என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway"

    • ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார்
    • மாயனூர்-வீரராக்கியம் இடையே

    கரூர்

    கரூரில் இருந்து திருச்சி செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் மாயனூர்-வீரராக்கியம் இடையே உள்ள பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக்கறையுடன் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த வாலிபரின் முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

    இதையடுத்து அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் ரெயில் மோதி இறந்தாரா? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்குடி-தூத்துக்குடி ரெயில் பாதையை செயல்படுத்த வேண்டும் என நவாஸ்கனி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.
    • வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் பாராளுமன்றத்தில் இந்த பகுதியில் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டும்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனியிடம் பொது நலகமிட்டி தலைவர் பரமஞானம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுசாமி, வேம்பார் ஒன்றிய கவுன்சிலர் செல்வமணி, செல்லப்பாண்டி, நரிப்பை யூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி, வேம்பார், தருவைகுளம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தற்போது வரை அந்த பணிக்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்த பகுதியில் ரெயில்வே பாதை அமையப்பெற்றால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் பாராளுமன்றத்தில் இந்த பகுதியில் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கோரிக்கையை வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவதாக நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.

    • நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
    • தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்ததில் பயணிகள் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மேற்பார்வையில் தஞ்சை இருப்புப்பாதை இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், தனிபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், ரயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், மகாதேவன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகள் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.

    இருப்பு பாதை போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    ரெயில் நிலைய வளாகம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தண்டவாளத்தில் வெடி பொருட்கள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.

    மேலும் நடைமேடை முழுவதும் கண்காணித்து வருகின்றனர். பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், தஞ்சை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    தொடர்ந்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது

    இதேபோல் நீடாமங்கலம், பூதலூர், மன்னார்குடி ஆகிய ரெயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ராமேசுவரம்- தனுஷ்கோடி புதிய ரெயில் பாதைக்கான நிலஆர்ஜித பணிகள் நடந்து வருகிறது.
    • ராமேசுவரத்தில் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

    மதுரை

    தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் இன்று ராமேசுவரம் சென்றார். அங்குள்ள ரெயில் நிலையத்தில் ரூ.90 கோடி செலவில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள், ராமேசுவரம் -தனுஷ்கோடி புதிய ரெயில் பாதை திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராமேசுவரம் ரெயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் 2 மாதத்தில் தொடங்கும். இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது. ஒப்பந்ததாரர் வரை படங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ராமேசுவரம் போன்ற பெரிய சுற்றுலா தலத்தில் பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடுக்கு தனித்தனி முனையங்கள் அமைய உள்ளன. அங்கு விசாலமான வாகன நிறுத்துமிடம், 2 மாடி ரெயில் நிலைய கட்டிடத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் அமைய உள்ளன.

    புதிய பாம்பன் ரெயில் பாலப் பணிகள் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்தில் முடிவடையும். ராமேசுவரம்- தனுஷ்கோடி புதிய ரெயில் பாதைக்கான நிலஆர்ஜித பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தேவையான நிலம் கிடைத்தவுடன் ஒப்பந்த புள்ளி கோரப்படும். ராமே சுவரம் வரையிலான மின்மயமாக்கல் பணிகள், உச்சிப்புளி கடற்படை விமானதள விரிவாக்கத்திற்கான ரெயில் பாதை மாற்றத்திற்கு பிறகு தொடங்கும் என்றார்.

    மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், தெற்கு ரெயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் ஜிங்கர், ரெயில் விகாஸ் நிகம் திட்ட அதிகாரி கமலாகர ரெட்டி, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, துணை முதன்மை பொறியாளர் ரதி ஆகியோர் உடனிருந்தனர்.

    • பயணிகள் போக்குவரத்தின் மூலமும் ரெயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளது.
    • இந்திய ரெயில்வே கடந்த நிதியாண்டை விட, அதிக வருவாய் ஈட்டியிருக்கிறது.

