search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஆண்டிப்பட்டி என சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன
    • உடுமலையிலிருந்து பழனி மார்க்கமாக மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்பட பல நகரங்களுக்கு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் பிரிந்து செல்லும் கொழுமம் ரோட்டில் அகல ெரயில்வே பாதை உள்ளது. இந்த வழியாக எஸ்.வி.புரம், கண்ணமநாயக்கனூர், உரல்பட்டி, மலையாண்டி கவுண்டனூர், பாப்பான் குளம், பெருமாள் புதூர், சாமராய பட்டி, குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம், திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஆண்டிப்பட்டி என சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் உடுமலையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ெரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். உடுமலையிலிருந்து பழனி மார்க்கமாக மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்பட பல நகரங்களுக்கு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் அடிக்கடி ெரயில்கள் கடந்து செல்வதால் கேட் மூடப்பட்டு பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, உடுமலையிலிருந்து தளி ரோட்டில் மேம்பாலம் கட்டும் போதே கொழுமம் ரோட்டிலும் மேம்பாலம் கட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை ெரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அகல ெரயில்வே பாதை அமைக்கப்பட்டதால் மக்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதே சமயம் உடுமலை- கொழுமம் ரோட்டில் ெரயில்வே மேம்பாலம் கட்டவும் ெரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் சேறும் குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் மணவாளன் நகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கொட்டிவந்தனர்.

    ஆனால் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவது நிறுத்தப்பட்டு பின்னர் வெங்கத்தூர், கன்னிமாநகர் பகுதியில் பள்ளி அங்கன்வாடி குடியிருப்புகள் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டது.

    இதில் தினம்தோறும் 5 டன் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் மலை போல் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை தற்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைத்து கொட்டப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான டிராக்டர்கள் மூலம் கொட்டப்படும் கழிவுகள் சாலையோரம் குவிந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனம் மற்றும் பொது மக்கள் சென்று வரும் நிலையில் குப்பை கழிவுகளால் தொற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கழிவுகளில் பிளாஸ்டிக், தெர்மாகோல், மெத்தை, முட்டை கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் கால் நடைகள், நாய்கள் அதனை இழுத்து சாலையில் போட்டு சென்று விடுகின்றன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் குப்பை கழிவுகளில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    எனவே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புத்தூர் கடைவீதி பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
    • கழிவுநீர் மீண்டும் கொட்டாதவாறு ஓட்டுனர் நுழைவு பகுதியை அடைத்தார்.

    சீர்காழி:

    சீர்காழியிலிருந்து தூத்துக்குடி நோக்கி மீன் லாரி சென்றது.

    மீன்களை பதப்படுத்தும் வகையில் குளிர்சாதனபெட்டி வசதிகொண்ட அந்த லாரியிலிருந்து சாலைமுழுவதும் துர்நாற்றத்துடன் மீன்கழிவுநீர் கொட்டிக்கொண்டே சென்றது.

    இதனால் பொது மக்கள் ஆத்திரமடைந்தனர்.

    பின்னர் புத்தூர் கடைவீதி பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

    பின்னர் மீன் கழிவுநீர் மீண்டும் கொட்டாதவாறு ஓட்டுனர் நுழைவுபகுதியை அடைத்தார்.

    அதன்பின்னர் பொது மக்கள் வாகனத்தை விடுவித்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் கொள்ளிடம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 120 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது. ஆனால் 60 மெட்ரிக் டன் குப்பையில் தான் அகற்றப்படுகிறது.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் வார்டு ஒன்றில் 52 தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. சுமார் 4 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். வீடுகளில் சேறும் குப்பைகளை தினதோறும் தூய்மை பணியாளர்கள் சேகரித்து சென்று வருகிறார்கள்.

    மொத்தம் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு வந்தனர். ஒரு வார்டுக்கு 52 தொழிலாளர்கள் என்ற அளவில் அவர்கள் தூய்மைபணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் தூய்மைபணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது வார்டுக்கு 20 பணியாளர்கள் என்ற அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் ஒரு தெருவுக்கு குப்பைகள் சேகரிக்க செல்லும் தொழிலாளர்களால் அப்பகுதியில் முழுமையாக பணியை செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் மதியம் வரை குப்பை சேகரிக்கும் பணி நடந்தும் முழுவதும் முடிக்க முடியவில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்களின் வீடுகளில் குப்பைகள் தேங்கி விடுகிறது.இதற்கு முன்பு காலை 10 மணிக்குள் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு முடிந்து வந்தது. இதற்கிடையே குப்பைகள் சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரமுடியாததால் பெரும்பாலானோர் குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தெருக்கள், மற்றும் வீட்டு முன்பு வீசிவிடுகின்றனர். அதையும் அகற்ற நாள்கணக்கில் ஆவதால் திருவொற்றியூர் பகுதி முழுவதுமே குப்பை நகரமாக மாறி வருகிறது. நிரம்பி வழியும் குப்பைகளால் திருவொற்றியூர் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளான விம்கோ நகர் சக்திபுரம், எல்லையம்மன் கோவில், காலடிபேட்டை, மாடர்ன்லைன், மேற்கு மாடவீதி, வடிவுடையம்மன் கோவில் பின்புறம், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பல இடங்களில் போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் அவை நிரம்பி வழிந்து வருகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் குப்பை அதிகம் சேரும் ஞாயிற்றுக் கிழமைகளில் பலருக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் மறுநாள் குப்பை சேகரிப்பு பணி கடும் சவாலாக மாறி வருகிறது. மேலும் வாகனங்களில் வந்தும் குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    திருவொற்றியூர் மண்டலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் வார்டு ஒன்றில் 52 தூய்மை பணியாளர்கள் இருந்தனர். அப்போது குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வார்டு தூய்மையாக இருந்தது.

