என் மலர்
நீங்கள் தேடியது "Prison"
- 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
- இந்த வழக்கில் வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
குள்ளனம்பட்டி:
வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35).இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.மேலும் இவர் மீது திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி சரண் விசாரித்தார்.அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.அதில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு போச்சோ சட்டத்தின் கீழ் (பலாத்காரம்) 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும்,இந்திய தண்டனைச் சட்டம் 363ன் கீழ் (கடத்தல்) 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
- வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது
- பாலியல் தொந்தரவு வழக்கில்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பெண்ணுக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிம ன்றம் தீர்ப்பளித்தது.
உடையார்பாளையம் அருகேயுள்ள பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் இளையராஜா(வயது25). கடந்த 2021 ஆம் ஆண்டு இவரை, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு வழக்கி ல் ஜெயங்கொண்டம் அனை த்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்ற த்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளி இளையராஜாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்ட னையும், ரூ.5,000 அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி இளையராஜா திருச்சி மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரை ஞர் ம.ராஜா ஆஜராகினார்.
- மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்த அமைதி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- பயிற்சி வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டு நடக்கிறது.
மதுரை
சிறைவாசிகளை நல்வ–ழிப்படுத்தும் வகையில் பல் வேறு விதமான சீர்தி ருத்த பணிகளை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிறை வாசிகளின் மனதை ஆற்றுப் படுத்தும் விதமாகவும், அவர்களை அமைதிப்ப டுத்தி நல்வழிப்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி உலக அமைதி பேச்சாளர் பிரேம் ராவத் குழுவினர் மூலமாக தமிழ கம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைக ளிலும் அமைதி கல்வி திட்டம் என்ற பெயரில் பயிற்சி வகுப்பு அறிமுகப்ப டுத்தப்பட்டு நடக்கிறது.
இதில் அமைதி, மதிப்பை உணர்தல், உள் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளுதல், தன்மா னம், தேர்ந்தெடுத்தல், நம் பிக்கை, திருப்தி ஆகிய தலைப்பின் கீழ் தினந்தோ றும் 45 நிமிட காணொளி சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இறுதி நாளான நேற்று இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறைவாசிகளுக்கு பிரேம் ராவத்தின் இளைஞர் அமைதி அமைப்பின் சார் பாக சான்றிதழ்களை மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் மத்திய சிறை கண்கா ணிப்பாளர் பரசுராமன் சிறை அலுவலர் மற்றும் நல அலுவலர்கள் கலந்து கொண்டு மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண், பெண் சிறைவாசிகள் சுமார் 200 பேருக்கு சான்றி–தழ்களை வழங்கினர்.
- செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
- குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி :
சிறையில் உள்ள சிறுபான்மையினரை விடுவிக்க அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மாவட்ட துணைத் தலைவர் ஷபி, கல்வியாளர் அணி மாநில தலைவர் மாலிக் பாஷா, மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி, தொகுதி தலைவர் சல்மான், செயற்குழு உறுப்பினர் அசாருதீன், நகர தலைவர் சலிம் பாஷா, நகர பொருளாளர் அப்துல் ரஹீம், ஊடக அணி பொறுப்பாளர் குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
- பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்து வந்தார்.
- வைத்தியநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன்(28), திருமணமானவர்.இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்து வந்தார்.
சிறையில் இருந்து ஜாமீனில் வந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி சென்றதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக தேடப்பட்டு வந்தார்.இந்த நிலையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்த டி.எஸ்.பி.சபியுல்லா உத்தரவின் பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி, போலீஸ்கா ரர்கள் வைத்திய நாதன் மற்றும் சுரேஷ் ஆகி யோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்ப டை போலீசார் கன்னியா குமரி, நாகர் கோவில், திரு வண்ணா மலை ஆகிய இடங்களில் தேடி மணி கண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மணிகண்டனை கைது செய்த தனிப்படை போலீ சாரை பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா பாராட்டினார்.
- வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளைச் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
வடமதுரை திடீர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வீரபாபு என்ற குட்டி (வயது 35) என்பவர் பைக் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு இவருக்கும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு கைதிக்கும் எங்கே தூங்குவது என்ற பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். வீர பாபுவை மற்றொரு தரப்பினர் கடுமையாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து சிறைக்காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
- அசானஞ்சே தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு சுதந்திர மனிதனாக திரும்புவார் என்று தெரிகிறது
பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் ஆவார்.
இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்தது. இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் சிக்கிய அசாஞ்சே கைது செய்யயப்படுவதில் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈகுவேடார் அரசின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.
அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஈகுவேடார் அரசு கடந்த 2019 ஆண்டு அதை வாபஸ் பெற்றதை அடுத்து அதுவரை கைதில் இருந்து தப்பித்துவந்த அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அரசு பிரிட்டனிடம் கேட்டு வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் அதற்கு ஒப்புதல் அளித்தது.
ஆனால் இதை எதிர்த்து அசாஞ்சே தரப்பில் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அமெரிக்காவுக்கு அனுப்பாடாமால் இதுநாள்வரை வரை லண்டன் சிறையிலேயே அசாஞ்சே அடைபட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த பிரிட்டன் நீதிமன்றம், அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது, குறைந்த பட்ச சிறை தண்டனையே வழங்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமேரிக்காவிடம் கோரியது. அசாஞ்சேவுக்கு ஆதரவாக சர்வதேச சமூகமும் குரல் கொடுத்து வந்தது.

