என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Park"

    • திருச்சியில் திறந்தவெளி பயிற்சி மையமாக மாநகராட்சி பூங்கா மாறியது
    • மாணவர்கள் நலனுக்காக இரவு 8 மணி வரை திறக்கப்படுகிறது

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பிர–தான அலுவலகம் முன்பு பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்தப்பூங்கா கடந்த ஆண்டு வரை மதிய உணவு சாப்பிடும் நபர்களுக்கு மட்டுமே அடைக்கலம் தந்தது. சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டு சுவர்கள், புதர்மண்டி கிடந்த செடி, கொடிகளால் வெளி நபர்கள் யாரும் அதிகம் உள்ளே செல்வதில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மாநக–ராட்சி நிர்வாகம் ரூ.30 லட்சம் செலவில் அந்தப் பூங்காவை அழகுபடுத்தியது. பூங்காவின் நான்கு திசை–களில் இருந்து யார் பார்த்தாலும் பூங்காவுக்குள் இருக்கும் நபர்களை பார்க்க இயலும்.

    அந்த அளவுக்கு காம்பவுண்டு சுவர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. பளிங்கு கற்களால் புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டது. நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு வாக்கிங் டிராக் புதிதாக போடப்பட்டது. இதனால் இப்போது வெகுஜன மக்கள் இந்த பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர். காலை மற்றும் மாலையில் சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.இந்த நிலையில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை பூங்கா பெரிதும் கவர்ந்துள்ளது. சமீபகாலமாக அவர்களின் திறந்தவெளி பயிற்சி மைய–மாக இந்த பூங்கா மாறி உள்ளது.

    அந்த பகுதியில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் பயி–லும் மாணவ-மாணவி–கள் குரூப்பாக உட்கார்ந்து கல்வி பயில்கிறார்கள். மாணவர்கள் ஒருவருக் கொருவர் கலந்துரையாடி வட்டமாக உட்கார்ந்து குறிப்பு எடுத்துக் கொள்கி–றார்கள். யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., வங்கி தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்கள் தினமும் இந்த பூங்காவில் உட்கார்ந்து படிக்கிறார்கள். இது பற்றி மாணவர்கள் கூறும்போது, மரங்களின் நிழலில் காற்றோட்டமாக விசாலமாக அமர்ந்து கல்வி பயில ஏதுவாக பூங்கா இருப்பதால் இங்கு வருகிறோம். சில நேரங்க–ளில் மதிய உணவும் இங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு மாலை வரை படிக்கின்றோம்.

    குரூப் ஸ்டடிக்கு தகுந்த இடமாக உள்ளது என்றனர். இது தொடர்பாக மாநக–ராட்சி மேயர் மு.அன்பழகன் கூறும்போது, பூங்காவில் மாணவர்கள் கல்வி பயில்வது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் வச–திக்காக கூடுதல் நேரம் திறக்க பணியாளர்களை அறிவுறுத்தி உள்ளேன். காலையிலும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வசதியாக காலை ஆறு மணிக்கு 6 திறக்கப்படுவதோடு, இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றார். காம்பவுண்ட் சுவர்க–ளின் உயரம் குறைக்கப் பட்டு புதர்கள் அகற்றப் பட்டதால் காதல் ஜோடிக–ளின் அட்டகாசம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுவே அனைத்து தரப்பினரை–யும் அந்த பூங்கா–வுக்கு ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது.
    • பூங்கா அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    ஊட்டி,

    கூடலூா் மாா்த்தோமா நகரில் பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.கூடலூா் நகா் 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. தென் மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கூடலூா் வழியாகத்தான் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

    இதற்காக இயற்கை சுற்றுலாவுடன் கூடிய பூங்கா அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கூடலூா்-மைசூா் சாலையிலுள்ள மாா்த்தோமா நகரில் இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால் பூங்கா அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    தொடா்ந்து நகா் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தியதன் பேரில் கோட்டாட்சியா் இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கூடலூா் வட்டாட்சியா் சித்தராஜ் மற்றும் வருவாய்த் துறையினா், நகா் மன்ற உறுப்பினா்கள் வெண்ணிலா சேகா், உஸ்மான், வா்கீஸ், தனலட்சுமி, ஆபிதா பேகம், சத்தீயசீலன் உள்ளிட்டோரும் சென்று பாா்வைட்டனா்.

    • சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன.
    • குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 112 பணிகள் எடுக்கப்பட்டு அதில் 92 பணிகள் முடிந்துள்ளது. மீதம் 20 பணிகள் நடந்து வருகிறது. 4 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். கடன் இல்லா மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி விளங்குகிறது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது .

    தஞ்சையில் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நவீன எந்திரங்கள் மூலம் சாலைகள் சுத்தப்படுத்தப்படுகிறது .

    சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன. இன்னும் 3 மாதத்தில் சிவகங்கை பூங்கா திறக்கப்படும்.

    முதலாம் ஆண்டு நிறைவடைந்து தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். வளர்ச்சியை நோக்கி தான் அனைத்து பணிகளும் இருக்கும். ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது .

    10 ஏக்கர் அளவில் சுத்தப்படுத்தப்பட்டு விட்டன. குப்பை கிடங்கு முழுவதுமாக அகற்றப்பட்ட பிறகு 10 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்பும், 10 ஏக்கரில் யாத்ரி நிவாஸ் கட்டப்படும். பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு இந்த யாத்ரி நிவாஸ் பயனுள்ளதாக இருக்கும்.

    நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டில் 51 வார்டுகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினோம். அவற்றின் அடிப்படையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ரூ.1112 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அமைச்சர் கே. என். நேருவிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் மக்களோடு மேயர் என்ற தலைப்பில் மக்களை சந்திக்க உள்ளோம்.

    திருவையாறு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பள்ளி அருகே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரிய அளவில் வாகன பார்க்கிங் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவிலை சுற்றி பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இருக்காது .

    புதிய பஸ் நிலைய புனரமைப்புக்காக ரூ.50 கோடி, மீன் மார்க்கெட் கட்ட ரூ.35 கோடி, சீனிவாசபுரம் - டி.பி.எஸ். நகரை இணைக்கும் வகையில் ரூ.120 கோடியில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 17 மாநகராட்சி பள்ளிகளில் சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்.

    தஞ்சை மாநகராட்சியில் குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. 30 எம்.எல்.டி தண்ணீர் தான் தேவை. ஆனால் 60 எம்.எல்.டி தண்ணீர் வரப்போகிறது. இதை தவிர விளார், மாரியம்மன் கோவில், நாஞ்சிக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்பட 13 ஊராட்சிகள் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணையப் போகிறது. அப்படி இணையும் போதும் தண்ணீர் பிரச்சனை இருக்காது.

    வருகிற 8-ந்தேதி தஞ்சாவூர் ெரயில்வே நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளோம். தஞ்சையில் இன்னும் 6 மாதத்தில் விமான சேவை தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார்.
    • தடை செய்யப்பட்ட பகுதிக்கு ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை அழைத்து சென்றுள்ளார்.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார். மேலும் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார். அந்த பூங்கா பகுதியில் நாயை அழைத்து வர தடை உள்ளது. ஆனால் அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், விதியை நினைவுப்படுத்தினார். இதையடுத்து நாய் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ரிஷி சுனக் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    ஏற்கனவே அவர் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது ஆகிய சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி, சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரக் கன்றுகள் நடப்பட்டது.
    • அம்பேத்கார் நகர் பகுதியில் நடைபெற்று கொண்டு இருக்கும் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி,கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால், அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவோம் என்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி, சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரக் கன்றுகள் நடப்பட்டது.

    இதில் மேயர் ஜெகன் பெரியசாமி,கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அம்பேத்கார் நகர் பகுதியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான பொழுது போக்குவதற்கான இடமாகவும் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் பூங்காவினை மேயர் ஜெகன் பெரிய சாமி,கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், இங்கு நடைபெற்று வரும் பணிகள் விரைந்து முடிக்கப் பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் இந்தப் பூங்கா திறக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.

