரவு 12 மணியளவில் பனப்பாக்கத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு செல்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 2 தொழிலாளர்கள் பனப் பாக்கத்திலிருந்து துறையூர் செல்லும்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து அவர்களிட மிருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி நேற்று வழிப் பறிநடந்த துறையூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்ப டுத்தவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
- கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறக்கப்பட்டிருந்தது.
- பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டி மேஜை காணாதது கண்டு திடுக்கிட்டார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60).
இவர் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே திட்டை செல்லும் சாலையில் அரிசி கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த சேகர் கடையினுள் சென்று பார்த்தபோது பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டி மேஜை காணாதது கண்டு திடுக்கிட்டார் .
அப்போது கல்லாப்பெட்டி மேஜை சுமார் 200 மீட்டர் தூரத்தில் எதிரே உள்ள கட்டுமான பணி நடைபெறும் கட்டடம் அருகே கிடந்தது.
உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.95 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து சேகர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டாஸ்மாக் கடையை பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.
- ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒக்கக்குடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் வியாபாரம் முடிந்த பின்னர் டாஸ்மாக் கடை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர்.
பின்னர் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
கல்லாப் பெட்டியில் இருந்த பணம், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பதறியடித்து கொண்டு சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
எவ்வளவு பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை போனது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அதன் பிறகே கொள்ளை போனவற்றின் மதிப்பு முழு அளவில் தெரிய வரும் .இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.
- மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.
இவரது மனைவி இந்திராணி (வயது 50).
நேற்று இரவு வீட்டில் இந்திராணி தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியை பிரித்துக் கொண்டு மூன்று மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். திடுக்கிட்டு எழுந்த இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.
இதையடுத்து அந்த மர்ம நபர்கள் கத்தி, கட்டையை காண்பித்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் எனக் கூறி மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் கத்தி முனையில் இந்திராணி, சுஷ்மிதா, ஸ்ருதி கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தனர்.
மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து இந்திராணி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
- அனுமதியின்றி சிலர் மரத்தை வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே சுங்கம் பகுதியில் நின்றிருந்த ராட்சத மரத்தை சிலர் உரிய அனுமதி பெறாமல் வெட்டி அகற்றியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உத்தரவின்பேரில் பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி ஆகியோர் நேரில் சென்று பார்ைவயிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று எருமாடு அருகே வெட்டுவாடியில் ராட்சத மரத்தை உரிய அனுமதியின்றி சிலர் வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.