இந்த விவகாரம் இவ்வாறாக புகைந்து வந்த நிலையில் தற்போது அசாஞ்சே , தன்னை விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து நேற்று இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அசாஞ்சே இன்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

நாளை அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் குறைந்தபட்ச சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அசாஞ்சே ஏற்கனவே லண்டனில் சிறை தண்டனை அனுபவித்ததால், அமெரிக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதும், ஜூலியன் அசாஞ்சே தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு சுதந்திர மனிதனாக திரும்புவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார்.
- விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெட்டிக்கடைக்காரரிடம் இருந்து ரூ 1500 லஞ்சம் வாங்கி கைதான உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து அவர் விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் குருசாமி. இவரிடம் உணவு பாதுகாப்பு சான்று பெற்று தருவதாக கூறி ரூ.1500 லஞ்சம் பெற்றதாக நேற்று உத்திர உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பல மணி நேரம் விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.
இதனை அடுத்து விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.
- பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார்.
- டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார்.
பிரிட்டனில் பிரேக் அப் ஆகியும் முன்னாள் காதலனை விடாமல் தொல்லை செய்துவந்த பெண்ணுக்கு சிறை தண்டனை-0 விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நர்ஸ் வேலை பார்க்கும் சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயது பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற 54 வயது பல் மருத்துவர் தனது மனைவி இறப்புக்கு பின்னர் காதலித்து வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டதால் சோபி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

காதலனை இழக்க விரும்பாத சோபி, பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார். ஆனால் டேவிட் போனை எடுக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கண்காணிக்க அவரது காரில் டிராக்கிங் டிவிஸ் பொறுத்தியுள்ளார் சோபி. இது பத்தாது என்று டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார். டேவிட் வந்ததும் அவரின் போனை பிடுங்கும் முயற்சியில் அவருடன் சண்டை போட்டுவிட்டு ஜன்னல் வழியே குதித்து தப்பியுள்ளார்.

சோபியின் இந்த அடாவடித்தனமான தொல்லைகளை தாங்க முடியாமல் மன உளைச்சலில் டேவிட் சோபி தன்னை தொடர்ந்து பின் தொடர்வதால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாவதும் டேவிட் அளித்த புகாரின் பேரில் போலீசார் சோபியை கைது செய்தனர். வீட்டை உடைத்து உள்ளே சென்றது உள்ளிட்ட குற்றங்கள் நிரூபணமானதால் சோபிக்கு 1 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அக மொத்தம் சிப்பு நடித்த வல்லவன் படத்தில் ரீமா சென் நடித்திருந்த கீதா கதாபாத்திரத்தை ரியல் லைபில் வாழ்ந்திருக்கிறார் சோபி.
- டியூசன் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்
- ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளார்.
குஜராத்தில் 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி குஜராத் உத்வாடா ரயில் நிலையத்திற்கு அருகே செல்லும் தண்டவாளத்திற்கு அருகில் 19 வயது இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் பரிசோதனையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை தொடர்பாக வல்சாத் மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. உத்வாடா ரெயில் நிலைய சிசிடிவிகள் ஆராயப்பட்டன. பெண்ணின் உடல் அருகே மீட்கப்பட்ட அதே மாதிரியான ஆடைகளை அணிந்த நபர் ஒருவர் கொலை நடந்ததற்குப் பின்னர் ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

