என் மலர்
நீங்கள் தேடியது "public"
- ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரசேகரபுரம், தெற்குப்பட்டி, அக்ரஹாரம், முருங்கப்பட்டி, களரம்பட்டி, அணைப்பாளையம் தேவேந்திர் தெரு போன்ற பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அணைப்பாளையம் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்களிலும் புகுந்தது.
இதனால் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 3 ஆழ்துளை கிணறுகள் ஏரி தண்ணீரால் மூழ்கியது.
இதன் காரணமாக தெற்குப்பட்டி, சந்திரசேக ரபுரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க வில்லை என்றும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின்மோட்டார்களை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் தெற்குப்பட்டியில் உள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் குழாய் பதிக்க வேண்டும், அணைப்பாளையம் ஏரி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கோரிக்கை களை நிறைவேற்றித் தரக் கோரி சந்திரசேகரபுரம், அக்ரகாரம், தெற்குபட்டி, முருங்கப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள காஞ்சி சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) வனிதா தெற்குப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு புதிய பைப் லைன் உடனடியாக போட்டு தரப்படும் என்று கூறினார். அதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். கசாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
- குமாரபாளையம் வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு சாலை நுழைவுப்பகுதியில், மின் கம்பத்தை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
- பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு சாலை நுழைவுப்பகுதியில், மின் கம்பத்தை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சாலையிலும் மழைநீர் தேங்கி உள்ளதால், வேலைக்கு செல்வோர், வேலை முடிந்து வீட்டுக்கு செல்வோர் என அனைவரும் இந்த பாதையில் தேங்கிய மழைநீரில் நடந்தபடிதான், செல்ல முடியும். மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டால், தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே தாமதம் செய்யாமல், மின் கம்பத்தை சுற்றி நிற்கும் மழை நீரை அகற்றி, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் உண்ணாரவிரதம் நடைபெற்றது
- பெண்கள் உட்பட 20க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் பொதுமக்கள் அடிப்படை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி அம்மாபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் சசிக்குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உட்பட 20க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தகவலறிந்த பெரம்பலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என உறுதியளித்தார். இதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர். இந்த போராட்டம் சுமார் 5மணிநேரம் நடந்தது. பின்னர் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அளித்தனர்.
- வியாபாரிகள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களாகவே தரைக்கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுவர்.
- சாலைகளில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு;-
துணை மேயர் அஞ்சுகம் பூபதி: 51-வது வார்டில் சில இடங்களில் காலியாக உள்ள மனைகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது.
இதனால் வீட்டுக்குள் பாம்பு, விஷபூச்சிகள் படையெடுப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்கட்சி தலைவர் மணிகண்டன்: தீபாவளி நேரத்தில் தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டன.
இதற்கு மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை என கூறியது. அப்போது எப்படி இந்த கடைகள் அமைக்கப்பட்டன.
இதற்கு பதில் அளித்து ஆணையர் சரவணக்குமார் பேசும்போது, வியாபாரிகள் அவர்களாகவே கடை அமைத்தனர்.
இனி வரும் காலங்களில் தீபாவளி நேரத்தில் வியாபாரிகள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களாகவே தரைக்கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுவர்.
இதையடுத்து கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு;-
கவுன்சிலர் கோபால்:
எனது வார்டில் பணிகள் சரிவர நடப்பதில்லை.
உடனடியாக அனைத்து பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு உடனே முடிக்க வேண்டும்.
சரவணன்: சேவப்பநாயக்கன்வாரி 3 தெருவில் சாலை வசதி இல்லாததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
எனவே அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு சாலை வசதி அமைத்து தர வேண்டும்.
யு.என்.கேசவன் :
எனது வார்டில் சாலைகள் மோசமாக உள்ளது.
அதனை சீரமைக்க வேண்டும். சாலைகளில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
எனவே குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
மழை காலம் தொடங்க உள்ளதால் மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் தேங்கினால் அதனை உடனுக்குடன் வெளியேற்ற தேவையான கருவிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
காந்திமதி :
கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே உள்ள தற்காலிக மீன்மார்க்கெட்டால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே வேறு இடத்தில் மீன் மார்க்கெட்டுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும்.
மேலும் இந்த பகுதியில் சாலைகள் பழுதடைந்துள்ளது.
அதனையும் சீரமைக்க வேண்டும்.
