என் மலர்
நீங்கள் தேடியது "Rage"
- ஆத்திரமடைந்த புரோகிதர்கள் ஐயாவாளை சபித்தனர்.
- நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழ்ந்தது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருவிசநல்லூரில் ஸ்ரீதரஐயவாள் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் பக்திநெறி தவறாமல் வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம் தன் தந்தையாருக்கு நீத்தார் கடனைச்செலுத்து வதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்காக புரோகி தர்கள் சிலரை வரவழைத்து சம்பிரதாயப்படியான சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு அந்த புரோகிதர்களை நீத்தாராக பாவித்து வணங்கி, அவர்களுக்கு உணவிட்ட பிறகு தான் குடும்பத்தில் உள்ளவர்கள் பசியாற வேண்டும்.
அந்த நேரத்தில் வீட்டு வாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பசியால் சுருண்டு விழுந்து கிடந்ததை பார்த்துவிட்டார். உடனே சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துச் சென்று, பசியால் மயங்கி கிடந்த அவருக்கு ஊட்டிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த புரோகிதர்கள் ஐயாவாளை சபித்தனர். இங்கு தீட்டுபட்டுவிட்டது. நீ கங்கைக்கு சென்று நீராடி வந்தால் தான் அவை சரியாகும் என கூறினர். ஐயவாளும் கங்கை சென்று நீராடி வர பல மாதங்கள் ஆகும். அதுவரை தந்தையின் பிதுர்கடன் தீராமல் அல்லவா இருக்கும் என்ன செய்வது என கடவுளை நினைத்து வேண்டினார்.
அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்கியது. இந்த நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழ்ந்தது. உடனடியாக மக்கள் ஐயவாளிடம் வந்து முறையிட்டு கங்கையை அடக்குமாறு வேண்டினர். அதே போல் ஐயாவாளும் செய்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை அமாவாசையை கங்காவரதண மகோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று அதிகாலை 4.00 மணி முதல் புனித நீராடல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நீராடினர். பின்னர் காவிரி ஆற்றுக்கு சென்று அங்கும் நீராடி மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஸ்ரீதர ஐயவாளை வழிபட்டனர்.
- மாவட்ட வருவாய் அலுவலருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
- 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்டவைகள் கையிருப்பில் உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ், மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது :-
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24/7 இயங்ககூடிய அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாக புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், தாசில்தார் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை கலெக்டர் நிலையிலான 10 குழுக்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத வகையில், புயல் சீற்றங்கள் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தேவையான அளவு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் 1,லட்சத்து 30 ஆயிரத்து 25, மணல் மூட்டைகளும், 84ஆயிரத்து 500 சாக்குகளும் மற்றும் 5 ஆயிரம் சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளது.
106 மரம் அறுக்கும் எந்திரங்கள், 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- அதிக குளிர் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- அலைகளின் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
சீர்காழி:
மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் மற்றும் கனமழை பெய்து வருகிறது.
அதிக குளிர் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்தின் காரணமாக கடலோர கிராமங்களான தொடுவாய், மடவாமேடு, உள்ளிட்ட கிராமங்களில்10 அடிக்கு மேல் கடல் அலைகளின் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
இதனால் அப்பகுதி மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடல் நீர் புகுந்த தொடுவாய் கிராம மக்கள் அதே பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியிலும் புயல் பாதுகாப்பு மைய ங்களுக்கு தங்கியுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, முகாமில் தங்கி உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
அவருடன் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.
- ஆத்திரமடைந்த வாலிபர் அரிவாளில் வெட்டினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 46) .
இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் கீழவாசல் முள்ளுக்கார தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (22) என்பவருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பிலோபாநந்தவனம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆனஸ்ட்ராஜிடம், எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.
இதில் ஆனஸ்ட்ராஜ் ஆத்திரமடைந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்குப் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனஸ்ட்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த 6 ஆண்டுகளாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- ஆத்திரமடைந்த முருகானந்தம் தாய் பானுமதியை கட்டையால் அடித்துள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு வாட்டாக்குடி நடுத்தெடுவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
இவரது மகன் முருகானந்தம் (வயது 37). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா என்பவருடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாட்டாக்குடியில் தாயார் பானுமதியுடன் (65) மகன் முருகானந்தம் வசித்து வந்தார், நேற்று முன்தினம் தாயருடன் வீட்டில் மகன் முருகா னந்தம் மது போதை யில் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது மனைவி பிரிந்ததை பற்றி இருவரும் பேசியதில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் தாய் பானுமதி கட்டையால் அடித்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே பானுமதி உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் இன்ஸ்பெக்டர்
ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தாயைகட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.
- நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
- மோதலில் ஒருவரையொருவர் தாக்கிகொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் நன்னி தெருவை சேர்ந்தவர் முருகன். என்.எல்.சி முதலாவது சுரங்கத்தில் என்.எல்.சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராஜேந்திரன் (வயது 28) இன்ஜினியரிங் முடித்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் நண்பர்களான நடுக்குப்பத்தை சேர்ந்த பிரேம்குமார், நெய்வேலி 21- வது வட்டத்தை சேர்ந்த ராதா மகன் செல்லப்பா, கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன், கொம்பாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் உத்தண்டராஜா ஆகியோருடன் நெய்வேலி 16- வது வட்டத்தில் உள்ள ஓட்டலில் நேற்று மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இந்த மோதலில் ஒருவரையொருவர் தாக்கிகொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த செல்லப்பா, ஓட்டலில் இருந்த விறகு கட்டையை எடுத்து ராஜேந்திரனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பியோடிய ராஜேந்திரனின் நண்பர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்மந்தப்பட்ட செல்லப்பா, உத்தண்டி ஆகியோரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட செல்லப்பா, உத்தண்டராஜா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ராஜேந்திரனை கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு தொடர்புடைய தமிழ்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் நண்பர்களுக்கு மோதல் ஏற்பட்டு ஒருவர் கொலை செய்திருப்பது அந்த பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்தாக கூறப்படுகிறது.
- ஆத்திரத்தில் கைலாசத்தை பிடித்து ஜெயராமன் கீழே தள்ளியுள்ளார்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குளமங்கலம் ஐவுளித்தெருவை சேர்ந்தவர் கைலாசம் (வயது 75). இவருக்கு இந்திரா என்ற மனைவியும், கோமதி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று கைலாசம், அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மாடுகளை மேய்த்துக்கொண் டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெயராமன் (45), என்பவரது நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்தாக கூறப்படுகிறது. இதனால் கைசாலத்திற்கும், ஜெயராமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் கைலாசத்தை பிடித்து ஜெயராமன் கீழே தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் வயலில் விழுந்த கைலாசம் மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் கைலாசத்தை மீட்டு, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கைலாசத்தை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினார்.
இச்சம்பவம் குறித்து கைலாசத்தின் மகள் கோமதி ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜெயராமனை போலீசார் தேடி வந்தார். இந்நிலையில் இன்று காலையில் ஜெயராமனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
- பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல்.
நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு பெண் வீட்டாரை சேர்ந்த 30 பேர் நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் வீட்டார் அடித்து நொறுக்கியுள்ளனர்.
- வாழக்கரை பகுதியில் ஒரு கார் பழுதடைந்த நிலையில் சேற்றில் சிக்கி நிற்பதாக தகவல் கிடைத்தது.
- மது போதையில் இருந்த விக்னேஷ் ஆத்திரமடைந்து செந்திலை தாக்கியதுடன், கன்னத்தையும் கடித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் திருக்குவளை கடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வாழக்கரை பகுதியில் ஒரு கார் பழுதடைந்த நிலையில் சேற்றில் சிக்கி நிற்பதாக தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அங்கு சென்று செந்தில், காரை மீட்கும் முயற்சியை மேற்கொண்டார். அப்போது அந்த காரில் வந்த பாங்கல் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவர், தனது மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது காரை எடுக்க உதவாமல், ஏன் மனைவியிடம் சண்டை போட்டுக் கொள்கிறாய் என்று செந்தில்கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த விக்னேஷ் ஆத்திரம் அடைந்து செந்திலை தாக்கியதுடன், கன்னத்தையும் கடித்துள்ளார்.
இதில் காயம் அடைந்த செந்தில் திருக்குவளை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து செந்தில் அளித்த புகாரின்பேரில், திருக்குவளை போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த பொன்னி (24) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ வயதில் பிரத்தீப் ராஜ் என்ற மகனும், 4 மாதத்தில் மீரா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். மதியழகனுக்கு குடிபழக்கம் இருந்தது.
அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். மேலும் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் பொன்னிக்கும் மதியழகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக மதியழகன் வேலைக்கு செல்லவில்லை. நேற்று மாலை அவர் கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதியழகன் தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த கைகுழந்தை மீராவை தூக்கினார். பின்பு குழந்தையின் கால்களை பிடித்துக் கொண்டு நெல் கதிர் அடிப்பதுபோல் சுவற்றில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் மதியழகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
உயிருக்கு போராடிய குழந்தை மீராவை தூக்கிக் கொண்டு தாய் மற்றும் உறவினர்கள் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் பொன்னி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்பு குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து மரக்காணம் போலீசில் பொன்னி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய மதியழகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அப்போது மதியழகன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
காணும்பொங்கலையொட்டி நண்பர்களுடன் மதுகுடிக்க விரும்பினேன். இதற்காக வீட்டுக்கு சென்று மனைவி பொன்னியிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டேன். ஆனால் அவர் மதுவாங்க பணம் தர மறுத்து விட்டார். இதனால் அவள் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
உடனே நான் தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த கைகுழந்தை மீராவை தூக்கி சுவற்றில் ஓங்கி அடித்தேன். இதில் குழந்தை இறந்து விட்டது.
இவ்வாறு மதியழகன் போலீசில் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற குழந்தையை தந்தை சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் மரக்காணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.