என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passengers"

    • கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2.16 கோடி பயணிகள் பிடிபட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரெயில்வே ரூ.562 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் இன்றி பிடிபட்ட பயணிகள் எண்ணிக்கை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மக்களவையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    கடந்த 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த சுமார் 2.16 கோடி பயணிகளை இந்திய ரெயில்வே கண்டறிந்தது. அந்தப் பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.562.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் கேமராக்கள், ஏ.ஐ. அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம் டிக்கெட் இல்லாத பயணிகளைக் கண்டறியும் விகிதம் உயர்ந்துள்ளது.

    முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அபராத வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் எடுக்காத பயணிகள் பதிவாகியுள்ளனர். டிக்கெட் இல்லாத பயணம் ரெயில்வேக்கு ஏராளமான நிதி இழப்பை ஏற்படுத்துகிறது.

    உள்ளூர் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அல்லது ரெயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, மண்டல ரயில்வேக்களால் அவ்வப்போது சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    டிக்கெட் சரிபார்ப்பு செயல்பாடு மற்றும் சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்களை நடத்துவது இந்திய ரெயில்வேயில் தொடர்ச்சியான பயிற்சியாகும். இந்த நடவடிக்கைகள் முறைகேடுகளைக் குறைக்கவும், ரெயில்வே வருவாயை மேம்படுத்தவும் உதவுகின்றன என தெரிவித்தார்.

    • தென்கொரியாவின் ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்தது.
    • பாதுகாப்பு கருதி பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து ஏர் பூசன் நிறுவனம் உத்தரவிட்டது.

    சிங்கப்பூர்:

    தென்கொரியாவின் ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்தது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் அந்த விமானம் பயன்படுத்தாத முடியாத அளவுக்கு சேதமடைந்தது. இதனையடுத்து விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து ஏர் பூசன் நிறுவனம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தைவானின் ஈவா ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த உத்தரவை அமல்படுத்தியது.

    அந்தவரிசையில் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. அதன்படி 100 வாட் திறன் வரை கொண்ட பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்லலாம். ஆனால் தங்களுடன் கொண்டு செல்லும் கைப்பையில் அதனை கொண்டு செல்லக்கூடாது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • நவம்பர் 5,12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படுகிறது.
    • விரைவு வண்டி பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    பாபநாசம்:

    மயிலாடுதுறை, பெங்களூர், மைசூர் இடையே மீண்டும் நேற்று முதல் ஒரு வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (ஒரு மாதத்திற்கு மட்டும்) இயக்குவதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    வண்டி எண்: 06251: மைசூர் - மயிலாடுதுறை ரெயில் நவம்பர் 4,11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெங்களூரிலிருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படுகிறது.

    வண்டி எண்:06252: மயிலாடுதுறை - மைசூர் இன்று (29-ந்தேதி), நவம்பர் 5,12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும் இயக்கப்படுகிறது.

    விரைவு வண்டி பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    பெங்களூரிலிருந்து பாபநாசத்திற்கு வரும் நேரம் மதியம் 2.00 மணி மற்றும் பாபநாசத்திலிருந்து பெங்களூர், மைசூர் செல்ல புறப்படும் நேரம் இரவு 7.30 மணி ஆகும்.

    ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். எனவே, பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து பயன்பெற வேண்டுகிறோம்.

    இத்தகவலை திருச்சிராப்பள்ளி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்தார்.

    • பூதலூரில் இருந்து தஞ்சைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
    • பாசஞ்சர் ரெயில்களில் கட்டண குறைப்பு செய்து தர வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சை- திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் முன்ப திவு இல்லாத ரெயில்களில் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்தது போல் குறைந்த கட்டணம் வசூலிக்க ப்பட வேண்டும் என்று ரயில் பயணிகளி டமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

    தஞ்சை - திருச்சி வழித்தடத்தில் ஆலக்குடி, பூதலூர், அய்யனாபுரம், சோழகம்பட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் உள்ளன.

