என் மலர்
நீங்கள் தேடியது "rally"
- பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு.
- இறுதியாக மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நீடாமங்கலம்:
நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தில், திருநறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, "பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள்" குறித்த விழிப்புணர்வு மற்றும் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாச்சியார் கோவில் அரசு மருத்துவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் ஜெயந்தி, நாச்சியார் கோவில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி, திருநறையூர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி திருநறையூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணி முடிவுற்றது.
- வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது
- வருவாய் கோட்டாட்சியர் தொடங்கிவைத்தார்
புதுக்கோட்டை:
வாக்காளர் வரைவு பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருவாய் துறையின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்.
இதில் பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் , கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர் பள்ளி மாணவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் பொன்னமராவதி புதுப்பட்டி வலையபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்று வாக்காளர் விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர் .
- மதுரையில் அனுமதியின்றி பேரணி சென்ற அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
- தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.
மதுரை
தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நேற்று முதல் நாளை (17-ந் தேதி) வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் நேற்று பேரணி நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2-வது நாளான இன்று திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலகத்தில் பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக 30-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். அங்கு வந்த போலீசார் பேரணிக்கு அனுமதி இல்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், ஆசிரியர் சரவணன், டான்சாக் மனோகரன், மாரியப்பன், முருகன், ஆறுமுகம், மாரி, முனியசாமி உள்பட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
- மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- வட்டார வள மையம் சார்பில் நடைபெற்றது
அரியலூர்:
வரும் டிச.3 -ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மாற்றுத்தினாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதில் முக்கிய வத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டிச.3 -ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக அரியலூரில் வட்டார வள மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜப்பிரியன் கொடியசைத்து வைத்தார். பேரணியானது பிரதான கடை வீதி, பேருந்து நிலையம் வழியாகச் சென்று அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறை வடைந்தது.
பேரணியில், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாமிதுரை, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் திருமானூர், இலையூர், நாகமங்கலம், ெஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
- நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- விழிப்புணர்வு பேரணி நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்று பேரூராட்சி அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது.
ராசிபுரம்:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்று பேரூராட்சி அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சென்பக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ -மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், இயன்முறை டாக்டர் சுஷ்மிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது
- மாற்றுத்திறனாளிகளுக்கான
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் அடைக்கப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மருத.பவுன்ராஜ் முன்னிலை வகித்தார்.பேரணியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, ஊக்குவித்தல், கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சீனி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ், சிறப்பாசிரியர்கள் லீலா ராணி, அறிவழகன், ராதா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் மாரிமுத்து, நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
- அரசு பள்ளி மாணவர்கள் பேரணி நடைபெற்றது
- மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு
அரியலூர்
வரும் 3-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட இருப்பதை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழகொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்று, வீதிகளில் மாற்றுத்திறனாளிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், மாற்றுத்திறனாளி உடன் நட்புறவு பாராட்டுவோம், இணைவோம் மகிழ்வோம் என்ற பதாதைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வீதிகளில் பேரணியாக கோசமிட்டு சென்றனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா தலைமைவகித்தார். ஊராட்சி மன்ற தலைவி செந்தமிழ்ச்செல்வி முன்னிலைவகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி செல்வி, அரசு மருத்துவ ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர்கள் அரசி, ராதை ஆகியோர் செய்திருந்தனர்.
- பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் பரமத்தியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
- பேரணி, மோகனூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் பரமத்தியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை, பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் தொடங்கி வைத்தார். பரமத்தி வட்டார கல்வி அலுவலர் கவுரி, பொறுப்பாசிரியர் தேவப்பிரியா, வட்டார வளமைய மேற்பார்வை யாளர் (பொறுப்பு) சுபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல், கண்டறியப்பட்ட குழந்தை களை முறையாக பள்ளியில் சேர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்கள் பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.
பேரணியில் பரமத்தி வட்டார வளமைய ஆசிரியர்கள் பார்வதி, செல்வராணி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆயத்த முகாம் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணாசலம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் லாவண்யா கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி, மோகனூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தனிநபர் கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- விராலிமலை தூய்மை பாரத இயக்கம் சார்பில்
புதுக்கோட்டை:
விராலிமலையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் தனிநபர் கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை ஒன்றிய குழு தலைவர் காமு மணி தொடங்கி வைத்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுவாமிநாதன், கலைச்செல்வி, மேலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி கடைவீதி, பேருந்து நிலையம், சோதனை சாவடி வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் திறந்த வெளியில் மலம் கழிக்காதீர், கழிப்பறையை பயன்படுத்துவோம், சிந்தித்து செயல்படுவோம், நாளைய பாரதம் நம் கையில் தூய்மையான பாரதம் உருவாக தூய்மைக்கு துணை நிற்போம், வாய்மைக்கு குரல் கொடுப்போம், கண்ட இடங்களில் எச்சில் துப்புவது நம்மீது நாமே எச்சில் துப்புவதற்கு சமம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக முழக்கமிட்டு சென்றனர்.
