என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opening"

    • புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவடடம், தா.பழூர் கிராமத்தில் பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. ெஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர் குடும்ப அட்டைதாருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

    இந் நிகழ்ச்சியில் கூட்டுறவு துணைப் பதிவாளர் அறபளி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர் சசிகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், ஊராட்சித் தலைவர் கதிர்வேல், கூட்டுறவு சங்கத் தலைவர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
    • இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் தலைவர் வளர்மதி குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி யூனியன் கேசம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் தலைவர் வளர்மதி குணசேகரன், முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், முன்னாள் துணை தலைவர் குலோத்துங்கன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், கேசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ராஜா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிடாரிப்பட்டி சுரேஷ், கொட்டாம்பட்டி யூனியன் என்ஜினீயர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்தார்.
    • நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது.

    கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்து பேசினார்.

    இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் முகமது சர்வத்கான், கிருஷ்ணகுமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, மாநில ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவி ந்தன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் உமர் முகமத், நாகை பாராளுமன்ற பொறுப்பாளர் அப்பு அகஸ்டீன் அற்புதராஜ், மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட பொருளாளர் அலாவூதீன், தொகுதி தலைவர் பிஸ்மி கார்த்திக், செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், கமலகண்ணன், ஒன்றிய தலைவர்கள் சந்திரமோகன், மதன் குமார், பொருளாளர் ராஜா, நகர தலைவர் மகேஷ்குமார், நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • இன்று விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அந்த நீரோடை வாய்க்காலுக்கு மலர் தூவி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
    • வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மலர் தூவி வரவேற்ற விவசாயிகள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக வரவேற்பும் நன்றியும் தெரிவித்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது வசிஷ்ட நதி. இந்த நதிக்கு கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நீர் வசிஷ்ட நதி வழியாக கடலூர் மாவட்டத்தை சென்றடைகிறது. இதனால் வழியெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில காலமாக மழை இல்லாததால் வசிஷ்ட நதி வறண்டு காணப்பட்டது.

    கைக்கான் வளவு திட்டம்

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கருமத்துறை கைக்கான் வளவு பகுதியில் இருந்து நீரை வாய்க்கால் மூலமாக கரிய கோயில் நீர் தேக்கத்திற்கு கொண்டு வந்து, அதன் பிறகு அந்த நீரை வசிஷ்ட நதியில் கொண்டு செல்ல புதிய திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு ரூ.7 1/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இத்திட்டம் விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்போடும், ஒத்துழைப்போடும் செயல்ப டுத்தப்பட்டு உள்ளது.

    பொங்கலிட்டு வழிபாடு

    இதையடுத்து, இன்று விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏராள மானோர் கலந்து கொண்டு அந்த நீரோடை வாய்க்காலுக்கு மலர் தூவி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அகில பாரதிய சந்த் சமிதி மாநில தலைவர் யுக தர்ம குரு கருடானந்த மகராஜ் சுவாமிகள் கற்பூர தீபத்தை உள்ளே இறங்கி வழிபாடு நடத்தினார்.

    இதுகுறித்து தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் இந்த திட்டத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். விவசாயிகள் நலன் கருதி, இந்த திட்டத்தை அறிவித்து அதனை முழுமையாக செயல்படுத்தி உள்ளார் என்றார்.

    விவசாயிகள் நன்றி

    இந்த நிகழ்ச்சிக்கு ஆத்தூர் ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ, ஏற்காடு சித்ரா எம்.எல்.ஏ, கெங்கவல்லி நல்லதம்பி எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜன், நரசிங்கபுரம் நகர மன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் வெங்கடாஜலம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சின்னத்தம்பி, பெத்தநா யக்கன்பாளையம் ஒன்றிய குழு துணை தலைவர் முருகேசன், பெத்தநாயக்கன்பாளையம் அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வாசுதேவன், தகவல் பிரிவு மாவட்டச் செயலா ளர் ஜெயகாந்தன் மற்றும் இந்த தண்ணீரை பயன்படுத்தும் ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மலர் தூவி வரவேற்ற விவசாயிகள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக வரவேற்பும் நன்றியும் தெரிவித்தனர்.

    • புதிய துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது
    • மருதங்கோண் விடுதியில் கட்டி முடிக்கப்பட்ட

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். அந்த வகையில் மறமடக்கியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மருதங்கோண்விடுதயில் கட்டி முடிக்கப்பட்டு இருந்த துணை சுகாதார நிலையத்தை அங்கிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சுகாதார நிலையத்தின் சாவினை மருத்துவரிடம் வழங்கினார்.

    மருதங்கோண் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் மாலாராஜேந்திரதுரை கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் பாப்பாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் கார்த்திகா, ஹெல்த் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிங்காரவேலு, ஊராட்சி மன்ற தலைவர் நிலோபர் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் விஜயா பூபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் திருநாவுக்கரசு, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, ரஞ்சனி , அன்பழகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சாகுல் ஹமீது, நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் அரங்கதங்கமணி நன்றி கூறினார்.

