என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man"

    • மனநிலை பாதித்து சுற்றி திரிந்த முதியவரை முசிறி காவல்துறையினர் உறவினரிடம் ஒப்படைத்தனர்
    • இதன் விளைவாக கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக சீலா காணவில்லை என்று உறவினர்கள் புகார் கொடுத்துள்ளது தெரியவந்தது

    முசிறி:

    திருச்சி முசிறி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சீலா(61) என்ற முதியவர் சுற்றி திரிந்து வந்தார். இதனை கண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அவரை பாதுகாப்பாக காப்பகத்தில் ஒப்படைக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதன் காரணமாக முசிறி போலீசார் அவரை காப்பகத்திற்கு அைழத்து சென்றனர். ஆனால் காப்பகத்திலோ உறவினர்கள் யாரேனும் இருந்தால்தான் சேர்த்துக்கொள்வோம் என்று கூறினர். இதனை தொடர்ந்து முதியவர் குறித்த விவரங்களை பல காவல் நிலையத்திற்கு முசிறி போலீசார் அனுப்பி வைத்தனர். இதன் விளைவாக கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக சீலா காணவில்லை என்று உறவினர்கள் புகார் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து புகார் அளித்த பசுபதிபாளையம் ஏ.வி.ஆர்.நகரை சேர்ந்த சகாயதாஸ் என்பவரை தொடர்பு கொண்டதோடு, முதியவரை அங்கு அழைத்து சென்று காவலர் பாலாஜி ஒப்படைத்தார். இது முசிறி போலீசாருக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.





    • ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாமணி கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் மயங்கி கிடந்தார்.
    • அக்கம்பக்கத்தினர் மகாமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் காவேரி ஆர்.எஸ்.ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாமணி (70). இவர் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் மயங்கி கிடந்தார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மகாமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 55 வயது மதிக்க த்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • அந்த நபர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது

    ஈரோடு,

    ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புகளூர்- கொடு முடி ரெயில் நிலையங்களு க்கிடையே நொய்யல் ரெயிவே பாலத்தில் சம்பவ த்தன்று 55 வயது மதிக்க த்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    அந்த முதியவரிடம் இருந்த பேப்பரில் மனைவி பெயர் சித்ரா, மகன்கள் பூபதி, பாலமுருகன் மகள்கள் மோனிகா, யாஷிகா என பெயர் எழுதி இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் அந்த நபர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
    • நாமக்கல் செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ராமசாமி மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவர் நாமக்கலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 7-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சிங்கிலிபட்டி பெட்ரோல் பங்க் எதிரே, திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ராமசாமி மீது மோதியது.

    இதில் ராமசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி நாமக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய திருமலைப்பட்டியைச் சேர்ந்த சங்கித்ராம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கிருஷ்ணன் தனது வீட்டுக்கு அருகே உள்ள குளத்துகரையில் பன்றிகள் வளர்த்து வருகிறார்.
    • ஐகோர்ட் ராஜா, கிருஷ்ணனிடம் பன்றி வளர்க்கும் இடத்தை காலி செய்யும்படி கூறியுள்ளார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள கிருஷ்ணன்புதூர், அரசன்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 83). இவர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்துகரையில் பன்றிகள் வளர்த்து வருகிறார். நாங்குநேரி தேரடி தெருவை சேர்ந்த ஐகோர்ட் ராஜா என்பவர் கிருஷ்ணனிடம் சென்று அவர் பன்றி வளர்க்கும் இடம் தனக்கு சொந்தமானது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று கிருஷ்ணன் நாங்குநேரியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஐகோர்ட் ராஜா அவரிடம் பன்றி வளர்க்கும் இடத்தை காலி செய்யும்படி கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஐகோர்ட் ராஜா, கிருஷ்ணனை கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த கிருஷ்ணன் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக ஐகோர்ட் ராஜாவை தேடி வருகின்றனர்.

    • தண்டபாணி வீட்டில் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு கொண்டார்.
    • இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, நசியனூர் ரோடு, காந்திஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (77). ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை ஊழியர். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்றில் அதிக வலி ஏற்பட்டதால் மனம் உடைந்த தண்டபாணி வீட்டில் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு கொண்டார்.

    அதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே தண்டபாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனை வளாகத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அந்த முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    தஞ்சாவூர் பூதலூர் காங்கேயர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 70). இவர், வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து முத்துகிருஷ்ணனின் மகன் செந்தில்குமார் (43) பூதலூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சுப்பிரமணி சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டின் முன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள சுண்டப்பாளை யம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (58). இவரு க்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் சுப்பிரமணி யத்துக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் சுப்பிர மணியம் தொடர்ந்து மது அருந்தி வந்தார்.

    இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்து உள்ளார். ஆனால், நோய் குணமாகாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டின் முன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.

    இதை கண்ட அவரது மகன் நாகராஜன் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது மகன் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம்- திருவிடைமருதூர் இடையே பனந்தோப்பு பகுதியில் செல்லும் ரெயில் தண்டவாளத்தில் நேற்று மதியம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி கும்பகோணம் ரெயில்வே போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    • சின்னசாமி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார்.
    • இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி வி.ஓ.சி வீதி யை சேர்ந்தவர் சின்னசாமி (63). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கட்டிட கூலி தொழிலாளி யான சின்னசாமி தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கள்ளி ப்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவிழா நடந்தது. இந்த விழாவுக்கு சின்னச்சாமி சென்று விட்டு வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கும் அந்த வழியாக வந்த 5 பேருக்கும் தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து 2 தர ப்பினரும் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை சின்னசாமி தனது மகன் ரவியிடம் போலீஸ் நிலை யத்திற்கு செல்ல வேண்டும் என கூறி வந்ததாக தெரி கிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் சின்னசாமி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார். இது பற்றி தகவல் கிடைத்தும் அவரது மகன் ரவி வீட்டுக்கு சென்று பார்த்தார்.

    அப்போது சின்னசாமி தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடை ந்தார்.

    இதையடுத்து உடனடி யாக அவரது மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் சின்ன சாமியை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து சின்னசாமி உடல் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    சின்னசாமி போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவில்லை.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார்
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள எலவமலை சென்ன நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மாரசாமி (72). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னம்மாள் (60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவரும் தங்களது மூத்த மகன் சரவணனுடன் வசித்து வந்தனர். மாரசாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 2 வருடங்களாக மாரசாமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வலி அதிகரித்து காணப்பட்டதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

    ஆனால் அவரது நோய் தீராததால் கடும் அவதிக்குள்ளாகி வந்த மாரசாமி தன்னால் வலி தாங்க முடிய வில்லை என குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று வழக்கம் போல அனைவரும் வேலை க்கு சென்று விட்டனர். மாலை யில் அனைவரும் வீடு திரும்பிய போது தங்களது தோட்டத்தில் மாரசாமியின் சைக்கிள் நிறுத்தியிருப்பதை பார்த்து அங்கு சென்று பார்த்துள்ள னர்.

    அப்போது அங்குள்ள தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார். அவரிடமி ருந்து பூச்சிக் கொல்லி மருந்து (விஷம்) வாடை வீசியுள்ளது.

    உடனடியாக அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை க்கு பின் உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    ×