search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pellathi pond"

    • மொங்கம்பாளையம், சிறுமுகை வழியாக மறுகால் பாய்கிறது
    • குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

    மேட்டுப்பாளையம்,

    கோவை, நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதிகளில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 1 வாரத்திற்கு மேலாக மழையின் தாக்கம் அதிக மாக இருந்து வருகிறது. இதனால் சாலையோரங்க ளில் மழைநீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பல இடங்களில் விவசாய நிலங்கள் மழைநீரில் மிதந்து வருகின்றன.

    இந்நிலையில் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட காரமடை பெ ள்ளாதி குளத்திற்கு கட்டான்ஜி மலை, மருதூர், திம்மம்பா ளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, பிளிச்சி உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து வரும் மழைநீர் வந்தடையும். தற்போது இந்த குளத்தின் கொள்ளளவு நிரம்பி இதன் உபரிநீர் நேற்று முதல் வெளியேறி வருகிறது.

    தண்ணீர் குளத்தில் இருந்து வெளியேறி மொங்கம்பாளையம், குரும்பம்பாளையம், தேரம்பாளையம் சென்ன ம்பாளையம், பகத்தூர் மற்றும் சிறுமுகை வழியாக பவானி ஆற்றை அடையும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த பெள்ளாதி குளம் ஓராண்டுக்கு பின் மீண்டும் நிரம்பி வழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 216 மி.மீ மழை பெய்துள்ளது.
    • 100 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் நிரம்பி தடுப்பணையின் வழியாக தண்ணீர் வழிந்து ஓடி வருகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை பெள்ளாதி பகுதியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இக்குளத்தை சுற்றிலும் உள்ள பெள்ளாதி, மொங்கம்பாளையம், மொள்ளேபாளையம், சின்னத் தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, தென்னை, கருவேப்பிலை உள்ளிட்ட பல்வேறு வகை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் வெயிலும், மாலை வேளைகளில் தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 216 மி.மீ மழையும், குறிப்பாக அதில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 44 மி.மீ மழையும் பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக பெள்ளாதி பகுதியில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் நிரம்பி தடுப்பணையின் வழியாக தண்ணீர் வழிந்து ஓடி வருகிறது.

    இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் கூறியதாவது:-

    தொடர் கனமழையின் காரணமாக 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெள்ளாதி குளம் தற்போது நிறைந்து தடுப்பணையின் வழியாக தண்ணீர் வழிந்தோடி வருகிறது. இதனால் தங்கள் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் எனவும், குடிநீர் பற்றாக் குறை ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், குளத்தில் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டும் எனவும், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் இக்குளம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளையும், முட்புதர்களையும் அகற்ற வேண்டும்.

    அப்போதுதான் சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்கள் பாசன வசதியினை முழுமையாக பெற முடியும். எனவே, பொதுப்பணித்துறையினர் இந்த குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×