search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pen statue"

    • புதுக்கோட்டை நகரில் ரூ.9 கோடியில் நிறுவப்பட்டுள்ள பூங்காவுக்குள் 10 அடி உயரத்தில் பேனா சிலை கட்டபட்டுள்ளது
    • வருகின்ற மார்ச் மாதம் திறப்பு விழா

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரிக்கு எதிா்புறத்தில் இருந்த 5 ஏக்கா் காலியிடத்தில், தற்காலிகப் பேருந்து நிலையம் அவ்வப்போது செயல்பட்டு வந்தது. சா்க்கஸ், பொருள்காட்சிகளும் நடத்தப்பட்டு வந்தன.இந்த இடத்தில் நகராட்சியின் சாா்பில் பிரம்மாண்டமான பூங்கா கட்டுவதற்கான பணிகள் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 9 கோடி மதிப்பில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின.நடைப்பயிற்சி, ஸ்கேட்டிங், சைக்கிளிங் பாதைகள், சிறுவா்களுக்கான அறிவியல், கணிதப் பூங்காக்கள், உள்வட்ட திறந்தவெளி பூங்கா உள்ளிட்டவை இங்கே அமைக்கப்படுகின்றன.இந்தப் பூங்காவை ஆய்வு செய்த கலெக்டர் கவிதா ராமு வரும் மாா்ச் மாதத்தில் திறக்கப்படும் என்றும் அறிவித்தாா்.இந்த நிலையில், பூங்காவின் நுழைவாயில் அருகே 10 அடி உயரத்தில் பேனா சிலை வைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது.ஏற்கெனவே, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பேனாவை, சென்னை கடற்பகுதியில் வைக்க தமிழக அரசு முயற்சித்து வருவதும் அதற்கு சூழலியலாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து பேசுபொருளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


    • கடல் நடுவே அதிக செலவு செய்து பேனா சிலையை நிறுவ வேண்டுமா? என தி.மு.க.வினர் உணர வேண்டும்.
    • மத்திய அரசு கொடுத்த மானிய தொகையை உற்பத்தி திறனுக்கு பயன்படுத்தாமல், வேறு கடன் கட்டினேன் என மழுப்புகிறார்.

    குமாரபாளையம்:

    பா.ஜ.க. சார்பில் குமாரபாளையம் தொகுதி படவீடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில துணை தலைவர் துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடல் நடுவே அதிக செலவு செய்து பேனா சிலையை நிறுவ வேண்டுமா? என தி.மு.க.வினர் உணர வேண்டும். நிதி சுமை நிலையில் காலம் தாழ்த்தி கூட நிறுவலாம்.

    பழங்குடியின பெண்மணி ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இதுவும் சாத்தியமாக முடியுமா? என்ற கேள்வி 140 கோடி மக்கள் மனதில் எழுந்தது. இதுவும் சாத்தியமாகும் என பிரதமர் நிரூபித்துள்ளார்.

    பிரதமர், குடியரசு தலைவர் மூத்த நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். மின் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 51 சதவீதம் உயர்த்தி இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. ஆனால் செய்தியா ளர்களை சந்தித்து இந்த உயர்வு எத்தரப்பு மக்களையும் பாதிக்காது என சொல்கிறார்.

    மத்திய அரசு கொடுத்த மானிய தொகையை உற்பத்தி திறனுக்கு பயன்படுத்தாமல், வேறு கடன் கட்டினேன் என மழுப்புகிறார். அதை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிவு பா.ஜ.க. அண்ணாமலையை தவிர எந்த கட்சிக்கும் தமிழகத்தில் இல்லை.

    பொதுமக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை அனைவரும் எதிர்க்க வேண்டும். பா.ஜ.க.தான் பிரதான எதிர்கட்சியாக செயல்பட்டு கண்டன கூட்டங்கள் நடத்துகிறோம், போராடுகிறோம். எனவே அனைவரும் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் சரவணராஜன், மாவட்ட பொது செயலர் நாகராஜன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் மகேஷ், நகர தலைவர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×