என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant"

    • சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
    • சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

    கோவை

    கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (வயது 31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகினார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒரு ஆண்டுகளாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். இதனை அறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • காடையாம்பட்டி கரட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன். டிப்பர் லாரி உரிமையாளர்.
    • கோபிகாஸ்ரீ (வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கரட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன். டிப்பர் லாரி உரிமையாளர்.

    4 மாத கர்ப்பிணி

    இவருக்கும் தாசசமுத்தி ரம் பகுதியை சேர்ந்த சந்திரன்- சத்தியா ஆகியோ ரது மகள் கோபிகாஸ்ரீ (வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. கோபிகா ஸ்ரீ 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் கோபிகாஸ்ரீயின் தந்தை சந்திரனின் பாட்டி மெல்லியம்மாள் என்பவர் நேற்று முன்தினம் இரவு இறந்துவிட்டார். இதற்கு துக்கம் விசாரிக்க தனது தந்தை வீட்டிற்கு செல்ல வேண்டுமென கோபிகாஸ்ரீ கூறியதாக தெரிகிறது.

    வாக்குவாதம்

    இதற்கு மணிகண்டன், தனது தந்தை மாரியப்பனுக்கு உடல்நிலை சரியில்லை, அவரைப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணிகண்டன் தனது மனைவி கோபிகா ஸ்ரீயை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

    தற்கொலை

    இதுபற்றி கோபிகா ஸ்ரீ தனது தந்தை வீட்டாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து நேற்று கோபிகா ஸ்ரீயை அவரது கணவர் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

    பின்னர் மதியம் மெல்லி யம்மாள் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது, கோபிகா ஸ்ரீ உடல்நிலை பாதிக்கப்பட்டு காடை யாம்பட்டி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அவரது கணவன் வீட்டார், சந்திரன் வீட்டாரிடம் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து சந்திரன் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, கோபிகா ஸ்ரீ இறந்து உள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து கேட்ட போது, கோபிகாஸ்ரீ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

    மறியல்

    இதனால் ஆத்திரமடைந்த கோபிகா ஸ்ரீயின் தந்தை சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்ப தாகவும் அவரது சாவிற்கு காரணமான கணவர் மணிகண்டன், மாமனார் மாரியப்பன், மாமியார் அலமேலு ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கூறி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் விசாரணை

    இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, கோபிகாஸ்ரீயின் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் நடந்து 7 ஆண்டுகளுக்கு குறைவாக இருப்பதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர். அவர் இதுபற்றி விசாரணை நடத்த உள்ளார். கோபிகா ஸ்ரீ யின் கணவர் மணிகண்டன், மாமனார் மாரியப்பன், மாமியார் அலமேலு ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. 4 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கர்ப்பிணிகளுக்கு அரசு பரிசு பெட்டகத்தை கவுன்சிலர் போஸ் முத்தையா வழங்கினார்.
    • தி.மு.க. வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 84-வது வார்டில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வார்டு கவுன்சிலர் போஸ் முத்தையா குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

    பின்னர் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு அரசின் மருந்து பெட்டகப்பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் மருத்துவர்கள் அம்பிகா, வினோத், வார்டு உதவி பொறியாளர் முருகன், தி.மு.க. வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    புதிதாக திறக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை, பெண்களுக்கு கருப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் பல்வேறு நோய்களுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி மருந்துகள் வழங்கப்படம். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இல்லம் தேடி திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
    • டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம், சாப்ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்தவர் பிரசுதா பிரியா தேவி.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.

    இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குழந்தையை டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தது.

    இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை டாக்டர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கினார்.
    • முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    தமிழகம் முழுவதிலும் நூறு இடங்களில் கலைஞரின் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகளின் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

    இந்நிலையில் திருமுல்லைவாசல் அரசு பள்ளியில் நடைபெற்ற இம்முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார். சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன், பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி முகாமினை தொடங்கிவைத்தார்.

    முகாமில் பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கினார். இதில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி திமுக நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மலர்விழி திருமாவளவன் பங்கேற்றனர். முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அஜித்பிரபுகுமார் வரவேற்றார். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

    • கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
    • கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப கால ஹார்மோன்களால் ஏற்படுகிறது

    கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்களோடு, உடல் சில பிரத்யேக அறிகுறிகளை வெளிப்படுத்தி, சில அசௌகரியங்களுக்கு உட்படுவதையும் உணரலாம்.