    • புதிதாக கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கட்டிட கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு நடத்தினோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டுக்கோட்டை நகராட்சி காசாங்குளம் பகுதியில் நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கட்டிட கட்டுமான பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    பின்னர் லெட்சதோப்பு மற்றும் கரிக்காடு பகுதியில் நகராட்சி சார்பில் புதிதாக நடைபாதையுடன் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு நடத்தினோம்.

    இதையடுத்து நாடியம்மன் ராமசாமி குளம், உத்தண்டி குளம் மற்றும் கோட்டைகுளம் நகராட்சி சார்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்தும், நாடியம்மன் கோவில் குளம் நகராட்சி சார்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், என் .ஜி. ஓ காலனியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பட்டுக்கேட்டை நகர மன்ற தலைவர் சண்முகப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூரில் ஒரு தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கித் தர வேண்டும்.
    • கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும்

    கடலூர்:

    தமிழக சட்ட சபையில் கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் பேசியதாவது:-

    கடலூரில் ஒரு தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கித் தர வேண்டும். கடலூரில், தடைப்பட்ட கப்பல் போக்குவரத்து மீண்டும் நடைபெற ஆவண செய்ய வேண்டும். சென்னை-கடலூர் ெரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும். ங்கனாங்குப்பம், உச்சிமேடு, முதல் குண்டு உப்பலவாடி இடையே பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைக்க வேண்டும். கடலூர் புதுப்பாளையம் - ஓட்டல் தேவி வரை போக்குவரத்துக் கழகத்தை இணைக்கும் விதமாக கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும். பெண்ணையாறு - கெடிலம் மலட்டாறு போன்ற ஆறுகள் கடலில் கலக்கும் இடமாக கடலூர் உள்ளதால் குறைந்தது கடலிலிருந்து 10 கி.மீ. தூரத்திற்குள்ளாவது ஆற்றின் கரைகளை பலப்படுத்தி ,தேவைப்படும் இடங்களில் சிமெண்ட் சுவர் அமைத்துத் தர வேண்டும். கெடிலம் ஆற்றில் கடலூர் நகரப் பகுதி - கம்மியம்பேட்டை முதல் சாவடி வரை இரண்டு கரைகளையும் பலப்படுத்தி, சுமார் 2 கி.மீ. வரை சாலை அமைத்து, பஸ்பேக்குவத்தைக் தொடர்வசதி செய்து தர வேண்டும். கடலூர் சில்வர் கடற்கரையை சுற்றுலாத் தலமாக ஆக்கிட வேண்டும். செம்மண்டலம் மாதா கோயில் அருகே சுற்றுவட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் பகுதியில், நவீன வசதிகளுடன் வணிக வளாகம் அமைத்துத் தர வேண்டும். பெண்ணையாற்றின் குறுக்கே - வெள்ளப்பாக்கம் - அழகியநத்தம் ஆகிய இடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும். கடலூர் அரசு பெரியார் கல்லூரியில், புதிய பாடப்பிரிவுகள் எம்.எஸ்.சி (மைக்ரோ பயாலஜி), பி.எஸ்.சி (பயோ டெக்னாலஜி) (பயோ கெமிஸ்ட்ரி) போன்ற புதிய பாடப் பிரிவுகளில் பயிலும் வகையில் புதிய வகுப்புகள் தொடங்க வேண்டும். கடலூர் தேவனாம்பட்டினம் , துறைமுகம் பகுதியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் வகையில் 17-ம் நூற்றாண்டில் சுரங்கப்பாதை இருந்ததாக தெரிய வருகிறது. சிதலமடைந்த மாளிகையை, கட்டிடங்களை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தி புதுப்பித்து சீரமைத்து அழகுப்படுத்தி சுற்றுலாத்தலமாக அமைத்து தர வேண்டும்.கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி ஆகியவற்றில் தூண்டில் வளைவு ஏற்படுத்தி, மீனவப் மக்களைப் பாதுகாத்திட ஆவண செய்ய வேண்டும். நாணமேடு, உச்சிமேடு, பகுதியில் குளிர்ப்பதனக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும். 2009- ம் ஆண்டு தொடங்கப்பட்ட, பாதாள சாக்கடைத் திட்டத்தை முடித்திட வேண்டும். கடலூர் தொகுதியில், மழைநீர் வடிகால் வாய்க்கால் புதைவட மின்சார பணிகள் முழுமையாக முடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • குழந்தைகள் ரெயில் மற்றும் இசை நீரூற்று சேர்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.
    • பறவைகள் பூங்கா சிறுவர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பயிற்சி பட்டறையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியரகம் தற்போது தஞ்சையின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் அருங்காட்சியகமாக கடந்த 14.01.2023 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் நில அளவை காட்சியரை, சரஸ்வதி மகால் நூலக காட்சியரை, உலோக, கற்சிற்ப காட்சியரை, பொது நிர்வாக காட்சியரை, நடந்தாய் வாழி காவிரி, விவசாய காட்சியரை, சோழர் ஓவிய காட்சியரை, கைத்தறி காட்சியரை, புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், இசைக்கருவிகள், நிகழ்த்துக்கலை காட்சியரை என மொத்தம் 12 காட்சி அறைகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.