    புதுடெல்லி :

    கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் இந்திய ரெயில்வேக்கு மொத்தம் ரூ.1,83,964 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுபற்றி ரெயில்வே வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

    சரக்கு ஏற்றுதல் மற்றும் சரக்கு போக்குவரத்தில் 2022-2023-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) இந்திய ரெயில்வே கடந்த நிதியாண்டை விட, அதிக வருவாய் ஈட்டியிருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் இந்திய ரெயில்வேயில் 1,109.38 டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில், 1,029.96 டன் சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டன. இதன் மூலம் சரக்குகள் கையாளுதல் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

    வருவாயைப் பொறுத்தவரை, சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு ஏற்றுதல் உள்ளிட்ட வகைகளில் மொத்தம் ரூ.1,35,051 கோடி கிடைத்துள்ளது. 2022-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பயணிகள் போக்குவரத்தின் மூலமும் ரெயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட 71 சதவீதம் அதிகமாக ரூ.48,913 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

    முன்பதிவு பயணிகளின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்து 59.61 கோடியாக இருந்தது. இதன்மூலம் வருவாய் 46 சதவீதம் அதிகரித்து ரூ.38,483 கோடி ரூபாயை எட்டியது. முன்பதிவில்லா பயணிகளின் எண்ணிக்கை 137 சதவீதம் அதிகரித்து 40,197 லட்சமாக இருந்தது. இதன் மூலம் வருவாய் 381 சதவீதம் அதிகரித்து ரூ.10,430 கோடி ஆனது.

    இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • நீண்ட நேரம் காத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
    • பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    குனியமுத்தூர்

    கோவை பாலக்காடு ரோட்டில் மதுக்கரை அடுத்து மரப்பாலம் பகுதி உள்ளது. இங்கு ஒரு ெரயில்வே மேம்பாலம் உள்ளது. பாலத்தின் மேல் ெரயில் செல்லும் செல்லும்படியாகவும், பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    கீழே பஸ், லாரிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பகுதியானது மிகவும் குறுகலாக காணப்படுகிறது. பாலத்தின் உட்பகுதிக்குள் ஒரு பஸ் அல்லது லாரி வந்தால், எதிரே வரும் வாகனங்கள் காத்திருந்து நின்று, அவை சென்ற பிறகுதான் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

    கேரளா வந்து, செல்லக்கூடிய அனைத்து லாரிகள் மற்றும் பஸ்கள் அனைத்தும் இந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும். மேலும் காலை மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி பஸ்கள் ஏராளமாக இந்த வழியாக செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே வாகனங்கள் அனைத்தும் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் காட்சியை அடிக்கடி காண முடிகிறது.

    தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப சாமி வாகனங்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த எரிச்சலைத் தரும் நிலை உள்ளது.

    எனவே ெரயில்வே நிர்வாகம் ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையை சற்று அகலப்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு அகலப்படுத்தினால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  

    • மதுரை - திருமங்கலம் இரட்டை பாதை பணி: ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் 13-ந் தேதி ஆய்வு செய்கிறார.
    • அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில்பாதையை நெருங்கவோ, கடக்கவே வேண்டாம் என ரெயில்வே அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

    மதுரை

    மதுரை - திருமங்கலம் இடையே 17.32 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பெங்களூரு தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நாளை மறுநாள் (13-ந் தேதி) ஆய்வு செய்கிறார். அப்போது மதுரை-திருமங்கலம் இடையே காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மோட்டார் டிராலி மூலம் ஆய்வு நடக்கிறது. அதன்பிறகு மாலை 3 மணி முதல் 6 மணி வரை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை-திருமங்கலம் இரட்டை பாதையில், மின்மயமாக்கல் ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா 14-ந் தேதி ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அந்த பகுதியில் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆய்வு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை- திருமங்கலம் இடையேயான புதிய இரட்டை ரெயில் பாதை மின்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரட்டை ரெயில் பாதையை நெருங்கவோ, கடக்கவே வேண்டாம் என்று மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

    • கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர்.
    • இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் வழியாக தினமும் 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் எடுத்து முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு (ஆர்.பி.எப்) புகார் வந்தது. இதையடுத்து போலீசார், முறைகேடாக டிக்கெட் விற்பனையில் ஈடுப டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி.யில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்பவர்களை பணபரிமாற்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

    75 பேர் கைது

    அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்க

    ளிடம் இருந்து ரூ.28 லட்சம்

    மதிப்பிலான டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த

    னர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட மின்னணு எந்திரங்களையும் கைப்பற்றினர்.