    இவை அனைத்தும் கிராமப்புறங்களாகும். கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து ரயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

    இயக்கப்பட்டு வரும் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் விரைவு ரெயில்கள் என்று பெயர் மாற்றப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கொரானா காலத்திற்கு முன்பு விரைவு ரயில் பூதலூர் இருந்து தஞ்சைக்கு ரூ.30 ஆக இருந்தது.

    சாதாரண பாசஞ்சர் ரயில்களில் பூதலூரில் இருந்து தஞ்சைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பயணிகள் அவதியநடைந்து உள்ளனர்.

    எனவே கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை போல் பாசஞ்சர் ரெயில்களில் கட்டண குறைப்பு செய்து தர வேண்டும் என்று ரயில் பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் ரயில்வே ஆணையத்திற்கு குரல் எழுப்ப வேண்டும் என்று திருக்காட்டுப்பள்ளி சமூக ஆர்வலர் கண்ணதாசன் கோரியுள்ளார்.

    • நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருத்துறைப்பூண்டி:

    திசையன்விளை அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த இரு பஸ்கள் திருச்செந்தூர், ராமேஸ்வரம் வழியாக திருத்துறைப்பூண்டியை கடந்து வேளாங்கண்ணி செல்வது வழக்கம்.

    திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் ராமேஸ்வரம், திருச்செந்தூர் ஆகிய கோவிலுக்கு செல்ல இந்த இரு பஸ்களை தான் நம்பி உள்ளனர்.

    அப்படி இருக்கும் வகையில், இந்த பஸ்கள் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்திற்குள் வராமல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.

    இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.

    தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி இனி இந்த இரு பஸ்களும் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்துக்குள் வரும் என உறுதி அளித்தததன் பேரில் பொதுமக்கள் பஸ்வை விடுவித்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பொதுமக்கள் சரியான முறையை கடைபிடிக்க வேண்டும்.
    • பயணிகள் புறக்கணிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

    குனியமுத்தூர்,

    கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனையாமல் இருப்பதற்காக பிரமாண்டமான நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழல் கூடையை பயன்படுத்துவது இல்லை. .

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    எத்தனையோ சாலைகளில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் நின்று , பஸ்சில் ஏறும் நிலை இருந்து வருகிறது. ஆனால் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் மக்கள் நிழற்குடை இருந்தும் அதனை பயன்படுத்துவது இல்லை. பயணிகள் புறக்கணிப்பது ஏன் என்பது தெரியவில்லை. பொதுமக்கள் தான் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    நிழல் குடையில் நிற்காமல் தள்ளி நிற்கும் போது, பஸ் ஓட்டி வரும் டிரைவருக்கு குழப்பம் ஏற்படும். எனவே பொதுமக்கள் விதி மீறல் இல்லாமல் சரியான முறையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொருவரும் செயல்படும் போது எந்த குழப்பமும் ஏற்படாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. விசைத்தறி, மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி காரணமாக, மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இணையான கட்டமைப்பு வசதிகள்,அடிப்படை தேவைகள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை,பொள்ளாச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும். தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து வருவதால் இங்கு அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்டவைகள் தினமும் நடைபெறுவதால்,பல்லடம் பஸ் நிலையம் என்றாலே வெளியூர் பயணிகள் அச்சத்துடன் வரும் நிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் செல்போன் திருட்டு, பணம் திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக பஸ் நிலையத்தில் பொது மக்கள் பஸ்களில் ஏறும்போதும், இறங்கும்போதும், கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி, மர்ம நபர்கள் சிலர் மொபைல் போன்களை திருடி செல்கின்றனர்.

    கடந்த இரு வாரங்களில் தினமும் ஒரு மொபைல் போன் திருட்டு போகிறது. அவசர,அவசரமாக பஸ்சில் ஏறுபவர்களிடம் மொபைல் போன்கள் திருடப்படுகிறது. சிலர் மட்டுமே போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கின்றனர். நிறைய பேர் வீண் அலைச்சல் என்று போலீசில் புகார் செய்வதில்லை. இதனால் திருடர்களுக்கு மிகவும் சௌகரியமாக போய்விட்டது. இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர். 