அந்த சந்தேகத்துக்கிட்டமான நபரை தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. தேடுதல் வேட்டையின் இறுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி குஜராத்தின் வல்சாத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டார். அந்த நபர் ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்த ராகுல் கரம்வீர் ஜாட் என்று கண்டறியப்பட்டது.

கொலை நடந்த அன்றைய தினம் அப்பகுதியில் தான் வேலை செய்த ஓட்டலில் தனது சம்பளத்தை வாங்குவதற்காக வந்திருந்த அவர் டியூசன் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார் . அந்த பெண் தனது செல்போனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது தன்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்ததாக கருதி அவரை கொலை செய்ததாக ராகுல் தெரிவித்துள்ளார்.
ராகுல் கரம்வீர் ஜாட் இந்த ஒரு கொலை மட்டுமல்லாது குறைந்தது 5 பேரை கொலை செய்ததைப் போலீசிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கைது செய்யப்படும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு முந்தைய தினம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரிடம் கொள்ளையடித்து அவரை கொலை செய்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் இறுதியில் மகாராஷ்டிராவில் சோலாப்பூர் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் மேற்கு மேற்கு வங்காளம் ஹவுரா ரெயில் நிலையம் அருகே காதிஹார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பீடி கேட்டு குடுக்கவில்லை என முதியவர் ஒருவரை கொலை செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் முல்கி பகுதியில் ரெயில் பயணி ஒருவரை கொலை செய்துள்ளார்.
பெரும்பாலும் ஒரு இடத்தில் இருக்காமல் பயணித்துக் கொண்டே இருப்பதால் அவரை பிடிப்பதில் அந்தந்த மாநில காவல்துறையினருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சமயங்களில் ரெயில் நிலைய நடைமேடைகளிலேயே அவர் இரவில் தூங்கியுள்ளார்.
சுமார் 2000 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பின்னர் அவர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார். ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்த இவர் இந்த ஆண்டு சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ராகுல் கரம்வீர் ஜாட்-டின் தந்தை காலமான பின்னர் குற்ற செயல்களில் ஈடுபட இவரை குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஐந்தாம் வகுப்பில் படிப்பை நிறுத்திவிட்டு, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். தற்போது இவர் மீது 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- கதவருகே அவன் முகத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டு அவனை பலாத்காரம் செய்யும்படி ஒரு பெரிய கைதியிடம் கேட்பார்கள்
- கைதிகளின் கண்ணியம் மற்றும் நம்பிக்கையை சுவடே இல்லாமல் அழிப்பதே இந்த சித்திரவதையின் நோக்கமாகும்.
சிரியாவில் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உள்நாட்டு போர் 13 வருடங்கள் கழித்து வெற்றி பெற்றுள்ளது. தலைநகர் டமாஸ்கஸ் - ஐ நேற்று கைபற்றிய கிளர்ச்சியாளர்கள் வெற்றியை அறிவித்துள்ளனர்.
ஆசாத் குடும்பத்துடன் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா இதே போன்றதொரு முடிவை எட்டினார்.
ஷேக் ஹஸீனாவின் ரகசிய சிறைகளாக கண்ணாடிகளின் வீடு திகழ்ந்து வந்த நிலையில் அவற்றில் சித்திரவதை செய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டனர். history repeats itself என்ற கூற்றுக்கு இணங்க தற்போது வீழ்ந்துள்ள சிரியாவின் ஆசாத் அரசும் வீழ்ந்துள்ளது.