    ரூ.1 லட்சம் மதிப்பு

    நடப்பாண்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சேலம் ரெயில்வே கோட்டத்தில் 4 வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி பெயரில் எடுக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகளை ஆர்.பி.எப். போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • அடுத்த வாரம் திங்கள் முதல் ஏப்ரல் மாதம் கடைசி திங்கள் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
    • நாமக்கல்லை சேர்ந்த 2 பார்லிமெண்ட் உறுப்பி னர்கள், 1 மத்திய இணை அமைச்சர் இருந்தும், நாமக் கல்லை சேலம் கோட்டம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

    நாமக்கல்:

    கோடை காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - தஞ்சாவூர் இடையே, அடுத்த வாரம் திங்கள் முதல் ஏப்ரல் மாதம் கடைசி திங்கள் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

    இந்த வாராந்திர ரெயில் ஹூப்ளியில் இருந்து ஹரிஹர், தாவண்கரே, அர்சிகரே, தும்கூர், யஸ்வந்த்பூர், பெங்களூரு, பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக இயங்கவுள்ளது.

    இந்த சிறப்பு ரெயிலுக்கு, நாமக்கல் ரெயில் நிலையத் தில் மட்டும் நிறுத்தம் வழங் கப்படவில்லை. நாமக்கல் நீங்கலாக மற்ற அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ரெயில் நின்று செல் லும். இது நாமக்கல் பகுதியில் வசிக்கும் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத் தியுள்ளது.

    சமீப காலமாக நாமக்கல் வழியாக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்கள், நாமக்கல் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரெயிலுக்கு நாமக்கல் நிறுத்தத்தை மட்டும் புறக்கணிப்பதா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழும்புகிறது.

    நாமக்கல்லில் இருந்து தஞ்சாவூர் செல்ல தற்போது ரெயில் வசதி இல்லை. இந்த சிறப்பு ரெயிலுக்கு நாமக் கல்லில் நிறுத்தம் கொடுத் தால் நாமக்கல்லில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் செல்ல வசதியாக இருக்கும்.

    நாமக்கல்லை சேர்ந்த 2 பார்லிமெண்ட் உறுப்பி

    னர்கள், 1 மத்திய இணை அமைச்சர் இருந்தும், நாமக் கல்லை சேலம் கோட்டம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் வரும் காலங்களில் நாமக்கல் ரெயில் நிலை யத்தை அனைத்து ரெயில் களும் படிப்படியாக புறக்க ணிக்கும் அபாயம் உருவாகும்.

    இந்த பிரச்சினையில், மத்திய இணை அமைச்சர் முருகன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜ் ஆகியோர் உடனடியாக தலையிட்டு நாமக்கல் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களையும், நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நிரந்தரமாக தீர்வு காண வேண்டும்.

    மேலும் வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கவுள்ள நிலையில் உடனடியாக நாமக்கல் நிறுத்தத்தை வெளியிட சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் பகுதியில் உள்ள ரெயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    நாமக்கல் ஒரு மாவட்டத்தின் தலைநகர் மட்டும் அல்ல. லாரி உள்ளிட்ட மோட்டார் தொழில் மற்றும் கோழிப்பண்ணை, கோழி முட்டை உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடம் வகித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டாவது நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு தெற்கு ரெயில்வே முக்கியத்துவம் கொடுக்க முன்வரவேண்டும்.

    • ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ரெயில் நிலையத்தில் 2 மார்க்கங்களிலும் ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி ரெயில்வே கேட் அடைக்கப்படுகிறது. இதன் காரணமாக தெற்கு பகுதியில் இருந்து வட பகுதிக்கும், வட பகுதி யில் இருந்து தெற்கு பகுதிக்கும் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இது மட்டுமின்றி ஆம்புலன்சு வாகனமும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதி அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் சோழவந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சுமார் 12 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பால பணிகள் நடந்தன.

    தற்போது இந்த பணிகள் நிறை வடையும் தறுவாயில் இருக்கிறது. விரைவில் ரெயில்வே மேம்பாலம் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. ரெயில்வே மேம்பாலம் திறந்தவுடன் ரெயில்வே கேட் நிரந்தரமாக அடைக்கப்படுகிறது. இதனால் சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு நடவடிக்கை எடுத்து சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களுக்காக மதுரை அருகே பரவையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை போன்று சோழவந்தானிலும் அமைக்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சோழவந்தான் ரெயில்வே கேட்டுக்கு வடபுறம் பெரும்பாலும் விவசாய பகுதியாகும். இங்கு விவசாய பணிக்கு செல்லக்கூடிய தொழிலா ளர்கள் நடந்து செல்லக் கூடியவர்கள். இவர்கள் செல்வதற்கு கண்டிப்பாக சுரங்கப்பாதை அவசியமாகும்.

    அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சோழவந்தானில் சுரங்கப்பாதை அமைத்து நடந்து செல்லக் கூடியவர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
    • இந்த சுரங்கப்பாதையானது ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் உள்ளது. இங்கிருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையின் நடுவில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையானது ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் அதை வெளியே எடுப்பதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதுதவிர இந்த ரெயில்வே சுரங்கப்பாதை அருகே கண்மாய் ஒன்று உள்ளதால் அந்த கண்மாயில் இருந்து வரும் கசிவு நீரானது இந்த சுரங்கப்பாதையில் வந்து நிரம்பி வருகிறது.

    இதனால் ஆண்டு முழுவதும் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் முத்துப்பட்டி, நெற்புகப்பட்டி, நடராஜபுரம், பணங்குடி, பாகனேரி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று கல்லல் நகருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் கூறியதாவது:- கல்லல் அருகே அரண்மனை சிறுவயலில் இருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் மழைக்காலங்களில் சுரங்கப்பாதை முழுவதும் மூழ்கிவிடும். அப்போது இந்த தண்ணீரை அகற்றுவதற்கு குறைந்தது ஒருவார காலம் வரை ஆகும். மேலும் இந்த சுரங்கப்பாதை உள்ள இடத்தின் அருகே விவசாய தேவைக்காக கண்மாய் ஒன்று உள்ளது.

    இந்த கண்மாயில் உள்ள தண்ணீர் கசிவு காரணமாக அங்கிருந்து கசிந்து வந்து இந்த சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி வருகிறது. தற்போது கோடைக்காலமாக இருந்தாலும் கூட கண்மாயில் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளதால் அந்த தண்ணீர் இ்ந்த சுரங்கப்பாதைக்கு வந்து நிரம்புகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைகளுக்கு செல்பவர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி சென்று கல்லல் சென்று அதன் பின்னர் காரைக்குடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர இந்த கிராமத்தில் இரவு நேரத்தில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தால் இங்கு தேங்கி நிற்கும் இந்த தண்ணீரை காரணம் காட்டி அவர்கள் வரமறுத்து விடுகின்றனர்.எனவே மாவட்ட கலெக்டர் நேரில் இங்கு வந்து பார்வையிட்டு அருகில் கண்மாயில் இருந்து வெளியேறும் கசிவு தண்ணீரை சரி செய்ய பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ரெயில்வே துறை சார்பில் இதற்கு நிரந்தர தீர்வும் காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கலெக்டர் தலைமையில் நடந்தது
    • விவசாயி குண்டுகட்டாக வெளியேற்றம்

    ஆரணி:

    திருவண்ணமலை மாவட்டம் ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் திண்டிவனம் நகரி இருப்பு பாதை திட்டம் நில எடுப்பு நடவடிக்கை விசாரணை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் உதவி கலெக்டர் தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் ஆரணி அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திண்டிவனம், செய்யார், வந்தவாசி, ஆரணி, ஆற்காடு வழியாக நகரி வரையில் ெரயில்வே பாதை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு நில ஆர்ஜிதம் நடைபெற்றது.

    இதற்கு விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் திண்டிவனம் நகரி வரையிலான ெரயில் பாதை நிலம் ஆர்ஜிதம் நில எடுப்பு ஆவண சரிபார்ப்பு செய்யபட்டது.

    அப்போது விவசாயி சங்கத்தை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் முறையிட்டு பேச முயன்றனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஒரு விவசாயியை குண்டு கட்டாக தூக்கி அப்புறபடுத்தி அலுவலகத்திற்கு வெளியில் விட்டு சென்றனர்.

    இதில் பங்கேற்ற 244 பேரிடமிருந்து நில எடுப்பு ஆவணம் சரிபார்த்து ரூ.40 கோடியே 83 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 20.81 ஹெக்டர் நிலத்தை ஆவணம் சரி பார்த்து நிலத்தை கையக படுத்தியுள்ளனர்.

    ×