search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajive Murder case"

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் - நளினி ஆகியோர் போலீசார் பலத்த காவலுடன் வேலூர் ஜெயிலில் சந்தித்து பேசினர்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இருவரும் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து ஒரு மணி நேரம் பேசி வருகின்றனர்.

    அதன்படி, நேற்று காலை ஆண்கள் ஜெயிலில் உள்ள முருகனை, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் ஆயுதப்படை போலீசார் பலத்த காவலுடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு நளினியை காலை 7.50 மணி முதல் 8.50 மணி வரை சந்தித்து முருகன் பேசினார்.

    பின்னர் அவர் மீண்டும் பலத்த காவலுடன் அழைத்து செல்லப்பட்டு ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 
    ×