    • திருச்சி விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சேவை மூலம் 3 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பயனடைந்துள்ளனர் என இயக்குனர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்
    • புதிய விமான நிலைய முனைய கட்டுமான பணி–யானது நிறைவு பெற்று விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலை–யத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலைய இயக்குனர் சுப்பி–ரமணி தேசியக் கொடி–யினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசிய–தாவது:- திருச்சி விமான நிலை–யத்தில் உள்நாட்டு விமான சேவைகளில் கடந்த டிசம்பர் மாதம் வரை 3 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பயன்பெற்றுள்ளனர்.

    மொத்தமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணி–கள் உட்பட 12 லட்சத்து 28 ஆயிரம் பயணிகள் பயன்பெற்றுள்ளனர். திருச்சி விமான நிலை–யத்தில் இருந்து இயக்கப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை 10,000 எனவும் இவை தவிர திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கமான டாக்ஸி ட்ராக் பணி நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் கார்கோ பிரி–வில் கடந்த டிசம்பர் மாதம் வரை 4,947 மெட்ரிக் டன் பொருட்கள் கையா–ளப்பட்டுள்ளது. மேலும் புதிய விமான நிலைய முனைய கட்டுமான பணி–யானது நிறைவு பெற்று விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

    இந்த புதிய முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 2900 பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலை–யத்தின் பாதுகாப்பில் முழு அக்கறையுடன் பணி–யாற்றி வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை–யினர், விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் அனை–வருக்கும் நன்றி தெரி–வித்தார். விழாவில் மத்திய பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • கோவில் கொடைவிழாவுக்கு தீர்தம் எடுப்பதற்காக அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 15 பேர் கன்னியாகுமரிக்கு இன்று அதிகாலை வேனில் புறப்பட்டனர்.
    • வேன் பாளையை அடுத்த டக்கரம்மாள்புரம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்த போது லேசான புகை மூட்டம் வேனில் இருந்து எழுந்துள்ளது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் இருந்து கோவில் கொடைவிழாவுக்கு தீர்தம் எடுப்பதற்காக அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 15 பேர் கன்னியாகுமரிக்கு இன்று அதிகாலை வேனில் புறப்பட்டனர்.

    பற்றி எரிந்த வேன்

    வேனை வாசுதேவ நல்லூர் சேனையர் நாட்டாமை தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டிச்சென்றார். வேன் பாளையை அடுத்த டக்கரம்மாள்புரம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்த போது லேசான புகை மூட்டம் வேனில் இருந்து எழுந்துள்ளது.

    உடனடியாக சுதா ரித்துக்கொண்ட டிரைவர் கணேசன் வேனை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு அதில் இருந்த பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். அவர்கள் அனைவரும் வேனை விட்டு இறங்கி சற்று தொலைவில் சென்றனர். சிறிது நேரத்திலேயே வேன் தீப்பற்றி மளமளவென எரியத்தொடங்கியது.

    எலும்பு கூடானது

    இதனால் அதிர்ச்சி யடைந்த கணேசன் பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் வேன் முழுவதுமாக எரிந்து எலும்பு கூடானது.

    • கூடுதல் இருக்கை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 500க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூரில் அன்னூர் காமராஜர் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    இந்த பஸ் நிலையம் கடந்த 2000-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

    இந்த பஸ் நிலையமானது கோவை, திருப்பூர், நீலகிரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி, கர்நாடகா–விற்கு செல்லும் தேசிய நெடுஞ்சா–லையின் ஜங்ஷனாக அமைந்துள்ளது.

    இந்த அன்னூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, சத்தி உள்ளிட்ட வெளி பகுதிகளுக்கும், அன்னூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் என நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ்சில் பயணிக்க கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான கோவை, மேட்டுப்பாளையம் போன்ற முக்கியமான நகரங்களுக்கு செல்வதற்கு என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள்.இதனால் இந்த பஸ் நிலையம் எப்போதும் கூட்டமாகவும், பரபரப்பாகவும் இயங்கி கொண்டிருக்கும்.