    • கொரடாச்சேரி ஒன்றியத்தில் பொது விநியோக திட்ட கட்டிடம் ஆகியவைகளை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • பெருந்தரக்குடி ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் பொது விநியோக திட்ட கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரடாச்சேரி ஒன்றியம், இலையூர் ஊராட்சி, அடவங்குடியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம், கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூர் ஊராட்சி, கட்டளையில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம் ஆகியவைகளை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    விழாவில் கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர்சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன், ஒன்றிய பொறியாளர் ரவீந்திரன், கொரடாச்சேரி பேரூர் தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவேந்தன், ஊராட்சி தலைவர்கள் இலையூர் காமராஜ், கரையாபாலையூர் மீனா கல்யாணசுந்தரம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெருந்தரக்குடி ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் பொது விநியோக திட்ட கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் மதிப்பில் அபிவிர்தீஸ்வரம் மையத்தான் கொல்லையில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    ரூ.60 ஆயிரம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.

    கொரடாச்சேரி ஒன்றியத்தில் மட்டும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.75.45 லட்சம் மதிப்பில் பணிகள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

    திருச்சி

    திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார். திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி 3-வது மண்டலக்குழுத்தலைவரும், 16-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான மதிவாணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாவட்ட துணை செயலாளர் அ.த.த.செங்குட்டுவன், உதவி ஆணையர் தயாநிதி, வன்னை அரங்கநாதன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், கவுன்சிலர் கோவிந்தராஜன், மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

    • தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு, தருவைக்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்கள், ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்புகளை ஆகிய புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
    • சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார வளாகத்தில் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி புதிய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

    புதியம்புத்தூர்:

    தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு, தருவைக்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்கள், ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்புகளை ஆகிய புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார வளாகத்தில் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி புதிய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, உதவி பொறியாளர் பொதுப்பணித்துறை அன்புராஜ், மருத்துவ அலுவலர் நியாஸ், சித்த மருத்துவர் ஸ்ரீதேவி, சுகாதார ஆய்வாளர் காளிமுத்து, ஹரி பாலகிருஷ்ணன், ஒட்டநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா, ஒட்டநத்தம் கிளை செயலாளர், கொண்டல் சுப்பையா, மகளிரணி காமினி, கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், ஊரக வளர்ச்சித் துறை பயிற்றுநர் அதிசயமணி, மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும்.

    சேலம்:

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பெருமாள் கோவில்க ளில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் முக்கிய மான நிகழ்ச்சியாக மார்கழி

    மாத வளர்பிறை ஏகாதசி திதி அன்று "சொர்க்க வாசல்" என்று அழைக்கப்ப டும் பரமபத வாசல் திறக்கப்படும். இந்த சொர்க்கவாசல் வழியே அன்றைய தினம் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதன்படி சேலம் மாநகரில் கோட்டை பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று

    அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு உற்சவம்வி மரிசையாக நடைபெற்றது.

    சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிக்காக, அழகிரிநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. சரியாக அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிரி நாத பெருமாள் "பரமபத வாசல்" என்றழைக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா" என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள். சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    விழாவை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் மூலவர் அழகிரிநாதபெருமாள், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கிருஷ்ணர், விஷ்ணுதுர்க்கை சன்னதி களில் மூலவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சொர்க்கவாசல் திறப்பை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு கோவிலுக்கு வந்து காத்திருந்தனர். சேலம் மாநகரில் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளி களுக்கும், முதியவர்க ளுக்கும் சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுதர்சன பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், துணை கமிஷனர் லாவண்யா இந்து அறநிலையத்துறை அதி காரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் "இராப்பத்து" உற்சவமும் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின்போது தினமும் இரவு 8 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், இரவு 8.30 மணிக்கு திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் உற்சவமும் நடைபெறுகிறது.

    பட்டை கோவில்

    இதேபோல் சேலம் டவுன் பட்டைக்கோவிலில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு

    சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்த னர். மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பட்டைக்கோவில் அருகே

    உள்ள ஆஞ்சநேயர் சன்னதி யில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி மூலவர், பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. அங்கும் காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மாப்பேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், சேலம் 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசுவாமி கோவில், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், பிருந்தாவன் ரோட்டில் உள்ள வெங்கடா

    சலபதி கோவில், மகேந்திர புரியில் உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள்

    கோவில்களிலும் இன்று அதிகாலை வைகுண்ட ஏகா தசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    • வருகிற 12-ந் தேதி கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி.
    • 13-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது.

    தொடர்ந்து வருகிற 12-ந் தேதி கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியும், 13-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    விழா நாட்களில் வேதாரண்யம் கோவில் ஆதீன வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெறும்.

    • முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.
    • சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் : 

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் சுமாா் 11 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களை கொண்ட 10 வகுப்பறைகளும், எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.3 கோடியே 74 லட்சம் மதிப்பில் சுமாா் 24 ஆயிரம் சதுர அடியில் 5 தளங்களை கொண்ட 18 வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன.முன்னதாக திருப்பூா் சிக்கண்ணா மற்றும் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக்கல்லூரிகளில் நடைபெற்ற திறப்பு விழாவில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்பு
    • கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன் பெற அழைப்பு

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் படி கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனுமான வி.முத்துகிருஷ்ணன் திறந்து வைத்து பேசுகையில், இப்பகுதி விவசாயிகள் கோரிக்கையின் படி கலெக்டரிடம் அனுமதி பெற்று இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு அரசுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    ×