    தஞ்சாவூர் அருங்காட்சிய கத்தில் அமைந்துள்ள 7டி திரை அரங்கம் மற்றும் பறவைகள் பூங்கா சிறுவர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. எண்ணற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அருங்காட்சியகத்தை கண்டு களித்து வருகின்றனர். தஞ்சாவூர் அருங்காட்சி யகத்தில் கடந்த 25.01.23 முதல் 29.01.23 வரை தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு கலை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் குழந்தைகளை மேலும் கவரும் வண்ணம் 14.04.2023 முதல் குழந்தைகள் ரயில் மற்றும் இசை நீரூற்று சேர்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

    தஞ்சாவூர் அருங்காட்சிய கத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான கண்காட்சி மற்றும் பட்டறை கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூடத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளை பறைசாற்றும் கண்காட்சி மற்றும் பல்வேறு பயிற்சி பட்டறை தொடர்ந்து நடத்திட தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாணவர்க ளுக்கான கைவினைப் பொருள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    தஞ்சையின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. இன்றைய தலைமுறையினர் நமது கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வது தான் இப்பயிற்சியின் நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) உதவி ஆணையர் (கலால்) பழனிவேல், சுற்றுலா அலுவலர் நெல்சன், தாசில்தார் சக்திவேல், பிரபு, கலைச்செல்வி பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • 10 பேருக்கு பழங்குடியினர் இன வகுப்புச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் 26 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திறந்து வைத்தனர்.

    அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் ஊராட்சி விருச்சவனத்தில் ரூ.49.60 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு பயிற்சி மைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

    ஆலக்குடி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், பிள்ளையார்பட்டி ஊராட்சி ஆபுசு நகரில் ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் விளையாட்டு பூங்காவும், நீலகிரி ஊராட்சி பாரதி நகரில் ரூபாய் 40.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் பூங்காவும், ராஜேந்திரம் ஊராட்சியில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் ராஜேந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும், மானாங்கோரை ஊராட்சியில் ரூ. 38 லட்சம் மதிப்பீ ட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடமும், ரூ. 23.56 லட்சம் மதிப்பீட்டில் மானாங்கோரை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், ரவுசப்பட்டி ஊராட்சியில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும் திறக்கப்பட்டது.

    இதேபோல் ஒரத்தநாடு வட்டம் காட்டுக்குறிச்சி ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் உள்பட பல்வேறு புதிய கட்டிடங்கள் என மொத்தம் ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் 26 புதிய கட்டிடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 64 பயனாளிகளுக்கும் , முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 5 நபர்களுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம் புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் 10 நபர்களுக்கு பழங்குடியினர் இன வகுப்புச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் வளர்ச்சி ஸ்ரீகாந்த், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் பழனிவேல் தஞ்சாவூர் (பொ), பிரபாகர் (பட்டு க்கோட்டை), கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, செயற்பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் நாகவேலு, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு தலைவர்கள் வைஜெந்தி மாலா, பார்வதி சிவசங்கர் , செல்வம் சௌந்தர்ராஜன், சசிகலா ரவிசங்கர், முத்துமாணிக்கம், அமுதா செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
    • உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் காட்சி பொருளாக காணப்படுகின்றன.