    கூட்டம் அதிகமாக இருந்தாலும், பயணிகள் வருகைக்கு ஏற்ப பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லை. குறைந்த அளவிலேயே இருக்கை வசதி உள்ளது. இதனால் பயணிகள் பஸ் வரும் வரை நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிகமான பயணிகள் கூடுவதால், அவர்கள் இருப்பதற்கு இருக்கை இல்லாததால் தரையில் அமரும் நிலையும் காணப்படுகிறது.எனவே இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதி அடைந்தனர்
    • பல பயணிகள் நடந்தும், ஆட்டோவை பிடித்தும் சென்றுள்ளனர்

    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. கொப்பனாபட்டி தேனிமலை, கருகப்பூலாம்பட்டி, காரையூர், கீழத்தானியம். மேலத்தானியம் , இலுப்பூர், விராலிமலை வழியாக திருச்சிக்கு செல்ல வேண்டிய அந்த பேருந்தானது, தேனிமலை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பெரும் சத்தத்துடன் குலுங்கி உள்ளது. சத்தம் கேட்டு பயணிகள் திகிலடைந்த நிலையில் பேருந்தை எப்படியோ டிரைவர் நிறுத்தி உள்ளார்.

    பேருந்தில் உள்ள பயணிகள் அவசர அவசரமாக இறங்கி சாலைக்கு ஓடி உள்ளனர். பேருந்தை ஓட்டி வந்த டிரைவரும், கண்டக்டரும் பேருந்தை சோதனையிட்ட போது பேருந்து ஓடுவதற்கு இன்ஜினும், சக்கரத்தையும் இணைக்கும் சென்ட்ரல் ஜாயிண்ட் உடைந்து விழுந்தது தெரிய வந்துள்ளது. இந்த நீண்ட இரும்பு ஜாயிண்ட் ஆனது சாலையில் குத்தி இருந்தால் பேருந்தை கவிழ்த்து இருக்கும். நல்லவேளையாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அறிந்து டிரைவரும், கண்டக்டரும் நிம்மதி பெரு மூச்சு விட்டு உள்ளனர்.

    இதுவரை நடந்த சம்பவங்கள் பேருந்து பயணிகளுக்கு நிம்மதி பெருமூச்சு விட செய்தாலும், அதற்கு அடுத்து நடந்ததுதான், தொடர்ந்து பெருமூச்சு விடச்செய்துள்ளது.தேனிமலை ரோட்டில் நின்று கொண்டிருந்த பேருந்து பயணிகளுக்கு வேறு பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் டிரைவரும், கண்டக்டரும் சென்று விட்டனர். இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற பயணிகள் அந்த வழியாக சென்ற பேருந்துகளை நிறுத்த முயன்றுள்ளனர்.

    ஆனால்கைக்காட்டிய பயணிகள் இடையே டிரைவரும், கண்டக்டரும் இல்லாததை கண்டு வந்த பேருந்து டிரைவர்களும் நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் பல பயணிகள் நடராஜா சர்வீஸ்தான் நமக்கு துணை என்ற படி மூட்டை முடிச்சுகளை துாக்கிக்கொண்டு நடந்தும், ஆட்டோவை பிடித்தும் சென்றுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பொன்னமராவதியில் ஓடும் பல அரசு பேருந்துகள் இப்படி பிரேக் டவுன் ஆகி வழியில் நிற்பது தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறு அடிக்கடி நிகழ்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெரிய அளவில் போராட்டம் நடத்தினால்தான் போக்குவரத்து அலுவலகம் விழித்துக்கொள்ளும் என்றால் அதற்கும் பொதுமக்கள் தயார் என்று கூறினர்.


    • திருவாரூர்- காரைக்குடி இடையே தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • நடைமேடைகளில் நடக்கவே பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அகல ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த 2019-ம் ஆண்டு முதல் திருவாரூர்- காரைக்குடி இடையே தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும், வாரத்தில் 4 நாட்கள் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி மற்றும் ராமேஸ்வரம்- செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அதிராம்பட்டினத்தில் நின்று செல்கின்றன.

    இந்நிலையில், ரெயில் நிலைய நடைமேடைகள் விரிசல் ஏற்பட்டு ராட்சத பள்ளங்களுடன் மிகவும் சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதனால் நடைமேடைகளில் நடக்கவே பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    எனவே, அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடைபாதைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×