என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Planting Festival"
- சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரி சார்பில் பாரம்பரிய நடவு திருவிழா நடந்தது.
- 50 விவசாயிகளுக்கு காரட் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் கழணி மரபுவழி உழ வர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பாரம்பரிய நெல் நடவு திருவிழா, இயற்கை விவசாயப் பயிற்சி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா என முப்பெரும் விழா எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தில் நடைப்பெற்றது.
விழாவில் ஊராட்சி தலை வர் அஜிதா நமச்சிவா யம் வரவேற்றார். சேதுபாஸ் கரா கல்விக் குழுமத் தலை வர் முனைவர் சேதுகுமணன் தலைமை தாங்கி, பாரம்பரிய நெல் நடவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.
மேலும் கிராமப்புற மக்களுக்கு இயற்கை விவசாய பயிற்சிகள் மற்றும் உதவிகள் தம் கல்லூரியின் மூலமாக தொடர்ந்து வழங் கப்படும் என்றும், பால் மதிப்புக்கூட்டுதல், சந்தைப் படுத்துதல் மற்றும் பால் கூட்டுறவு சங்கம் பதி விற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
கல்லல் வட்டார வேளாண்மை இணை இயக் குநர் அழரோஜா, இயற்கை வேளாண்மையில் அரசு திட்டங்கள் குறித்து விளக்கி னார். சேதுபாஸ்கரா கல் லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் கருப்புராஜ் இயற்கை வேளாண்மை இடுப்பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தார்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய மருத்துவர் ரோமகிருஷ்ணன், கால்நடை களின் முக்கியத்து வம் மற்றும் அரசுத்திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் உழவியல் பேராசி ரியர் முனைவர் விமலேந்தி ரன் கலந்துக் கொண்டு விவசாயிகளுக்கு, வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், மண்வளம், நீர் பரிசோதனை குறிந்து விளக்கினார். இவ்விழாவில் 50 விவசாயிகளுக்கு காரட் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிறைவாக மாணவர் அர்ஜூன் நன்றி கூறினார்.
- கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி ஊராட்சியில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- இதில் சமூக ஆர்வலர்- பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் லிங்கம்பட்டி ஊராட்சியில் சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் சூசை முன்னிலை வகித்தார். விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி பாலமுருகன், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சங்கர சுப்பிரமணியன், ஓவர்சியர் வடிவேல்முருகன், வார்டு உறுப்பினர் சேவியர் லாரன்ஸ், ஊராட்சி செயலாளர் தேவிகா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் சுப்புராஜ் கோவில்பட்டி நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் ஜெமினி, சமூக ஆர்வலர் மாடசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்