என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pass"

    • பீகாரில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது.
    • விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக, அந்த மாணவி தனது விடைத்தாளில், விவசாயியான எனது அப்பாவுக்கு வருமானம் குறைவு. எனவே நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறிவருகிறார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார். தயவுசெய்து எனக்கு நல்ல மதிப்பெண் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

    மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
    • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 12,716 மாணவர்கள் 12,425 மாணவிகள் என மொத்தம் 25,141 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் தேர்வு எழுதிய 12716 மாணவர்களில் 11345 பேரும், 12425 மாணவிகளில் 11642 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 22987 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு கூடுதலாக 6.07 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
    • 5001 மாணவர்களும், 6426 மாணவிகளும் என மொத்தம் 11,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை ஆண்கள் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 1,952 பேரும், பெண்கள் பள்ளியை சேர்ந்த 4,431 மாணவிகளும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த 19, 781 பேரும் என மொத்தம் 26,164 பேர் எழுதினர்.

    இந்தநிலையில் இன்று வெளியாக பிளஸ்-1 தேர்வு முடிவில் 24,917 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 1702 பேரும், மாணவிகள் 4237 பேரும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 18,978 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் திருப்பூர் மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    அரசு பள்ளிகள் அளவில் 92.06 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 78 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 5 ஆயிரத்து 666 பேரும், மாணவிகள் 6746 பேரும் என மொத்தம் 12,412 பேர் தேர்வு எழுதினர். இதில் 5001 மாணவர்களும், 6426 மாணவிகளும் என மொத்தம் 11,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    கொரோனாவுக்கு முன் 2018, 2019 ஆகிய 2 ஆண்டுகளும் மாநிலத்தில் திருப்பூர் இரண்டாம் இடம் பெற்றது. கடந்த 2020ம் ஆண்டு 3 இடங்கள் பின்தங்கி, 5-ம் இடத்தை எட்டியது. 2021-ம் ஆண்டு அனைவரும் தேர்ச்சி பெற்றனர். கடந்த 2022ம் ஆண்டு பிளஸ் 1 தேர்வில் மாநிலத்தில் 11வது இடம் பெற்ற திருப்பூர் கடந்த 2023ம் ஆண்டு 96.83 சதவீத தேர்ச்சியுடன், 10 இடங்கள் முன்னேறி மாநிலத்தில் முதலிடம் பெற்று பாராட்டு பெற்றது. நடப்பாண்டு(2024) பிளஸ்- 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதித்த திருப்பூர், பிளஸ் 1 தேர்வில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    • சுமாரான வெற்றியை விட படு தோல்வி ஒருவருக்கு அதிக ஊக்கம் அளிக்க்கும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
    • 10 ஆம் வகுப்பு வரை நன்கு படித்து வந்த பிரியால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தால் உயிரியல் கணித பாடத்தை தேர்வு செய்தார்.

    தேர்வுகளில் தோல்வியடைவதால் இன்றைய தலைமுறை மாணவர்கள் எளிதாக மனம் தளர்ந்து விடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் அதை சவாலாக எடுத்து வாழ்கையின் அடுத்தடுத்த கட்டங்களில் சாதித்துக்காட்டும் மாணவர்களும் இருக்கவே செய்கின்றனர். சுமாரான வெற்றியை விட படு தோல்வி ஒருவருக்கு அதிக ஊக்கம் அளிக்க்கும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

    அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் 11 ஆம் வகுப்பில் ஃபெயிலான பிரியால் யாதவ் என்ற விவசாய குடும்பத்தில் பிறந்த பெண் பல தடைகளை உடைத்தெறிந்து கடின உழைப்பால் MPPSC தேர்வில் வெற்றி பெற்று தனது 27வது வயதில் துணை ஆட்சியர் பதவியில் அமர்ந்திருப்பது கேட்போரை புல்லரிக்க வைப்பதாக உள்ளது.