ஜெய்சதீஷ் :
எனது வார்டில் பாதாள சாக்கடை ஆழ்துறை குழிக்கான மூடி கண்டுபிடிக்கப்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதே நேரத்தில் சில இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்காக தோண்டப்பட்ட இடங்களில் பணி முடிந்தும் சரிவர மூடாப்படாதால் சாலை சேதமடைந்துள்ளது.
அதனை சரி செய்ய வேண்டும்.
ரம்யா சரவணன் :
தஞ்சை மாதவராவ் நகரில் இருந்து அண்ணா நகர் வரையிலான பகுதிகளில் மழைநீர் வடிகாலை சரி செய்ய வேண்டும்.
கடன் இல்லாத மாநகராட்சி
கவுன்சிலர்கள் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது;-
தமிழகத்தில் கடன் இல்லாத மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகளை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது.
- பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் நல்லூர் பகுதி 3-ம் மண்டலத்தில் அமைந்துள்ள 46வது வார்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தை சுற்றிலும் சுமார் 5000 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். அந்த நிலத்தில் அனைத்து வகையான குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கொசு தொல்லை மற்றும் பல நோய்கள் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி மூலமாக எடுக்கப்படும் கழிவு நீர்கள் இங்கே வந்து கொட்டப்படுகின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. எத்தனையோ முறை பொதுமக்கள் சார்பாக தடுத்து பார்த்தும் குப்பைகள் மற்றும் கம்பெனி கழிவுகள், மீன் கழிவுகள், கோழி கழிவுகள் என அனைத்து வகையான கழிவுகளும் கொட்டும் இடமாக அந்த இடம் மாறி வருகிறது. அதுபோக அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்ச நிலையையும் நோய் தொற்று பரவும் அபாயத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது . திருப்பூர் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பஸ் நிறுத்தம், கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் மாநகரின் பல இடங்களில் கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவு நீரில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் காமாட்சி புரம் கல்லூரி சாலையில், மின் இணைப்புக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டி சாலை ஓரத்தில் போட்டுள்ளதால் கால்வாய் அடைத்து கழிவுநீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே மரங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
- தூய்மை பணியாளர்கள் மற்றும் பலரை பாராட்டி கவுரவித்தார்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம், உஞ்சியவிடுதி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு பேசியதாவது,
முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
அந்த வகையில் உஞ்சியவிடுதி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி சொத்து வரி செலுத்துதல், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதித்து. பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கலெக்டர் தூய்மை பாரத் இயக்கம் திட்டத்தின் கீழ் கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்த நம்ம ஊரு சூப்பர் இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மைக் காவலர்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கிராம சபை மூலம் பாராட்டி கவுரவித்தார்.
இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நமச்சிவாயம், உதவி இயக்குனர் (வேளாண்மை துறை) சுதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், ஒன்றிய குழு தலைவர் செல்வம் சவுந்தர்ராஜன், ஊராட்சி தலைவர் வெங்கடாசலம், துணைத் தலைவர் மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ணன், குமரவடிவேல், ஊராட்சி செயலர் மருதாசலமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது.
- தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.
திருப்பூர் :
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது. இதற்கு வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். இதில் 37-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து முடிந்த பணிகள் மற்றும் நடைபெற இருக்கிற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட துணை மேயர் கே.எம். பாலசுப்பிரமணியம் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
37-வது வார்டில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடுகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும். அதேபோல் சாக்கடை கால்வாய், சுகாதாரம்என அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி இளம் பொறியாளர் சுரேஷ்குமார், 54-வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம், சி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
- நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்து வருகிறார்.
கலெக்டர் ஆய்வு
வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி களை இன்று கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்டுப்பாட்டு அறை
நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் புகார் செய்ய 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் தேங்கும் மழை நீர் குறித்து புகார் செய்வதற்காக பிரத்யேக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
நீர் இருப்பு
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 3 வகைகளில் வெள்ளப் பெருக்கு ஆபத்து ஏற்படலாம். இதில் தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை 60 ஆயிரம் அடி வரை கொள்ளளவு கொண்டது. மேலும் தற்போது பாபநாசம் அணையில் 42 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணையில் 29 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
எனவே கனமழை பெய்தாலும் ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
கடந்த ஆண்டு மாநகர பகுதியில் உள்ள குளங்களில் இயற்கையான திசை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் தற்போது அவற்றை சரி செய்துள்ளோம். மேலும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளமும் தூர்வாரப்பட்டு உள்ளது.