மனித கசாப்பு முகாம்
டமாஸ்கஸ், ஹமா மற்றும் அலெப்போவிற்கு அருகிலுள்ள அரசாங்க சிறைகளில் பல ஆண்டுகளாக சித்திரவதைகளை அனுபவித்த கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ளனர்.
இந்த சிறைச்சாலைகளில், மிகவும் பிரபலமானது 'சைட்னயா' [sednaya]. இது வெகுஜனத்தால் "மனித கசாப்பு கூடம்" [ human slaughterhouse] என்று குறிப்பிடப்படுகிறது.
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகளுக்கான Syrian Observatory இன் 2021 அறிக்கையின்படி, சிறைகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தூக்கிலிடப்பட்டும் வேறு வழிகளில் உயிரிழந்தும் உள்ளனர்.
இதில் மனித கசாப்பு கூடம் என்று அறியப்படும் சைட்னயாவில் மட்டுமே 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

2011 ஆம் ஆண்டு முதல் சைட்னாயாவில் நடத்தப்பட்ட கொலை, சித்திரவதை, காணாமல் ஆக்கப்படுத்தல் ஆகியவை பொதுமக்களுக்குக் கட்டுக்குள் வைக்க ஆசாத் அரசு மேற்கொண்ட அடக்குமுறையின் ஒரு பகுதியாகவும் அரசின் கொள்கையாகவுமே இருந்தது என்றும் சைட்னாயாவில் நடந்தவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
சைட்னயா
சைட்னயா ராணுவ சிறைச்சாலையில் சிவப்பு நிற மற்றும் வெள்ளை நிறம் கொண்ட இரண்டு தடுப்பு மையங்கள் இருந்ததாக அம்னெஸ்டி அறிக்கை கூறுகிறதது.
2011 இல் கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து கைது செய்யப்பட்ட பொதுமக்கள் ஒரு சிவப்பு கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ராணுவத்தினர் வெள்ளை கட்டிடத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
சிவப்பு கட்டிடத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் ரகசிய மரணதண்டனையில் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறுகிறது
டமாஸ்கஸின் அல்-கபூன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள இராணுவக் கள நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படும்
சிறை அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நாளை 'பார்ட்டி' என்று குறிப்பிடுகின்றனர்.
பார்ட்டி
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிவப்பு கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அறைக்கு கொண்டு வரப்படுவார்கள், அங்கு அவர்கள் நள்ளிரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரங்களில் கடுமையாக தாக்கப்படுகிறார்கள்.
அதன்பின் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு டெலிவரி டிரக்குகள் அல்லது மினிபஸ்களில் வெள்ளை கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறார்கள். அங்கு அடித்தளத்தில் உள்ள ஒரு அறைக்குள் இறுதியில் அவர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது
இது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை நடக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், 20 முதல் 50 பேர் வரை தூக்கிலிடப்படுகிறார்கள். இந்த செயல்முறை முழுவதும், பாதிக்கப்பட்டவர்கள் கண்கள் மூடப்பட்டிருக்கும். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மட்டும் கூறப்படும்.

அவர்களின் மரணதண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது அவர்களுக்குத் தெரியாது. உடல்கள் ஒரு டிரக்கில் ஏற்றப்பட்டு, திஷ்ரீன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன
செப்டம்பர் 2011 முதல் டிசம்பர் 2015 வரை சைட்னாயாவில் 5,000 மற்றும் 13,000 பேர் சட்டத்திற்கு புறம்பாக தூக்கிலிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சைட்னாயாவில் மரணதண்டனை செயல்முறை இரகசியமானது மற்றும் நேரடியாக அதிகாரிகளுக்கும் சிரியாவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும். சிவப்பு கட்டிடத்தில் அவர்கள் அடிக்கப்படுவதை பார்க்கும் சாதாரண சிறைக் காவலர்களுக்கு நள்ளிரவில் வெள்ளை கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு கைதிகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியாது.
சித்ரவதை
சைட்னயாவில் உள்ள சிவப்பு கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விதவிதமான சித்திரவதைகள் நடக்கின்றன. வழக்கமாக கடுமையான அடித்தல் மற்றும் பாலியல் வன்முறை மூலம் அவர்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
அவர்களுக்கு போதுமான உணவு, தண்ணீர், மருந்து, மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மறுக்கப்படுகின்றன, இது தொற்றுநோய் மற்றும் நோய் பரவுவதற்கு வழிவகுத்தது. சித்திரவதை செஷன்களின்போது அமைதி கடைப்பிடிக்கப்படுகிறது. பல கைதிகள் தீவிர மனநோய்களுக்கு ஆளாகின்றனர் .
அதிகபட்ச உடல் மற்றும் உளவியல் துன்பங்களை ஏற்படுத்தும் வகையில் சைட்னயாவின் சித்திரவதை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கைதிகளை அவமானப்படுத்தி அவர்களின்கண்ணியம் மற்றும் நம்பிக்கையை சுவடே இல்லாமல் அழிப்பதே இந்த சித்திரவதையின் நோக்கமாகும்.

