search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • மேட்டூருக்குள் வேறு ஊர் பெயர் வைத்திருப்பதைக் கண்டித்து மேட்டூர் பகுதி பொதுமக்கள் நேற்று மாலை திடீர் என மயானத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.
    • போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் கடையம் பெரும்பத்து ஊராட்சியைச் சேர்ந்தது மேட்டூர் கிராமம். இங்குள்ள ெரயில்வே கேட் அருகில் சிலர் சபரி நகர் எனவும், வெய்க்காலிப் பட்டி எனவும் போர்டு வைத்துள்ளனர். இதனால் மேட்டூர் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மேட்டூருக்குள் வேறு ஊர் பெயர் வைத்திருப்பதைக் கண்டித்து மேட்டூர் பகுதி பொதுமக்கள் நேற்று மாலை திடீர் என மயானத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.

    இப்போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து தகவலறிந்த தாசில்தார் ஆதிநாராயணன், கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 4 மணிநேரம் போராட்டம் நடத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் இன்று தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் இருதரப்பை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    திருப்பூர்:    

    காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், திருப்பூர் மாவட்டத்தில், வரும், 10ந்தேதி, மெகா மருத்துவ முகாம் நடத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    'இன்ப்ளூயன்சா' எனப்படும் பரவக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் ஒரு பிரிவான, 'எச்3 என் 2' வகை வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது.

    பிற 'இன்ப்ளூயன்சா' போல் அல்லாமல், இந்த வைரஸ் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன், அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கி றது. மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் அந்தந்த பகுதி அளவிலேயே சிகிச்சை அளித்து, மற்றவர்க ளுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும், 10ம் தேதி அதிகமான இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தி எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    பொது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் எந்த பகுதியில் இருந்து அதிகமானோர் அனுமதியாகின்றனர் என்ற விபரத்தை மருத்துவமனைகளில் இருந்து பெற்று, அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்படும்.

    காய்ச்சல் அறிகுறி உள்ளவர், இந்த முகாமில் பங்கேற்க ஏதுவாக முன்கூட்டியே வைரஸ் காய்ச்சல் குறித்தும், முகாம் நடத்துவது குறித்தும் அனைத்து பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.

    • நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்தில் வீடு ஒதுக்கீடு செய்ததற்காக, கடனுதவி வழங்கப்பட்டது.
    • இயக்குனர் லட்சுமணன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் அனைத்து திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், அனைத்து துறைகளில் நடைபெற்றுவரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொதுமக்க ளின் தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பான முறையில், விரைவாக மேற்கொண்டு, திருப்பூர் மாவட்டத்தை முன்னோடியாக திகழச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில், 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்தில் வீடு ஒதுக்கீடு செய்ததற்காக, கடனுதவி வழங்கப்பட்டது.இதில் டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸி ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • கினத்துப்ப்பட்டி ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • பூளவாடி பிரிவில் பயணிகளை இறக்கிவிட்டு செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆத்துகிணத்துப் பட்டி ஊராட்சி. ஆத்து கினத்துப்ப்பட்டி ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி, குடிம ங்கலம் ஆத்துகிணத்து ப்பட்டி, வழியாக பூளவாடிக்கு தினமும் பஸ்கள் சென்று வருகிறது.

    கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் முதியோர்,வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். ஆத்துகிணத்துப்பட்டி ஊருக்குள் வரவேண்டிய பஸ் ஊருக்குள் வராமல் பூளவாடி பிரிவில் பயணிகளை இறக்கிவிட்டு செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.

    இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஊருக்குள் வராத பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தையின் முடிவில் பஸ் ஊருக்குள் வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி யதை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேதாரண்யத்தில் இருந்து மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்திற்கு அரசு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.
    • பல ஆண்டுகளுக்கு முன்பு இடைநில்லா பஸ் இயக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு அரசுக்கு, அகில பாரத மக்கள் மகாசபா நாகை மாவட்ட தலைவர் இளம் பாரதி அனுப்பி உள்ள மனுவல கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யத்தில் இருந்து மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்திற்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.

    அனைத்து பஸ்களும் வேதாரண்யத்தில் இருந்து 55 கி.மீ தூரம் உள்ள நாகைக்க்கு செல்ல 2 மணி நேரம் ஆகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    மேலும் நாள்தோறும் நாகையில் உள்ள மருத்துவ கல்லூரி நீதித்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளில்வே தாரணியத்தில் இருந்து சென்று பணியாற்றுபவர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர்.

    பொதுமக்கள் பயன்படும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இடைநில்லா பஸ் இயக்கப்பட்டது.

    இடையில் எங்கும் நிற்காமல் 1.15 மணி நேரத்தில் சென்று விடும்.

    ஆனால் சமீப காலமாக அந்த விரைவு பஸ்களும் நிறுத்தபட்டு விட்டன.

    சாலைகள் மேம்படுத்தப்பட்ட இன்றைய நிலையில்த ற்போது வேதாரண்யத்தில் இருந்து நாகைக்கு 1 மணி நேரத்திலேயே செல்ல இயலும்.

    எனவே வேதாரண்யத்தில் இருந்து நாகை அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள், கல்லூரி மாணவர்களுக்கு வசதியாக காலை 8 -9 மணிக்குள் இந்த ஒன் டூ ஒன் பஸ் 2 இயக்க வேண்டும்.மக்கள் நலன் கருதி இதனை உடனே இயக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
    • காற்று வேகமாக வீசுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடு பட்டனர்.