மழை குறைவு
இதனால் மாநகர பகுதியில் வெள்ளப் பெருக்கு பாதிப்பு குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. நெல்லை மாவட்டத்தில் தற்போது வரை மழை பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டை விட தற்போது 60 சதவீதம் மழை குறைவாகவே பெய்து உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் 20 சதவீதம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மானூர், ராதாபுரம் வட்டார பகுதிகளில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளது. இந்த வட்டாரங்கள் 'ரெட் பிளாக்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்கள் என 74 இடங்கள் கண்டறியப்பட்டிருந்தன. தற்போது அவை 63 ஆக குறைந்துள்ளது.
பொதுமக்கள் கால் வாய்களில் குப்பைகளை கொட்டுவதால் மழை நீர் செல்லும் பாதை அடைத்து வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கால்வாய்களில் குப்பை களை கொட்ட வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மாரியப்பன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், பேரிடர் மீட்பு தாசில்தார் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
- 2 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்வது நல்லது.
- குழந்தைகளுக்கு 30 மில்லியும், பெரியவர்களுக்கு 50 மில்லியும் பருக வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மழைக்காலத்தில் காய்ச்சல் வருவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தொடங்கி வைத்து, அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
இதில் நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடுதல் சார்பு நீதிபதி முருகன், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சசிகுமார், மனித உரிமைகள் ஆணையம் அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் விவியன் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கூறும்போது, மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு 30 மில்லியும், பெரியவர்களுக்கு 50 மில்லியும் பருக வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
- நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
- கல்லூரி, பள்ளி பஸ்கள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
தென்காசி:
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மேல் புறம் இருந்து பாவூர்சத்திரம் மார்க்கெட் சாலை வரை செல்லும் பகுதியில் நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகே மிகவும் தாழ்வாக உயர் அழுத்த மின் வயர்கள் சென்று கொண்டு உள்ளன. நடந்து செல்லும் நபரின் தலை தட்டும் அளவிற்கு செல்வதால் உடனடியாக அதனை சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்தினர் சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் அவ்வழியே அதிகளவில் கனரக வாகனங்களான கல்லூரி, பள்ளி பேருந்துகள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை உடனடியாக மாற்றி அமைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியினர் இடையே எழுந்துள்ளது.
- அரச மர கிளைகள் மின்வயரில் உரசுவதாக கூறி சிலர்அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதாக பொதுமக்களிடம் தெரிவித்து உள்ளனர்.
- பொதுமக்கள் அரசமரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி மொட்டையாக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை குருவரெட்டியூர் பஸ் நிலையம் முன்பு கொட்டும் மழையிலும் சாலைமறியல் செய்தனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருேக உள்ள குருவரெட்டியூரில் அரசமரத்து வீதி என்ற பகுதி உள்ளது. இங்கு 150 ஆண்டுகள் பழமையான ஒரு அரச மரம் உள்ளது.
இந்த நிலையில் அரச மர கிளைகள் மின்வயரில் உரசுவதாக கூறி சிலர்அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதாக பொதுமக்களிடம் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் அவர் மின் வயரில் உரசும் கிளைகளை மட்டும் வெட்டாமல் மரக்கிளைகள் அனைத்தையும் வெட்டி மரத்தை மொட்டையாக்கினர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், மற்றும் வருவாய் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் அவர்கள் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ.வுக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசமரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி மொட்டையாக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை குருவரெட்டியூர் பஸ் நிலையம் முன்பு கொட்டும் மழையிலும் சாலைமறியல் செய்தனர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள்விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
- அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- ஜெ.பி.நகரில் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து கொள்வது வழக்கமாக உள்ளது.
அவனியாபுரம்
அவனியாபுரம் பகுதியில் உள்ள ஜெ.பி.நகரில் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து கொள்வது வழக்க மாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதினால் இப்பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் இப்பகுதி மக்கள் உதவி பொறியாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் 3 நாட்க ளாக மழைநீருடன் கலந்த சாக்கடை நீர் வெளியேறா மல் துர்நாற்றம் வீசுகிறது. இதனை கண்டித்தும், மழை, கழிவுநீரை அகற்றக் கோரியும் இப்பகுதி மக்கள் இன்று அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் உதவி பொறியாளர் செல்வ விநாயகம் நேரில் வந்து மக்களின் கோரிக்கை களை உடனே நிறைவேற்று வதாகவும், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதினால் மழை நீரை வடிகால் வாய்க்காலில் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மழை நீரை தேக்கத்தை அகற்றுகிறோம் என உறுதி கூறினார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.