search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private hospital bomb"

    • ஆஸ்பத்திரியில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழிங்கநல்லூர்:

    பெரும்பாக்கத்தில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு தபால் ஒன்று வந்தது. அதில் ஆஸ்பத்திரியில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி பெரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு போலீசார் விரைந்து வந்து சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. புரளி என்பது தெரிந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தில் மதுராந்தகம் அருகே உள்ள புக்கத்துரையை சேர்ந்த மேகநாதன் என்று முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் பா.ம.க. கட்சியை தறக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க. கட்சிக்கு பாடமாக வெடி குண்டு வைத்து உள்ளேன். என் சமுதாயத்துக்காக பல ஆஸ்பத்திரிகளில் வெடிகுண்டு வைத்து இருக்கிறேன் என்ற பரபரப்பு கடிதமும் இருந்தது. இதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×