    பூதலூர்:

    பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா என்ற பெயரில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டது.

    பத்தாயிரம் சதுர அடி பரப்பில் முற்றிலும் நான்கு பக்கமும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    பூங்காவின் நடுவில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான அதிநவீன சாதனங்கள் மேற்கூரையுடன் அமைந்த ஒரு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வந்து பயன்பெறுவர் வசதிக்காக தனித்தனியான கழிவறை வசதியும் தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இருந்த போதிலும் இந்த பூங்கா எந்தவித பராமரிப்பும் இன்றி யாரும் பயன்படுத்தப்படாத நிலையில்,அதில் உள்ள குழந்தைகள் விளை யாட்டு அமைப்புகள் எல்லாம் துருப்பிடித்து காணப்படுகின்றன.

    அதேபோல மதிப்புமிக்க உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் காட்சி பொருளாக காணப்படுகின்றன. சில சாதனங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

    இந்த பூங்காவின் நிறைவு பகுதியில் காணப்படும் கழிவறை கதவுகள் உடைக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பூங்காவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டு தற்போது யாரும் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள அதிநவீன உடற்பயிற்சி சாதனங்களை சிறப்பு அனுமதி பெற்று பூதலூர் ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    அப்படி இல்லாமல் ஒரு நல்ல நோக்கத்திற்காக செய்யப்பட்ட அமைப்பு வீணாகி கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    எனவே இந்த பூங்காவை நல்ல முறையில் பராமரித்து பயன்படக்கூடிய அளவில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • சிறுவர் பூங்காவினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார்.
    • நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் ஸ்வஸ்திக் நகரில் அம்ருத் 0.2 திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் செலவில் கட்டப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது . விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.

    நகராட்சிஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுவர் பூங்காவினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம்,

    வழக்கறிஞர்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம்.
    • அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24-ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை வேளச்சேரி, 100 அடி புற வழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாகவும், சோழிங்கநல்லூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும் அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டசபையில் 2023-24-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றோடு 24 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம் மீதமுள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளிலுள்ள 10 திட்டங்களையும் இந்த மாத இறுதிக்குள் நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபடவிருக்கின்றோம்.

    அந்த வகையில், அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று வேளச்சேரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாக கள ஆய்வு செய்திருக்கின்றோம். அதேபோல, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுகின்ற சிதிலமடைந்த பள்ளிக்கூடங்களை புதுப்பித்தல், பஸ் நிலையங்களை மேம்படுத்துதல், சலவைக் கூடங்களை மறுவளர்ச்சி மேம்படுத்துதல், காசிமேடு கடற்கரையோரம் 5 கிலோ மீட்டர் அளவிற்கு அந்த இடத்தை அழகுபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப் பட்டு, ஒட்டுமொத்தமான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இந்த அறிவிப்புளை முதலமைச்சர் சீரிய ஆலோசனையின் பேரில் வடிவமைத்த இந்தத் திட்டங்கள் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல், திட்டங்களைத் திருத்தி அமைத்து, மக்களுக்காகத் தான் திட்டங்கள் என்ற வகையிலே இந்த திட்டங்களைச் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

    இந்த களஆய்வு நிச்சயம் ஒரு பயனுள்ளதாக அமையும். இந்த பகுதிகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அனைவருடைய உடல் நலத்தைப் பாதுகாக்கின்ற வகையிலும், அதே நேரத்தில் விளையாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலும், பெரும்பாக்கத்தில் விரைவில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் ஏற்படுத்தித் தரப்படும்.

    மேற்கண்ட அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் , சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா , அடையார் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் துரைராஜ், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர் ருத்ர மூர்த்தி, முதன்மைத் திட்ட அமைப்பாளர் அனுசுயா , மாநகராட்சி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×