இதில் விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணைத் தலைவர் தீபன் சக்கரவ ர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதே போல் விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 88 பஞ்சாயத்துக்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி பயனடையுமாறு தெரிவித்தார்.
இந்த பேரணி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கி அரியலூர் உழவர் சந்தை வழியாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
- ஜெயங்கொண்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது
- உடையார்பாளையம் ஆர்டிஓ தொடங்கி வைத்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம் துவக்கி வைத்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை மற்றும் ஜனவரி 1 முதல் 2023 அன்று அல்லது அதற்கு முன்பு உள்ளவர்களுக்கு 18 வயது பூர்த்தியாக இருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் பேரணியில் வலியுறுத்தி சென்றனர். பேரணியில்ஜெ யங்கொண்டம் தாசில்தார் துரை, வருவாய் ஆய்வாளர் செல்வ கணேசன், கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி அண்ணா சிலையில் இருந்து ஜெயங்கொண்டம் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றுள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும்அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்
- ரஷ்யப்புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.
- இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன.
திருப்பூர் :
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 105- வது நவம்பர் புரட்சி தின செந்தொண்டர் பேரணி, பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவை அந்தந்த நாடுகளின் நலன்களை மட்டும் சார்ந்தவை. அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமான சில உரிமைகளைப் பெற்றுத் தந்தவை. அந்த நாடுகளின் எல்லைகளுக்குள் மட்டும் அதிர்வை உண்டாக்கியவை. ஆனால் 1917 நவம்பர் 7-ந் தேதி ரஷ்யாவில், லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப்புரட்சி, இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அந்தப் புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.அதனால் அந்த புரட்சியின் அதிர்வுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டது.
உலகில் உரிமைகளுக்காகப் போராடும் சக்திகள் அனைத்துக்கும் பல படிப்பினைகளை கொடுத்தது.தொழிலாளர்கள் நலன், பெண் உரிமை, முற்போக்கு சிந்தனை, அறிவியல் வளர்ச்சி, திட்டமிடப்பட்ட பொருளாதாரம், உலக சமாதானம் என ரஷ்ய புரட்சி பல்வேறு தளங்களில் முன் மாதிரிகளை உருவாக்கி தந்தது. அந்தப்புரட்சியை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று 27ந்தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் செந்தொண்டர் பேரணி புஸ்பா தியேட்டர், குமரன் சாலை வழியாக நொய்யல் யுனிவர்சல் தியேட்டர் அருகே வந்து நிறைவு பெறுகிறது. பின்னர் அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு செ. முத்துக்கண்ணன் தலைமையேற்கிறார். . தெற்கு நகர செயலாளர் ஜெயபால் வரவேற்கிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தா காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் மாநில செயற்குழு ஜி. சுகுமாறன் , கோவை எம். பி., பி. ஆர். நடராஜன், மாநிலக்குழு கே. காமராஜ், தீக்கதிர் முதன்மை செயலாளர் என். பாண்டி, பொது மேலாளர் எஸ். ஏ. மாணிக்கம் , சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு எஸ். ஆர். மதுசூதனன், மாவட்டக்குழு ஏ.ஷகிலா ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். ராஜகோபால், கே. உண்ணிகிருஷ்ணன், கே. ரங்கராஜ், ஜி. சாவித்திரி, எஸ். சுப்பிரமணியம், ஆர். குமார். ச. நந்தகோபால், எஸ். மணிகண்டன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் இடைக்குழு செயலாளர்கள் என். கனகராஜ், பி. ஆர். கணேசன், ஆர். காளியப்பன், கே. திருவேங்கடசாமி, பொறுப்பு செயலாளர் ஏ. ஈஸ்வரமுர்த்தி, கி. கனகராஜ், என்.சசிகலா, கே. தண்டபாணி, எஸ்.கே. கொளந்தசாமி, கோ. செல்வன், ஆர்.வி.வடிவேல், ஆர். பாலன் ஆகியோர் பங்கேற்கின்றனர். முடிவில் பல்லடம் தாலுகா செயலாளர் பரமசிவம் நன்றி கூறுகிறார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.