     

    கடந்த 2021 இல் நடந்த MPPSC தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அதில் 16 வது ரேங் எடுத்து அசத்தியுள்ளார் பிரியால் யாதவ். 10 ஆம் வகுப்பு வரை நன்கு படித்து வந்த பிரியால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தால் உயிரியல் கணித பாடத்தை தேர்வு செய்தார்.

    பிடிக்காத பாடத்தைப் படிதத்தால் இயற்பியலில் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது துணை கலெக்டராக தேர்வாகியுள்ள பிரியால் யாதவ் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

    முன்னதாக சமீபத்தில் 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர் ஐபிஎஸ் ஆன கதையைத் தழுவி எடுக்கப்பட்ட 12த் பெயில் திரைப்படம் பிரியால் யாதவின் வாழக்கையை ஒத்த கதைக்களத்துடன் நகர்வது குறிப்பிடத்தக்கது. 

    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

    இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.

    முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. 35 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    சேலம்:

    இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. 35 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 1200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ- மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்றனர். அதில் 509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 6 ேபர், 351-400 வரை 8 பேர், 301-350 வரை 15 பேர், 251-300 வரை 27 பேர், 201-250 வரை 42 பேர், 151-200 வரை 107 பேர், 101 முதல் 150 வரை 211 பேர், 93 முதல் 100 மதிப்பெண்கள் வரை 93 பேர் என 509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 162 மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீட், செட், யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப், கேட்தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    • முனைவர் பட்ட சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்பெறும் நுழைவு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

    தஞ்சாவூர் :

    தஞ்சை தமிழ்பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் தியாகராஜன் வெளியி–ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டச் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு (TURCET 2020) எழுதித் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க 1.8.2022 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    டார்செட் 2020-ல் தேர்ச்சி பெற்றவர்கள் முனைவர் பட்டச் சேர்க்கைக்கு 2022 ஜூலை பருவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அதன்பிறகு 2020 தேர்வுத் தகுதி செல்லாது. நீட், செட், யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப், கேட்தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2022 பருவத்திற்குப் பிறகு முனைவர் பட்டச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்பெறும் நுழைவுத் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்று பதிவாளர் முனைவர் தியாகராஜன் தெரிவித்தார்.

    தற்போது ஆய்வியல் நிறைஞர் (எம்பில்) பட்டப் படிப்புகள், முதுகலைப் பட்டப் படிப்புகள், முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 15.8.2022 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் வந்த தேர்வு முடிவில் 3 பாடத்தில் சஞ்சய் தோல்வி அடைந்தார்.
    • சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாவி தொட்டி பாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி (45). இவரது மனைவி சுமதி. அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். சுமதி பவானி அருகே உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு சஞ்சய் (15), சந்துரு (13) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். கடந்த மாதம் வந்த தேர்வு முடிவில் 3 பாடத்தில் சஞ்சய் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவரது தந்தை அப்புசாமி சஞ்சயை மீண்டும் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனக்கூறி தனியார் டுட்டோரியல் கல்லூரியில் சேர்த்தார். ஆனால் சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து அப்புசாமி குடித்து விட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் 8,285 மாணவர்கள், 9,329 மாணவிகள் என மொத்தம் 17,614 பேர் தேர்வு எழுதினர்.
    • 11-ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், அவர்கள் 12-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே 10-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.

    தேர்வு முடிவுகள்

    இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 20 ஆயிரத்து 818 பேர் எழுதினர். இதில் 19 ஆயிரத்து 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.21 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

    மாணவிகள் அதிகம்

    மாணவர்கள் 9 ஆயிரத்து 774 பேர் தேர்வு எழுதியதில் 8 ஆயிரத்து 564 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.62 சதவீதம் ஆகும்.

    மாணவிகள் 11 ஆயிரத்து 44 பேர் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 633 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.28 சதவீதம் ஆகும்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் 9,201 மாணவர்கள், 10,739 மாணவிகள் என மொத்தம் 19,940 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 8,247 மாணவர்கள், 10,504 மாணவிகள் என மொத்தம் 18,751 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.04 சதவிகித தேர்ச்சி ஆகும்.