    ஆனால் தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் 24 பேர் மட்டுமே ஒரு வார்டில் வேலை செய்கின்றனர். வார்டில் வேலை செய்யும் ஒரு தூய்மை பணியாளர் 7, 8 தெருக்களை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் அவர் பகல் 12 மணி வரையும் தூய்மை பணியில் ஈடுபடுகிறார். மேலும் பல வார்டுகளில் குப்பையை தரம் பிரிக்க இடம் இல்லை. எனவே அந்தந்த இடங்களில் பிளாஸ்டிக் பைகளில் குப்பைகளை கட்டி போட்டு விட்டு பின்னர் மொத்தமாக குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்கின்றனர். நீண்ட நேரம் குப்பை தெருக்களில் தேங்கி கிடப்பதால் அவற்றை கால்நடைகள், நாய்கள் சாலைகளில் இழுத்து போட்டு விடுகிறது. குப்பைகள் அதிகம் சேர்ந்தால் அதை மூட்டை கட்டி அருகில் உள்ள பள்ளம் மற்றும் முட் புதர்களில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் 120 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது. ஆனால் 60 மெட்ரிக் டன் குப்பையில் தான் அகற்றப்படுகிறது. எனவே இது குறித்து மேலும் 350 தூய்மை பணியாளர்கள் வேண்டுமென்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதி உள்ளோம். உடனடியாக கூடுதல் ஆட்களை ஒதுக்கி திருவொற்றியூர் நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது குப்பைகளை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டதால் நாங்கள் அதில் தலையிடுவதில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    • 130 பேர் தங்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பணம் வரவில்லை.
    • அரசூர் மெயின் ரோட்டில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர்.

    திருவையாறு:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த அரசூர் உள்ளிட்ட பலபகுதிகளில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பணம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலையில் அரசூர் கிராம மக்கள் 80 பெண்கள் உள்பட 130 பேர் தங்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பணம் ஏறவில்லை என்று கூறி திருவையாறு மணக்கரம்பை சுப்பிரமணியன் கோவில் அருகே அரசூர் மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் (பொறுப்பு) நெஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட சுமார் 100க்கும்மேற்பட்ட வழக்குகள் விசாரணை செய்யப்பட்டது

    பல்லடம்:

    பல்லடம் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட பல்லடம்,மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், ஆகிய போலீஸ் நிலையங்களில், இடப் பிரச்சனை, பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனை, உள்ளிட்ட நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் உத்தரவின் பேரில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் பல்லடத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட சுமார் 100க்கும்மேற்பட்ட வழக்குகள் விசாரணை செய்யப்பட்டது. இந்த முகாமில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பல்லடம் மணிகண்டன், குற்றப்பிரிவு சரஸ்வதி, மங்கலம் கோபாலகிருஷ்ணன், அவிநாசிபாளையம் விஜயா, மற்றும் போலீசார் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் சமூக ஆர்வலர்கள் கொடுத்த மனுவில் , பல்லடம் நால்ரோடு சிக்னல், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிலர் கார் கண்ணாடிகளை தட்டி பிச்சை கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் சாபம் இடுவதாகவும், இதனால் வாகன ஓட்டிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும், மேலும் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் கார் கண்ணாடிகளில் சோப்பு தண்ணீரை பீச்சி அடித்து,கண்ணாடியை சுத்தம் செய்ததாக கூறி வாகன ஓட்டிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்பதாகவும், எனவே போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

    • காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர்.

    தஞ்சாவூர்:

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகும்.

    இந்த நாட்களில் மூதாதையர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்ய வேண்டும். இதனால் அவர்களது ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். நாம் செய்த பாவங்கள் நீங்கும்.

    நீர்நிலைகள் அருகே அமர்ந்து வேதமந்திரங்கள் சொல்லி திதி கொடுப்பது, மூதாதையர்கள் நினைவாக பிண்டம் செய்து உணவாக படைப்பது என்று செய்து வருகின்றனர். இந்த சடங்குகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும்.

