என் மலர்
நீங்கள் தேடியது "Nutrition"
- இந்த இயக்கம் இன்று 50 ஆண்டுகளை கடந்து 51-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
- எடப்பாடி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் காந்தி தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க. அவைத்தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் துரை.செந்தில், தஞ்சை ஒன்றிய செயலாளர் நாகத்திகலியமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. பேச்சாளர்கள் நள்ளாற்று நடராஜன், மணிமுரசு, ருத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
உரிமையை பாதுகாத்தது
கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி- சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:- தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை தூக்கி எறிந்த போது அவர் அ.தி.மு.க.வை தொடங்கினார்.
அப்போது இந்த கட்சி 100 நாட்களை தாண்டுமா? என்று ஏளனம் பேசினர். ஆனால் இந்த இயக்கம் இன்று 50 ஆண்டுகளை கடந்து 51-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதில் 32 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில் தமிழர்களின் உரிமையை பாதுகாத்த, நிலை நாட்டிய கட்சி அ.தி.மு.க.. இந்த ஆட்சியில் தான் தமிழகத்தில் பேர் சொல்லும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
ஜெயலலிதா விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
ஆனால் தி.மு.க. ஆட்சி சொன்னதை கூட செய்யாத ஆட்சியாக உள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். கேட்டால் மத்திய அரசு மீது பழி போடுகிறார்கள்.
மக்களும் பயப்படுகிறார்கள்
தி.மு.க.வின் 16 மாத ஆட்சியில் எந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர் என்று கூற முடியுமா? ஆனால் காவிரி பிரச்சினையில் தொடர்ந்து பேராடியது அ.தி.மு.க. தான். ஆனால் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றவர் கருணாநிதி. உலகில் பெண்களுக்கு எந்த பிரச்சினை நடந்தாலும் உடனடியாக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியை பார்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் அல்ல, மக்களும் பயப்படுகிறார்கள்.
இனி எப்போதும், ஏன் நாளையே தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், சேகர், கோவிந்தராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் பாலை.ரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒரத்தநாடு நகர செயலாளர் கதிரேசன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, திராவிட நகர கூட்டுறவு வங்கி தலைவர் பஞ்சாபிகேசன், ஒரத்தநாடு ஐ.டி.விங்க் நகர செயலாளர் கதிரேசன் , மாவட்ட பொருளாளர் தம்பித்துரை, மாணவர் அணி முருகேசன், விளார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், கவுன்சிலர்கள் கோபால், யு.என்.கேசவன், காந்திமதி, தெட்சிணாமூர்த்தி, கலைவாணி சிவக்குமார்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் வக்கீல் சரவணன் நன்றி கூறினார்.
- வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.
- வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
நீடாமங்கலம்:
வேளாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குநர் குடவாசல் மற்றும்வ லங்கைமான் (பொ) கோ.ஜெயசீலன் லெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.
வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூல் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான் இன்றியமையாதது. நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள்நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால்,நாற்றங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும்.
துார் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரி க்கலாம் முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம் (அல்லது) நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.
நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால்ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன்18 கிலோ ஜிப்சம்4 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடன் வயலில் இட வேண்டும்.
போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்டபிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும்.
இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
குலைநோயின் சிறு புள்ளிகள் காணப்ப ட்டால் ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டசிம் பூசணக்கொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களைஅணுகி விபரம் தெரிந்து கொள்ளவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
- அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, வேளாண்மை அலுவலர் ரசிகப்பிரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபிநாத், சதீஸ்குமார், மாலதி, திலீப்குமார் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் ரமேஷ், கவிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் பிற விவசாயிகள் மூலம் காண்பிக்கப்பட்டது.
- கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூரில் வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் உத்தரவுபடி, விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் தென்னை மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசேரன் ஆகியோரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் தென்னை விவசாயிகள் ராஜேந்திரன், கண்ணன்சாமி ஆகியோரின் தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் மூலம் பிற விவசாயிகளை கொண்டு செய்து காண்பிக்கப்பட்டது.
தென்னை ஊட்டச்சத்து குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில்:-
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தென்னையை கைவிடாமல் இருக்க மண்ணின் வளம் குறையும் வகையில் தென்னையில் அதிக சத்து பற்றாக்குறை குறைந்து வருகிறது.