    மாணவர்கள் 89.63 சதவிகிதமும், மாணவிகள் 97.81 சதவிகிதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம்

    தென்காசி மாவட்டத்தில் 8,285 மாணவர்கள், 9,329 மாணவிகள் என மொத்தம் 17,614 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,001 மாணவர்களும், 8,914 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.35 சதவீத தேர்ச்சியாகும்.

    11-ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், அவர்கள் 12-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் அவர்கள் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை சிறப்புத் தேர்வில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    பிளஸ்-1 வகுப்புகள் தொடக்கம்

    இதற்கிடையே மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளஸ்1 வகுப்புகள் இன்று ெதாடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். முதல் 2 நாட்கள் நல்லொழுக்க பயிற்சிகள் மட்டுமே நடைபெற உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.
    • அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 83.16 சதவீதம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 239 மாணவிகளும், 7 ஆயிரத்து 851 மாணவர்களும் என 19 ஆயிரத்து 90 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.16 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

    கடந்த 2020-ம் ஆண்டு அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 93.10 சதவீதம் ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 83.16 ஆக குறைந்துள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 158 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி 7 பள்ளிகள் பெற்றுள்ளது. அவைகள், ஏகலைவா உண்டு உறைவிட மகளிர் மேல்நிலைப்பள்ளி அபிநவம் மற்றும் கொங்கணாபுரம், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, எடப்பாடி, காடையாம்பட்டி மாதிரிப் பள்ளிகள் ஆகிய 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை நிகழ்த்தி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிளஸ்-1 தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 88.74 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    கடலூர்:

    கடலுார் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வினை105 அரசுப் பள்ளிகள், 11 அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், 29 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 100 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 245 பள்ளிகளிலிருந்து 15,834 மாணவர்கள், 15,740 மாணவிகள் உள்பட மொத்தம் 31574 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 13,146 மாணவர்களும், 14,874 மாணவிகளும் ஆக மொத்தம் 28,020 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் மாணவர்களுக்கு 83.02 சதவீதமும், மாணவிகளுக்கு 94.50 சதவீதமும் மொத்தத்தில் 88.74 சததவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர் கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 82.84 சதவீதம் தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.05 சதவீதமும், தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் கடந்த ஆண்டில் (மார்ச் 2020ல்) கடை நிலையிலிருந்து உயர்வு பெற்று இந்த ஆண்டில் 22-வது நிலையை அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    • பிளஸ்-2 தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி சாதனை படைத்துள்ளனர்.
    • முதல்வர் வெங்கட்ரமணன், துணை முதல்வர் சர்ப்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மாணவி ஜெயஸ்ரீ-594 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம், தமிழ் 99, ஆங்கிலம் 97, கணக்குபதிவியியல் 98, பொருளியல் 100, வணிகவியல் 100, கணினிபயன்பாடுகள் 100 மதிபெண் பெற்றுள்ளார்.

    பள்ளியில் 2-ம் இடம் பெற்ற மாணவி அம்சவள்ளி-590 மதிபெண் பெற்றுள்ளார். இவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம் தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 98, வேதியியல் 99, உயிரியல் 100, கணிதம் மதிப்பெண்பெ ற்றுள்ளார்.பள்ளி அளவில் 3-ம் மதிப்பெண் 588 இரண்டுபேர் பெற்றுள்ளனர். மாணவி நவினா தமிழ் 96, ஆங்கிலம் 97, இயற்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 96, கணிதம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். கிருஷ்ண பிரசாத் தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 100, வேதியியல் 98, உயிரியல் 97, கணிதம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவ, மாணவிகள் 37 பேர் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் இந்த பள்ளி மாணவ-மாணவிகள் 590-க்கும் மேல் 2 பேர், 580 க்கும் மேல் 11பேர், 550க்கும் மேல் 55 பேர், 500க்கும் மேல் 188 பேர் அதிக மதிப் பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைபிடித்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, இயக்குனர் ராஜேந்திரன், முதல்வர் வெங்கட்ரமணன், துணை முதல்வர் சர்ப்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    ×