    தீ விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயணைப்பு வீரர்கள் தீயணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டே உள்ளது. நேற்று 2-வது நாளாக தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். இருப்பினும் தீ கட்டுப்படுத்த முடிய வில்லை.

    இன்று காலையில் 3-வது நாளாக தீ அணைக்கும் பணி நடந்து வருகிறது. நாகர்கோவில் கன்னியாகுமரி திங்கள் சந்தை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் தீ எரிந்து கொண்டே உள்ளது. காற்று வேகமாக வீசுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    புகை மண்டலத்தின் காரணமாக இன்று 3-வது நாளாக அந்த பகுதியில் உள்ள சாலையில் பொதுமக்கள் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருவதையடுத்து பொது மக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வலம்புரிவிளை குப்பை கிடங்கையொட்டி உள்ள பகுதியில் குடியிருக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு அவர்களின் உறவினர் வீடுகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    புகை மண்டலத்தின் காரணமாக குழந்தைகள் பெரியவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருமே பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் வலம்புரி விளையில் முகாமிட்டு தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் உதவிகரமாக உள்ளனர் .

    அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு புகை மண்டலத்தின் காரணமாக கடந்த 2 நாட்களாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்றும் புகை மண்டலமாக அந்த பகுதி காட்சி அளித்தது. மாணவ-மாணவிகள் நலன் கருதி இன்றும், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலெக்டரை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். 

    • கடலூர் கே.என். பேட்டை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதை கண்டித்து லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினார்கள்,
    • இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    விக்கிரவாண்டி முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக கே.என். பேட்டையில் உள்ள செம்மண் குவாரிகளிலிருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு அனுமதித்த அளவைவிட அந்தப் பகுதியில் இருந்து கூடுதலாக செம்மண் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து அவர்கள் குவாரி நிர்வாகிகளிடம் சென்று கேட்டபோது, அவர்கள் சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் திருவந்திபுரம் ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார் தலைமையில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் அந்த மணல் குவாரிக்கு சென்றனர். அங்கு செம்மண் எடுத்த லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த செம்மண் குவாரியில் இருந்து அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் மண் எடுப்பதால் இந்த பகுதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது  மேலும், இவ்வாறு தொடர்ந்து மண் எடுப்பதால் மண்வளமும் பாதிக்கப்பட்டு இங்கு உள்ள ஏரிகள் துர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இங்கிருந்து செம்மண் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினர்  தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை -முத்துப்பேட்டை ரோடு பகுதியில் உள்ள ராஜாமடம் கல்லணை கால்வாயின் நாடியம்பாள்புரம் கிளை வாய்க்கால் வழியாக கடந்த 60 ஆண்டுகளாக விவசாய பாசனத்திற்கு காவிரி நீர் சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த கிளை வாய்க்காலில் முறையாக மராமத்து பணிகள் நடைபெறாததால் தண்ணீர் செல்ல வழியின்றி அந்த வாய்க்காலின் கரையோர பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் டீக்கடை கழிவுகள் பாசன வாய்க்காலில் தேங்கி சாக்கடையாக தேங்கி இருக்கிறது.

    இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    குறிப்பாக பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை சாலையில் இந்த வாய்க்கால் செல்லும் வழியில் கழிவுநீர் தேங்கி பாசி பிடித்து மோசமான நிலையில் உள்ளது.

    துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    மேலும் கொசு அதிகமாக உற்பத்தி ஆவதால் டெங்கு, மலேரியா போன்ற வியாதிகள் ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர்.

    எனவே நூற்றுக்க ணக்கான குடும்பங்கள் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வைத்தத கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

    ஊட்டி 

    ஊட்டி அருகே மைனலா அரக்காடு சந்திப்பு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கேத்தி பேரூராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், ஊட்டியிலிருந்து கோவை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேத்தி போலீசார், பேரூராட்சி அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், முறையாக குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    குத்தாலம்:

    பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழை தேடி" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே குத்தாலம் கடைவீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்துக்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். திமுக முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி.கல்யாணம், தமிழ் அறிஞர்கள் முத்துசானகிராமன், விழிகள் சி.ராஜ்குமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியதாவது:-

    தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமை ப்படக்கூடிய ஒன்று அல்ல. அது நமக்கு தலைகுனிவு என்றார்.

    நமது அடையாளம் மற்றும் அன்னை தமிழை நாம் இழந்து விட்டோம் என்று அவர் பேசினார்.இக்கூட்டத்தில், பாமக மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, இளைஞரணி துணைத் தலைவர் விமல், மூத்த நிர்வாகிகள் குத்தாலம் கணேசன், தங்கஅய்யாசாமி, வக்கீல் சுரேஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
    • நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான போட்டியில் பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சூர்யா கலந்து கொண்டார். இவர் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவிற்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து பொதுமக்களை தடுத்தனர்.
    • 80 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் பூமிபூஜை நடைபெற்றது. ஏற்கனவே நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் எரிவாயு தகன மேடை அமைக்க பூமி பூஜை நடத்துவதை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் திரண்டனர்.

    இதையடுத்து அந்தப்பகுதியில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு, பொதுமக்கள் பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து பொதுமக்களை தடுத்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ற போது அவர்களை போலீசார் எச்சரித்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பூமி பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே சமூக வலைத்தளத்தில் எரிவாயு தகன மேடை திட்டம் வெற்றி அடைந்ததாக கருத்துக்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பச்சாபாளையம் பகுதி மக்கள், ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் பல்லடம், கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை நால்ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்லடம் நகரமே ஸ்தம்பித்தது. சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் உள்பட 80 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.பின்னர் இரவு 8 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

    ×