    கர்ப்ப காலத்தில் தோன்றக் கூடிய பொதுவான அசௌகரியங்களுள், வயிறு, அடிவயிறு மற்றும் கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் தசைப்பிடிப்புகளும் ஒன்றாகும். இந்த தசைப்பிடிப்புகள் வலிமிகுந்தவையாக இல்லாதிருப்பினும், பல நேரங்களில் அசௌகரியமாக உணர்வதற்கு இவையே முக்கிய காரணிகளாகும்.

    கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப கால ஹார்மோன்களால் ஏற்படுகிறது. வேலை செய்யும் பெண்கள் குறிப்பாக நெடு நேரம் காலை தொங்கவிட்டபடி அமர்ந்து வேலை செய்யும் பெண்கள் சிறிது சுடுநீரில் உப்பிட்டு அதில் பாதங்களை சிறிது நேரம் வைத்துக் கொண்டிருப்பது, பாதங்களை மேல்நோக்கி லேசாக அழுத்துவது போன்றவை அவர்களுக்கு தசை பிடிப்பு வராமல் தடுக்கக்கூடிய சிறு சிறு பயிற்சிகள் ஆகும் .

    'சோம்பல் முறிப்பது' என்ற உடலை 'ஸ்ட்ரெட்ச்' செய்யாமல் இருக்க வேண்டும் . அவ்வாறு செய்தால் தசைபிடிப்பிற்கான வாய்ப்பு அதிகம். அது தவிர வெயில் காலத்தில் ஏராளமான நீர்ச்சத்து உள்ள பழங்கள் , ஜூஸ் போன்றவையும் அல்லது எதுவுமே பிடிக்காவிட்டாலும் வெறும் தண்ணீரையாவது அடிக்கடி குடித்து கொண்டே இருப்பது மிகவும் முக்கியமாகும்.

    அழுத்தம் தரக்கூடிய சூழல்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. ஏனெனில், உடலில் ஏற்படக்கூடிய தசைப்பிடிப்பை அதிகமாக்கக்கூடிய முக்கிய காரணங்களுள் மன அழுத்தமும் ஒன்று. மனதை அமைதியாக வைக்கக்கூடிய, இசையை ரசிப்பது போன்ற எளிய வழிமுறைகள் மூலம் எப்போதும் மனமகிழ்வோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வேலைப்பளுவைக் குறைத்து, மனதை அமைதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஹை ஹீல்ஸ் எனப்படும் குதியுயர்ந்த செருப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சில குறிப்பிட்ட மருந்துகள் குறிப்பாக மெக்னீசியம் உள்ள மருந்துகள் இந்த தசைப் பிடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. அத்துடன் கால்சியம் மாத்திரைகளையும் சரிவர எடுத்துக் கொள்ளும் பொழுதும் இந்த தசை பிடிப்புக்கான வாய்ப்பு குறையும்.

    தசைப்பிடிப்புகளை எவ்வித சிரமுமின்றி குணமாக்க, தினமும் உணவில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருள்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழங்கள், அதிக பொட்டாசியச் சத்து கொண்டவையாகக் கருதப்படுகின்றன. உடலின் கால்சியத் தேவைகளுக்கு, வஞ்சிர மீன் வகைகள், பச்சை இலைகள் நிறைந்த காய்கறிகள், பாதாம் பருப்பு, பால் பொருட்கள் மற்றும் நெத்திலி மீன் வகைகளை உணவில் நிறையச் சேர்த்துக் கொள்ளலாம்.

    தொழில்முறை வல்லுநர் ஒருவரால் தரப்படும் மசாஜ், கர்ப்பப்பைத் தசைகள் மற்றும் தசைநார்கள், கெண்டைக்கால் பின் தசைகள் மற்றும் கால் தசைகளைத் தளர்த்தி, தசைப்பிடிப்புகளை நீக்கக்கூடியதாகும். தினமும் ஒரு வேளை இவ்வாறு மசாஜ் செய்து வந்தால், வலி மற்றும் அசௌகரியத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

    • முதியவர் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர்,

    கோவை அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டின் அருகே செல்வராஜ் (வயது 55) என்பவர் குடியிருந்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் இவர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரிடம் பேசி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட செல்வராஜ், மாணவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்ட அவர் மாணவியை மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி சென்றார்.