சைட்னயாவில் இருந்து வெளியே வந்த கைதிகள்
கைது செய்யப்பட்டபோது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்த கைதி ஒருவர், சைடன்யாவில் தங்களுக்கு என்ன நடந்தது என எந்த கைதியும் கூற முன்வர மாட்டார்கள். அந்த அளவுக்கு அவமானகரான செயல்களை அவர்கள் சந்தித்துள்ளனர் என்று தெரிவிக்கிறார்.
காவலர்கள் , அனைவரையும் எங்கள் ஆடைகளை களைந்துவிட்டு ஒவ்வொருவராக குளியலறைக்குச் செல்லச் சொல்வார். நாங்கள் குளியலறைக்குச் செல்லும்போது, அவர்கள் ஒரு சிறிய வயது வாலிபனை தேர்ந்தெடுத்து அவனை கதவருகே நிற்கச் சொல்வார்கள்.
கதவருகே அவன் முகத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டு அவனை பலாத்காரம் செய்யும்படி ஒரு பெரிய கைதியிடம் கேட்பார்கள்.. இது தங்களுக்கு நடந்ததென்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் அது அடிக்கடி நடந்தது. மற்றும் இதை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட கைதிகள் யாரும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று அந்த கைதி கூறுகிறார்.
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு மத்தியில், கிளர்ச்சிப் போராளிகள் சைட்னயா உள்ளிட்ட சிறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கைதிகளை விடுவித்துள்ளனர். சைட்னாயாவிலிருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் அவரது குடும்பத்தைப் பற்றி அவரிடம் கேட்கும்போது அவர் குழப்பமடைந்து பேசுவதற்கு சிரமப்படுவது பதிவாகி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளும் சிறையில் இருந்து வெளிவந்துள்ளனர்.
இதற்கிடையே ரஷியா தப்பிச் சென்ற ஆசாத்தின் அதிபர் மாளிகை சூறையாடப்பட்ட நிலையில் அங்குள்ள சுரங்கப்பாதை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
- விசாரணைக் கைதிகள் குற்றத்திற்கான தண்டனையில் பாதியளவு அனுபவித்திருந்தால் ஜாமின் வழங்க வேண்டும்.
- தொடர்புடைய நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகள் கைதிகளை விடுவிக்க அணுக வேண்டும்.
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி, அந்தக் குற்றத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சிறைத் தண்டனையில் பாதியை ஏற்கனவே அனுபவித்திருந்தால், அவரை விடுவிக்க வேண்டும் என்பதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் சிறைகளில் கூட்ட நெரிசல் குறையும் எனத் தெரிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிறைச்சாலை இயக்குநர் ஜெனரல்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) இன் பிரிவு 479-ன் விதிகளின் கீழ், அத்தகைய தகுதியுள்ள கைதிகளை விடுவிக்க சிறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
BNSS-ன் பிரிவு 479, ஒரு நபர் எந்தவொரு சட்டத்தின் கீழும் ஒரு குற்றத்தின் விசாரணை அல்லது விசாரணையின் போது (அந்தச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றமாக குறிப்பிடப்படாத குற்றமாக இருக்கும் பட்சததில்) அந்தக் குற்றத்திற்காகக் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தில் பாதி காலம் வரை காவலில் வைக்கப்பட்டிருந்தால், அவர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறது.
முதல் முறை குற்றவாளிகள் விஷயத்தில், அந்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு வரை காவலில் இருந்திருந்தால், அத்தகைய கைதிகள் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.
மேலும், BNSS-ன் பிரிவு 479 (3) மேற்கூறிய விசாரணைக் கைதிகளை ஜாமினில்/பிணையில் விடுவிப்பதற்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு குறிப்பிட்ட பொறுப்பை வழங்குகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 16, 2024 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டதாகவும், தகுதியுள்ள அனைத்து கைதிகளுக்கும் BNSS-ன் பிரிவு 479-ன் விதிகளின் பலனை வழங்கவும், அதன்படி அவர்களின் ஜாமின் விண்ணப்பங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.