இதனால், தென்னை ஊட்டச்சத்து டானிக் தென்னை மர வேர் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் தென்னை டானிக்கை கலந்து 200 மில்லி பாலித்தீன் கவரில் ஒரு மரத்து வேரில் நுனியை சீவி விட்டு அதில் கட்டி வந்தால் மரத்திற்கு சத்து அதிகரித்து நல்ல காய்ப்பு தரும் என்றார்.
தென்னையில் மரம் ஏறும் கருவி குறித்து உதவி தொழில் நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்:-
இந்த கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது. தேங்காய் மேலிருந்து கீழே விழும் போது சேதம் ஏற்படாது, குறைந்த நேரத்தை பயன்படுத்தவும் மிக எளிய முறையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றார்.
இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- வேதாரண்யம் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரே சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- காலை உணவு திட்டத்தை தனியாரிடம் விடுவதை கைவிட்டு சத்துணவு அங்கன்வாடி பணியாளர் வைத்து நடத்த வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரே சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அங்கன்வாடிகளில்பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியுடன் ரூ 6,750 மாதந்திர சிறப்பு ஓய்வு ஊழியம் வழங்க வேண்டும் சத்துணவு அங்கன்வாடி பணியாற்றவர்களுக்கு காலம் வரை ஒன்றியத்தில் 50 சதவீதம் பணியாளர்களை நியமிக்க வேண்டும் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் விடுவதை கைவிட்டு சத்துணவு அங்கன்வாடி பணியாளர் வைத்து நடத்த வேண்டும்போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சத்துணவு அங்கன்வாடி பணியாளர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
- ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னையில் நடைபெற்ற “ஏற்றுமிகு ஏழு திட்டங்கள்” நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- சேலம், அய்யந்திரு மாளிகை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
சேலம்:
தமிழக அரசின் "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னையில் நடைபெற்ற "ஏற்றுமிகு ஏழு திட்டங்கள்" நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் 6 மாதம் முதல் 2 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஆகியோர்களுக்கு 8 வாரங்கள் சிறப்பு உணவாக, உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு அளிக்கவும், முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தி குழந்தைகளுக்கு தேவையான தாய்பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் வரையுள்ள 468 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும் தொகுப்பும், மிதமான எடை குறைவுள்ள 616 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1 ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 2,581 குழந்தைகளுக்கு தொகுப்பும் வழங்கப்படுகிறது.
சேலம், அய்யந்திரு மாளிகை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தக்கூடிய உணவு என்பது யுனிசெப் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட வழுவழுப்பான பசை (paste) போன்று இருக்கும் உணவுப் பொருளாகும். இதில், அரைத்த வேர்க்கடலை, பால் பவுடர், எண்ணெய், சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் மினரல் ஆகிய பொருட்கள் அடங்கி இருக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில், தாய்மார்களுக்கான சிறப்பு ஆரோக்கிய உணவுக் கலவை, இரும்புச் சத்து மருந்து, விதை நீக்கப்பட்ட பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, ஆவின் நெய் மற்றும் பருத்தி துண்டு ஆகியன அடங்கியிருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநகர் நல அலுவலர் யோகானந்த், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் பரிமளாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர்.ஸ்ரேயா பி தொடங்கி வைத்தார்.
- மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,227 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு வகைகள் வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், போதுப்பட்டியில் உள்ள குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர்.ஸ்ரேயா பி தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் கூறியதாவது:-
முதலமைச்சரின் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் பயனாளர்களான 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்க–ளும், 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதும், மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை–களுக்கு 8 வாரங்களுக்கு (56 நாட்களுக்கு) உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு போன்றவைகளை வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதாகும்.
நாமக்கல் மாவட்டத்தில் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 365 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 730 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 738 குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு 738 எண்ணிக்கை–யிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், மொத்தம் 1,468 ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட உள்ளது, மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,227 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு வகைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, போதுப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் போதுப்பட்டி, லக்கம்பா–ளையத்தில் உள்ள குழந்தை–கள் மையத்தை நேரில் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள் குழந்தைகளுக்கு வழங்கும் இணை உணவு, குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவின் தரம், குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்.
