என் மலர்
நீங்கள் தேடியது "police"
- காவலரை நடனமாடுமாறு முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
- நடனம் ஆட காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மார்ச் 14 அன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக பீகாரில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டியது.
பீகாரில் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் தனது வீட்டில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரை நடனமாடுமாறு தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
நடனம் ஆட காவலர் மறுக்கவே, நடனம் ஆடுகிறாயா? இல்லை உன்னை சஸ்பெண்ட் செய்யவா? என அமைச்சர் மிரட்ட, வேறு வழியில்லாமல் காவலர் நடனம் ஆடியுள்ளார்.
அமைச்சரின் வற்புறுத்தலால் காவலர் நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சீருடையில் நடனமாடிய காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக வேறொரு காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெங்கடேசன் 4 குழந்தைகளையும் விவசாய கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.
- எனது மகனுக்கும் போலீஸ் வேலைக்காக பயிற்சி கொடுத்து வருகிறேன்.
ராணிப்பேட்டை :
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகன்பேட்டை அருகே உள்ள கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா. இந்த தம்பதியருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் குழந்தைகளாக இருந்தபோது தாய் ஷகிலா இறந்து விட்டார். வெங்கடேசன் 4 குழந்தைகளையும் விவசாய கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.
மூத்த மகள் பிரீத்தியை (வயது 27) பிளஸ்-2 வரை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார். 2-வது மகள் வைஷ்ணவி (25) பி.ஏ. பட்டப்படிப்பும், மூன்றாவது மகள் நிரஞ்சனி (22) பி.எஸ்சி. பட்டப்படிப்பும் படிக்க வைத்துள்ளார். சகோதரிகள் 3 பேரும் போலீஸ் வேலையில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வந்தனர்.
அதன்படி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த போலீஸ் தேர்வில் கலந்துகொண்டு 3 பேரும் தேர்வாகி உள்ளனர். அவர்கள் மூவரும் திருவள்ளூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தனர். இதனைத்தொடர்ந்து பயிற்சி முடித்து தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தனர். ஒரே குடும்பத்தில் இருந்து அக்காள், தங்கைகள் என மூவரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு சேர்ந்ததால் குடும்பத்தில் உள்ளவர்களும், கிராம பொதுமக்களும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மகள்கள் போலீஸ் வேலையில் சேர்ந்தது குறித்து வெங்கடேசன் கூறியதாவது:-
எனக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் விளைச்சல் இல்லாததால் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். இதனிடையே பிளஸ்-2 வரை படிக்க வைத்த முதல் மகள் பிரீத்தியை குடும்ப உறவில் ராஜீவ் காந்தி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தேன். அவர்களுக்கு 7 வயதிலும், 6 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். 2-வது மகள் வைஷ்ணவி சென்னை வண்ணார பேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ.வும், 3-வது மகள் நிரஞ்சனி அரக்கோணம் அரசு கல்லூரியில் பி.எஸ்சி.யும் படிக்க வைத்தேன்.
போலீஸ் வேலையில் சேர்ப்பதற்காக 3 மகள்களுக்கும் எழுத்து தேர்வுக்கான பயிற்சி மற்றும் என்னுடைய நிலத்திலேயே நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைவதற்கான ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை அவர்களுக்கு கொடுத்து வந்தேன். அதன் பயனாக இன்று 3 பேரும் போலீஸ் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று பயிற்சியை முடித்து வேலையில் சேர்ந்துள்ளனர்.
நான் பிளஸ்-2 வரை படித்து போலீஸ் வேலையில் சேர முயற்சித்து கிடைக்காததால், எனது கனவினை நிறைவேற்றுவதற்காக பிள்ளைகளிடம் தாய் இல்லாததையும், குடும்ப சூழ்நிலையையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி கடினமாக பயிற்சி பெற தெரிவித்தேன். அதன்படி போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற எனது கனவினை எனது 3 மகள்களும் நிறைவேற்றியுள்ளனர். எனது மகனுக்கும் போலீஸ் வேலைக்காக பயிற்சி கொடுத்து வருகிறேன். அடுத்த மாதம் நடக்க இருக்கும் போலீஸ் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளார். அந்த தேர்வில் கலந்து கொண்டு என் மகன் நிச்சயம் தேர்ச்சி பெற்று போலீஸ் வேலையில் சேருவான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விஷ வண்டுகள் பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு.
- நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் விஷ வண்டுகள் தொடர்ந்து பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
உடன் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி செயலர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாச னிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர்.
மனுவின் பேரில் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு போலீசார் இணைந்து கங்களாஞ் சேரிரியில் காலனி தெரு, பூண்டி, கீழத்தெரு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.
- குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி பாராட்டு தெரிவித்தார்.
- தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உதவி நிலைய டாக்டர் மனோஜ் குமாரின் கிளினிக் மற்றும் வீடு உள்ளது. பா.ஜ.க. ஆதரவாளரான இவர் தனக்கு சொந்தமான 2 கார்களை கிளினிக் அருகில் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்று விட்டார்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் முகத்தை மூடியபடி வந்து டாக்டர் மனோஜ்குமாரின் காருக்கு தீ வைத்து விட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அனைவரும் வந்து தீயை அனைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். இதில் முதற்கட்டமாக ராமநாதபுரம் கேணிக்கரையை சேர்ந்த சீனி முகம்மது மகன் அப்துல் ஹக்கீம் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் இப்ராகிம் , அப்துல் அஜிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த ராமநாதபுரம் காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சித்திரவேல் உள்பட 10 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1. லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, சான்றிதழை டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழங்கி பாராட்டினார்.
அப்போது தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.
- சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
- சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் வருகிற நவம்பர் 6-ந் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.
- நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
- அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சேலம்:
சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணி–யாற்றி வந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 49).
இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயச்–சந்திரன், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா இவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஏட்டு ஜெயச்சந்திரன் மனைவி காயத்ரி சேலம் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல–கத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு ஜெயசூர்யா என்ற மகனும், சினேகா என்ற மகளும் உள்ளனர். ஜெயச்சந்திரன் கடந்த 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருமங்கலத்தில் எல்லை பாதுகாப்பு படைவீரர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
- இதில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் விடத்தகுளம் ரோடு மீனாட்சி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது48). எல்லை பாதுகாப்பு படைவீரர். இவரது மனைவி தேவி (45). இவர்களது மகள் மோனிஷா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் மோனி ஷாவை சென்னையில் உள்ள கணவர் வீட்டில் விட்டு வருவதற்காக கடந்த 30-ந் தேதி முருகேசன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முருகேசன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, லேப்டாப் உள்ளிட்டவைகளை திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த முருகேசன் தனது வீட்டில் நகை கொள்ளை போனது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உடையார்பாளையத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
- ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நெடுஞ்சாலையில் தத்தனூர் காலேஜ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தியது, ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாகவும், விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினர். பின்னர் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்."
- கடந்த 1-ம் தேதி உள்ளாட்சி தின சிறப்பு கிராம கூட்டம் நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவில் நடைபெற்றது.
- அந்த கிராம சபை கூட்டத்திற்கு வந்த 3-வது வார்டு கவுன்சிலர் வேணியின் கணவர் ரமேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவைச்சேர்ந்தவர் முருகேசன்( 50 ).இவரது மனைவி வசந்தா (46) .இவர் நடந்தை ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி உள்ளாட்சி தின சிறப்பு கிராம கூட்டம் நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவில் நடைபெற்றது . அப்போது அந்த கிராம சபை கூட்டத்திற்கு வந்த 3-வது வார்டு கவுன்சிலர் வேணியின் கணவர் ரமேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அவர் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நோட்டை பிடுங்கி கிழித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடந்தை ஊராட்சி தலைவர் வசந்தா நல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ரமேஷ் பதுங்கி இருந்த இடத்தை பற்றி தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
- புகையிலை பொருட்களை ஏற்றி கடைகளுக்கு எடுத்து செல்ல தயார்.
- ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 14 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்.
சீர்காழி:
சீர்காழி அருகே தைக்கால் கிராமம் ஜாகிர்உசேன் தெருவை சேர்ந்தவர் முஹம்மதுயாசின் (வயது 44).
இவர் தைக்காலில் உள்ள அவரின் வீட்டிற்கு அருகே அவருக்கு சொந்தமான காரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஏற்றி கடைகளுக்கு எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருந்துகொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில், எஸ்.பி.யின் தனி பிரிவு படையினர் மற்றும் கொள்ளிடம் சிறப்பு பிரிவு போலீசார் திலகர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் விற்பனைக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த முகமதுயாசினை கைது செய்து, காருக்குள் வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 14 மூட்டை புகையிலைப் பொருட்களை பறிமுதல்செய்தனர்.
- வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.
- ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார்.
சேலம்:
சென்னை அம்பத்தூர் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.
இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டார். அவர் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார்.
இதையடுத்து அந்த போலி கூட்டுறவு வங்கியில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே ஊரக வேளாண் விவசாயிகள் கூட்டுறவு சங்க லிமிடெட்டின் என்ற பெயரில் கிளை வங்கி செயல்பட்டது தெரியவந்தது. இங்கு கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள், நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை நடத்தினர்.
அப்போது வங்கி மேலாளர் விமல்ராஜ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
- புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
- போலீசார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த கலைக்திரவன் மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணி மாறுதல் பெற்று சென்றார். இதனையடுத்து தர்மபுரி போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த ராஜா சோமசுந்தரம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்."