search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police quarrel"

    • அண்ணாமலையின் உருவபொம்மையை அதிமுகவினர் நடுரோட்டில் எரித்தனர்.
    • தடுக்க முயன்ற போது போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    மானாமதுரை:

    கடந்த இரண்டு நாட்கள் முன்பு அண்ணாமலை எதிர்கட்சியான அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசியதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், அதிமுக நிர்வாகிகள் சுமார் 50- க்கும் மேற்பட்டோர் அண்ணாமலையின் உருவபொம்மையை நடு ரோட்டில் வைத்து எரித்தும், காலணிகளால் அடித்தும் அதிமுகவினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    அப்போது இதை தடுக்க முயன்ற போது போலீசாருக்கு, அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் அதிமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அண்ணாமலை உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றனர்.

    அப்போது போலீசாருக்கு, அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ராணிப்பேட்டை, அருப்புக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலும் அண்ணாமலையை எதிர்த்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×