search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Penna River"

    • சொர்ணாவூர் அணை நிரம்பி வழிகிறது
    • பாகூர் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது.

    புதுச்சேரி

    புதுச்சேரி, தமிழகம் கர்நாடகா மாநிலங்களில் பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடகா பகுதியில் உள்ள அணை திறக்கப்பட்டு அங்கு இருந்த உபரி நீர் சாத்தனூர் அணையை வந்தடைந்தது.

    சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து 3500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் தற்போது தென்பெண்ணையாற்றில் பாய்ந்தோடி வருகிறது. இதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    தென்பெண்ணை ஆற்றின் வழியாக வரும் நீர் புதுச்சேரி பொதுப்பணித்துறை கீழ் பராமரித்து வரும் சொர்ணாவூர் அணையை இன்று காலை எட்டியது.

    தற்பொழுது இந்த ஆற்றில் 1.30 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் இருபுறம் கரைபுரண்டு வந்து கொண்டு இருக்கிறது. தண்ணீர் அதிகமாக வருவதால் சொர்ணாவூர் அணை நிரம்பி தண்ணீர் வழிகிறது. மேலும் இந்த அணையில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு 1.10 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வருகிறது.

    கடந்த சில நாட்களாக பாகூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாய்க்கால், நிலம் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பாகூர் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது.

    ஏற்கனவே சாத்தனூர் அணை திறக்கப்பட்டு அணைகள் நிரம்பிய நிலையில் மீண்டும் அதிகப்படியாக தண்ணீர் வருவதால் அரசு, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.


    புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து ஆற்றில் வரும் தண்ணீரின் அளவையும் வாய்க்காலில் மூலமாக ஏரிகளை நிரப்பி வருவதையும் பணியையும் கவனித்து வருகின்றனர். கடந்த மாதம் இதே போல அணைகள் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.


    • தமிழகம்,கேரளா கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் ஆற்றில் நிரம்பிய உபிரி நீரை அணைக்கட்டுகள் மூலம் வெளியேற்றுகின்றனர்.

    புதுச்சேரி:

    தமிழகம்,கேரளா கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் நிரம்பிய உபிரி நீரை அணைக்கட்டுகள் மூலம் வெளியேற்றுகின்றனர்.

    அதன்படி சாத்தனூர் அணைக்கட்டில் நிரம்பிய நீர் 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு தென்பெண்ணையாற்றில் வந்து கொண்டுள்ளது. இந்த உபரி நீர் படிப்படியாக குறைந்து புதுவையின் எல்லை பகுதியான கரையாம்புத்தூர் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு சுமார் 500 கன அடியாக இன்று காலை வந்தடைந்தது. தற்பொழுது இந்த ஆற்றில் ஒரு மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

    அணைக்கட்டில் இருந்து ஒரு மதகு திறக்கப்பட்டு அதன் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் சித்தேரி அணைக்கட்டை அடைய 2 நாட்கள் பிடிக்கும் என கூறப்படுகிறது. சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் மூலமாக பாகூர் ஏரிக்கு நீர் கொண்டு வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகளை திறந்து உள்ளனர்.

    அதன் வழியாக சுமார் 80 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வாய்க்காலில் ஓடுகிறது. இந்த நீர் பாகூர் ஏரியை இன்று இரவு அல்லது காலையில் வந்தடையும். வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆறு வற்றி இருந்த நிலையில் தண்ணீர் வந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைக்கட்டை பொதுமக்கள் நேரில் வந்து பார்வையிட்டு ரசித்து வருகின்றனர்.

    ×