    இதனால் பயந்து போன மாணவி இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட முதியவர், மாணவியிடம் இதுபோன்று 3 முறை அத்துமீறி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி தனது பெற்றோருடன் கேரளாவுக்கு சென்று விட்டார். கடந்த சில தினங்களாக மாணவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

    இதையடுத்து அவரது தாயார் கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.

    அப்போது அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியான தாய், மாணவியிடம் விசாரித்தார்.

    மாணவி தனக்கு நடந்த அவலங்களை தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். உடனே மாணவியின் தாய் சம்பவம் குறித்து அன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி விட்டு இந்த வழக்கினை மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்ப்பிணிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி 100 அடி ரோட்டில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனை உள்ளது.

    இங்கு புதுச்சேரி மட்டுமின்றி மாநில எல்லை பகுதியான தமிழகத்தை சேர்ந்த வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வந்து பிரசவம் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் தமிழக பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் நேற்று காலை ராஜீவ்காந் தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனைக்கு வந்து பதிவு செய்தனர். பின்னர் பரிசோதனைக்காக காத்திருந்தனர். அவர்களை மதியம் 1.30 மணி வரை அழைக்கவில்லை.

    ஆனால் புதுவையை சேர்ந்த கர்ப்பிணிகளை மட் டும் அழைத்து பரிசோதனை செய்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் சிலரும், அவர்களது உறவினர்களும் நேற்று மதியம் 1.30 மணியளவில் மருத்துவமனையை விட்டு வெளியேறி எதிரே 100 அடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஒரு டாக்டர் பணியில் இருக்கும்போது மட்டும் தான் தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்.

    கர்ப்பிணிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போக்குவரத்து பாதிப்பு இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அரசு மகளிர் மற்றும் குழந் தைகள் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் நாராயணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதா ன பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. 

    • நல்வாழ்வுத்துறையின் சார்பில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் 5.௦ தொடங்கப்பட்டது.
    • 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் 5.0 கீழ் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுபட்ட தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தின்படி விடுபட்ட மற்றும் பகுதி தடுப்பூசி போடப்படாத 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1897 குழந்தைகள் மற்றும் 305 கர்ப்பிணி பெண்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் சுற்றான ஆகஸ்ட் 7 முதல் 14 வரை தடுப்பூசி வழங்கப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடைபெறும்.

    மேலும் இந்த விபரங்களை யு-வின் என்ற இந்திய அரசின் கணினி மென்பொருள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்த சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜிகிரியப்பனவர் , துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், மாநகர நல அலுவலர் கௌரிசரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தாமோதரன்(வயது23) என்ற வாலிபர் சிறுமியுடன் பழகி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது
    • சிகிச்சையின் போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    பல்லடம்:

    பல்லடத்தை அடுத்த கிராமப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையின் போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் போலீசார் விசாரணையில், பல்லடத்தைச் சேர்ந்த தாமோதரன்(வயது23) என்ற வாலிபர் சிறுமியுடன் பழகி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
    • கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி கல்பனா (வயது 33). கல்பனா தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் கல்பனாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று கல்பனாவுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்பனாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியிலே பரிதாபமாக கல்பனா உயிரிழந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.
    • அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் 22-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் 22-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில் பவித்ரா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    வரதட்சணை

    இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓம லூருக்கு வந்த மோகன்ராஜை அவரது பெற்றோர் மறைத்து வைத்து கொண்ட தாகவும், இதுகுறித்து கேட்டபோது தன்னை மிரட்டி 100 பவுன் நகை ரூ.20 லட்சம் பணம் வாங்கி வா என கூறியதாகவும் பவித்ரா மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டிடம் புகார் அளித்தி ருந்தார். இந்த நிலையில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி நேற்று முன்தினம் முதல் கணவரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மோகன்ரா ஜின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

    வழக்கு பதிவு

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீ சார் நேரில் சென்று விசா

    ரணை நடத்தினர். தொடர்ந்து பவித்ராவின் கணவர் மோகன்ராஜ், அவ ரது தந்தை முருகன், தாய் சாரதா என்கிற சத்தியா, உறவினர்கள் பூபதி, சவுமியா, செல்வி, பிரபு ஆகிய 7 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

    ×