- தொழு நோயாளிகளுக்கு சுயஉதவி மருந்து பெட்டகம் மற்றும் காலணிகள்.
திருவோணம்:
திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் வட்டார சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஊரணிபுரம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ.எஸ்.பழனிமாணிக்கம், கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் , கண்ணொளி காப்போம் திட்ட மூலம் பள்ளி மாணவர்களுக்கு கண்ணாடி, தொழு நோயாளிகளுக்கு சுய உதவி மருந்து பெட்டகம் மற்றும் காலணிகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட சுகாதார துணை இயக்குனர் நமச்சிவாயம் திட்ட விளக்க உரையாற்றி பேசினார்.
முகாமில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருஞானசம்பந்தம், திருவோணம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், மருத்துவமி ல்லா மேற்பார்வையாளர், துரைராஜ், சுகாதார ஆய்வாளர் பஷீர்முகமது, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் திருவோணம் வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி நன்றி கூறினார்.
- கால்நடைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டது.
- யோகம் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் யோகம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கால்நடைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டது. இதில் செங்கப்படை, புதுக்கோட்டை, ஒ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு இயற்கை ஊட்டச்சத்து மாவை பெற்றுக்கொண்டனர். மேலும் இந்த மாவின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து, விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு யோகம் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார். தனியார் சோலார் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி ஜெனார்தனன், தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் யோகேஷ் மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதவள மேம்பாடு சபரீஷ், வழக்கறிஞர் அப்துல்சமதுசேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்
- பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பல்லடம்:
தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில பிரச்சார செயலாளர் பாஸ்கர் ஜோசப், ஊரக வளர்ச்சித் துறை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன், சாலை பணியாளர் சங்க மாநில நிர்வாகி ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் மாவட்ட தலைவராக தமிழரசன், செயலாளராக தேவி, பொருளாளராக பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஒன்றிய தலைவராக அக்கம்மாள், செயலாளராக ராமசாமி, பொருளாளராக ஜோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும், பதவி உயர்வு மற்றும் அரசு மானியத்தை அதிகப்படுத்தி தரவேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழா முடிவில் ஒன்றிய பொருளாளர் ஜோதி நன்றி கூறினார்.
- கொழுப்பே இல்லாத புரத உணவுகள் தான் லீன் புரோட்டின் என்று அழைக்கப்படுகின்றன.
- இந்த ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்போது தான் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன.
லீன் புரோட்டீன் உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் தசை வளர்ச்சியில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் தசையின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை எரிக்கவும் முடியும்.
புரத உணவுகள் எல்லாவற்றிலும் குறிப்பிட்ட அளவில் கொழுப்பும் இருக்கும். ஆனால் கொழுப்பே இல்லாத புரத உணவுகள் தான் லீன் புரோட்டின் (மெலிந்த உணவுகள்) என்று அழைக்கப்படுகின்றன. அதோடு மெலிந்த புரத உணவுகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொழுப்பை வேகமாக எரிக்கின்றன.
நம்முடைய உடலின் உள்ளுறுப்புகள் செயல்பாட்டுக்கும் செல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உடலுக்கு சீரான ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் தேவை.
இந்த ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்போது தான் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. அத்தகைய சிக்கலை சரிசெய்யும் வேலையை தான் இந்த லீன் புரோட்டீன் செய்கிறது. லீன் புரோட்டீன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடலில் உள்ள கொழுப்பையும் குறைக்க உதவி செய்யும்.
லீன் புரோட்டீன் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் உள்ளுறுப்பு கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் வேலையை செய்யும். பொதுவாக உள்ளுறுப்பு கொழுப்புகள் அவ்வளவு எளிதாகக் கரையாது. அதை கரைக்க இந்த மெலிந்த புரதங்களை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கெண்டால் டைப் 2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் போன்ற உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் அளவோடு எடுத்துக்கொண்டால் உடல் எடையையும் குறைக்கலாம். ஆரோக்கியமாகவும் வாழலாம்.