    திருவையாறு

    அதன்படி, இன்று புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால் இன்று காலை முதலே தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவையாறில் உள்ள காவிரி புஷ்ய மண்டபத்தில் திரளான பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

    காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக ஏராளமான புரோகிதர்கள் படித்துறைக்கு வந்திருந்தனர்.

    இதனால் புஷ்ய மண்டபத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடினர்.

    கும்பகோணம்

    இதேபோல், தஞ்சாவூர் கல்லணை கால்வாய் படித்துறை, கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, அரசலாற்றங்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குவியத்தொடங்கினர். அங்கு அவர்கள் தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

    மேலும் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர்.   

    • பராமரிப்பு பணிகள் நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை ஆகிய 4 நாட்களுக்கு நடைபெறுகின்றது.
    • மாநகராட்சிப் பகுதிகளில் இந்த 4 நாட்களும் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை ஆகிய 4 நாட்களுக்கு நடைபெறுகின்றது.

    அதன்படி மாநகராட்சிப் பகுதிகளில் இந்த 4 நாட்களும் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • மணலூர் ஊராட்சியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.
    • நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அடுத்த வலங்கைமான் அருகே இனாம் கிளியூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடமும், மணலூர் ஊராட்சியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கமும் கட்டப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    விழாவில் வலங்கைமான் அ.தி.மு.க. கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சங்கர், இளவரசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி தேவராஜன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் ராஜராஜசோழன், இனாம்கிளியூர் ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அருண், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
    • இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    மதுரை

    கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி அரைஸ் விரிவாக்கத்துறை மற்றும் செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மழைகாலங்களில் நோய் பரவுவதை தடுக்க இலவச பொது மருத்துவ முகாம் நத்தப்பட்டி, வடக்கம்பட்டி, புள்ளநேரி கிராமங்களில் நடைபெற்றது. வடக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். அரைஸ் விரி வாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் வரவேற்றார். கணிதவியல் துறைத் தலை வர் ராபர்ட் திலீபன், அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாம்ராஜ் ஆகியோர் வாழ்த்தி வழங்கினர். கணிதவியல் துறை பேராசிரியர் சஜன் ஜோசப் நன்றி கூறினார்.

    நத்தப்பட்டி முகாமில் கல்லூரி துணை முதல்வர் துரைசிங்கம், பொருளாதாரத்துறை தலைவர் ஜெய ராஜ், கோவிலாங்குளம் ஊராட்சி செயலர் ஜெயபால், பொருளாதாரத்துறை பேராசிரியர் நந்தக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    புள்ளநேரி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கல்லூரி துணை முதல்வர் இன்னாசி ஜான், புள்ள நேரி ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டி, ஊரக வியல்துறைத் தலைவர் அம்புதாஸ் அரவிந்த் ஆகி யோர் பங்கேற்றனர். ஊரக வியல்துறை பேராசிரியர் அடைக்கலராஜ் நன்றி கூறினார்.

    நத்தப்பட்டி முகாமில் செல்லம்பட்டி வட்டார மருத்துவர் பாண்டியராஜன் தலைமையிலும், வடக்கம்பட்டி, புள்ளநேரி கிராமங்களில் மருத்துவர்கள் சாந்தினி, பிரியா தலைமையிலான குழுவினர்கள் பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, சர்க்கரை, ரத்த அழுத்தம் குறித்து பொது மக்களை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினர். இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    • இதில் 50 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது.
    • தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது.

    இம்முகாமில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி, காவல்துறை ஆய்வாளர்கள் கலைவாணி, மகாலெட்சுமி, உதவி ஆய்வாளர்கள் சேகரன், உமாபதி போலீசார் மற்றும் பொதுமக்கள் ஏராளானமானோர் கலந்து கொண்டனர்.

    • பிரச்சார கலை நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
    • மன்னார்குடி, பெருகவாழ்ந்தான், முத்துப்பேட்டை, நெடும்பலம் ஆகிய பகுதிகளில் பிரச்சார நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    உலக மனநல தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூ ண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம், சென்னை மக்கள் மனநல அமைப்பு சார்பில் மனநல விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

    தொடர்ந்து, பிரச்சார கலை நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. அதில் மனநிலை பாதிக்கப்ப ட்டவர்களை எவ்வாறு கையாள்வது, பாதுகாப்பது குறித்து ஒருவர் மனநலம் பாதிக்கப்ப ட்டவர் போன்று வேடமணிந்து தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.

    தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    பிரச்சார மானது மன்னா ர்குடி, பெருகவாழ்ந்தான், முத்துப்பேட்டை, நெடும்பலம் ஆகிய பகுதிகளில் நடை பெற்றது.

    தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், மனோகரன், நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சவுந்தரராஜன், திட்ட மேலாளர் விஜயா மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×