பயறு வகைகள்
பருப்பு மற்றும் பயறு வகைகளில் அதிக அளவில் புரதங்கள் இருக்கின்றன. 100 கிராம் பயறுகளில் கிட்டதட்ட 24 கிராம் அளவுக்கு புரதச்சத்துக்கள் கிடைக்கும். அதேசமயம் அவற்றில் கொழுப்பு 0 சதவீதம். அதனால் கொழுப்பு அதிகமுள்ள புரதங்களான இறைச்சியை எடுத்துக்கொள்வதை விட பயறு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
காய்கறி சாலட் போன்றவற்றில் வேகவைத்த அல்லது முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். அது சுவையையும் அதிகரிக்கும். வைட்டமின் தேவையையும் நிறைவு செய்யும்.
சோயா பீன்ஸ், கிட்னி பீன்ஸ், ராஜ்மா போன்ற பீன்ஸ் வகைகளில் அதிக அளவு மெலிந்த புரதங்கள் இருக்கின்றன. 100 கிராம் பீன்ஸ் வகைகளில் இருந்து 21 கிராம் அளவு புரதம் கிடைக்கும். ஆனால் இவற்றில் கொழுப்பு கிடையாது. ஜீரண ஆற்றலை மேம்படுத்த காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்த பீன்சை சேர்த்து சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையையும் குறைக்க உதவி செய்யும்.
கொண்டைக்கடலை நிறைய ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமாக அதிக அளவு புரதங்களைக் கொண்டிருக்கிறது. 100 கிராம் கொண்டைக்கடலையில் இருந்து 20 கிராம் அளவு புரதங்களை பெற முடியும். இதை உணவில் சூப், சுண்டல், சாலட் என பல வழிகளில் இந்த கொண்டைக்கடலையை உணவில் சேர்த்து்க் கொள்ளலாம்.
முந்திரி பருப்பை சூப்பர் ஃபுட்ஸ் என்று சொல்லுவோம். முந்திரியில் ஊட்டச்சத்துக்கள் மிக அதிக அளவில் கொண்டது. குறிப்பாக லீன் புரதங்கள் முந்திரியில் அதிகம். 100 கிராம் முந்திரியில் 25 கிராம் அளவு புரதங்கள் கிடைக்கும். ஆனால் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் குறைந்த அளவில் எல்டிஎல் கொலஸ்டிராலும் இருக்கிறது.
அவகேடோவில் 100 கிராமில் இருந்து வெறும் 2 கிராம் அளவு மட்டுமே புரதங்கள் கிடைக்கின்றது. ஆனால் இந்த அவகேடோவில் நிறைய கொழுப்பு அமிலங்களும் நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. தினசரி உணவில் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்யும்.
லீன் புரோட்டீன்களை உங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அதற்கு முட்டை ஒரு பெஸ்ட் சாய்ஸ். ஒரு வேகவைத்த முழு முட்டையில் 6 கிராம் அளவு புரதங்களும் 70 கலோரிகளும் இருக்கின்றன. அதில் பெரும்பகுதி புரதம் முட்டையின் வெள்ளைப் பகுதியி்ல இருந்து தான் கிடைக்கிறது. கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்துவிடலாம். ஆனால் சிறப்பான புரதங்கள் நிறைந்த காலை உணவிற்கு முட்டையைத் தேர்வு செய்யுங்கள். எடையும் குறையும். ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
வால்நட்டில் புரதங்கள் அதிகம். அதோடு ஊட்டச்சத்து மதிப்புகளும் அதிகமாக இருக்கின்றன. புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்கு கிடைக்க வால்நட் மிகச்சிறப்பாக உதவி செய்யும். இதனால் ஆரோக்கியமான முறையில் எடையையும் குறைக்கலாம். 100 கிராம் அளவு வால்நட்டில் 15 கிராம் அளவு புரதங்கள் நிறைந்திருக்கிறது. இது ஜீரண ஆற்றலை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
100 கிராம் அளவு சோயா மாவில் இருந்து மட்டும் கிட்டதட்ட 35 கிராம் அளவுக்கு மெலிந்த புரதங்களும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பல வழிகளில் தங்களுடைய டயட்டில் சோயாவை சேர்த்துக் கொள்ள முடியும். சோயா எண்ணெய், சோயா பீன்ஸ் சுண்டல், டோஃபு, சோயா சங்க் மசாலா, சோயா சாலட் என தினமும் வெவ்வேறு வகைகளில் சோயாவை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக விதைகளை நாம் சூப்பர் ஃபுட்ஸ் என்று சொல்லுவோம். அதில் முதன்மையானது இந்த பூசணி விதை. பூசணி விதையில் 100 கிராம் உலர்ந்த விதையில் 24 கிராம் அளவுக்கு புரதங்கள் இருக்கின்றன. இவற்றிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சரும செல்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும்.
- குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக வளர புரதச்சத்து மிக முக்கியம்.
- ஹோம்மேட் செர்லாக் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகளை தருகிறது.
பெரும்பாலான தாய்மார்களுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு என்ன தர வேண்டும் என்பதில் எப்போதும் குழப்பமே. 6 மாதத்துக்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்த உணவு எதுவும் இல்லை. சில குழந்தைகள் 5 மாத முடிந்த உடனே திட உணவுக்குத் தயாராகி விடுவார்கள். ஆனால், திட உணவுக்கு குழந்தைகள் தயாரா என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம்.
6 மாத குழந்தைக்கு தாய் பால் அவசியம். உங்கள் குழந்தை 6 வது மாதத்தை நிறைவு செய்யும் போது பெரும்பாலான உணவு வகைகள் குழந்தைக்கு அறிமுகமாகியிருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பல்வேறு புதுவித உணவுகளை கொடுக்க வேண்டியது கட்டாயம்.
குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக வளர புரதச்சத்து மிக முக்கியம். ஆறு மாதம் முடிந்து ஏழாவது மாதம் தொடங்கும் போது கேழ்வரகு கஞ்சி கொடுக்க தொடங்கலாம். அதுவும், நன்கு அரைக்கப்பட்ட மாவை பயன்படுத்தி ஒரு டீஸ்பூன் மாவுக்கு மூன்று டீஸ்பூன் தண்ணீரை கலந்து ஒரு வேளை கொடுக்க தொடங்க வேண்டும். பிறகு அந்த உணவு குழந்தைக்கு செட் ஆக சிறிது நாட்கள் எடுக்கும். அது செட் ஆக ஆக அளவை அதிகரிக்கலாம்.
செரலாக் தினமும் ஒரு வேளை கொடுக்கலாம். படிப்படியாக இரண்டு வேளையும் சேர்க்கலாம். இதையே குழந்தைக்கான திட உணவு கொடுக்கும் போது வேக வைத்தும் கொடுக்கலாம். புரதம் நிறைந்த இந்த ஹோம்மேட் செர்லாக் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளையும் கொண்டிருக்கிறது என்பதை குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் அறிய முடியும். அத்தகைய செரலாக் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி- 1/2 கிலோ
உடைத்த கோதுமை- 100 கிராம்
பாசிபருப்பு- 10 கிராம்
கருப்பு உளுந்து- 10 கிராம்
மைசூர் பருப்பு- 10 கிராம்
கொள்ளு- 10 கிராம்
பாதாம்- 10
செய்முறை:
அரிசியை ஒருமுறைக்கு இருமுறை நன்றாக அலசி அதனை ஒரு வெள்ளை துணியில் போட்டு ஈரம் போகும் வரை நிழலில் உலர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் மேலே கொடுக்கப்பட்டுள்ள அரிசி தவிர மற்ற பொருட்களையும் நீரில் நன்றாக அலசி அதனையும் தனியாக ஒரு துணியில் கொட்டி நிழலில் உலர வைக்க வேண்டும்.
உலர்ந்த அரியை ஒரு கடாயில் சேர்த்து நன்றாக (நிறம் மாறாமல்) வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று மற்ற பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக பொடித்து அதனை ஜல்லடை கொண்டு சலித்து எடுத்துகொள்ள வேண்டும். இந்த கலவையுடன் சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். 6 மாதம் வரை இந்த பொடியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். கெட்டுப்போகாது.
இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதனை ஒரு டம்ளர் நீர் அல்லது பாலில் கட்டி இல்லாமல் கலந்து அந்த கலவையை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இதனை கட்டிபடாமல் அடுப்பை மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரை கிளிறிக்கொண்டே இருக்க வேண்டும். கூழ் வடிவத்திற்கு இந்த கலவை வந்ததும் தீயை அணைத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சூடு ஆறியதும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முதலில் குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.